மாநில செய்திகள்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொடரும் பாலியல் தொல்லை..ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி கீழ நகராட்சியில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமியா பள்ளியில் 39வது ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..
இராமநாதபுரம் கீழக்கரை இஸ்லாமியா பள்ளியின் 39வது ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் இன்று (22/04/2018) மாலை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா ஆறாம் வகுப்பு மாணவி ஃபஜீஹா மற்றும் ஆயிஷா ராபிஃஹா ஆகியோரின் கிராத்துடனும் UKG மாணவி ஃபாத்திமா சானாவின் வரவேற்புரையுடனும் தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே முகைதீன் இபுராஹிம் தலைமை வகித்தார், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினாராக மாவட்ட நீதிபதி கயல்விழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளும், பட்டங்களும் வழங்கினார். இந்நிகழ்வின் பட்டமளிப்பு உரையை UKG மாணவி அர்சியா பர்வீன் வழங்கினார். அதைத் தொடர்ந்து சிறுவர்களின் கலை நிகழ்ச்சி, யா தைபா என்ற அரபு நிகழ்ச்சி, கதம்பம் நிகழ்ச்சி, அரேபிய நடனம் மற்றும் தமிழேன்டா என்ற மாணவர்கள் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியாக ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜன்னத் ரிஜ்னா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் மேபெள் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னை சூளைமேட்டில் வசிக்கும் மூன்றரை வயது சிறுமி,கண்ணகி தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அதே தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கோவில் பூசாரியான உதயகுமார் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மிரண்டு போன குழந்தை வீட்டுக்கு வந்து அழுதுள்ளது. பெற்றோர் விசாரித்த போது கோவில் பூசாரி தன்னை கிள்ளிவிட்டதாக கூறியதால் உஷாரடைந்த பெற்றோர் சிறுமியிடம் நடந்த சம்பவங்களை விபரமாக கேட்டுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி, மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இன்று துவங்கியுள்ளது. தங்கள் பிள்ளைகளை இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரகாரம் தனியார் பள்ளிகளில் சேர்க்க மே, 18க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் பெற்றோர், அரசு தேர்வுத் துறையின், http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய, வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு, அந்தந்த பகுதி தனியார் பள்ளிகள், வட்டார வள மையங்கள், கல்வித் துறை அலுவலகங்களில், விண்ணப்பம் பதிவு செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் எவ்வித கட்டணமும் இல்லாமல் வகுப்பில் சேர்க்க கீழ் வரும் தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் இணைய தளத்தில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.
http://tnmatricschools.com/rte/rtehome.aspx
http://tnmatricschools.com/rte/rtehome.aspx
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அப்துல்கலாம் படித்த பள்ளியில் மின்சார இணைப்பை துண்டித்த மின்வாரிய அதிகாரிகள்..
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் உள்ளது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஆரம்ப கல்வி பயின்ற மண்டபம் ஒன்றிய நடுநிலை நம்பர் 1 பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் 200க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது, அன்றைய தினம் அவரின் படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம். மேலும் இப்பள்ளியில் ஆய்வகம், கணினி அறை, நூலகம் என பல்வேறு வசதிகளை அரசும் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களும் செய்து கொடுத்துள்ளனர்.
மாவட்ட கல்விதுறை அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, அதன் பின்பு புதிய மின் இணைப்பு பெறப்பட்டது, இந்த மின் இணைப்பிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இன்று பள்ளிக்கு வந்திருந்த மின்வாரியதுறை அதிகாரிகள் மின்கட்டணம் செலுத்தாத விபரத்தை பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்தனர். அதன் பின் மின்வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கம்ப்யூட்டர் மற்றும் மின் விசிறி இயங்காததால் அவதியடைந்தனர். மேலும் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு மின் இணைப்பு சரி செய்யப்படும் என்று தெரிவித்தனர். முன்னாள் ஜனாதிபதி படித்த பள்ளிக்கே இந்த நிலையா என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தண்ணீர் தேவை அவசியம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: ஜனாதிபதிக்கு கடிதம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் பட்டணம்காத்தானில் விசை படகு நாட்டு படகு மீனவர்களுக்கான உபகரண கருவிகள் கடை ..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் குந்து காலில் ரூ 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் மீனவர்களிடம் ஆலோசனை..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மீன்பிடி தடை காலம் நாளை (15/04/2018) தொடக்கம்.. மீனவர்கள் கோரிக்கை இந்த வருடம் நிறைவேறுமா??
இதன் காரணமாக ராமேசுவரம் மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்படும்.
மீன்பிடி தடை காலம் தொடங்கியுள்ளதால், கடலோர மாவட்டமான கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்படுவர். இவர்களில் பலர் கூலி வேலைக்கு செல்வர்.
இன்னும் பலர் விசைப்படகுகளை பழுது பார்க்கவும், வர்ணம் அடிக்கவும், மின் மோட்டார்கள், வலைகள், மீன்பிடி சாதனங்களை சரி செய்யவும் மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்திக் கொள்வார்கள்.
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு வழங்கும் நிவாரண தொகை இந்த வருடம் உயர்த்தபடும் என ஆவலுடன் உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தைவான் நாட்டின் மருத்துவ பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உரையாற்றிய ‘கீழக்கரை’ மாணவனின் நீங்காத நினைவலைகள்
‘சீன தேசம் சென்றாலும் சீர் கல்வியைத் தேடு’ என்பது முன்னோர்களின் வாக்கு. ஆனால் இன்று நம் இந்திய தேசத்திலேயே அதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம்.
அதையும் தாண்டி அவர்களுடைய உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொணர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்காமல் விட்டு விடுகிறோம். அதே போல் எல்லா மாணவர்களுக்கும் அவர்களுக்கு பிடித்தமான துறை கிடைத்து விடுவதில்லை.
மாணவர்கள் பிடிக்காத படிப்பை படித்தாலும் அதனை எவ்வாறு வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி சிகரம் தொடுவது என்பதை கீழக்கரை சேரான் தெருவை சேர்ந்த மருத்துவ மாணவன் முஹம்மது நபீல் கீழை நியூஸ் வலைத்தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியின் சாராம்சம் :-
நான் சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கருவியல் துறையில் மூன்றாமாண்டு படித்து வருகிறேன். பள்ளிப்பருவத்தில் இருந்தே டாக்டர் படிப்பதே என்னுடைய இலட்சியமாக இருந்து வந்தது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 96 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் என் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்து இருந்தனர். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 80 சதவீதம் மட்டுமே பெற்றேன்.
இந்த அதிர்ச்சி தரும் தேர்வு முடிவிற்கு பிறகு டாக்டர் ஆக முடியும் என்கிற எனது சிறு வயது கனவு சுக்கு நூறாக உடைந்தே போனது. அதனை தொடர்ந்து கடுமையான மனக் கவலை என்னை தொற்றிக் கொண்டது. சரி டாக்டர் ஆவது தான் எனக்கு இறைவன் நாடவில்லை. மருத்துவ பட்டப் படிப்பில் ஏதேனும் தேர்வு செய்து படிக்கலாம் என்று மருத்துவ கருவியல் பட்டப்படிப்பை தேர்வு செய்து டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.
இந்த கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் கல்லூரிக்கு சரியாக செல்வது இல்லை. காரணம்… நான் சிறுவயது முதல் படிக்க வேண்டும் என கனவு கண்ட டாக்டர் படிப்பு படிக்கவில்லையே… என மனம் தடுமாறிக் கொண்டே இருந்தது. முதலாமாண்டு நிறைவு செய்த பின்னரும் கல்லூரிக்கு முழு மன நிறைவோடு சென்று படிக்க மனமில்லாமல் சென்றேன்.
இந்த இக்கட்டான தருணத்தில் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் டாக்டர். ஆரிப் என்கிற சகோதரரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு மருத்துவர் என்பதால் நான் இந்த கல்லூரியில் தேர்ந்தெடுத்து இருக்கும் துறையின் சிறப்பம்சம் குறித்தும், பிற்காலத்தில் இந்த துறை எந்த அளவில் சிறப்பான உயரத்தை தொடும் என்பது சம்பந்தமாகவும், தற்போது நான் படித்து கொண்டிருக்கும் இந்த துறை எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை எல்லாம் தெளிவாக விளக்கமாக எனக்கு எடுத்து கூறினார்.
இறைவனுடைய கிருபையால் அந்த நிமிடத்தில் இருந்து நாம் படித்து கொண்டிருக்கும் என் துறை மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அதீத ஆர்வத்துடன் விருப்பமுடன் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய படிப்பில் நான் தேர்வு செய்த எனது விருப்ப பாடம் (NEURO PROSTHETICS) தமிழில் இதனை மூளை இயந்திரம் கிடைமுகம் என்று சொல்லுவார்கள்.
இதற்கிடையில் அல்லாஹ்வுடைய அருளால் கடந்த டிசம்பர் 2017 ல் தைவான் நாட்டில் உள்ள TAIPEI மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘INTERNATIONAL HONORS PROGRAM’ நிகழ்ச்சிக்கு இந்தியாவில் இருந்து தலைசிறந்த 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் நானும் ஒருவனாக தைவான் நாட்டிற்கு சென்றேன். அங்கு 15 நாட்கள் நடைபெற்ற வகுப்புகளில் பங்கேற்று உரையாற்றினேன்.
இதில் எனக்கு பல்வேறு படிப்பினைகளை இறைவன் வழங்கி கவுரவித்தான். எந்த இலட்சியத்தோடு படித்து டாக்டர் தான் ஆவேன் என்று இருந்தேனோ… அந்த இலட்சியம் தவறு என்பதை உணர்ந்தேன். அங்கு எனக்கு பாடம் எடுத்த டாக்டர்கள் பெருபாலானோர் மருத்துவ படிப்பினை முடித்து விட்டு என்னுடைய துறையை தேர்வு செய்தவர்களே.
அப்போது தான் நான் விளங்கி கொண்டேன். நம்மை அழகாக படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும் நமக்கு எது சிறந்தது என்று… இறைவன் நமக்கு கொடுத்துள்ள விஷயங்களை ஆராய்ந்து பாருங்கள்… நாம் படைக்கப்பட்டதின் முக்கியத்துவம் புரியும்.
என்னை போன்ற மாணவர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
நீங்கள் எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. ஏதோ கல்லூரிக்கு சென்றோம், புத்தகத்தில் உள்ளதை படித்தோம், பாஸ் செய்தோம் என்று இருந்து விடாமல் உங்கள் துறை பற்றி ஆழமாக படியுங்கள். உங்கள் துறையின் நுணுக்கங்களை ஆராயுங்கள். அதில் ஒன்றை தேர்வு செய்து அதிகம் உழையுங்கள்.
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ கற்றுக் கொள்வோம். அல்லாஹ் நாடினால்.. நீங்கள் இந்தியாவின் தலைசிறந்த மாணவனாகவும், நம் இந்திய தேசத்தின் உயர்பதவி வகிக்கும் சிறந்த குடிமகனாகவும் ஆகலாம்.” இவ்வாறு தன்னுடைய கல்வி அனுபவங்களை நம்மிடையே பகிந்து கொண்டார்.
இந்த மூளை இயந்திர மருத்துவ படிப்பினை கீழக்கரையில் இருந்து படிக்கும் ஒரே மாணவன் சேரான் தெருவை சேர்ந்த முஹம்மது நபீல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தமிழகத்திலேயே டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் இந்த பட்டப் படிப்பு துறை செயல்படுகிறது.
‘கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்னும் சொற்பொதிக்குள் அடங்கியுள்ள அர்த்தங்கள் ஏராளம். அதனை கீழக்கரை மாணவன் முஹம்மது நபீல் மெய்ப்பித்து இருக்கிறார்.
இறைவன் அருளால் முஹம்மது நபீல் இன்னும் பல வெற்றிகளும் சாதனைகளும் படைத்திட கீழை நியூஸ் நிர்வாகம் மனதார வாழ்த்துகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சூரைக்காற்றின் வேகத்தால் கடல் சீற்றம், விசைப்படகு நாட்டுபடகுகள் சேதம்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் குறைவாக காணப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடையும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை காற்றின் வேகம் அதிகரித்து சூரை காற்றாக மாறியதில் ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு நாட்டுபடகுகள் மற்ற படகுகளுடன் மோதி படகு முழுவதும் சேதமடைந்து கரை ஒதுங்கியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படகு உரிமையாளர்கள் படகுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில்வளைவு பாலம் அமைத்தால் இயற்கை சீற்ற காலங்களில் இது போன்ற சம்பவங்களில் இருந்து படகுகளை மீட்டு பாதுகாக்க படலாம், எனவே இராமேஸ்வரம் மீன்பிடிதுறைமுகத்தில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கையிலிருந்து படகு மூலம் இராமேஸ்வரம் வந்த துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் கைது மத்திய மாநில உளவு துறை போலீசார் விசாரணை..
இலங்கையில் இருந்து கள்ள தோணி மூலம் இராமேஸ்வரம் வந்திருங்கிய துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவ்ரிம் என்பவரை கைது செய்து மத்திய, மாநில உளவுத்துறை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மஹீர் தேவ்ரிம் என்ற 44 வயதுடைய துருக்கிய நாட்டை சேர்ந்த இவர், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கடந்த 1993ம் வருடம் துருக்கி நாட்டில் இருந்து வெளியேறி அங்கிருந்து கஜகஸ்தான், தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2017ம் வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு சென்ற இவர் இலங்கையின், தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் இந்தியா வருவதற்க்கு பல முறை முயற்சி செய்தும் அவர் இந்தியா வர முடியவில்லை. இந்நிலையில் அவரின் தீவிர முயற்சியால் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து படகோட்டி மூலம் 25000 ரூபாய் செலுத்தி, அங்கிருந்து பகல் 12 மணிக்கு கள்ள தோணி (ப்ளாடிக் படகு) மூலம் இராமேஸ்வரத்திற்கு புறப்பட்ட இவர் இரவு 7மணிக்கு இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.
கள்ள தோணி மூலம் வெளிநாட்டவர் ஊடுருவிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவ்ரிம் என்பவரை, மத்திய மற்றும் மாநில உளவுத்துறை போலிசார் இவர் வந்ததிற்கான முக்கிய காரணம் என்ன? யார் மூலம் வந்துள்ளார்? என்ற கோணத்தில் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவரிடம் உள்ள பாஸ்போர்ட் மற்றும் அவர் கொண்டு வந்துள்ள பொருட்களையும் போலிசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் கடலோர காவல் படையினரின் கண்களில்படாமல் ஒரு வெளிநாட்டவர் தப்பி வந்தது மக்கள் மத்தியில் பரபரப்பாக உள்ளது.
You must be logged in to post a comment.