மாநில செய்திகள்
தண்ணீர் தேவை அவசியம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: ஜனாதிபதிக்கு கடிதம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் பட்டணம்காத்தானில் விசை படகு நாட்டு படகு மீனவர்களுக்கான உபகரண கருவிகள் கடை ..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் குந்து காலில் ரூ 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் மீனவர்களிடம் ஆலோசனை..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மீன்பிடி தடை காலம் நாளை (15/04/2018) தொடக்கம்.. மீனவர்கள் கோரிக்கை இந்த வருடம் நிறைவேறுமா??
இதன் காரணமாக ராமேசுவரம் மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்படும்.
மீன்பிடி தடை காலம் தொடங்கியுள்ளதால், கடலோர மாவட்டமான கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்படுவர். இவர்களில் பலர் கூலி வேலைக்கு செல்வர்.
இன்னும் பலர் விசைப்படகுகளை பழுது பார்க்கவும், வர்ணம் அடிக்கவும், மின் மோட்டார்கள், வலைகள், மீன்பிடி சாதனங்களை சரி செய்யவும் மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்திக் கொள்வார்கள்.
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு வழங்கும் நிவாரண தொகை இந்த வருடம் உயர்த்தபடும் என ஆவலுடன் உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தைவான் நாட்டின் மருத்துவ பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உரையாற்றிய ‘கீழக்கரை’ மாணவனின் நீங்காத நினைவலைகள்
‘சீன தேசம் சென்றாலும் சீர் கல்வியைத் தேடு’ என்பது முன்னோர்களின் வாக்கு. ஆனால் இன்று நம் இந்திய தேசத்திலேயே அதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம்.
அதையும் தாண்டி அவர்களுடைய உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொணர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்காமல் விட்டு விடுகிறோம். அதே போல் எல்லா மாணவர்களுக்கும் அவர்களுக்கு பிடித்தமான துறை கிடைத்து விடுவதில்லை.
மாணவர்கள் பிடிக்காத படிப்பை படித்தாலும் அதனை எவ்வாறு வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி சிகரம் தொடுவது என்பதை கீழக்கரை சேரான் தெருவை சேர்ந்த மருத்துவ மாணவன் முஹம்மது நபீல் கீழை நியூஸ் வலைத்தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியின் சாராம்சம் :-
நான் சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கருவியல் துறையில் மூன்றாமாண்டு படித்து வருகிறேன். பள்ளிப்பருவத்தில் இருந்தே டாக்டர் படிப்பதே என்னுடைய இலட்சியமாக இருந்து வந்தது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 96 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் என் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்து இருந்தனர். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 80 சதவீதம் மட்டுமே பெற்றேன்.
இந்த அதிர்ச்சி தரும் தேர்வு முடிவிற்கு பிறகு டாக்டர் ஆக முடியும் என்கிற எனது சிறு வயது கனவு சுக்கு நூறாக உடைந்தே போனது. அதனை தொடர்ந்து கடுமையான மனக் கவலை என்னை தொற்றிக் கொண்டது. சரி டாக்டர் ஆவது தான் எனக்கு இறைவன் நாடவில்லை. மருத்துவ பட்டப் படிப்பில் ஏதேனும் தேர்வு செய்து படிக்கலாம் என்று மருத்துவ கருவியல் பட்டப்படிப்பை தேர்வு செய்து டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.
இந்த கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் கல்லூரிக்கு சரியாக செல்வது இல்லை. காரணம்… நான் சிறுவயது முதல் படிக்க வேண்டும் என கனவு கண்ட டாக்டர் படிப்பு படிக்கவில்லையே… என மனம் தடுமாறிக் கொண்டே இருந்தது. முதலாமாண்டு நிறைவு செய்த பின்னரும் கல்லூரிக்கு முழு மன நிறைவோடு சென்று படிக்க மனமில்லாமல் சென்றேன்.
இந்த இக்கட்டான தருணத்தில் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் டாக்டர். ஆரிப் என்கிற சகோதரரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு மருத்துவர் என்பதால் நான் இந்த கல்லூரியில் தேர்ந்தெடுத்து இருக்கும் துறையின் சிறப்பம்சம் குறித்தும், பிற்காலத்தில் இந்த துறை எந்த அளவில் சிறப்பான உயரத்தை தொடும் என்பது சம்பந்தமாகவும், தற்போது நான் படித்து கொண்டிருக்கும் இந்த துறை எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை எல்லாம் தெளிவாக விளக்கமாக எனக்கு எடுத்து கூறினார்.
இறைவனுடைய கிருபையால் அந்த நிமிடத்தில் இருந்து நாம் படித்து கொண்டிருக்கும் என் துறை மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அதீத ஆர்வத்துடன் விருப்பமுடன் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய படிப்பில் நான் தேர்வு செய்த எனது விருப்ப பாடம் (NEURO PROSTHETICS) தமிழில் இதனை மூளை இயந்திரம் கிடைமுகம் என்று சொல்லுவார்கள்.
இதற்கிடையில் அல்லாஹ்வுடைய அருளால் கடந்த டிசம்பர் 2017 ல் தைவான் நாட்டில் உள்ள TAIPEI மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘INTERNATIONAL HONORS PROGRAM’ நிகழ்ச்சிக்கு இந்தியாவில் இருந்து தலைசிறந்த 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் நானும் ஒருவனாக தைவான் நாட்டிற்கு சென்றேன். அங்கு 15 நாட்கள் நடைபெற்ற வகுப்புகளில் பங்கேற்று உரையாற்றினேன்.
இதில் எனக்கு பல்வேறு படிப்பினைகளை இறைவன் வழங்கி கவுரவித்தான். எந்த இலட்சியத்தோடு படித்து டாக்டர் தான் ஆவேன் என்று இருந்தேனோ… அந்த இலட்சியம் தவறு என்பதை உணர்ந்தேன். அங்கு எனக்கு பாடம் எடுத்த டாக்டர்கள் பெருபாலானோர் மருத்துவ படிப்பினை முடித்து விட்டு என்னுடைய துறையை தேர்வு செய்தவர்களே.
அப்போது தான் நான் விளங்கி கொண்டேன். நம்மை அழகாக படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும் நமக்கு எது சிறந்தது என்று… இறைவன் நமக்கு கொடுத்துள்ள விஷயங்களை ஆராய்ந்து பாருங்கள்… நாம் படைக்கப்பட்டதின் முக்கியத்துவம் புரியும்.
என்னை போன்ற மாணவர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
நீங்கள் எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. ஏதோ கல்லூரிக்கு சென்றோம், புத்தகத்தில் உள்ளதை படித்தோம், பாஸ் செய்தோம் என்று இருந்து விடாமல் உங்கள் துறை பற்றி ஆழமாக படியுங்கள். உங்கள் துறையின் நுணுக்கங்களை ஆராயுங்கள். அதில் ஒன்றை தேர்வு செய்து அதிகம் உழையுங்கள்.
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ கற்றுக் கொள்வோம். அல்லாஹ் நாடினால்.. நீங்கள் இந்தியாவின் தலைசிறந்த மாணவனாகவும், நம் இந்திய தேசத்தின் உயர்பதவி வகிக்கும் சிறந்த குடிமகனாகவும் ஆகலாம்.” இவ்வாறு தன்னுடைய கல்வி அனுபவங்களை நம்மிடையே பகிந்து கொண்டார்.
இந்த மூளை இயந்திர மருத்துவ படிப்பினை கீழக்கரையில் இருந்து படிக்கும் ஒரே மாணவன் சேரான் தெருவை சேர்ந்த முஹம்மது நபீல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தமிழகத்திலேயே டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் இந்த பட்டப் படிப்பு துறை செயல்படுகிறது.
‘கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்னும் சொற்பொதிக்குள் அடங்கியுள்ள அர்த்தங்கள் ஏராளம். அதனை கீழக்கரை மாணவன் முஹம்மது நபீல் மெய்ப்பித்து இருக்கிறார்.
இறைவன் அருளால் முஹம்மது நபீல் இன்னும் பல வெற்றிகளும் சாதனைகளும் படைத்திட கீழை நியூஸ் நிர்வாகம் மனதார வாழ்த்துகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சூரைக்காற்றின் வேகத்தால் கடல் சீற்றம், விசைப்படகு நாட்டுபடகுகள் சேதம்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் குறைவாக காணப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடையும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை காற்றின் வேகம் அதிகரித்து சூரை காற்றாக மாறியதில் ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு நாட்டுபடகுகள் மற்ற படகுகளுடன் மோதி படகு முழுவதும் சேதமடைந்து கரை ஒதுங்கியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படகு உரிமையாளர்கள் படகுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில்வளைவு பாலம் அமைத்தால் இயற்கை சீற்ற காலங்களில் இது போன்ற சம்பவங்களில் இருந்து படகுகளை மீட்டு பாதுகாக்க படலாம், எனவே இராமேஸ்வரம் மீன்பிடிதுறைமுகத்தில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கையிலிருந்து படகு மூலம் இராமேஸ்வரம் வந்த துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் கைது மத்திய மாநில உளவு துறை போலீசார் விசாரணை..
இலங்கையில் இருந்து கள்ள தோணி மூலம் இராமேஸ்வரம் வந்திருங்கிய துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவ்ரிம் என்பவரை கைது செய்து மத்திய, மாநில உளவுத்துறை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மஹீர் தேவ்ரிம் என்ற 44 வயதுடைய துருக்கிய நாட்டை சேர்ந்த இவர், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கடந்த 1993ம் வருடம் துருக்கி நாட்டில் இருந்து வெளியேறி அங்கிருந்து கஜகஸ்தான், தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2017ம் வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு சென்ற இவர் இலங்கையின், தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் இந்தியா வருவதற்க்கு பல முறை முயற்சி செய்தும் அவர் இந்தியா வர முடியவில்லை. இந்நிலையில் அவரின் தீவிர முயற்சியால் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து படகோட்டி மூலம் 25000 ரூபாய் செலுத்தி, அங்கிருந்து பகல் 12 மணிக்கு கள்ள தோணி (ப்ளாடிக் படகு) மூலம் இராமேஸ்வரத்திற்கு புறப்பட்ட இவர் இரவு 7மணிக்கு இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.
கள்ள தோணி மூலம் வெளிநாட்டவர் ஊடுருவிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவ்ரிம் என்பவரை, மத்திய மற்றும் மாநில உளவுத்துறை போலிசார் இவர் வந்ததிற்கான முக்கிய காரணம் என்ன? யார் மூலம் வந்துள்ளார்? என்ற கோணத்தில் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவரிடம் உள்ள பாஸ்போர்ட் மற்றும் அவர் கொண்டு வந்துள்ள பொருட்களையும் போலிசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் கடலோர காவல் படையினரின் கண்களில்படாமல் ஒரு வெளிநாட்டவர் தப்பி வந்தது மக்கள் மத்தியில் பரபரப்பாக உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் நியாய விலை கடை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயிலில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் நியாய விலை கடை சார்பில் மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடக்க கூட்டுறவு சங்க நிர்வாக இரு உறுப்பினர்கள் தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இத் தேர்தல் நடக்கும் போது கூட்டுறவு சங்க பணியாளர்களை ஆளுங்கட்சி எதிர்கட்சி என்று அனைவராலும் பணியாளர்களை தாக்கப்படுவதும், தரக்குறைவான வார்த்தைகளால் பேசப்படுவதையும் அலுவலகத்தில் வைத்து பூட்டப்படுவதை தேர்தல் அலுவலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும் அரசியல் கட்சியினரின் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்தவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் அதன் கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆண்கள் பெண்கள் 480பேர்கள் கலந்து கொண்டனர். இதனால் நியாய விலை கடை செயல்படவில்லை, இந்த அச்சுறுத்தல் தொடரும்மானால் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்Lம் மாவட்ட தலைவர் முத்துராமலங்கம் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் இராமசாமி முன்னிலையிலும் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மாவட்ட துணை தலைவர்கள் சேரன் கணேசன், மாவட்ட இணை செயலாளர்கள் குஞ்சர பாண்டியன், சாமி பாண்டி, செய்தி தொடர்பாளர் பொற் செல்வன் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேவிப்பட்டிணம் அருகே இரணியன்வலசை கடற்கரையில் இன்று (05/04/2018) அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. விபரம் அறிந்த காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அச்சோதனையில் உடலில் இருந்த அடையாள அட்டை மூலம் கரை ஒதுங்கிய உடல் சென்னை, கோடம்பாக்கம், புலியூரிபுரத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் (60) என்பவர் என்பது அறிய வந்தது. இச்சம்பவத்தை தேவிப்பட்டிணம் கடலோர காவல் படையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மண்டபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் பஸ் மறியல்…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், வாரியம் அமைக்காமல் காலத்தை கடத்திய மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்னற்ற போராட்டங்கள் தினம் தினம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளின் சார்பாகவும், மற்றும் வணிகர் சங்கங்கள், மற்றும் அனைத்து தரப்பினரும் பங்கு கொள்ளும் வகையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அனைத்து கட்சிகளின் சார்பாக திமுக நகர் செயலாளர் T.ராஜா தலைமையில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக் முன்னிலையில் மண்டபத்தை சேர்ந்த அனைத்து கட்சி உறுப்பினர்களும், திமுக கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலாக சென்று அவர்கள் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
உடனே மண்டபம் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்படவர்களில் திமுகவைச் சேர்ந்த 48 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 15 பேர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பேரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்க்கு கொண்டு சென்தனர்.
இந்த மறியல் போராட்டத்தில் திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சம்பத் ராஜா, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் பூவேந்திரன், காந்தகுமார், மாவட்ட பிரதிநிதி சாதிக் பாட்சா,ஒன்றிய மீனவரணி செயலாளர் நம்புராஜன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் நகர் செயலாளர் நாகூர் கனி மற்றும் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் முழு அடைப்பையெட்டி மண்டபத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் FRD 27 மண்டபம் வடக்கு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 26-ம் தேதி வேட்புமனுக்கள் பெறப்பட்டது. 27 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 27-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் 8 மனுக்கள் திருப்ப பெறப்பட்டது.
இதில் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் மீதமுள்ள 18 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர். 18 வேட்பாளர்களும் தீவீர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் நாளான ஏப்ரல் 2-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது. சங்க உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்களின் முன்னிலையில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. 4 சுற்றாக நடை பெற்ற எண்ணிக்கையில் அதிமுகவைச் சேர்ந்த 6 வேட்பாளர்களும் முன்னிலை பெற்று வந்தனர் இறுதி சுற்றில் அதிமுக வைச் சேர்ந்த 6 வேட்பாளர்களும் எதிர்த்து போட்டியிட்டவர்களை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் இன்பராஜ் அறிவித்தார்.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரங்கள் வருமாறு:-
1.KMA. சீமான் மரைக்காயர்,
2. A. முகம்மது சலீம்,
3. KA. முகம்மது அஜ்மல்,
4. H. சதக்கத்துல்லா,
5. S. முகம்மது ரபீ,
6. P சீனி மரைக்காயர். போட்டியின்றி K.முனியசாமி தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணம் கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் கடலோர ஒழுங்கு முறை மண்டலம் CRz 1 க்கு பதிலாக CR Z4 ஐ செயற்கை கோள் மூலமாக கடற்கரை பகுதிகளை படம் எடுத்து இப்போது நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதன் மூலம் கடற்கரை கடற்கரையை சார்ந்த மீனவர்கள் மற்றும் சுற்று சூழலுக்கு பெரிதும் அழிவை ஏற்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
இதனை கடற்கரை சார்ந்த மீனவரிடம் நேரிடையாக விசாரனை செய்து இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் யூனியன் சங்க மாவட்ட தலைவர் பால்ச்சாமி தலைமையில் காசிலிங்கம் அன்னம்மாள் முன்னிலையில் செயலாளர் ஜோசப் உட்பட ஐந்நூறுக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலவச – கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழுமையான கல்வி உரிமை சட்டம். இதில் பல குறைபாடுகள் உள்ளன. இருந்த போதிலும் ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெறவேண்டும் என்பது பொது அறிவு உலகத்தின் விருப்பம்.
6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலவச – கட்டாய கல்வி சட்டத்தை கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், பள்ளிகளுக்கு அங்கீகாரம், ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம், பள்ளி வளர்ச்சி, கல்வி மேம்பாடு உள்பட பல்வேறு இனங்களில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிலிந்த பிரிவினர் ஆகியோருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்.கே.ஜி. உள்பட கீழ்நிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. எட்டாம் வகுப்பு வரை எந்த குழந்தையையும் ஃபெயில் ஆக்கக்கூடாது. அவர்களை அடிக்கக்கூடாது. மனரீதியாக துன்புறுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மத்திய அரசு கொண்டுவந்த இலவச, கட்டாய கல்வி சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், மத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசிதழில் வெளியான விவரம்:
தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழைகள் (குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள்), நலிலிந்த பிரிவினர் (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்), கைவிடப் பட்டோர் (அனாதைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டோர், திருநங்கைகள், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்) ஆகியோருக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும். அவர்களின் படிப்பு செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்.
படிப்பு செலவு என்பது அரசு பள்ளி களில் ஒரு மாணவருக்கு செய்யப்படும் செலவு அல்லது தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கல்விக் கட்டணம். இதில் எது குறைவான நிதியோ அது நிர்ணயிக்கப்படும். இந்த நிதியை பெறுவதற்காக தனியார் பள்ளிகள் தனி வங்கிக் கணக்கை பராமரிக்க வேண்டும். உரியதொகை அந்த கணக்கில் ஆன்லைனில் (இ.சி.எஸ்.) செலுத்தப்படும். பெற்றோர் தங்கள் குழந்தை களை பள்ளியில் சேர்க்க வரும்போது வயது சான்றிதழ் இல்லை என்ற காரணத்தி னால் மாணவர் சேர்க்கையை நிராகரிக்கக் கூடாது. பிறப்பு சான்றிதழ் கொண்டுவராத பட்சத்தில் குழந்தை பிறந்த மருத்துவமனையில் கொடுத்த ஆவணத்தையோ, அங்கன்வாடி ஆவணத்தையோ, அதுவும் இல்லாவிட்டால் பெற்றோர் அல்லது குழந்தையின் பாதுகாவலர் பிறந்த தேதியை குறிப்பிட்டு அளிக்கும் உறுதிமொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பள்ளிகள் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும்போது அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிலிப்போம் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும். அங்கீகார விதிமுறைகளை மீறினால் ஆய்வு செய்து அங்கீகாரம் ரத்துசெய்யப்படும். ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியிலும் 9 பேர் கொண்ட பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட வேண்டும். அதில் 6 பேர் மாணவர்களின் பெற்றோராக இருக்க வேண்டும். எஞ்சிய இடங்களில் ஆசிரியர், உள்ளாட்சி நிர்வாகி, உள்ளூர் கல்வியாளர் ஆகியோருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப் பட வேண்டும். கல்வி சார்ந்த பணிகளைவிட ஆசிரியர்களுக்கு இதர பணிச்சுமைகளை கொடுக்கக் கூடாது. உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்த குழந்தையையும் துன்புறுத்தக்கூடாது. தனியார் பள்ளி களில், ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் கல்வித்தகுதி இல்லாமல் பணிபுரிபவர்கள் இந்த சட்டம் அமலுக்கு வந்த 5 ஆண்டிற்குள் அந்த தகுதியை பெற்றால்தான் தொடர்ந்து பணிபுரிய முடியும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்காக அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் முக்கியத்துவம்
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 [Right of Children to Free and Compulsory Education – (RTE) Act 2009] நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும். குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு, இது ஒரு துவக்கத்தை அளித்துள்ளது. உலகிலுள்ள ஒருசில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலவச கட்டாய ஆரம்பக் கல்வி
6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தை களும், தங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்க உரிமை பெறு கிறார்கள். ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோ நேரடியான (பள்ளிக் கட்டணம்) மற்றும் மறைமுகமான (சீருடைகள், பாடப் புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. குழந்தைகளின் ஆரம்பக் கல்வி பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவு களையும் அரசே ஏற்கும்.
சமுதாயத்தின் பங்கு
ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தப்படும் பள்ளி நிர்வாகக் குழுவில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருப்பர். பள்ளி நிர்வாகக் குழு, பள்ளிக்கான மேம்பாட்டு திட்டங்களை வகுப்பது, அரசு நிதியை முறையாகப் பயன்படுத்துவது மற்றும் ஒட்டுமொத்த பள்ளியின் சூழலைக் கண்காணிப்பது ஆகிய பணிகளை செய்யும். பள்ளி நிர்வாகக் குழுக்களில் 50 சதவீதம் பெண்கள் மற்றும் நலிலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை இச்சட்டம் கட்டாயமாக்கி உள்ளது. சிறுவர் மற்றும் சிறுமியருக்கான தனித்தனி கழிப்பறைகளை ஏற்படுத்துவது, உடல் நலம், சுகாதாரம், மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து கல்வியை முழுமை பெற வைப்பது ஆகியவற்றில் இவ்வாறான சமுதாய பங்கேற்பு பெரிதும் உதவும்.
குழந்தைகள் விரும்பும் பள்ளி
நல்ல கல்விச் சூழலை ஏற்படுத்த, அனைத்து பள்ளி களும் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான நெறிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். ஆரம்பக் கல்வி நிலையில், ஒவ்வொரு 60 குழந்தைகளுக்கும் நன்கு பயிற்சிப் பெற்ற இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பள்ளிக்கு வருகை தருவது, பாடத்திட்டத்தை முழுமை செய்வது, குழந்தை களின் கற்றுக்கொள்ளும் திறனை மதிப்பிடுவது, தவறாமல் பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்களை நடத்துவது ஆகியவற்றை ஆசிரியர்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். வகுப்புக்கு தகுந்தவாறு அல்லாமல், மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆசிரியர் களின் எண்ணிக்கை இருக்கும். குழந்தைகள் சிறப்பாகக் கற்பதை உறுதி செய்ய ஆசிரியர்களுக்கு தேவையான உறுதுணையை அரசு நிறைவேற்றும். பள்ளி நிர்வாகக் குழுவுடன் இணைந்து, பள்ளியின் தரத்தையும் சமத்து வத்தையும் உறுதி செய்வதில் சமுதாயமும், பெற்றோரும் முக்கிய பங்காற்ற வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமைக் கனவை நனவாக்குவதற்கு தேவையான அனைத்து சட்ட வடிவங்களையும், ஏதுவான சூழ்நிலை களையும் அரசு உருவாக்கும்.
நடைமுறை மற்றும் நிதி
குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு இச்சட்டம் ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.
இதற்கு தேவைப்படும் நிதியை, மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். மத்திய அரசு. தேவைப்படும் நிதியை கணக்கிடும். மாநில அரசுகளுக்கு, இதிலிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் நிதியாக வழங்கப்படும். கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நிதியை மாநிலங்களுக்கு வழங்குவதை பரிசீலிலிக்கும்படி, மத்திய அரசு, மத்திய நிதிக் குழுவை (Finance Commission) கேட்டுக்கொள்ளும். சட்டத்தை நடை முறைபடுத்த தேவைப்படும் கூடுதல் நிதிக்கு மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். சமுதாய அமைப்புகள், மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் பங்களிப்புடன் நிதிப்பற்றாக் குறையை போக்க முடியும்.
கல்வி உரிமைச் சட்டத்தை மீறினால்
இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கத் தேவைப்படும் ஆய்வுகளைச் செய்வதற்கும், புகார்களை விசாரிப்பதற்கும், குழந்தை உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கமிஷனுக்கு (The National Commission for the Protection of Child Rights), வழக்குகளை விசாரிக்க ஒரு குடிமை நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights – SCPCR) அல்லது கல்வி உரிமைப் பாதுகாப்பு ஆணையங்களை (Right to Education Protection Authority – REPA) அமைந்துள்ளது. குறைகள் பற்றி மனு அளிக்க விரும்பும் எவரும், உள்ளூர் அதிகாரிகளிடம் எழுத்து மூலமான புகார் அளிக்கலாம். குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights – SCPCR) அல்லது கல்வி உரிமை பாதுகாப்பு ஆணையங்களால் மேல்முறையீடுகள் மீது முடிவுகள் எடுக்கப்படும். அவற்றால் வழங்கப்படும் தண்டனைகளை நிறைவேற்ற, மாநில அரசின் நியமனம் பெற்ற அதிகாரியின் ஒப்புதல் தேவைப்படும்.
பள்ளிச் சேர்க்கை நெறிமுறைகள்
நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும், குழந்தை களின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி (RTE Act, 2009), பள்ளிச் சேர்க்கை நெறிமுறைகள் இருப்பதை உறுதிசெய்ய, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் விதிகளின்படி குழந்தைகளின் சேர்க்கை நடைபெற வேண்டும்.
வகுத்துரைக்கப்பட்ட பிரிவு மற்றும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போன்றே, நலிலிவுற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீட்டை உத்தரவாதப் படுத்த வேண்டும். மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டு, அருகாமைப் பகுதி குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நவோதயா பள்ளிகள் “வகுத்துரைக்கப் பட்ட பிரிவை’ சார்ந்ததாக இருப்பதால், இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால், இச்சட்டத்தின் பிரிவு 13 விதி விலக்குகள் இன்றி அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் பிரிவு 13
எந்தப் பள்ளியோ அல்லது தனிநபரோ, குழந்தையின் பள்ளிச் சேர்க்கையின் போது, அதன் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரிடமிருந்து தலைக் கட்டணம் (ஸ்ரீஹல்ண்ற்ஹற்ண்ர்ய் ச்ங்ங்) வசூலிலிப்பதோ அல்லது முன்தேர்வு முறைக்கு உட்படுத்துதலோ கூடாது. உட்பிரிவு (1) க்கு புறம்பாக, தலைக்கட்டணம் வாங்கும் பள்ளிகள் மற்றும் தனி நபர்களுக்கு வசூலிலிக்கப்பட்ட கட்டணத்தைவிட பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளியில் அனுமதிப்பதற்கு முன் தேர்வு முறைக்கு உட்படுத்தினால், முதல் தடவையாக மீறும் பொழுது ரூ 25,000/- வரையிலும், தொடர்ந்து மீறும் ஒவ்வொரு முறையும் ரூ 50,000/- வரையிலும் அபராதம் விதிக்கப் படும்.
குழந்தை உரிமைகள் ஆணையம்
சட்டப்பூர்வமான அமைப்பு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமாகும். இவ்வாணையம் புதுடெல்லிலியைத் தலைநகரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் மற்றும் குழந்தைகள் உரிமைமீறல் களைக் கண்காணிக்கவும், தேவையான தலையீட்டை மேற்கொள்ள செய்யும் மேலும் இவ்வாணையத்தின் பணிகளில் உதவிடும் வகையிலும் தமிழகத்தில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளின் பணி அமையும். பள்ளிகளில் நடைபெறும் வகுப்பறை வன்முறைகள் (குறிப்பாக, மாணவர்களுக்கு பல்வேறு வழிமுறைகளில் தண்டனை வழங்குவது). மனரீதியான சித்திரவதைகள் செய்வது, பள்ளிக் குழந்தைகள் மீதான பாலிலியல் ரீதியான துன்புறுத்துதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும்போது மாணவர்கள் அல்லது பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இப்பிரதிநிதிகளை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்.
ஆதாரம் : இந்திய குழந்தைகள் உரிமைகள் ஆணையகம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியா முழுவதும் 29.03.2018 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் உட்பட டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி சில இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுர மாவட்ட போலீசார் 1)ஹரிகிருஷ்ணன் 46/18 த/பெ நாகநாதன்,கமலா நேரு நகர், எமனேஸ்வரம், 2)முத்துக்குமார் த/பெ ஆறுமுகம், கீழ பள்ளிவாசல் தெரு,பரமக்குடி உள்ளிட்ட 9 பேரை கைது செய்தும்,அவர்ககளிடமிருந்து 434 மது பாட்டில்கள் மற்றும் 1130/-பணமும் கைப்பற்றப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு தடை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மண்டபம் அருகேயுள்ள இடையர்வலசையில் ஏழு கிராமங்களுக்கு பாத்தியமான ஸ்ரீ சக்தி வடிவேல் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 21-ம் தேதி கொடி எற்றி 400க்கு மேற்ப்பட்ட பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
பங்குனி உத்திரத்தன்று சக்தி வடிவேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகநாதர் ஆலயத்திலிருந்து சக்தி வடிவேல் முருகன் ஆலயத்திற்க்கு பால்குடம், இளநீர் காவடி, பறவை காவடி, மயில் காவடி, ஸர்ப்ப காவடி, தேர் இழுத்தல் அலகு குத்தல் என பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். மதியம் பக்தர்கள் , பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு எட்டு மணிக்கு பூக்குழி இறங்குவற்கு பூவளர்க்கபட்டது. அதிகாலை 4.30 மணிக்கு பக்தர்கள் பூ இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பெண் பக்தர்கள் பூ இறங்க அனுமதி இல்லாத காரணத்தால் பெண் பக்தர்கள் பூ குளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்பு 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
பெரும்பாலான பக்தர்கள் தொடர்ந்து காப்பு கட்டி பூ இறங்கி வருகின்றனர், இந்த பழக்க வழக்கங்களை பற்றி பக்தர்கள் கூறியதாவது, “வேண்டியது நிறைவேறுகிறது, அதனால் வருடா வருடம் காப்பு கட்டி வருகிறேன். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்திற்கு புதிதாக காப்பு கட்டும் பக்தர்களின் எண்ணிக்கை கூடி கொண்டு வருகிறது என்று கூறினர்”.
மேலும் 31-ம் தேதி இரவு இடுப்பன் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றதுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ம.ஆதிமூலம், ஆலய நிர்வாகசபை தலைவர் P.தவசி முனியாண்டி, செயலாளர் M.சுரேஷ் கந்தன், பொருளாளர் PM.நாகசாமி, மற்றும் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். மண்டபம் காவல்துறை சார்பு ஆய்வாளர் அந்தோணி சகாயசேகர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மூவாயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
‘ஏப்ரல் 8′- சென்னையில் நடைபெற உள்ள முஸ்லீம் மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பங்கேற்பு
இஸ்லாமிய மாணவர்களுக்கான மாபெரும் நிகழ்ச்சியாக ‘MUSLIM STUDENTS MEET’ என்கிற பெயரில் எதிர்வரும் ‘ஏப்ரல் 8’ அன்று சென்னை CRESCENT B.S.ABDUR RAHMAN பல்கலைக்கழகத்தின் உள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
கல்வியில் உயர்வடைதல், தொழில் முனைவோர்களை உருவாக்குதல், ஊடகத் துறையில் மேம்பாடு அடைதல், இஸ்லாமிய மார்க்க அழைப்பில் முன்னேறுதல் உள்ளிட்ட சிறப்பான அடிப்படை கருத்து உருவாக்கங்களோடு இளைய சமுதாயத்தினருக்கு ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
கீழ் காணும் வலை தள முகவரியில் லிங்கினை சொடுக்கி மாணவர்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
http://www.muslimstudentsmeet.in
http://www.muslimstudentsmeet.in
http://www.muslimstudentsmeet.in
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜம்போ சர்க்கஸ் – புதிய தொழில்நுட்பத்தில்..
இராமநாதபுரம் சக்கரக்கோட்டை அருகே கீழக்கரை ரயில்வேகேட் சாலையில், புதிய தொழில்நுட்பத்தில் கேரளாவைச் சேர்ந்த கலைஞர்களால் ஜம்போ சர்க்கஸ் கடந்த மார்ச்., 23 முதல் நடந்து வருகிறது. இந்த சர்க்கஸ் பொதுமக்கள், குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் கண்டு ரசிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.
இந்த சர்கஸை கேரளா, கண்ணூரை சேர்ந்த சர்க்கஸ் உரிமையாளர்கள் அஜய் சங்கர், அசோக் சங்கர் ஆகியோர் நடத்தி வருகிறார்கள். சர்கஸின் உரிமையாளர்கள் கூறியதாவது, “ஆப்பிரிக்கன், எத்தியோப்பியன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சர்க்கஸ் கலைஞர்களை வரவழைத்து இருக்கிறோம். கேரளா, நேபாளம், அஸ்ஸாம் மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களின் ஜிம்னாஸ்டிக், குதிரையேற்றம், அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுதல், 25 அடி உயரத்தில் கூடைப்பந்து போடுதல்,நாய்களின் அணிவகுப்பு, பஞ்சவர்ணக்கிளி, ஆஸ்திரேலியன் கிளிகளின் சாகசம் மற்றும் ரப்பர் போல் வளையும் தென்ஆப்பிரிக்கா யோகா, இரும்பு கூண்டுக்குள் பைக் ரேஸ் முதலியவை இடம்பெறுகிறது.
தற்போது கோடை காலமாக உள்ளதால்,வாட்டும் வெயிலை கணக்கில் கொண்டுதிங்கள் முதல் வெள்ளி வரைமாலை 4, இரவு 7 மணிக்கு இருகாட்சிகளும், சனி மற்றும் ஞாயிறுகளில் பிற்பகல் 1, மாலை 4, இரவு 7 மணிக்கும் சர்க்கஸ் நடந்து வருகிறது.
ஒவ்வொரு காட்சியிலும் புதுமையாக செய்ய முயற்சித்து வருவதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும், உற்சாகமும் ஏற்படுகிறது என்றனர். இந்த சர்கஸ் வருகிற ஏப்., 15 வரை மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மெரினாவில் காவிரிக்காக போராட்டம் நடத்த மாணவர்கள் திரண்டுள்ளனர்-போலீஸ் குவிப்பு
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாற்று சிறப்புமிக்க மிகப்பெரிய தன்னெழுச்சி போராட்டமாக கருதப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள்,மறியல்கள் நாளுக்கு நாள் நடந்த வண்ணம் உள்ளது.
தற்போது தூத்துக்குடியில் பொதுமக்கள் பகுதியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் எங்கோ ஒரு முனையில் போராட்டம் நடந்தாலும் மெரினா கடற்கரையில் போலிஸார் குவிக்கப்படுவது வழமையாக உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை ஒட்டி மத்திய, மாநில அரசுகள் மீது பல் வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன் அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாவது விவாசாயிகள் மட்டும் என்பதை எவராலும் மறுக்க இயலாது. ஆகையால் இதனை கண்டித்து விவசாயிகள் மாபெரும் ஒரு போரட்டத்தை நடத்த திட்டமிட்டு அனைத்து கட்சியை சார்ந்த தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
இது போன்ற போராட்டங்களில் மாணவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதால் ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல் விவசாயிகளுக்கும் போராட வேண்டும் என்று சாமானிய மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அதன் எதிரொலியாக மெரினா கடற்கரையில் தடையை மீறி மாணவர்கள் மீண்டும் ஒரு போராட்டம் நடத்த ஒன்று கூடியுள்ளனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டு போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.