Home செய்திகள்உலக செய்திகள் கீழக்கரையில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ! பொதுமக்கள் ஆவலுடன் கையொப்பம் !!

கீழக்கரையில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ! பொதுமக்கள் ஆவலுடன் கையொப்பம் !!

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முக்கு ரோட்டில் இருந்து வள்ளல் சீதக்காதி சாலை வழியாக நடை பயணம் மேற்கொண்டு தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து ஆட்டோக்களில் பதாகை வைத்து பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொடர்பாக 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் , வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் , ஸ்டிக்கர்களை ஒட்டியும் துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் வழங்கியும் வாக்களிக்கும் செய்முறைகளை பற்றி விழிப்புணர்வு செய்தனர். பொதுமக்கள் ஆவலுடன் கையொப்பமிட்டு ஆதரவை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் பரமசிவம் , கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் கிராம நிர்வாக அலுவலர் வினோத் யசோதா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!