Home செய்திகள் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக காவல் நிலையத்தில் புகார் மனு..

மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக காவல் நிலையத்தில் புகார் மனு..

by Askar

மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக காவல் நிலையத்தில் புகார் மனு..

சென்னை மாம்பழம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ Tv என்கிற YOUTUBE CHANNEL கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பற்றிய செய்தி ஒன்று வெளியிட்டு இருக்கிறார்கள் .

மேட்டுப்பாளையத்தில் இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் , இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்திலும்,மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் நக்சலைட்டுகளோடு தொடர்புடையவர்கள் என்றும் இஸ்லாமிய விரோத வெறுப்பு (பொய்) பிரச்சாரத்தை இந்த சேனல் வெளியிட்டுள்ளது .

இந்த நிகழ்ச்சிக்கான செய்திகளை மேட்டுப்பாளையம் இந்து முன்னணியை சார்ந்த அயோக்கியர்கள் மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் மக்களிடையே மத கலவரங்களை தூண்டி அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பொய்யான செய்திகளை பரப்பி உள்ளார்கள் .

இஸ்லாமிய மக்கள் மீது இந்து மக்களிடையே வன்மத்தை விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள் .

நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் அடர்ந்த காட்டுப் பகுதி இங்கு அருகில் இருப்பதால் , இஸ்லாமிய மக்கள் தீவிரவாத செயல்கள் ஈடுபட்டுவிட்டு தப்பி ஓட வசதியாக இருப்பதாக இஸ்லாமிய மக்கள்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பொய்யான செய்தி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

காரமடை புஜங்கனூர் பகுதியில் உள்ள காளம்பாளையத்தில் 10 இஸ்லாமிய குடும்பங்களை இருக்கிறார்கள் என்றும் , அனுமதி இன்றி பள்ளிவாசல் மற்றும் மதரஸா கட்டுகிறார்கள் என்றும் மத வெறுப்புணர்வு கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள் .

இந்தியாவின் இரண்டாம் தர குடிமக்களாக இந்து மத மக்களிடம் சித்தரித்துக் காட்டும் மதவெறி சிந்தனையில் இந்த தொலைக்காட்சி தொகுப்பு ஒளிபரப்பப்பட்டுள்ளது .

மத கலவரங்களை தூண்டும் விதமாகவும், பொய்யான செய்திகளை பரப்பி சமூகத்தில் அமைதியை கெடுக்கும் விதமாகவும் , இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தி பேசிய ஸ்ரீ YOUTYBE CHANNEL தடை செய்யக் கோரியும் , பொய்யான செய்திகளை விமர்சனமாக பேசி வீடியோவை வெளியிட்ட பிரியா வெங்கட் என்ற சங்கியை கைது செய்யுமாறு புகார் மனு அளிக்கப்பட்டது .

இந்நிகழ்வில் ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஷெரீப் ஹாஜியார் , ஐக்கிய ஜமாஅத் செயலாளர் அக்பர் அலி , தமுமுக மமக மாவட்ட தலைவர் M. அப்துல் ஹக்கீம் , தமுமுக மாவட்ட செயலாளர் JV நாசர், தமுமுக மமக மாவட்ட துணை தலைவர் S. அஷ்ரப் அலி , தமுமுக நகர செயலாளர் ஜாபர் சாதிக் , மமக நகர செயலாளர் முஹம்மது ஜூபைர் மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

 

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com