விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்டத்தின் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இராஜபாளையம் பகுதியில் கொரோனா வைரஸ் 8 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது . இதையடுத்து ஆண்டாள்புரம், சம்மந்தபுரம், சிங்கராஜ கோட்டை தெரு, ஆர்.ஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹாட்ஸ்பாட் என கண்டறியப்பட்டு அந்த பகுதிகள் தடைசெய்யப்பட்டது. இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவின் பேரில் கொரோனா தொற்று உள்ளதா என ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி நாக சங்கர் மற்றும் நகர்நல அலுவலர் சரோஜா டாக்டர் கருணாகர பிரபு உள்ளிட்டோர் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது . அதுமட்டுமல்லாமல் சுகர் பிபி போன்ற அறிகுறிகளும் உள்ளதா என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் சளி மற்றும் இருமல் மூச்சுத்திணறல் போன்ற தொந்தரவு இருந்தால் ராஜபாளையம் அருகிலுள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது
Category:
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் அரண்மனைகுளம் சிவன்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜோஷ்வா. இவர் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரானா வைரஸ் தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தர அமல்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
இதனால் இளைஞர் ஜோஷ்வா வேலை பார்த்து வந்த நிறுவனமும் மூடப்பட்ட நிலையில், கையிருந்த சிறிது பணத்தை வைத்தும், மாவட்ட நிர்வாகம் கொடுத்த நிவாரண முகாமில் கொடுத்த உணவை சாப்பிட்டு வந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள தனது தங்கைக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வர இன்று அதிகாலை கையில் இருந்த 100 ரூபாயுடன் தனது துணிகளை ஒரு சூட்கேஷில் (சாலையில் இழுத்து செல்லும்) எடுத்துக்கொண்டு சிவகங்கையிலிருந்து நடந்தே திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்ல திட்டமிட்ட இளைஞர் ஜோஷ்வா அதிகாலை நடக்க ஆரம்பித்து
இன்று (22/04/2020) காலை 10.20 மணி அளவில் மதுரை கோரிப்பாளைத்திற்கு வந்தடைந்தார். சிறிது நேரம் நிழலில் இளைப்பாறிவிட்டு மீண்டும் தனது உடல்நிலை சரியில்லாத தங்கையை காண திண்டுக்கல் நோக்கி நடக்க ஆரம்பித்தார். தங்கையின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அண்ணனான ஜோஷ்வா சிவகங்கையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் 130 கிலோமீட்டர் நடந்தே பயணித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த இளைஞர் தங்கை மீது உள்ள பாசத்தால் நடந்து வருவதை தகவல் அறிந்த ரஜினி மன்ற மதுரை மாவட்ட துணை செய்யலாலர் அழகர்சாமி தொடர்பு கொண்டு அந்த இளைஞர்களுக்கு உதவிகள் செய்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் குடிமகன்கள் மது பாட்டில்கள் தேடி அலைகின்றனர். இதனால், கடந்த காலங்களில் சாராயம் காய்ச்சி விற்றவர்கள் தற்போது சாராயத் தொழிலை மீண்டும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், மண்டபம் அருகே பிள்ளைமடம் கிராமத்தில் பனந் தோப்பில் சாராயம் காய்ச்சப்படுவதாக மண்டபம் தனிப்பிரிவு காவலர் ராஜ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மண்டபம் சார்பு ஆய்வாளர் தலைமையில் போலீசார் கடற்கரை ஓரங்களில் உள்ள தோப்புகளில் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் பிள்ளைமடம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரிந்தது. வெள்ளைச்சாமியை (51) கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் அருகே பெற்ற தாய் தந்தையை அம்மிக்கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்த மகன் போலீசார் வலைவீச்சு!
by Askar
written by Askar
செங்கம் அருகே பெற்ற தாய் தந்தையை அம்மிக்கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்த மகன் போலீசார் வலைவீச்சு!
செங்கம் அருகே குப்பந்தாங்கல் அருந்ததியர் காலணியில், மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தனது தாய் தந்தையை அம்மிக்கல்லால் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம் .சாத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பம் தாங்கல் அருந்ததியர் காலனியை சேர்ந்த கோவிந்தசாமி மகனான ராம்குமார் வயது 27 .இவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக தாய் தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தாய் தந்தை மறுத்துள்ளதால் கிணற்றில் விழுந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இன்று விடியற்காலை வெளியே வலம் வந்துவிட்டு அம்மிக்கல்லை எடுத்து தாய் தந்தையை உறங்கிக்கொண்டிருக்கும்போது அம்மிக்கல் லான் கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி தப்பி ஓட்டம். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர் .தகவலறிந்த சாத்தனூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் செங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நேற்று 21.04.2020-ம் தேதி எஸ்.எஸ் காலனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அருணாச்சலம் முயற்சியில் எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு இரத்ததானம் வழங்கினர்.
இவரின் முயற்சியை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS. பாராட்டினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கா அவமதிப்பு?-வைகோ கண்டனம்!
by Askar
written by Askar
தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கா அவமதிப்பு?-வைகோ கண்டனம்!
சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு என்று ஒரு தனி வரலாறு இருக்கின்றது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கொடையாக வழங்கிய இச்சிலை, 1968 ஜனவரி 2 ஆம் நாள், நீதிக்கட்சியின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஆற்காடு சர்.ஏ.இராமசாமி முதலியார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மண்டைக் கொழுப்பு ஏறிய ஒருவர், தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவை இழிவு படுத்தும் விதமாக, அண்ணா சிலையின் தலைப்பகுதியை ‘கொரோனா வைரஸ்’ ஆக மாற்றி, தீட்டிய கேலிச் சித்திரம் (20.04.2020) தினத்தந்தி ஏட்டில் வெளியானது நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தது.
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்று பனம்பாரனார் தொல்காப்பியத்தில் பாடிப் போற்றிய இம்மண்ணுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டி அழியாப் புகழ் சரித்திரத்தைப் படைத்தவர் பேரறிஞர் அண்ணா.
“தனது அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை” என்று அறிவித்து, சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்ததும், இந்திக்கு இங்கு இடமில்லை; இருமொழிக் கொள்கைதான் எங்கள் இலட்சியம் என்பதையும் உறுதியாக நிலைநாட்டிய பெருமை அண்ணா அவர்களுக்கு உண்டு.
விடுதலை பெற்ற இந்தியாவில், முதன் முதலில் மாநில சுயாட்சிச் சுடரை ஏந்திப் பிடித்து உரிமை முழக்கமிட்ட பெருமையும் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களையே சாரும்.
மாளிகையிலிருந்த அரசியலை மண் குடிசைக்குக் கொண்டுவந்து, இந்நாட்டின் மக்களாட்சித் தத்துவத்திற்கு மகுடம் சூட்டியதும் அண்ணாதான். ஏழை எளிய, சாதாரண மக்கள் வாழ்வில் ஒளியேற்ற ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்றிய அண்ணா, குறுகிய காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், எந்த சக்தியாலும் செய்ய முடியாத சாதனைச் சரித்திரத்தைப் படைத்துவிட்டு மறைந்தார்.
தமிழ் மக்களின் நெஞ்சத்தில் காலமெல்லாம் வாழும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களை ஏற்றிப் போற்றியவர் தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்கள் என்பது நஞ்சினை தூரிகையில் தோய்த்து கருத்துப் படம் வரைந்த மனிதனுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.
தினத்தந்தி நாளேட்டின் நிர்வாக இயக்குநர் திரு பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் அவர்கள், தினத்தந்தியின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் ‘குறுமதி’யாளர்களை இனம் கண்டு, தினத்தந்தி ஏட்டின் மாண்பையும், மரபையும் கட்டிக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
22.04.2020
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒட்டன்சத்திரம் அருகே தனியாருக்குச் சொந்தமான F-2 பாரிலிருந்து 200க்கும் மேற்பட்ட மது பாட்டிலை விற்பனைக்கு எடுத்துச் சென்ற இருவர் கைது இரண்டு கார்கள் பறிமுதல்.!
by Askar
written by Askar
ஒட்டன்சத்திரம் அருகே தனியாருக்குச் சொந்தமான F-2 பாரிலிருந்து 200க்கும் மேற்பட்ட மது பாட்டிலை விற்பனைக்கு எடுத்துச் சென்ற இருவர் கைது இரண்டு கார்கள் பறிமுதல்.!
அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த சில நாட்களாக 144 தடை விதித்துள்ளது இதனால் அனைத்து மதுக்கடைகளும் வெவ்வேறு கடைகளும் அடைக்க பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது ஆனால் தமிழக அரசின் அறிவிப்பை மதிக்காமல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்- வேடசந்தூர் சாலையில் செக்போஸ்டில் அமைந்துள்ளது தனியாருக்குச் சொந்தமான F-2 சாரல் பார் ஒன்று இயங்கி வருகிறது இந்த பாரில் இன்று சட்டவிரோதமாக இரவு நேரத்தில் விற்பனைக்காக இரண்டு கார்களில் பாரின் உரிமையாளரின் தம்பி ரமேஷ் மற்றும் பாரின் மேலாளரான பிரபு ஆகிய இருவரும் இரண்டு கார்களில் சுமார் 200.க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டு இருந்த போது அப்போது எதிரேவந்த இரண்டு கார்களை நிருத்தி வாகன தணிக்கை செய்த போது அப்போது இரண்டு வாகனங்களில் வைத்திருந்த 200.க்கும் மேற்பட்ட மதுபாட்டில் இருந்தது தெரியவந்தது காரில் மதுபானம் ஏற்றி வந்த பாரின் உரிமையாளரின் தம்பி ரமேஷ் மற்றும் பாரின் மேலாளர் பிரபு ஆகிய இருவரை ஒட்டன்சத்திரம் போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து உயர்ரக மதுபானம் சுமார் 200 பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டும் அதேபோல் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்த இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரமலான் பணியை தொடங்கிய கீழக்கரை நடுத்தெரு சகோதரர்கள் (Committee of MIF)..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இன்னும் ரமலான் தொடங்க சில தினங்களே இருக்கும் வேலையில் கீழக்கரை Committee Of MIF (நடுத்தெரு) சகோதரர்கள் சார்பாக 70 தேவையுடைய குடும்பங்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
பொதுவாகவே ரமலான் தொடங்கிய பின்பே பணிகளை பல்வேறு நல அமைப்புகள் தொடங்கும் இந்நிலையில் தோவையுடையோரை ரமலான் தொடங்கும் முன்பே கண்டிறிந்து பொருட்கள் வழங்கியது மிகவும் பாராட்டுதலுக்குரிய செயலாகும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த இரண்டு நாட்களாக கபசுர குடிநீர் விநியோகம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை கிளைகள் சார்பில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த குடிநீர் மருத்துவரின் ஆலோசனையுடன் வழங்கப்படுகிறது. இந்த குடிநீரை ஆதிகமான மக்கள் ஆர்வமாக கபசுர குடிநீரை வாங்கி குடித்து வருகின்றனர். இப்பணி நாளையும் (23/04/2020) தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றத்தில் மர்மமான முறையில் குரங்குகள் உயிரிழப்பதால் நோய் தொற்று காரணமா
by mohan
written by mohan
முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள தென்பரங்குன்றம் ஆகிய இடங்களில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இவை சுப்பிரமணியசுவாமி கோயில் , மலைக்கு போகும் பாதையில் உள்ள பழனியாண்டவர் கோயில், மலை மீது உள்ள காசி விசுவநாதர் கோயில், மலைக்கு பின்புறம் உள்ள கல்வெட்டு குடைவரை கோயில் ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுவது வழக்கம். பொதுவாக இங்கு வசிக்கும் குரஙகுகள் பக்தர்கள் வழங்கும் வாழைபழம், தேங்காய், புளியோதரை, பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களை உணவாக உட்கொள்ளும். தற்போது கொரானா தொற்றால் பக்தர்கள் வருகை இல்லாததால் குரங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இதை சரிசெய்ய திருப்பரங்குன்றம் போலீஸ் மதன கலா இன்ஸ்பெக்டர் தலைமையில் இப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் பல்வேறு இடங்களில் பெறப்படும் வாழை, ஆரஞ்சு, ஆப்பிள், சப்போட்டா, பேரீச்சை போன்ற பழங்களையும் , டிரம்களில் தண்ணீரையும் இப்பகுதியில் உணவு இல்லாமல் தவிக்கும் குரங்குகளுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்குள்ள குரங்குகளில் ஒரு குறிப்பிட்ட வயதுடைய குரங்குகள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகவும் இது குறித்து இப்பகுதி மக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் மதனகலா வனத்துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் வனத்துறையினர் இறந்த குரங்குகளை பிரேத பரிசோதனை செய்து பின்னர் அடக்கம் செய்தனர். இதுவரை இப்பகுதியில் 14 குரங்குகள் இறந்துள்ளன. தொடர்ச்சியாக குரங்குகள் மர்மமான முறையில் இறப்பதால் இப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது. எனவே இது குறித்து வனத்துறை தக்க நடவடிக்கை எடுத்து குரங்குகளை காப்பாற்ற வேண்டும் மேலும் குரங்குகள் இறப்பதற்கு வேறு ஏதேனும் நோய் தொற்று காரணமா என்ற பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும். மேலும் இதனால் இந்த குரங்குகள் இறந்தது என பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களின் கோரிக்கையாகும் உள்ளது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அருகே சுருட்டுவிரியன் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய கறவை மாட்டைகாப்பாற்றிய அரசு கால்நடை மருத்துவர்கள்
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனியாண்டி. இவர் 5 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்.அவற்றில் ஒரு ஜெர்சி இன கறவை மாட்டை கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாலை 5 மணியளவில் கட்டுவிரியன் பாம்பு கடித்தது. மாடுகள் சத்தம்போட்டதால் கண் விழித்துப் பார்த்த விவசாயி முனியாண்டி, கறவை மாட்டை பாம்பு கடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.பெரும்பாலும், மாடுகளைப் பாம்பு கடித்தால் நாட்டு வைத்தியம் பார்ப்பார்கள். அதில், கட்டுவிரியன் போன்ற விஷ பாம்புகள் கடித்தால் அவை உயிர் பிழைப்பது கஷ்டம்.ஆனால், முனியாண்டி பாம்பு கடித்து உயிருக்குப் போராடிய தன்னுடைய கறவை மாட்டை காப்பாற்ற உடனடியாக அருகில் உள்ள முடுவார்பட்டி அரசு கால்நடை மருந்தக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார்.
திருமங்கலம் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அறிவுரையின்படி மருத்துவக் குழுவினருடன் கால்நடை உதவி மருத்துவர் ஜோசப் அய்யாத்துரை மற்றும் டாக்டர் மெரில்ராஜ் ஆகியோர் விவசாயி முனியாண்டி வீட்டிற்கு சென்று பாம்பு கடித்த மாட்டினை பரிசோதனை செய்து உரிய சிகிச்சை மேற்கொண்டார்.டெட்டனஸ் டாக்ஸாய்டு, ஆன்டிபயாடிக், வலி நிவாரண ஊசி மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் உள்ள விரியன் பாம்பு விஷமுறிவு மருந்து வாய் வழியாகவும் செலுத்தி மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து 4 நாட்கள் மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்த பசுமாடு தற்போது அபாய கட்டத்தைத் தாண்டி, முகப்பகுதியில் வீக்கம் வற்றி, பூரண குணம்பெற்று மிகவும் இயல்பான நிலைமைக்கு திரும்பியது.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஜோசப் அய்யாத்துரை கூறுகையில், கிராமப்புறங்களில் வாழும் அடித்தட்டு ஏழை எளிய விவசாய மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய கால்நடைகளில் கறவை மாடுகள் முக்கிய இடத்தை வகித்து வருகிறது.இதுபோன்ற ஆபத்து காலத்தில் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை தொடர்பு கொண்டு, உரிய சிகிச்சையை தொடங்குவதன் மூலம் விலைமதிப்பற்ற கால்நடைகள் உயிரை காப்பாற்றலாம் என்று தெரிவித்தார்.விவசாயிகளுக்கு அவர்களின் அன்றாட வாழ்வாதாரமே அவர்களுடைய கறவை மாடுகள்தான். ‘கரோனா’ ஊரடங்கிலும் கால்நடை மருத்துவர்கள் விரைவாக செயல்பட்டு அந்த விவசாயின் மாட்டை காப்பாற்றி அவரின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எல்லாம் எங்களுக்குத் தெரியும் எனக்கூறிய மும்பை, டெல்லி, சென்னை, பத்திரிகையாளர்களுக்கு கூட தொற்று ஏற்பட்டுவிட்டது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்:- மூத்த பத்திரிகையாளர் கதிரவன் எச்சரிக்கை..
by Askar
written by Askar
எல்லாம் எங்களுக்குத் தெரியும் எனக்கூறிய மும்பை, டெல்லி, சென்னை, பத்திரிகையாளர்களுக்கு கூட தொற்று ஏற்பட்டுவிட்டது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்:- மூத்த பத்திரிகையாளர் கதிரவன் எச்சரிக்கை..
எத்தனை முறை கூறினாலும் யாரும் கேட்பதில்லை. நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரலாம் அல்லது நடந்து கொள்ளலாம் ஆனால் மற்றவர்கள் அவ்வாறு இருக்கலாம் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. யாராவது ஒருவர் தனது அறியாமையால் கூட எப்படியாவது யாரோடாவது தொடர்பில் இருந்திருக்கலாம் அது இப்போது நமக்குத் தெரியாது யாருக்கும் இருக்கும் என்று நான் கூறவரவில்லை இருக்கக்கூடாது என்பதே எனது எண்ணம். யாருக்கும் அதனால் பிரச்சனை வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கூற்று! ஆரம்பம் முதலே விழிப்புணர்வை கொடுத்து வருகிறேன் ஆனால் நீங்கள் மட்டும்தான் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறீர்கள்? கூட்டமாக இல்லாமல் இடைவெளிவிட்டு பேட்டி எடுத்தால் யாரும் தர மாட்டேன் என்று கூறுவார்களா.? அப்படி யாரும் கூறப்போவதில்லை, அப்படி இருந்தும் ஏன் நீங்கள் திருந்த மாட்டேன் என்கிறீர்கள். இப்படி கும்பலாக நிற்கலாமா ஒவ்வொரு விழாக்களிலும் இவ்வாறு நீங்கள் கும்பலாக இடைவெளி இல்லாமல் நிற்பது கண்டு அதிகாரிகள் எவ்வளவு கேவலமாக பேசுகிறார்கள் என்பது உங்களுக்கு யாருக்காவது தெரியுமா.? உங்களுக்கு மட்டும் பரவல் வராதா சமூக இடைவெளி விட மாட்டீர்களா அரசு உத்தரவை மதிக்க மாட்டீர்களா என்று கேவலமாக கேட்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மளால் பிறருக்கோ பிறரால் நமக்கோ வரும் என்பது அல்ல! நாமும் முன்னுதாரணமாக அதுவும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் நம்மிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் இன்னும் நாம் ஆரம்பிக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எல்லாம் எனக்கு தெரியும் என்று மமதையில் இருப்பவர்கள் நாம் என்பது எனக்கு தெரியும். இது மட்டுமின்றி செய்தியில் எக்ஸ்குளூசிவ் என்ற பெயரில் கொரானா பாதிக்கப்பட்டவர்களிடம் பேட்டியும் எடுக்கிறார்கள்.
தயவுசெய்து வேண்டாம் எல்லாம் உங்களுக்கு தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இப்படித்தான் கூறிய மும்பை டெல்லி சென்னை பத்திரிகையாளர்களுக்கு கூட தோற்று ஏற்பட்டுவிட்டது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று உங்கள் நலனுக்காக எச்சரிக்கிறேன்.
தினமலர், செய்தியாளர் கதிரவன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதாரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் ஒருவானேந்தல் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகரில் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்திய மாவட்ட ஆட்சியர்
by mohan
written by mohan
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு உதவும் வகையில் ரோசல்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் பணியாளர்கள் பம்ப் ஆபரேட்டர்கள் சுகாதாரப் பணியாளர்கள் என மொத்தம் 95 நபர்களுக்கு ஊராட்சி சார்பாக அரிசி எண்ணெய் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருளை வழங்கிவிட்டு அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு அருந்தினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மொட்டமலை பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வாழ்வாதாரமே கோவில் திருவிழா திருமண நிகழ்ச்சி. இது போன்ற இடங்களில் அவர்கள் தயாரிக்கும் ஊசி பாசி மணிகளை விற்று தங்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டி வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து 144 தடை உத்தரவால் இவர்களால் வெளியே சென்று வியாபாரம் செய்ய இயலாத சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடி வருவதை அறிந்த இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் காவல் நிலைத்தில் பணிபுரிய காவலர்கள் அனைவரும் சேர்ந்து தங்களுடைய சொந்த பணத்தில் இருந்து 750 ரூபாய் மதிப்புள்ள பலசரக்கு பொருட்களை அவர்களுக்கு வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஊரடங்கு சூழ்நிலையை பயன்படுத்தி ஆவின் பாலை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்..
by mohan
written by mohan
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பட்டாசு தொழிற்சாலை ஊழியர்கள் சுமார் 30,000 குடும்பங்களுக்கு அரிசி பை வழங்குவதை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் இதில்..பட்டாசு தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக இந்த உதவி செய்யப்படுகிறது இது மேலும் தொடரும்.அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கும்.பட்டாசுத் தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது விரைவில் உதவித்தொகை கிடைக்கும் எனவும்..ஊரடங்கை பயன்படுத்தி ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு..ஆவின் பால் தற்போது கொள்முதல் அதிகரித்துள்ளது விற்பனையும் அதிகரித்துள்ளது.. ஆவின் பணியாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். ஒரு சில புகார்கள் வருகின்றது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரபு பெண்களை இழிவு படுத்திய பாஜக எம்.பி மீது உடனடியா நடவடிக்கை எடுங்க! மோடிக்கு குவைத் வழக்கறிஞர் கோரிக்கை!
by Askar
written by Askar
அரபு நாட்டுப் பெண்கள் பற்றி அவதூறாக ட்வீட் செய்த பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குவைத் நாட்டின் வழக்கறிஞர் அல் ஷரிக்கா ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூர் தெற்கு தொகுதி நாடாளுமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, ட்விட்டரில் அரபு நாட்டு பெண்கள் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க ஆபாசமான கருத்தை வெளியிட்டு இருந்தார். அவரின் ட்வீட்டுக்கு ட்விட்டர் நிறுவனம் கடும் கண்டனத்தை தெரிவித்தவுடன், அதை நீக்கி விட்டார். ஆனாலும் அந்த் ட்வீட்டின் ஸ்கீரின் ஷாட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தேஜஸ்வி சூர்யா, ” 95 சதவீத அரபு நாட்டுப் பெண்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக உடலுறவில் உச்சக்கட்டம் அடைந்தது இல்லை.
ஒவ்வொரு தாயும் உடலுறவு மூலம் குழந்தை மட்டுமே பெற்றுக் கொண்டனர்,” என்று குறிப்பிட்டு இருந்தார்.
தேஜஸ்வி சூர்யாவின் ட்வீட்டுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்திற்கே இழுக்கு என்றும் கூறி உள்ளார்கள். இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீவத்ஸா , மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ள தேஜஸ்வி சூர்யா பாஜக வை வழிநடத்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தேஜஸ்வி சூர்யாவின் கருத்து அரபு நாடுகளிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இத்தகைய கருத்துக்களை கூறியுள்ளது அரபு நாடுகளில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குவைத் நாட்டில் பிரபல வழக்கறிஞர், பன்னாட்டு சர்ச்சைகளின் நடுவர், மனித உரிமை மையத்தின் இயக்குனர் என பல்வேறு பொறுப்புகளில் உள்ள அல் ஷரிக்கா பிரதமர் மோடிக்கு நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார்.
ட்விட்டர் மூலம் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டுள்ளவர், “மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி, அரபு நாடுகளுடன் இந்தியாவின் உறவு என்பது பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலானது. உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இப்படி வெளிப்படையாக பெண்களை அவதூறாகப் பேசுவதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா? தேஜஸ்வி சூர்யா வெளியிட்ட கருத்துக்களுக்காக அவர் மீது கடுமையான நடவடிக்கையை உடனடியாக எதிர்ப்பார்க்கிறோம்,” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உடன் தேஜஸ்வி சூர்யாவின் ட்வீட் ஸ்கீரின்ஷாட்டை இணைத்துள்ளவர் பிரதமர் அலுவலகம் மற்றும் தேஜஸ்வி சூர்யாவை ட்வீட் கணக்கையும்யும் ட்வீட்டில் இணைத்துள்ளார்.
தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களால் தான் கொரோனோ பரவுவது போல் சமூகத்தளங்களில் பரப்பப்பட்டதற்கும் அரபு நாடுகளிலிருந்து கண்டனம் எழுந்தது. இந்தியாவிலிருந்து இறக்குமதியை தவிர்ப்போம் என்றெல்லாம் குரல்கள் எழுந்தது.
தற்போது பாஜக எம்.பி. ஒருவரே சர்ச்சையை உருவாக்கியுள்ளார். பெட்ரோல் விலை வீழ்ச்சி மற்றும் கொரோனாவினால் அரபு நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழப்பார்கள் என்று கூறப்படும் நிலையில், இது புது தலைவலியாக உருவாகியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கண் கண்ணாடி கடைகளை உடனடியாக திறக்க வேண்டும்!அல்லது அரசே அரசு கண் மருத்துவமனையில் கண்ணாடிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!முதல்வருக்கு ஆம்ஆத்மி வசீகரன் வேண்டுகோள்!
by Askar
written by Askar
கண் கண்ணாடி கடைகளை உடனடியாக திறக்க வேண்டும்!
அல்லது அரசே அரசு கண் மருத்துவமனையில் கண்ணாடிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!
முதல்வருக்கு ஆம்ஆத்மி வசீகரன் வேண்டுகோள்!
அத்தியாவிசய தேவைகளில் மருத்துவமனைகள், மருந்து கடைகள், மளிகை கடைகள், காய்கறி, மீன் மற்றும் கறி கடைகள் அடங்கும். இந்த வரிசையில் அரசு கண் மருத்துவமனைகளும் இயங்குகிறது.
இதில் கண் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் கண்ணாடி உடனடியாக அணிய வேண்டும் என்று கண் மருத்தவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இவர்கள் உடனடியாக கண்ணாடி அணிய வேண்டும் இல்லையேல் கண்பார்வை குறைவு ஏற்படுவதுடன் கண் வலி, தலை வலி, கழுத்து வலி உண்டாகிறது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண்ணாடி அணியாதலால் மேலும் கண் பாதிப்பிற்குள்ளாகிறது, இது கிட்னி வரை பாதிக்க கூடும் என்கிறார்கள்.
மருத்துவர்கள் பரிந்துறைத்தவுடன் கண்ணாடி அணிவது மிக அவசியமானதாகும் கண் நோயாளிகள் தவிர்க்க முடியாததாகும். மனிதனுக்கு கண் மிக முக்கியமானதாகும்
ஆகவே கண் நோயாளிகளின் கஷ்டத்தை போக்கும் வகையில் கண் கண்ணாடி கடைகளை தினம் ஒரு குறிப்பிட்ட நேரம் திறக்க அனுமதிக்க வேண்டும் இல்லையேல் அரசே அரசு கண் மருத்துவமனைகளில் கண் கண்ணாடிகள் கண் நோயாளிகளுக்கு கிடைக்குபடி செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இங்கனம்,
S.A.N.வசீகரன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஆம்ஆத்மிகட்சி
தமிழ்நாடு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிவாரண பொருட்களை வழங்கினார்..
by Askar
written by Askar
அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் அலுவலர்கள் ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று செங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
செங்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செங்கம் துக்காப்பேட்டை வேன் டிரைவர் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரிசி மளிகை காய்கறி போன்ற நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் திரு மூர்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார் தூய்மை பணியாளர்களுக்கு வேன் டிரைவரளுக்கும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிவாரண பொருட்களை வழங்கி அவர் பேசும்போது: மக்களை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் அலுவலர்கள் ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் ஆவின் துணை தலைவர் பாபு வீட்டு வசதி சங்க தலைவர் குமார், நகர செயலாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் அடுத்த கடலாடி அருகே சாராயம் கடத்தலில் ஈடுபட்ட ஒருவா் கைது!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கடலாடி அருகே சாராயம் கடத்தலில் ஈடுபட்ட ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கடலாடி காவல்துறை ஆய்வாளா் ஆதிலட்சுமி தலைமையிலான போலீஸாா் பட்டியந்தல்-கீழ்பாலூா் சாலையில் மேலக்கோடி கிராமப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தினா். இதில் ஒருவா் தப்பி ஓடிவிட்டாா்.
பின்னா், சிக்கியவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா் கீழ்பாலூா் கிராமத்தைச் சோ்ந்த ஷாபுதின் மகன் சலீம் (23) என்பதும், இரு சக்கர வாகனத்தில் கள்ளச் சாராயம் கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் கேன்களில் இருந்த 90 லிட்டா் சாராயத்தைக் கைப்பற்றி, சலீம் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும் தப்பியோடிய ராஜகிளி என்பவரைத் தேடி வருகின்றனா்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.