ஒட்டன்சத்திரம் அருகே தனியாருக்குச் சொந்தமான F-2 பாரிலிருந்து 200க்கும் மேற்பட்ட மது பாட்டிலை விற்பனைக்கு எடுத்துச் சென்ற இருவர் கைது இரண்டு கார்கள் பறிமுதல்.!
அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த சில நாட்களாக 144 தடை விதித்துள்ளது இதனால் அனைத்து மதுக்கடைகளும் வெவ்வேறு கடைகளும் அடைக்க பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது ஆனால் தமிழக அரசின் அறிவிப்பை மதிக்காமல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்- வேடசந்தூர் சாலையில் செக்போஸ்டில் அமைந்துள்ளது தனியாருக்குச் சொந்தமான F-2 சாரல் பார் ஒன்று இயங்கி வருகிறது இந்த பாரில் இன்று சட்டவிரோதமாக இரவு நேரத்தில் விற்பனைக்காக இரண்டு கார்களில் பாரின் உரிமையாளரின் தம்பி ரமேஷ் மற்றும் பாரின் மேலாளரான பிரபு ஆகிய இருவரும் இரண்டு கார்களில் சுமார் 200.க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டு இருந்த போது அப்போது எதிரேவந்த இரண்டு கார்களை நிருத்தி வாகன தணிக்கை செய்த போது அப்போது இரண்டு வாகனங்களில் வைத்திருந்த 200.க்கும் மேற்பட்ட மதுபாட்டில் இருந்தது தெரியவந்தது காரில் மதுபானம் ஏற்றி வந்த பாரின் உரிமையாளரின் தம்பி ரமேஷ் மற்றும் பாரின் மேலாளர் பிரபு ஆகிய இருவரை ஒட்டன்சத்திரம் போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து உயர்ரக மதுபானம் சுமார் 200 பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டும் அதேபோல் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்த இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
You must be logged in to post a comment.