வேலூர் பாராளுமன்ற மக்கள் நீதி மய்யம் சார்பில் காட்பாடியை சேர்ந்த சுரேஷ் தனது வேட்பு மனுவை வேலூர் ஆட்சியர் ராமனிடம் வழங்கினார்
கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கே.எம்.வாரியார் வேலூர்
வேலூர் பாராளுமன்ற மக்கள் நீதி மய்யம் சார்பில் காட்பாடியை சேர்ந்த சுரேஷ் தனது வேட்பு மனுவை வேலூர் ஆட்சியர் ராமனிடம் வழங்கினார்
கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கே.எம்.வாரியார் வேலூர்
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி சார்ந்து சித்தையன் கோட்டை சுற்றுப்புறத்தில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமப்புறத்தில் வாழும் விவசாயிகள்,வியாபாரிகள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் சம்பளம் பெறும் விவசாய கூலித் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
ஆனால், வங்கியில் பனியாளர்களோ மேலாளரையும் சேர்த்து நான்கு ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளதால் வங்கிக்கு பனிநிமித்தம் வரும் வாடிக்கையாளர்கள் சிறிய வேலைக்குகூட பலமணிநேரம் காத்திருக்கும் நிலைஉள்ளது. இதுபற்றி வங்கி மேலாளரிடம் வாடிக்கையாளர்கள் கேட்டால் பனிச்சுமையின் காரணமாக சிடுசிடுப்பாக பேசும் நிலை உள்ளது. ஆகவே, வங்கி சார்ந்த உயர் அதிகாரிகள் வாடிக்கையாளர்களின் நலன்கருதி சிரமத்தை போக்கும் வகையில் சித்தையன் கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு கூடுதல் பனியாளர்களை நியமனம் செய்து உதவிடுமாறு வாடிக்கையாளர்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.
பழனி பேருந்து நிலையத்திற்க்கு வெளியே திருஆவினன்குடி செல்லும் குளத்துரோட்டில் சுருட்டைவிரியன் பாம்பு ஒன்று அதிகாலை 5:00 மணியளவில் ஊர்ந்து சென்றுகொண்டு இருந்ததைக்கண்டு பொதுமக்களும், பக்தர்களும் பயந்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைத்து சென்ற தீயணைப்புதுறையினர் சுமார் 3 அடி நீளமுள்ள சுருட்டைவிரியன் பாம்பை பிடித்து வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் உரிய ஆவணங்கள் இன்றியும் இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது சாணார்பட்டி காவல் உதவி ஆய்வாளர் ஷேக் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து, எட்டு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தார்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் பகுதிகளை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியினர் 30 பேர் நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தென்காசி தொகுதிக்கு உட்பட்ட செங்கோட்டை, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் முன்னாள் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் செங்கோட்டை ஒன்றிய புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி செயலாளர் இசைக்குமார், மாணவரணி அமைப்பாளர் மகேஷ், கோபி, சுரேஷ், முருகன், மணி, வாசுதேவநல்லூர் முத்துப்பாண்டியன், ஜெயராஜ் பாண்டியன், சண்முகையா, ராஜ்குமார், பால்ராஜ், ஜேம்ஸ், துரை, மோகன்தாஸ், கருப்பசாமி, சுடலை, பூமாரி, முனியாண்டி, சங்கரன்கோவில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த பூசைப்பாண்டியன், மரியதாஸ், ஜீவா உட்பட 30 பேர் அக்கட்சியில் இருந்து விலகி குற்றாலத்தில் நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக அவைத்தலைவர் முத்துப்பாண்டி, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம், கடையநல்லூர் நகர செயலாளர் சேகனா, தென்காசி ராமராஜ், வடகரை ராமர், ஐவேந்திரன், தினேஷ், மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக., வேட்பாளர் சண்.சம்பத்குமார் தனது வேட்பு மனுவை, பரமக்குடி கோட்டாட்சியர் ராமனிடம் தாக்கல் செய்தார்.
மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி தொகுதி பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன் தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ., திசை வீரன், கழக தீர்மானகுழு உறுப்பினர் சுப.த.திவாகரன் ஆகியோர் உடன் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீனத் பானு வேட்புமனுக்களை கடந்த சில தினங்களாக பெற்று வருகிறார்.
நேற்று (24/03/2019) திமுக வேட்பாளர் சவுந்தர பாண்டியன் தனது மனுவை தாக்கல் செய்தார். அப்போது உடன் திமுக கழக மாநில கழக துணை பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி, மதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராகவன், கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) செயலாளர் சச்சிதானந்தம, மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல் கனி ஆகியோர்கள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து திமுக மாற்று வேட்பாளர் வசந்தி இவர் திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டி மனைவியாவார்.
இதனைத் தொடர்ந்து சுயாட்சி ஆக கொடைரோடு அருகே உள்ள சில்லாலை பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி நாகஜோதி வயது 32. இவருக்கு ஓவியா என்ற மகளும் கவியரசு, கனி அரசு என்ற இரண்டு மகன்களும் உள்ளார். இவரது கணவர் பெருமாள் தமிழ்நாடு முழுக்க சிமெண்ட் தளங்களுக்கு பாலீஸ் போடும் வேலையை செய்து வருகிறார். இவருக்கு வீடு வண்டி உள்ளிட்ட உள்ள மொத்த சொத்து மதிப்பு 2 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். அதேபோன்று உள்ள முத்தனம் பட்டியைச் சேர்ந்த கருப்புச்சாமி வயது 55, இவரும் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவரது படிப்பு எட்டாம் வகுப்பு படித்துள்ளார். இவரது மனைவி பெயர் உமாமகேஸ்வரி மகன்கள் அருண்குமார் ஹரிஹரன் ஆகியோர் உள்ளனர் இவரது சொத்து மதிப்பு வீடு காலனி வீடு, இவரது பெயரிலும் இவரது மனைவி பெயரிலும் வங்கிக் கணக்கில் மொத்தம் ரூபாய் 80,000 உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.. தங்கம் ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மருதம் மக்கள் கழகத்தைச் சேர்ந்த கனகராஜ் வயசு 31. இவர் எம்காம் பி எட் படித்துள்ளார். சுயமாக வத்தலக்குண்டில் டுடோரியல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இவரது சொத்து மதிப்பு வண்டி, வங்கி இருப்பு 75 ஆயிரத்து 826 ரூபாய் குறிப்பிட்டுள்ளார். இவருடன் வேட்புமனு தாக்கல் செய்தபோது மருத மக்கள் கழகம் நிறுவனர் சரவண பாண்டியன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவி வர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர். வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி சேர்ந்த பாண்டி மகன் வேந்தன் வயது 34. இவர் வழக்கறிஞராக நிலக்கோட்டையில் உள்ளார். இவரும் சாட்சியாக வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். இவரது மனைவி பெயர் திருகணி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவரது மகன் பெயர் உத்திர சித். இவரது குடும்ப சொத்து மதிப்பு வண்டி, வங்கி, இருப்பு கையிருப்பு உள்பட 3 லட்சத்து 47 ஆயிரத்து 650 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் டாக்டர் .சின்னத்துரை வயது 59. நேற்று மனு தாக்கல் செய்தார். இவரது சொந்த ஊர் நிலக்கோட்டை ஆகும். இவரது மனைவி பெயர் அலமேலுமங்கை, இவருக்கு இரண்டு மகன்கள் ராகேஷ் துறை, அகிலேஷ் துறை, இவர்கள் இரண்டு பேரும் டாக்டர்களாக உள்ளார்கள். சின்னதுரை பெயரில் சொத்து மதிப்பு வீடு வங்கி இருப்பு கையிருப்பு உட்பட?52 லட்சத்து 87 ஆயிரத்து 403 ரூபாய் ஆகும். இவரது மனைவி அலமேலு மங்கை பெயரில் வங்கி இருப்பு மற்றும் கையிருப்பு 29 லட்சத்து 38, 337 ரூபாய் உள்ளதாகவும்,, ராகேஷ் துறை பெயரில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய், இரண்டாவது மகன் அகிலேஷ் துறை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
திண்டுக்கல் விவேகானந்தா நகர் ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து கடந்த 23/03/ 2019 அன்று கொள்ளையடித்த கும்பலை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின்படி நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் ஆய்வாளர் உலகநாதன் சார்பு ஆய்வாளர்கள் பாட்ஷா, சுந்தரேஸ்வரர் குற்றப்பிரிவு போலீசார் CCTV காட்சிகளை ஆராய்ந்து, மற்றும் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் பஸ் நிலையம் பாலாஜிபவன் அருகில் ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த லிங்கையாராயபட்டி(43) லட்சுமண ராவ் (42) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்த நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம், ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி.ஆர் ராஜ் சத்யன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான, நடராஜன் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக பனகல் ரோட்டில் இருந்து திறந்த ஜீப்பில் சென்ற வேட்பாளர் ராஜ் சத்யனை கோரிப்பாளையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை திரண்டு இருந்த ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் வேட்பாளர் ராஜ் சத்யனை வரவேற்றனர். இதனால் கோரிப்பாளையம் பகுதி முழுவதும் திருவிழா போல் காட்சி அளித்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜன் செல்லப்பா, சரவணன், பெரிய புல்லான் என்ற செல்வம், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உள்பட ஏராளமானோர் அவருடன் சென்றனர்.
பாஜ., முஸ்லிம் லீக், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் உள்பட 10 பேர் வேட்பு தாக்கல்..
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கு 18/3/19ல் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 19 ல் தொடங்கியது. மார்ச் 22 வரை 5 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் அதிமுக., கூட்டணியில் போட்டியிடும் பாஜ., வேட்பாளர் தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் தாக்கல் செய்தார். அவருடன் அ.அன்வர் ராஜா எம்.பி., அதிமுக., மாவட்ட அவைத் தலைவர் செ.முருகேசன், பாஜ மாநில துணைத் தலைவர்கள் சுப.நாகராஜன், து.குப்பு ராமு ஆகியோர் உடனிருந்தனர்.
திமுக., கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கடையநல்லூர் எம்எல்ஏ., அபுபக்கர், திமுக., மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலாளர் கே.பஞ்சாட்சரம் தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ.வீரராகவ ராவிடம் மனுத் தாக்கல் செய்தார். மாவட்ட தலைவர் கோவிந்தன், மாவட்ட துணைத் தலைவர் கார்மேகம், மாவட்ட செயலர் மாரி, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
சுயேட்சைகள் முத்து, ஜெயபாண்டி, கருப்பசாமி, அசன் அலி, கேசவ் யாதவ், ஜவாஹிர் அலி, கருப்பசாமி என 10 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.
பாஜகவின் கூலிப்படை அதிமுக – கனிமொழி பேச்சு
தேர்தல் பணிமனையை தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி திறந்து வைத்தார்
திமுக தலைமையிலான கூட்டணி எந்த சமயத்திற்கும் எதிரானது கிடையாது – வைகோ
பணமா ? குணமா ? – முடிவு செய்யுங்கள் – விளாத்திகுளம் திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார்
திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் விவகாரத்தை குறிப்பிடாதது ஏன் ? ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? ஸ்டாலினை நோக்கி தமிழிசை கேள்வி ?
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதியஜனதா கட்சி சார்பில், தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழக பா ஜ க தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இன்று தூத்துக்குடியிலுள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில்
எதிர் அணியினர் தரம்தாழ்ந்த விவாதம் செய்தாலும் நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் நேர்மறை அரசியலை எடுத்து செல்ல வேண்டும் என்பது தான் எங்களது நிலைபாடு
மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் தமிழகத்திற்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்கும் என்பதை இன்று எங்கள் கூட்டணி நிரூபித்து வருகிறது.
தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்த வைகோ பாஜக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை, இங்குள்ள மக்களுக்கு பயிர் பாதுகாப்பு திட்டம் கிடைக்கவே இல்லை என்று பல பொய்களை அடுக்கியிருக்கிறார்.
ஆனால், பயிர்பாதுகாப்பு திட்டத்தில் அதிகம் பலன் அடைந்த மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம்
அதுமட்டுமல்ல காங்கிரஸ் கட்சிதான் சிறுவணிகத்தில் அன்னிய முதலீட்டை கொண்டு வந்தார்கள். சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை தடுத்த கட்சி பாஜக தான்
தமிழகத்தில் எதிர் கட்சியினரிடம் நாகரீகம் மிக மிக குறைந்து வருகிறது, தமிழகம் நாகரீக அரசியலுக்குள் வர வேண்டும்.
என் மீது ஒரு சின்ன களங்கம் கூட சொல்ல முடியாது, நான் வெளிப்படையான அரசியல் வாழ்க்கையை நடத்தி வருகிறேன்.
தமிழக மக்களின் வாழ்வியலில் ஒன்றான மத நம்பிக்கையை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் குறைகூறி வருவதால் மக்கள் அவர்களை புறக்கணிப்பார்கள்
திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையின் நிலைபாட்டை பற்றி குறிப்பிடவில்லையே ஏன் என கேள்வி எழுப்பிய அவர், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் திமுக இரட்டை வேடம் போட்டு கொண்டிருக்கிறார்கள் என்றார்.
*ஊழல் மற்றும் ஊழலுக்கு எதிராக நேர்மையான அரசியலை மேற்கொண்டு வருகிறோம்.
பாராளுமன்ற தகவல் படி மாநிலங்களவையிலே மிகக் குறைவான நாட்களே சென்றுள்ள மூன்று நபர்களில் ஒருவராக இருந்துள்ள எதிர் கூட்டணி வேட்பாளர் கனிமொழி எப்படி மக்களவையில் சிறப்பாக பணியாற்ற முடியும் என்றார்.
இந்த தேர்தல் ஊழலுக்கும்- ஊழலற்ற தன்மைக்கும், நேர்மையற்ற அரசியலுக்கும்- நேர்மைக்கும் இடையே நடக்கும் போட்டியாக கருதுகிறேன் எனவே எங்களை யாரும் குறை சொல்ல முடியாது என்றார்.
என்னை ஆதரித்து தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , பிரேமலதாவிஜயகாந்த் உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள்.
வரும் 26ம் தேதி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வர இருக்கிறார் அன்றைய தினம் விஷன் டாக்குமேண்டரி வெளியிடப்படும், என்றார்
மேலும் கூறுகையில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக அரசகுமாரை கட்சி அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி விசைபடகு மீனவர்கள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகள் வைத்தனர்.
இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக பொறுப்பாளர் ,பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரச குமார், கரு.நாகராஜ், எம்.என்.ராஜன், முரளி யாதவ், தேசிய குழு உறுப்பினர் சந்தனகுமார்,
தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாலாஜி, தொகுதி பொறுப்பாளர் விஎஸ்ஆர் பிரபு, வர்த்தகஅணி சிவராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
உசிலம்பட்டி அருகே நக்கலப் பட்டி ஊராட்சி குஞ்சம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்து வேலன் மனைவி அமுதா வயது34.
இவர் உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்தார். நேற்று (24/03/2019) இரவு வீட்டில் தனியாக இருந்த யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி செய்துகொண்டார்.
இதைப் பார்த்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்று (25/03/2019)காலை உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அமுதா சடலத்தை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் காவலர் தற்கொலை குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்
வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆதிய 2 பேரும் பகல் 1 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.
அப்போது வேட்பாளருடன் 3 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய விதிப்படி போலீசார் உள்ளே மற்ற கட்சியினரை அனுமதிக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வடமதுரை நாடுகண்டனூரை சேர்ந்த முருகன் என்பவர் (வயது 40) வீட்டில் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பதாக தகவலறிந்து வேடசந்தூர் டிஎஸ்பி சிவகுமார் ஆலோசனையின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
பின்னர் தனிப்படை சோதனையில் முருகன் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு தனிப்படை போலீசார் முருகனை கைது செய்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள E.G.S.பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவர் சபரிநாதன். இவர் சிறுவயது முதலே இந்திய அளவிலும் தமிழக அளவிலும் பல்வேறுபட்ட நீச்சல் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கமும் வெள்ளியும் ஆக இதுவரை அறுநூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று எடுத்துள்ளார்.
இவர் தற்போது நாகூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான ஐந்து கிலோமீட்டர் தூரமுள்ள கடற்கரையை வித்தியாசமான முறையில் நீந்திக் கடந்து வில் மெடல்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்தார். அவர் தன்னுடைய இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் இரும்பு சங்கிலியால் கட்டிக்கொண்டு 5 கிலோ மீட்டர் தொலைவு வரை இரண்டு மணி நேரம் இறுபது நிமிடம் நாற்பத்தெட்டு நொடிகளில் கடந்து சாதனை புரிந்துள்ளார். இதனுடைய சாதனைச் சான்றிதழ் வழங்கும் விழா E.G.S.பிள்ளை பொறியியல் கல்லூரி கலையரங்கில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் வில் மெடல்ஸ் சார்பாக நிறுவனர் தலைவர் கலைவாணி முதன்மைச் செயலர் தஹ்மிதா பானு ஒருங்கிணைப்பாளர் முகமது ரியாஸ்தீன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவருக்கு வில் மெடல்ஸ் உலக சாதனை, வில் மெடல்ஸ் தேசிய சாதனை, வில் மாநில சாதனை ஆகியவற்றிற்கான அங்கீகாரச் சான்றிதழை வழங்கினார்கள்.
உசிலம்பட்டியில் அண்ணா திமுக கட்சி சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள திருமண மஹாலில் அண்ணா திமுக கட்சி சார்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் பா நீதிபதி எம் எல் ஏ முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் கா.தவசி பாண்டியம்மாள் முன்னிலையில் தேனி பாராளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் அறிமுக கூட்டமும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. தேனி வேட்பாளர் ரவீந்த நாத் குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் நகரச் செயலாளர் பூமா ராஜா மாவட்ட நிர்வாகிகள் பிரேம் ஆனந்த் யூ.பி.ஆர். பஞ்சம்மாள் போத்திராஜ் சுதாகரன் போஸ் மகாலிங்கம் ராமநாதன் வழக்கறிஞர்கள் லட்சுமணன் சொக்கநாதன் பாலாஜி உக்கிரபாண்டி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தேனி பாராளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதே போல் மதுரை புறநகர் மாவட்டம் உ சிலம்பட்டி தேவர் சிலை அருகே இ காங்கிரஸ் கட்சி சார்பாக தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கூட்டணி கட்சி சார்பாக வரவேற்பு கொடுத்தனர். தேனி நாடாளுமன்றதொகுதியில் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து இ.காங் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரியாதை செலுத்தினர். மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு திமுக கூட்டணிக் கட்சியினர் திமுக கட்சி மாவட்ட செயலாளர் மணிமாறன் நகரச் செயலாளர் தங்கமலை பாண்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்தன், சுதாகரன் , காங்கிரஸ் நகரத் தலைவர் சசிவர்ணத்தேவர் வட்டார தலைவர் வெஸ்டன்முருகன் மாவட்ட துணை தலைவர் மகேந்திரன் மாவட்ட செயலாளர் வினோத்குமார் மாநில செயற்குழு பிரேம்சந்தர் மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி எஸ்.ஓ.ஆர்.இளங்கோவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்கமலை மதிமுக கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
அதே போல் மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டியில் தேவர் சிலை அருகே தேனி நாடாளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அமமுக கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் இ.மகேந்திரன் தலைமையில் வரவேற்றனர் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் துரைராஜன் சேதுராமன் ஏழுமலை பக்ருதீன் நகர செயலாளர் குணசேகர பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் தேனி பாராளுமன்ற வேட்பாளர் தங்கதமிழ்செல்வனுக்கு வரவேற்றனர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வரவேற்புக் கூட்டத்தில் முன்னாள் எம் எல் ஏ ஏ கே டி ராஜா சுப்புராஜ் மார்க்கெட் பிச்சை ராமகிருஷ்ணன் சிவப்பிரகாசம் செந்தில்குமார் தமிழ்ச்செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குணா குகை பகுதியில் வனத்துறையினருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்குள்ள கடைகளில், எளிதில் தீப்பற்றும் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வனத்துறை ஊழியர்கள் சோதனை செய்தபோது, மாரி என்ற பெண் நடத்தி வரும் கடையில் ஸ்டவ் பயன்படுத்தியதை கண்டுபிடித்துள்ளனர். அதனை பறிமுதல் செய்ய முயன்றபோது எழுந்த வாக்குவாதத்தில் வனத்துறை ஊழியர் ரித்தீஸ் என்பவர் பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக கடைக்காரர்கள் வனத்துறை அதிகாரி ரித்தீஸை தாக்கியதால் அவர் தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வாக்களிப்பது எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்கிற கோசத்தை முன்வைத்தும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பழனி நகர்க்குழுவின் சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி 24.03.19 அன்று பழனியில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரத்தை பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் உயர்திரு.விவேகானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், பழனி நகர்க்குழு சார்பில் S.மாலதி நகர தலைவர், P.தங்கவேல் நகரசெயலாளர், பழனி பொருளாளர் வெள்ளியங்கிரி, பழனி ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் பகத்சிங், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
வேலூர் தோட்டப்பாளையத்தில், தொழில் அதிபர் ஜி.ஜி.ரவியின் மகன்கள் சென்ற கார் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஜி.ஜி.ரவியின் மகன்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள், கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி மகாவின் கும்பலாக இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. மகா கொலைக்கு பழிக்குப் பழியாக கடந்த ஆண்டு ஜி.ஜி.ரவி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரின் மகன்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்திருப்பது, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் சாலையில் லாரியும் இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த கோபி அவரது மகன் அஸ்வின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவரது மனைவி ஜான்சி என்பவர் பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
விபத்து குறித்து பழனி தாலுகா காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.