ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முக்கு ரோட்டில் இருந்து வள்ளல் சீதக்காதி சாலை வழியாக நடை பயணம் மேற்கொண்டு தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து ஆட்டோக்களில் பதாகை வைத்து பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொடர்பாக 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் , வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் , ஸ்டிக்கர்களை ஒட்டியும் துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் வழங்கியும் வாக்களிக்கும் செய்முறைகளை பற்றி விழிப்புணர்வு செய்தனர். பொதுமக்கள் ஆவலுடன் கையொப்பமிட்டு ஆதரவை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் பரமசிவம் , கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் கிராம நிர்வாக அலுவலர் வினோத் யசோதா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Category:
மாநில செய்திகள்
இன்று தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் ஏற்கப்பட்ட வேட்புமனுக்களும்! நடைபெற்ற களேபரங்களும்!- “கீழை நியூஸின்” ஓர் முழு பார்வை..
by Askar
written by Askar
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது.இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வமுடன் போட்டி போட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆகும்.வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வட சென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.வடசென்னை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ, தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி, பா.ஜ.க. வேட்பாளர் வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆகியோர் இன்று காலை வண்ணாரப்பேட்டையில் உள்ள ராயபுரம் மண்டல அலுலகத்திற்கு பரிசீலனையில் போது வந்திருந்தனர்.அப்போது ஒவ்வொரு வேட்பாளரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் மனு ஏற்கப்பட்டது.அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவின் வேட்புமனுவில் முந்தைய வழக்குகளின் விவரங்களை குறிப்பிடவில்லை என்று தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு அ.தி.மு.க.வினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தேர்தல் அதிகாரி உடனே ராயபுரம் மனோவின் மனுவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மீண்டும் 12.45 மணிக்கு வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும் என்று கூறினார்.இதே போல் தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு பரிசீலிக்கப்பட்டபோது வேட்புமனு தாக்கலின் போது விதிகளை மீறியதால் தி.மு.க. வேட்பாளரின் மனுவை ஏற்கக் கூடாது என்று அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் தி.மு.க. வேட்பு மனுவையும் தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்தார். இந்த மனு மீது மதியம் 12.45 மணிக்கு பரிசீலனை நடைபெறும் என்று அறிவித்தார்.அ.தி.மு.க., தி.மு.க. இரு வேட்பாளர்களின் மனுக்களையும் காலையில் நிறுத்தி வைத்ததால் அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான எம்.சந்திரகாசன் மனுதாக்கல் செய்திருந்தார். அங்கு வேட்பாளரை மாற்றப் போவதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சந்திர காசி திடீரென்று மனு தாக்கல் செய்தார். அதே நேரத்தில் சந்திரகாசியின் வேட்புமனு சரியாக பூர்த்தி செய்யப்படாததால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு பரிசீலனையின் போது வேட்புமனுவில் சில பிழைகள் இருப்பதாக கூறப்பட்டதால் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்புமனுவும் பரிசீலனையின் போது நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அதுவும் ஏற்கப்பட்டது.சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த செல்வகணபதிக்கு சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மேற்கு, சேலம் வடக்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதாக அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆன்லைன் மூலமும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் செய்தனர். அதே போல் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் செல்வகணபதி சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாகவும், பழைய வழக்குகள் குறித்து வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனுவை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். மற்ற மனுக்கள் பரிசீலனை முடிந்ததும் கடைசியாக இந்த மனுவை பரிசீலனை செய்வதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.இதற்கிடையே செல்வ கணபதி சார்பில் கடந்த 2015-ம் ஆண்டே இரட்டை வாக்குரிமைகளில் ஒன்றை நீக்குமாறு மனு கொடுத்ததாக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளித்தனர்.தேனி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு மீதான பரிசீலனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. டி.டி.வி.தினகரன் மீதான வழக்கு விவரங்களை வேட்புமனுவில் தெளிவாக குறிப்பிடவில்லை என்று கூறி தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் டி.டி.வி.தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.கரூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் செந்தில்நாதன் வேட்புமனு மீதான பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மனு ஏற்கப்பட்டது.மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன், தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதி மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.தென்சென்னையில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் வேட்புமனுவும், பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனுவும், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மத்திய மந்திரி எல்.முருகன் வேட்புமனு ஏற்கப்பட்டது.ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு, விருதுநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ராதிகா, தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன், தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி,
கடலூர் பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சான் மனுக்களும் ஏற்கப்பட்டது. ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி,
தூத்துக்குடியில் கனிமொழி வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. நாம் தமிழர் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் மனுவும் ஏற்கப்பட்டது.
இதேபோல் பெரும்பாலான அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சின்னம் ஒதுக்கீடு செய்வதில் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம் நியாயமற்றது!- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்..
by Askar
written by Askar
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் ஒதுக்கீடு பெற்ற சின்னங்களை மீண்டும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தன. இந்த முறையீடுகள் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டாது, சார்பற்ற நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்பது பெரும் கவலை அளிக்கிறது.
இந்தியா கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டு, பா.ஜ.க ஆதரவுக் கட்சிகளின் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நியாயமற்ற நடைமுறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தேர்தல் களம் என்பது போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் அனைத்துக்கும் சம தளமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையம் சந்தேகத்தின் நிழல் படிந்து விடாமல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, தேர்தல் நடைமுறைகளும் வாக்குப்பதிவும் நியாயமான, சுதந்திரமான முறையில் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக விரிவான புகார் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் போட்டியிடும் 5 பன்னீர்செல்வங்கள்!ஏதோ ஒரு முடிவோட தான் இருக்காங்க போல..
by Askar
written by Askar
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.இந்நிலையில், ராமநாதபரத்தில் போட்டியிடும் 5 ஓ.பன்னீர்செல்வங்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.இதன்மூலம், ராமநாதபுரத்தில், 5 ஓ.பன்னீர்செல்வங்களும் சுயேச்சையாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரவிந்த் கெஜ்ரிவால் ₹100 கோடி லஞ்சம் கேட்டதற்கு ஆதாரம் உள்ளது; அமலாக்கத்துறை வாதம்..
by Askar
written by Askar
அரவிந்த் கெஜ்ரிவால் ₹100 கோடி லஞ்சம் கேட்டதற்கு ஆதாரம் உள்ளது; அமலாக்கத்துறை வாதம்..
“₹100 கோடி ஊழல் என்றால், அந்த பணம் எங்கே உள்ளது?” – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வாதம்.
மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை சிக்க வைக்க வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது அமலாக்கத்துறை.
இதுவரை எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லை.
வெறும் 4 பேர் என்னை பற்றி கூறியதால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன்.
ஆம் ஆத்மி கட்சியை உடைக்கவே அமலாக்கத்துறை என்னை கைது செய்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் வாதம்.
மேலும் 7 நாள்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முறையிட்ட நிலையில், வழக்கு மீதான உத்தரவை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாடிக்கையாளர்களே உஷார்! நாளை முதல் (மார்ச் 29)வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை..
by Askar
written by Askar
வாடிக்கையாளர்களே உஷார்! நாளை முதல் (மார்ச் 29)வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை..
நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியையொட்டி நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 29), சனிக்கிழமை (மார்ச் 30) வங்கிகளுக்கு விடுமுறை.
ஞாயிறு (மார்ச் 31), திங்கள் (ஏப்.1) இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக செயல்படும்.
ஆனால், மக்களுக்கு வங்கி சேவை கிடையாது என கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தாது மணல் நிறுவனத்திடம் ரூ.1.72 கோடி பெற்ற விவகாரம் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..
by Askar
written by Askar
தாது மணல் நிறுவனத்திடம் ரூ.1.72 கோடி பெற்ற விவகாரம் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..
கொச்சியிலுள்ள ஒரு பிரபல தனியார் தாது மணல் நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு டைரியில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்திவரும் சாப்ட்வேர் நிறுவனத்திடமிருந்து சேவை பெற்றதற்காக ரூ.1.72 கோடி பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து வருமான வரித்துறை நடத்திய விசாரணையில் வீணா விஜயனின் நிறுவனம் எந்த சேவையும் வழங்கவில்லை என தெரியவந்தது. இது தொடர்பாக வருமானவரித்துறை வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர மோசடி விசாரணை அலுவலகமும் (எஸ்எப்ஐஓ) விசாரணையை தொடங்கியது. தாது மணல் நிறுவனம், வீணா விஜயனின் சாப்ட்வேர் நிறுவனம் மற்றும் கேரள தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமலாக்கத்துறையும் இந்த மோசடி குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. தாது மணல் நிறுவனம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக தெரியவந்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வீணா விஜயன், அவரது சாப்ட்வேர் நிறுவனம், தாது மணல் நிறுவனம் மற்றும் கேரள தொழில் வளர்ச்சி மேம்பாட்டு கழகம் ஆகிய 3 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -28
(கி.பி 1299-1922)
உஸ்மானிய பேரரசர் இரண்டாம் பயாஸித் அவர்கள் அரசவையிலேயே
நடக்க முடியாமல் கீழே சரிந்தார்.
அரண்மனையே
நிலைகுலைந்து போனது.
பேரரசர் இரண்டாம் பயாஸித் அவர்களுக்கு திடீரென இடுப்பிலிருந்து
கீழ்பகுதிகள் வேலை செய்யாமல் போனது.
உடனடியாக அரசாங்க மருத்துவர்களும்,
நரம்பு சிறப்பு மருத்துவர்களும்,
வரவழைக்கப்பட்டனர்
மன்னருக்கு பக்கவாத நோய் தாக்கி இருப்பதாக அறிந்து அதற்கு பலவவகையான மருந்துகளை உள்ளே குடிக்க வைத்தும்
மேலே பூசியும் மருத்துவம் பார்த்தனர்.
இருப்பினும் எந்த மருந்துகளும் பயனளிக்கவில்லை .திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கி.பி 1512 ஆம்ஆண்டு மரணமடைந்தார்.
அவருக்கு பிறகு சுல்தான் சலீம் மன்னராக பொறுப்பேற்றார்.
ஏமன் மற்றும் சில அரபுநாடுகளை
உஸ்மானிய பேரரசோடு இணைத்தார்.
எகிப்தில் பிரச்சினை ஏற்பட்டபோது நேரிடையாக போய்
எகிப்தை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
அங்கு தங்கி ஏராளமான புனித தலங்களை புணரமைத்தார்.
எகிப்தில் இருந்த அப்பாஸிய மன்னரின் வாரிசை துருக்கிக்கு அழைத்து வந்து ஹேஜியா சோபியா
மசூதிக்கு அழைத்து வந்தார்.
அங்கு ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் அப்பாஸிய மன்னரின் வாரிசான
முதவ்கல் அலல்லா அவர்கள், அதுவரை கட்டிக்காத்து வந்த
அப்பாஸிய கொடி,
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் போர்வை,
அப்பாஸிய மன்னர்கள் பயன்படுத்திய வாள்கள் எல்லாம்
சுல்தான் சலீம் இடம் ஒப்படைத்தார்.
இது உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்து உஸ்மானிய பேரரசை
இஸ்லாமிய கிலாபத்தாக ஏற்றுக்கொண்ட அடையாளமாக பார்க்கப்பட்டது.
சுல்தான் சலீம் அவர்கள் மக்கமாநகரை அழகுபடுத்தினார்.
கஃபா
ஆலயத்திற்கான
போர்வை துருக்கியில் இருந்தே
சென்றது.
சுல்தான் சலீமே அதனை நேரிடையாக மக்காவிற்கு எடுத்து சென்றார்.
மதினாநகரையும் அழகுபடுத்தினார்.
சுல்தான் சலீமிற்கு
இரண்டு ஹரம்களின்
ஊழியர் என்று பொருள்படும்
ஹாத்திமுல் ஹரமைன் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இதனாலேயே நீண்ட நாட்களாக துருக்கியின்
கலீபாவே கஃபாவிற்கான போர்வை எடுத்து சென்றும் போர்த்தும் பழக்கம் இருந்தது.
பின்னால் வந்த உஸ்மானிய பேரரசர்களுக்கும் இந்தப்பட்டம் தொடர்ந்தது.
இதனால் இஸ்லாமிய உலகின் கலீபாக்கள் என்றே உஸ்மானிய பேரரசர்கள் அழைக்கப்பட்டனர்.
வரலாறும் அதையே பதிவு செய்து இருக்கிறது.
உலக முஸ்லீம்களின்
தலைமையிடமாக துருக்கியும்
அதன் தலைவராக உஸ்மானிய பேரரசரும்
அறிவிக்கப்பட்டதால்
ஐரோப்பிய உலகம் அதிர்ந்து போனது.
ஐரோப்பிய கடற்
கொள்ளையர்கள்
முஸ்லீம்களின் பொருட்களை சூறையாடியதோடு
கொலையும் செய்தனர்.
சுல்தான் சலீம் கடற்
கொள்ளையர்களை
அடக்க கவனம் செலுத்தினார்.
நாட்டில் சியா,சுன்னி களின் பிரிவுகளும்
பிரச்சினைகளும் அதிகரித்தது.
ஈரானில் சியாக்களின் அரசாங்கம் நிறுவப்பட்டு உஸ்மானியர்களோடு
சண்டையில் ஈடுபட்டனர்.
துருக்கியின் மேற்குப் பகுதியில்
ஐரோப்பியர்களோடு சண்டை, கிழக்கு பகுதியில் ஈரானோடு சண்டை ,என துருக்கி அமைதியிழந்து இருந்தது.
இதனை சாக்காக பயன்படுத்திய ஐரோப்பிய நாடுகள்
செய்த செயல்கள்
துருக்கியை ஆட்டம் காண செய்தன.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிரதமர் மோடி தமிழகத்தையே சுற்றி சுற்றி வந்தாலும் பாஜகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு சீட்டு கூட கிடைக்காது!-உதயநிதி ஸ்டாலின் உறுதி..
by Askar
written by Askar
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்து அதன் வேட்பாளர்களை அறிவித்து தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு பக்கம் தீவிராக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், மறு பக்கம் உதயநிதி வீதி வீதியாக மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். கடந்த ஐந்து தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.
நேற்று ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டி.ஆர் பாலுவை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே திறந்தவெனில் நின்றபடி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளும், தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கான வாக்குறுதிகளையும் கூறி பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே பிரதமர் மோடி தமிழகம் வருவதாகவும், கடந்த 10 நாட்களாக தமிழகத்தையே சுற்றி வந்தாலும் பாஜகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு சீட்டு கூட கிடைக்காது எனவும் தெரிவித்தார்.
கடந்த தேர்தலின் போது கோ பேக் மோடி என்று கூறி வந்த நாம் தற்போது கெட் அவுட் மோடி என்று கூறும் வகையில் திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்று நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் அவருக்கு ஒரு குட்டு என்பதை நாம் நினைவில் கொண்டு தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கி அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடும் முன் ஊடக கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும்; மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடும் முன் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும்; மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு..
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.
இது பற்றிய செய்திக்குறிப்பில், வருகின்ற ஏப்ரல் 19.04.2024 அன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் தொடர்பாக விளம்பரங்களை தொலைக்காட்சி, உள்ளூர் தொலைக்காட்சி, எப்.எம். அலை வரிசைகள், பொது இடங்களில் ஒளிஒலி திரைகள் அமைத்தல், குறுஞ்செய்திகள், செய்தித்தாள்கள், மின்னணு செய்தித்தாள்கள், சமூக ஊடகக் கணக்குகள் ஒலிப்பதிவுகள் மற்றும் இணையதளங்களில் வெளியிடும் முன் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் 1957 பிரிவு 127 A-இன்படி தேர்தல் தொடர்பாக சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரம் மற்றும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை அச்சக உரிமையாளர்கள் அச்சிட்டு பிரச்சாரம் செய்யும் போது அதன் முன்பக்கத்தில் அச்சக உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி மற்றும் பதிப்பகத்தார் பெயர் (Publisher) மற்றும் முகவதி மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றினை படிக்கும் வகையில் தெளிவாக அச்சடிக்கப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தற்கொலைக்கு முயன்ற ம.தி.மு.க. எம்.பி., கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..
by Askar
written by Askar
தற்கொலைக்கு முயன்ற ம.தி.மு.க. எம்.பி., கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..
கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி உயிரிழந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 24-ந்தேதி கனேசமூர்த்தி திடீரென மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலை 5.05 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டி நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது..
by Askar
written by Askar
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டி நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்ட வாக்குப்பதிவுக்குப் பின், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் வாக்கு பதிவுக்கு பிறகு 45 நாட்களுக்கு மேல் வாக்கு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, தேர்தல் அறிவிப்பு அரசியல் சட்ட விதிகளையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளையும் மீறும் வகையில் உள்ளதால், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்துமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரி எழிலன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு என்பது முற்றிலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். தேர்தல் நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்த காலக்கெடுவும் விதிக்கப்படாத நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உத்தரவிட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்தலில் போட்டியிட போதிய அளவில் என்னிடம் பணம் இல்லை; சொன்னது யாரு.. நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..
by Askar
written by Askar
தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் மத்திய மந்திரிகள் உள்ளிட்ட பலரை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக பா.ஜனதா களம் இறக்கி உள்ளது.
அந்தவகையில், மாநிலங்களவை எம்.பி.க்களான மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பூபேந்திர யாதவ், ராஜீவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா, எல்.முருகன், ஜோதிர்ஆதித்ய சிந்தியா ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஆனால், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இத்தேர்தலில் போட்டியிடவில்லை.
டெல்லியில் நேற்று நடந்த ஒரு ஆங்கில செய்தி சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம் இதுபற்றி பார்வையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், “பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, ஆந்திராவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ தேர்தலில் போட்டியிடுமாறு என்னை கேட்டுக்கொண்டார். நான் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் அதுபற்றி யோசித்தேன். பிறகு திரும்பிப்போய் சொன்னேன்.
”தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. ஆந்திராவா, தமிழ்நாடா என்பதிலும் எனக்கு பிரச்சினை இருக்கிறது. மேலும், வெற்றியை தீர்மானிக்கும் அளவுகோல் பற்றியும் கேள்விகள் எழும். நீங்கள் அந்த சாதியா? அந்த மதமா? இந்த ஊரா? இப்படி கேள்விகள் வரும்.
எனவே, என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது” என்று சொல்லி விட்டேன். அவர்கள் என் வாதத்தை ஏற்றுக்கொண்டனர். ஆகவே, நான் போட்டியிடவில்லை. அவர்களுக்கு என் நன்றி” என்று அவர் கூறினார்.
”நாட்டின் நிதி மந்திரியிடம் கூட தேர்தலில் போட்டியிட பணம் இல்லையா?” என்று பார்வையாளர்கள் கேட்டனர். அதற்கு நிர்மலா சீதாராமன் கூறுகையில், “இந்தியாவின் ஒட்டுமொத்த பணமும் எனக்கு சொந்தமானது அல்ல. எனது சம்பளம், எனது வருமானம், எனது சேமிப்பு ஆகியவை மட்டுமே எனக்கு சொந்தம்” என்று அவர் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமை இயக்குநராக, மகாராஷ்டிரா மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையின் (ஏடிஎஸ்) தலைவர் சதானந்த் வசந்த் நியமனம்..
by Askar
written by Askar
தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் வசந்த டேட்டையும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) அமைப்பின் இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பியூஷ் ஆனந்தையும் மத்திய உள்துறை அமைச்சு நியமித்துள்ளது.
உள்துறை அமைச்சின் முன்மொழிவுக்கு அமைச்சரவை நியமனக்குழு அளித்த ஒப்புதலின் பேரில் இந்த நியமனங்கள் குறித்த அறிவிப்பு புதன்கிழமை வெளியானது.
தற்போதைய தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் (NDRF) அதுல் கர்வால் மார்ச் 31 அன்று ஓய்வு பெறவிருக்கிறார். அதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி பியூஷ் ஆனந்த் அந்த அமைப்பின் இயக்குநராகிறார்.
காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநராகப் பணியாற்றி வரும் பாலாஜி ஸ்ரீவஸ்தா மார்ச் இறுதியில் ஓய்வுபெறுகிறார். அதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமார் அந்த அமைப்பின் தலைமையேற்க உள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமை இயக்குநராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் வசந்த் டேட் நியமிக்கப்பட்டுள்ளார். சதானந்த் வசந்த் டேட் 26/11 தாக்குதலின்போது பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடியதற்காக குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கம் பெற்றவர். இவர் வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர், புனே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள என்ஐஏ இயக்குநர் சதானந்த் வசந்த டேட்டும், பிபிஆர்டி தலைவர் ராஜீவ் குமாரும் ஒரே காலகட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வாகி, பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு..
by Askar
written by Askar
பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.அதன்படி, சிதம்பரத்தில் 6-வது முறையாக விசிக தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல். திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.நாம் தமிழர், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காங்கிரஸ் கட்சியின் செயல் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதி- செல்வப் பெருந்தகை பேட்டி..
by Askar
written by Askar
காங்கிரஸ் கட்சியின் செயல் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதி- செல்வப் பெருந்தகை பேட்டி..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உதயநிதிக்கு அடுத்து அவர் மகனையும் ஏற்றுக்கொள்வோம்ன்னு பேசிட்டு இருக்காரு ஒரு அமைச்சர், எவ்வளவு அடிமைத்தனம்!- எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..
by Askar
written by Askar
உதயநிதிக்கு அடுத்து அவர் மகனையும் ஏற்றுக்கொள்வோம்ன்னு பேசிட்டு இருக்காரு ஒரு அமைச்சர், எவ்வளவு அடிமைத்தனம்!- எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
யூடியூப் விதிமுறைகளை மீறியதாக கூறி 22 லட்சம் வீடியோக்களை அந்த நிறுவனம் நீக்கி உள்ளது..
by Askar
written by Askar
யூடியூப் விதிமுறைகளை மீறியதாக கூறி 22 லட்சம் வீடியோக்களை அந்த நிறுவனம் நீக்கி உள்ளது..
கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல வீடியோ சமூக வலைதளம் யூடியூப். அதில் பொழுதை போக்கவும், வருமானத்தை ஈட்டவும் பலர் சேனல் துவக்கி பல வீடியோகளை பதிவிடுகின்றனர். அப்படி பதிவேற்றும் வீடியோக்கள் அனைத்தும் தங்களது விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும் என யூடியூப் கூறுகிறது.
அதனை மீறும் வீடியோக்கள் நீக்கப்படுவதுடன் சேனல்களை அந்த நிறுவனம் முடக்கி வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டின் கடைசி காலாண்டில் விதிமுறைகளை மீறியதாக இந்தியாவில் மட்டும் 22.5 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளன.
விதிமுறைகளை மீறும் வகையில் விளம்பரம் அல்லது பாலியல் ரீதியிலான கருத்துகளுடன் உள்ளதால் அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளன.
அதேபோல் உலகளவில் 90 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளன. அதில், 96 சதவீத வீடியோக்கள் யாரும் பார்ப்பதற்கு முன்னரே நீக்கப்பட்டன.
மேலும் விதிகளை மீறியதாக 2 கோடி சேனல்கள் நீக்கப்பட்டு உள்ளதுடன் 100 கோடி வாசகர்கள் கருத்துகளையும் அந்த நிறுவனம் நீக்கி உள்ளது. வீடியோக்கள் நீக்கப்பட்ட பட்டியலில்,
இந்தியா முதலிடத்தில் உள்ளது. ( 22.5 லட்சம் வீடியோக்கள் நீக்கம்)
2வது இடத்தில் சிங்கப்பூர் ( 12,43,871 வீடியோக்கள் நீக்கம்)
3வது இடத்தில் அமெரிக்கா ( 7,88,354 வீடியோக்கள் நீக்கம்)
இந்தோனேஷியா 4வது இடத்தில் (7,70,157 வீடியோக்கள் நீக்கம்)
ரஷ்யா 5வது இடத்தில் (5,16,629 வீடியோக்கள் நீக்கம்).
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சத்குரு இன்று (மார்ச் 27) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
by Askar
written by Askar
டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சத்குரு அவர்கள் இன்று (மார்ச் 27) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்..
சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான சத்குருவிற்கு மார்ச் 17-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு அவர்கள் மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உடல்நலனில் முன்னேற்றம் கண்டார். கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னதாக, அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “சத்குரு அவர்கள் உடல் நலம் தேறி வருவது குறித்து மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் குணமடையும் அதே வேளையில் அவருடைய உற்சாகத்தை அப்படியே தக்கவைத்து கொண்டுள்ளார். உலகளாவிய நன்மைக்கான அவரது அர்ப்பணிப்பு, அவருடைய புத்தி கூர்மை மற்றும் அவரின் நகைச்சுவை உணர்வு அனைத்தும் அப்படியே சிறப்பாக உள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.
சத்குருவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் த்யாகி, டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி, இந்த சவாலான சூழலில் உலகெங்கும் இருந்தும் சத்குருவிற்கு அன்பையும் ஆதரவையும் அளவற்ற வகையில் வெளிப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஈஷா அறக்கட்டளை மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக கூட்டணி வேட்பாளரான நவாஸ்கனிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் ! அமைச்சர் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரிப்பு !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டும் திமுக கூட்டணி வேட்பாளரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இரண்டாவது முறையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசவாமி திருக்கோவிலில் ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து பின்னர் ராமேஸ்வரத்தில் காரியாளத்தை திறந்து வைத்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு நவாஸ்கனிக்கு ஆதரவாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் இணைந்து ராமேஸ்வரம் நகர் பகுதி, கடற்கரை துறைமுக வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
You must be logged in to post a comment.