தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி களம் காணும் நிலையில் அதனை எதிர்த்து அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிடுகின்றன.இப்படி 3 அணிகள் களம் காணும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 38 தொகுதிகளை தி.மு.க. கூட்டணியே கைப்பற்றியுள்ளது.அதே பலத்துடன் இந்த முறையும் தி.மு.க. கூட்டணி களம் இறங்குவதால் அது போன்ற ஒரு வெற்றியை மீண்டும் பெற வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டு உள்ளது. இந்த அணிக்கு எதிராக பாரதிய ஜனதா பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்துள்ளது. இந்த அணியும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக தேர்தல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் கடும் போட்டியை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.பாரதிய ஜனதா இல்லாத புதிய கூட்டணியை அமைத்துள்ள அ.தி.மு.க.வும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளது.இப்படி தேர்தல் களத்தில் 3 அணிகளும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண்கிறது. 3 அணிகளுக்கும் நாங்கள் போட்டியை ஏற்படுத்தும் வகையில் களம் காண்போம் என்று நாம் தமிழர் கட்சியினரும் கூறி வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக மாறி இருக்கிறது.
Category:
மாநில செய்திகள்
1991ம் ஆண்டு தனித்துப் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. பண்ருட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். 1996ம் ஆண்டு வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான என்.டி. திவாரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 4 எம்எல்ஏக்களைப் பெற்றது. 2001ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் நின்று 20 எம்எல்ஏக்களைப் பெற்றது. அதன்பின்னர் 2006ம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்டு 18 எம்எல்ஏக்களை பெற்றது. பின்னர் 2011ல் திமுக கூட்டணியில் 3 எம்எல்ஏக்களை பெற்றது. 2016ல் தனித்துப் போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது. 2021ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 5 தொகுதில் வெற்றி பெற்றது.
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 1996ல் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான என்.டி.திவாரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. பின்னர், 1998ல் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிட்டது. அதில் 4 பேர் வெற்றி பெற்று எம்பியானார்கள். அதில் ஒருவருக்கு (தலித் எழில்மலை) ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
பின்னர், 1999ம் ஆண்டு திமுக, பாஜ கூட்டணியில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2 பேர் ஒன்றிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அதில் பேராசிரியர் பொன்னுச்சாமி, என்.டி.சண்முகம் ஆகியோர் ஒன்றிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர், 2004ல் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்ற பாமக 5 தொகுதியில் வெற்றி பெற்றது. அதில், ஏ.கே.மூர்த்தியும், வேலுவும் ஒன்றிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். 2009ல் அதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணியில் பாமக போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது. 2014ம் ஆண்டு பாஜ, தேமுதிக கூட்டணியில் தர்மபுரியில் மட்டும் பாமக வெற்றி பெற்றது. 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில், அதிமுக, பாஜ கூட்டணியில் போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது. தற்போது 2024ல் பாஜ கூட்டணியில் போட்டியிடுகிறது.
2004ல் திமுக கூட்டணியில் இருந்த அன்புமணிக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டது. அப்போது அவர் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2019ல் அதிமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் அந்தப் பதவியில் தொடருகிறார். இவ்வாறு ஒவ்வொரு தேர்தலுக்கும் பாமக கூட்டணியை மாற்றி வருவது தமிழக மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக டாக்டர் ராணி எம்பிபிஎஸ்..
தென்காசி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக சங்கரன்கோவில் அரசு மருத்துவர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அதில் திமுக வேட்பாளர்கள் பட்டியலில், தென்காசி தொகுதி வேட்பாளராக சங்கரன் கோவிலை சேர்ந்த அரசு மருத்துவர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். 40 வயதான இவர் கடந்த 2002 முதல் திமுக உறுப்பினராகவும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் பிரிவு மருத்துவராகவும் உள்ளார். இவரது தந்தை சிவக்குமார் திமுக ஒன்றிய பிரதிநிதியாகவும், இவரது கணவர் கோ. ஸ்ரீகுமார் திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராகவும் உள்ள நிலையில், தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இவரது பெரியப்பா பே. துரைராஜ் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கஷ்டமான முடிவு; இஷ்டப்பட்டு எடுத்தேன்-மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை சௌந்தரராஜன்..
by Askar
written by Askar
கஷ்டமான முடிவு; இஷ்டப்பட்டு எடுத்தேன்-மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை சௌந்தரராஜன்..
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த மருத்துவர் தமிழிசை செளந்தர்ராஜன், மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அப்போது பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன், இந்நாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.
தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை தனது பதவியை நேற்று முன் தினம் (மார்ச் 18) ராஜினாமா செய்தார். தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு இன்று வந்த அவர், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அப்போது பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன், இந்நாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர். மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழிசை, அதே உறுப்பினர் எண்ணைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசும்போது, ’’பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
கஷ்டமான முடிவை எடுத்தாலும் இஷ்டப்பட்டு எடுத்திருக்கிறேன். கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -20
(கி.பி 1299-1922)
பயாசித் அவர்களின் மகன் முகம்மது ஆட்சி பொறுப்பு ஏற்றதும்
சிதறி இருந்த நிலப்பகுதிகளை ஒன்றாக்கி மீண்டும் உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தை
கட்டமைத்தார்.
மூத்த அமைச்சராக தந்தை காலத்தில் பணியாற்றிய மீர்ஜாபரை மீண்டும் முதல் அமைச்சராக மன்னர் முகம்மது நியமித்தார்.
அமைச்சரின் ஆலோசனைகளை
கேட்டு அதை மன்னர்
பின்பற்றினார்.
அப்போது அவர் கூறிய பல செய்திகள் முகம்மதிற்கு ஆச்சரியமாக இருந்தது.
உஸ்மானிய மன்னர்கள் பலர் பல அரசியல் காரணங்களுக்காக பல திருமணங்களை செய்தனர்.
ஆனால் அனைவருமே முஸ்லீம் பெண்களையே திருமணம் செய்தனர்.
அரண்மனைகள் ஆடம்பரமில்லாமல் எளிமையாக சாதாரண மாளிகைகளாக இருந்தன.
மது, அழகிகள் கூட்டம்,
சொகுசு வாழ்க்கை போன்ற ஆடம்பரங்களை எந்த உஸ்மானிய சுல்தானும் விரும்பவில்லை.
ஆனால் உஸ்மானிய மன்னர்களிலேயே முதன்முறையாக
மன்னர் பயாசித் அவர்கள் ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் புரிந்தார்.
ஆடம்பரமான அரண்மனை,
பணிப்பெண்கள்,
மது என அந்தப்புர சொகுசுகளை பயாசித் அனுபவித்தார்.
தனது மாமனார், மற்றும் கிறிஸ்தவ மனைவி உடன் ஒன்றாக அமர்ந்து, எல்லோரும் மது அருந்தும் அளவு பயாசித்தின் வாழ்க்கை சீரழிந்து இருந்தது.
அரண்மனையில்
கேளிக்கைகள் மிகுந்து இருந்தன.
அதனால் அவர் தனது படை வீரர்களை சரிவர கண்டு
கொள்ளவில்லை.
அவர்களுக்கான சம்பளங்கள், சலுகைகளை முறையாக வழங்கவில்லை.
ஆகவே பயாசித் அவர்களின் படைவீரர்கள் மிகுந்த சோர்வுடன் இருந்தனர்.
அவர் மிகுந்த கஞ்சத்தனத்துடன்
நடந்து கொண்டார்.
ஏழைகள் மற்றும் அறிஞர்களுக்கு
உதவிகள் செய்யாமல் புறக்கணித்தார்.
பயாசித் அவர்களிடம்
தூரநோக்கு சிந்தனையும்,
திட்டமிடல்களும், இல்லை.
தைமூரின் வலுவை புரிந்து அதற்குத்தகுந்த திட்டங்களை செயல்படுத்தி இருந்தால் பயாசித்திற்கு தோல்வி ஏற்பட்டு இருக்காது.
இதனால் அறிஞர்கள்,
அமைச்சர்கள்,
படைவீரர்கள் என பலதரப்பினரும் பயாசித்தோடு இணக்கமாக இருக்கவில்லை.
தைமூருக்கு எதிரான படையெடுப்பில் ஏனோதானோ
என்று வந்த படைவீரர்கள்
உடனடியாக தைமூரின் அணிக்கு மாறியதற்கு இதுவெல்லாம் காரணமாகி இறுதியில் தோல்வி ஏற்பட்டது.
தோல்வியின் மன சிதைவுகளால் இறுதியில் மரணமும் அவரை தழுவியது.
இந்த வரலாற்றை பயாசித்தின் மகனும் மன்னருமான
முகம்மதிற்கு மூத்த அமைச்சர் மீர்ஜாபர் எடுத்து சொன்னார்.
ஆகவே இனி பேரரசை சரியான வழியில் ஆட்சி நடத்துங்கள் என்று வேண்டுகோளும் வைத்தார்.
மன்னர் முகம்மது சிதறிய பகுதிகளை எல்லாம் எட்டு ஆண்டுகள் ஆட்சியில் ஒன்றிணைத்து சிறப்பாக ஆட்சி செய்தார்.
மரணம் இவரையும் தழுவியது.
இவரது மகன் இரண்டாம் முராத் பதவி ஏற்றார்.
உஸ்மானிய பேரரசின் ஆட்சி
அற்புதமாக மாறியது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக வின் 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..
- 1,தூத்துக்குடி- கனிமொழி,
- 2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.
- 3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,
- 4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,
- 5,மத்தியசென்னை- தயாநிதி மாறன்,
- 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,
- 7,காஞ்சீபுரம் – ஜி.செல்வம்,
- 8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன்,
- 9,திருவண்ணாமலை- அண்ணாதுரை
- 10,தர்மபுரி- ஆ.மணி
- 11,ஆரணி-தரணிவேந்தன்
- 12,வேலூர்- கதிர் ஆனந்த்,
- 13,கள்ளக்குறிச்சி- மலையரசன்
- 14,சேலம்-செல்வகணபதி
- 15,கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார்.
- 16,பெரம்பலூர் – அருண் நேரு
- 17,நீலகிரி – ஆ.ராசா,
- 18,பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி
- 19,தஞ்சாவூர் – முரசொலி
- 20,ஈரோடு-பிரகாஷ்
- 21,தேனி- தங்க தமிழ்செல்வன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது தி.மு.க!- அதிரடியாக 36 வாக்குறுதிகளை கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
by Askar
written by Askar
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது தி.மு.க!- அதிரடியாக 36 வாக்குறுதிகளை கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது.
இந்த தேர்தலுக்கு முன்னதாக கனிமொழி எம்.பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களது குரல்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- 1.மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.
- 2.ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்றே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
- 3.உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
- 4.புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.
- 5.ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.
- 6.ஒன்றிய அரசு அலுவகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
- 7.அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.
- 8.திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
- 9.தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
- 10.ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
- 11.புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
- 12. நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
- 13. நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- 14.இந்தியா முழுவதும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர்உரிமைத் தொகை ரூபாய்.1000/ வழங்கப்படும்.
- 15. தமிழ்நாட்டிற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
- 16.மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.
- 17.மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
- 18.பா.ஜ.க அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.
- 19.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
- 20.வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
- 21.குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.
- 22.ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- 23.ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
- 24.வேளாண் விளைபொருள்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (MSP) செய்யப்படும்.
- 25.இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விகடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- 26.விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.
- 27.LPG சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை –ரூ.75 மற்றும் டீசல் விலை ரூ.65-ஆக குறைக்கப்படும்.
- 28.பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.
- 29.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து150-ஆகவும், ஊதியத்தை ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.
- 30.ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களானIIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழ்நாட்டில்புதியதாக அமைக்கப்படும்.
- 31.பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.*
- 32. ஒரே நாடு -ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
- 33.மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.
- 34. ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
- 35. இசுலாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.
- 36. சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு..
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் 19.03.2024 அன்று தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மூன்று இலட்சம் வாக்காளர்களின் கையெழுத்து பெறும் மாபெரும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே.கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணிகள், மனித சங்கிலி, கல்லூரி மாணவர்களுக்கான (முதல் வாக்காளர்கள்) விழிப்புணர்வு முகாம்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து மூன்று இலட்சம் வாக்காளர்களின் கையெழுத்து பெரும் மாபெரும் முகாம் 19.03.2024 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 13,36,956 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் மூன்று இலட்சம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கையெழுத்து முகாம் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் மகளிர் திட்ட சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக நடைபெறும். எனவே வாக்காளர்கள் வருகின்ற மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நாள் அன்று 100 சதவீதம் நேர்மையாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் இரா. மதி இந்திரா பிரியதர்ஷினி, கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் நரசிம்மன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பத்மாவதி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மாலதி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் V.M. சிவக்குமார், M.மாரீஸ்வரன், E.சாமத்துரை, பொ.டேவிட் ஜெயசிங் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழர்களிடம் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பகிரங்க மன்னிப்பு கோரினார்..
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழர்களை தொடர்புப்படுத்திப் பேசியதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே.
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் இருந்து கண்டனம் வலுத்த நிலையில், தமது கருத்தை திரும்பப்பெறுவதாக X தளத்தில் பதிவு.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை கருத்தை பதிவிட்டார்.
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் , உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஷோபா, என்னுடைய கருத்து தமிழர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய முந்தைய கருத்தையும் திரும்ப பெறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று தொடங்குகிறது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்..
by Askar
written by Askar
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றது. எனவே, அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி உள்ளன.
விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட ஒருசில கட்சிகள் மட்டுமே தற்போது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மற்ற கட்சிகள் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உள்ளது.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.
அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனுக்களை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெற்றுக்கொள்வார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரி இல்லாத நிலையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்புமனுவை பெறுவார்.
வேட்புமனு விண்ணப்பங்களை, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்தை கம்ப்யூட்டரிலேயே தட்டச்சு செய்து பூர்த்தி செய்து, அச்சு நகல் எடுத்து அதை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்கலாம். ஆன்லைன் மூலமாக பிரமாணப் பத்திரத்தை, சொத்து, கடன் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். ஆன்லைன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. வேட்பு மனுவுடன் டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரத்தை அளிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான டெபாசிட் தொகை ரூ.12 ஆயிரத்து 500 ஆகும்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டும் (மொத்தம் 5 பேர்) உடன் செல்லலாம். வேட்புமனுக்கள் பெறப்படும் நிகழ்வு கண்டிப்பாக வீடியோ பதிவு செய்யப்படும். வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வேட்பாளரின் வாகனத்துடன் வரும் மற்ற வாகனங்களில் பயணிப்போரின் தேர்தல் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்படும்.
இதேபோல, ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பிருந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரை புதிய வங்கி கணக்கினைப் பராமரிக்க வேண்டும். அந்த வங்கி கணக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் வழங்க வேண்டும். புகைப்படத்தில் கட்சி சின்னம், கொடி குறித்த எந்த அடையாளமும் இருக்கக்கூடாது.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்களாக இருந்தால் ஒரு முகவரும், இதர வேட்பாளராக இருந்தால் 10 முகவராலும் முன்மொழியப்பட்டிருக்க வேண்டும். முன்மொழியும் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்புமனுக்கள் பெறப்படும். 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை. எனவே, 40 தொகுதிகளிலும் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாற்றம்: டாக்டர். கையிலைராசன் அறிவிப்பு..
by Askar
written by Askar
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாற்றம்: டாக்டர். கையிலைராசன் அறிவிப்பு..
நடைபெறவுள்ள 2024 பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிரஞ்சனா அறிவிக்க பட்டிருந்த நிலையில் அவரை நீக்கம் செய்து
தற்போது திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர். துரை கையிலைராசன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக காவல் நிலையத்தில் புகார் மனு..
by Askar
written by Askar
மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக காவல் நிலையத்தில் புகார் மனு..
சென்னை மாம்பழம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ Tv என்கிற YOUTUBE CHANNEL கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பற்றிய செய்தி ஒன்று வெளியிட்டு இருக்கிறார்கள் .
மேட்டுப்பாளையத்தில் இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் , இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்திலும்,மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் நக்சலைட்டுகளோடு தொடர்புடையவர்கள் என்றும் இஸ்லாமிய விரோத வெறுப்பு (பொய்) பிரச்சாரத்தை இந்த சேனல் வெளியிட்டுள்ளது .
இந்த நிகழ்ச்சிக்கான செய்திகளை மேட்டுப்பாளையம் இந்து முன்னணியை சார்ந்த அயோக்கியர்கள் மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் மக்களிடையே மத கலவரங்களை தூண்டி அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பொய்யான செய்திகளை பரப்பி உள்ளார்கள் .
இஸ்லாமிய மக்கள் மீது இந்து மக்களிடையே வன்மத்தை விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள் .
நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் அடர்ந்த காட்டுப் பகுதி இங்கு அருகில் இருப்பதால் , இஸ்லாமிய மக்கள் தீவிரவாத செயல்கள் ஈடுபட்டுவிட்டு தப்பி ஓட வசதியாக இருப்பதாக இஸ்லாமிய மக்கள்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பொய்யான செய்தி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
காரமடை புஜங்கனூர் பகுதியில் உள்ள காளம்பாளையத்தில் 10 இஸ்லாமிய குடும்பங்களை இருக்கிறார்கள் என்றும் , அனுமதி இன்றி பள்ளிவாசல் மற்றும் மதரஸா கட்டுகிறார்கள் என்றும் மத வெறுப்புணர்வு கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள் .
இந்தியாவின் இரண்டாம் தர குடிமக்களாக இந்து மத மக்களிடம் சித்தரித்துக் காட்டும் மதவெறி சிந்தனையில் இந்த தொலைக்காட்சி தொகுப்பு ஒளிபரப்பப்பட்டுள்ளது .
மத கலவரங்களை தூண்டும் விதமாகவும், பொய்யான செய்திகளை பரப்பி சமூகத்தில் அமைதியை கெடுக்கும் விதமாகவும் , இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தி பேசிய ஸ்ரீ YOUTYBE CHANNEL தடை செய்யக் கோரியும் , பொய்யான செய்திகளை விமர்சனமாக பேசி வீடியோவை வெளியிட்ட பிரியா வெங்கட் என்ற சங்கியை கைது செய்யுமாறு புகார் மனு அளிக்கப்பட்டது .
இந்நிகழ்வில் ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஷெரீப் ஹாஜியார் , ஐக்கிய ஜமாஅத் செயலாளர் அக்பர் அலி , தமுமுக மமக மாவட்ட தலைவர் M. அப்துல் ஹக்கீம் , தமுமுக மாவட்ட செயலாளர் JV நாசர், தமுமுக மமக மாவட்ட துணை தலைவர் S. அஷ்ரப் அலி , தமுமுக நகர செயலாளர் ஜாபர் சாதிக் , மமக நகர செயலாளர் முஹம்மது ஜூபைர் மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாஜக உடன் பாமக கூட்டணி: கட்சியில் இருந்து வரிசையாக விலகும் பாமக தொண்டர்கள்.! இணையதளத்தில் ஆவேசம்..
by Askar
written by Askar
பாஜக உடன் பாமக கூட்டணி: கட்சியில் இருந்து வரிசையாக விலகும் பாமக தொண்டர்கள்.! இணையதளத்தில் ஆவேசம்..
நேற்று மாலை வரை அதிமுக-பாமக கூட்டணி உறுதி என இருந்த நிலையில் நேற்று மாலை திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்டக் குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக – பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக உடன் கூட்டணி உறுதியான நிலையில் கட்சியில் இருந்து வரிசையாக விலகுவதாக இணையத்தில் பாமக தொண்டர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
கண்டிப்பாக எங்க தொகுதியில் பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடமாட்டோம். இடஒதுக்கீடு துரோகிகளுக்கு என்றும் ஓட்டு இல்லை, வன்னியர் ஓட்டு பாஜகவுக்கு இல்லை, என விமர்சனம் செய்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். மேலும் சிலர் பாமக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கொள்கிறேன் யார் மீதும் எந்த கோபமும் இல்லை இது எனது தனிப்பட்ட முடிவு பதிவு செய்து வருகின்றனர். இதனை தவிர பாஜக – பாமக கூட்டணியை விமர்சிக்கும் வகையில் பாமக தொண்டர்களே சிலர் மீம்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக தலைமையிலான INDIA கூட்டணிக்கு ஆதரவு! மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவிப்பு..
by Askar
written by Askar
திமுக தலைமையிலான INDIA கூட்டணிக்கு ஆதரவு! மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவிப்பு..
நடைபெறவுள்ள 2024- நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்திருக்கிறது.
இந்த தேர்தல் களத்தை ஜனநாயக சக்திகளுக்கும், ஃபாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது.
நாட்டின் பன்மை கலாச்சாரத்தையும், ஜனநாயக மாண்புகளையும் பாதுகாப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மாறியுள்ளதை கவனத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
கடந்த இரண்டு வாரங்களாக சான்றோர்கள், அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் நல்லெண்ண கருத்துகளை உள்வாங்கி, 18.03.2024 அன்று நடைபெற்ற கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசத்தை காக்கும் அறப்போரில் கட்டுமரத்தில் பயணிப்பதா? போர் கப்பலில் பயணிப்பதா? என்ற நிலையில், I.N.D.I.A கூட்டணி என்ற போர் கப்பலில் ஏறியுள்ளோம்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான I.N.D.I A கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் இக்கூட்டணியின் வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை !திருவாடனை அருகே சிக்கிய பணம் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருமொழி செக்போஸ்டில் நாடாளுமன்றத் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கோட்டைராஜா தலைமையிலான குழுவினர் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த பௌசுல்லா என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.80 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு காரில் கண்ணன் என்பவர் எடுத்து வந்த மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 5 டீசர்ட் பண்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுபோல திணையத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவரது காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ 97 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் உடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல்- 2024க்காண தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததையொட்டி வங்கியாளர்கள் பண பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலை பின்பற்றி செயல்பட வேண்டும்.ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கும் அதே போல் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களுடன் அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் அடையாள அட்டையுடன் பணிமேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு நாளும் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனையின் போது சந்தேகத்திற்குரிய கண்டறிந்தால் உடனடியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அதேபோல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பங்கேற்கவுள்ள வேட்பாளர்களுக்கான தேர்தல் வங்கி கணக்கு துவங்கும் போது அவர்களிடம் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடித்து செயல்பட வங்கியாளர்கள் அறிவுறுத்த வேண்டும். தேர்தல் முடிவுறும் வரை வங்கிகளில் தேர்தல் ஆணைய வழிமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல் பெற்றிட வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை வீர் பிரதாப் சிங், பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்..
by Askar
written by Askar
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி முதல்வரின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரான பொன்முக்கு மாநில அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருக்கிறார். சட்ட ரீதியான தடைகள் ஏதும் இல்லாத போது மாநில அரசின் பரிந்துரையை நிறைவேற்றுவது தான் மாநில ஆளுநரின் கடமை. ஆனால், தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளுக்கும், முடிவுகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதே ஆளுநரின் செயலாக இருக்கிறது.
பதவி ஏற்பு பிரச்னையிலும் ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறுகிறார். இது முதல்வரின் பரிந்துரையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அப்பட்டமாக மீறுகிற நடவடிக்கை. பொன்முடி மீதான தீர்ப்பை செயல்படுத்துவதற்கு உச்சநீதி மன்றம் தடை விதித்திருக்கும் நிலையில்தான், அவருக்கு அமைச்சர் பதவி அளிப்பதற்கு மாநில அரசு பரிந்துரை செய்திருக்கிறது. இதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை. மேலும், ஒருவர் குற்றவாளி என்று இறுதி தீர்ப்பளிக்கப்படும் வரை அவர் நிரபராதி தான் என்கிற சட்டவிதிகளின் அடிப்படையில் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என்று சபாநாயகர் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, தமிழ்நாடு ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நிறைவேற்றிட வேண்டும். மாநில அரசின் பரிந்துரையை ஏற்று பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, இம்முறை 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில், ஈரோடு, பெரம்பலூர், தேனி, கோவை, ஆரணி ஆகிய 5 தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் கைப்பற்றி தானே போட்டியிடுகிறது
திமுக. அதற்கு பதிலாக கடந்த முறை போட்டியிட்ட திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகளை காங்கிரசுக்கும் விட்டுக்கொடுத்துள்ளது.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆரணி, தேனி தொகுதிகளை திமுக.,வுக்கும், திருச்சியை மதிமுக.,வுக்கும் விட்டுக்கொடுத்து, அதற்கு பதிலாக திமுக வசமிருந்த கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகளை பெற்றுக்கொண்டது.
மா.கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2019ல் போட்டியிட்ட கோவை தொகுதியை திமுக.,விடம் ஒப்படைத்துவிட்டு, அதற்கு பதிலாக திமுக போட்டியிட்ட திண்டுக்கல் தொகுதியை பெற்றது.
மதிமுக
மதிமுக கடந்த தேர்தலில் திமுக.,வின் உதயசூரியன் சின்னத்தில் ஈரோடு தொகுதியில் நின்றிருந்தது. அந்த தொகுதியை தற்போது திமுக.,விடம் கொடுத்துவிட்டு, காங்கிரசிடம் இருந்த திருச்சி தொகுதியை கேட்டு பெற்றுள்ளது. அதில் தனிச்சின்னத்தில் மதிமுக போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது.
அதே தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதிகளில் தான் தற்போதும் போட்டியிடுகின்றன.
மநீம.,வுக்கு ராஜ்யசபா
திமுக கூட்டணியில் புதிதாக சேர்ந்த நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு லோக்சபாவில் எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. மாறாக, அக்கட்சிக்கு 2025ல் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்களவைத் தேர்தல் 2024: திமுக கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள் ஓர் பார்வை..
by Askar
written by Askar
மக்களவைத் தேர்தல் 2024: திமுக கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள் ஓர் பார்வை..
✦ சென்னை வடக்கு
✦ சென்னை தெற்கு
✦ மத்திய சென்னை
✦ காஞ்சிபுரம் ( தனி)
✦ அரக்கோணம்
✦ வேலூர்
✦ தருமபுரி
✦ திருவண்ணாமலை
✦ சேலம்
✦ கள்ளக்குறிச்சி
✦ நீலகிரி (தனி)
✦ பொள்ளாச்சி
✦ கோவை
✦ தஞ்சாவூர்
✦ தூத்துக்குடி
✦ தென்காசி (தனி)
✦ ஸ்ரீபெரம்புதூர்
✦ பெரம்பலூர்
✦ தேனி
✦ ஈரோடு
✦ ஆரணி
✦ திருவள்ளூர் (தனி) (காங்)
✦ கடலூர் (காங்)
✦ மயிலாடுதுறை (காங்)
✦ சிவகங்கை (காங்)
✦ திருநெல்வேலி (காங்)
✦ கிருஷ்ணகிரி (காங்)
✦ கரூர் (காங்)
✦ விருதுநகர் (காங்)
✦ கன்னியாகுமரி (காங்)
✦ புதுச்சேரி (காங்)
✦ சிதம்பரம் (விசிக)
✦ விழுப்புரம் (விசிக)
✦ மதுரை (சிபிஎம்)
✦ திண்டுக்கல் (சிபிஎம்)
✦ திருப்பூர் (சிபிஐ)
✦ நாகப்பட்டினம் (சிபிஐ)
✦ நாமக்கல் (கொமதேக)
✦ திருச்சி (மதிமுக)
✦ ராமநாதபுரம் (ஐயூஎம்எல்)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணியை உறுதிப்படுத்துவதில் பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு முயற்சித்தனர். ஆனால் அ.தி.மு.க. ஏற்கவில்லை. இதனால் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. இதில் பா.ம.க., தே.மு.தி.க.வை தவிர மற்ற கட்சிகள் பா.ஜ.க கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டன.பா.ம.க.வையும், தே.மு.தி.க.வையும் இழுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வந்தது. அ.தி.மு.க.வுடனும் பேசிக் கொண்டிருப்பதால் இரு கட்சிகளும் எந்த அணியில் சேருவது என்று முடிவெடுக்கப்படாமல் இருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் சென்னை வந்தனர். கிண்டி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் அவர்களை டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது கூட்டணியை உறுதி செய்து உள்ளார். பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வுடன் பேசிய பிறகு தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்ய திட்டமிட்டிருந்தனர்.இந்நிலையில், பாஜகவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டணி அமைக்க பாமக முடிவு செய்துள்ளது.அதன்படி, மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து பா.ம.க சந்திக்கிறது. இதனை, பாமக மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உறுதி செய்தார்.மேலும், நாளை ஒப்பந்தம் ஆன பிறகு தொகுதிகள் குறித்து அறிவிப்போம் என்றும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ராமதாஸ் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment.