தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது . இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மற்றும் முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க வலியுறுத்தி தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் 118 வயது மிட்டாய் தாத்தா மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது . தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உன் கைவிரலில் வைக்கப்படும் மையால் , உண்மையாக , நேர்மையாக , கடமையுடன் , ஜனநாயக உரிமையுடன் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் 100 ஆட்டோக்களில் ஒட்டப்பட்டது . தஞ்சை கீழவாசல் ஆடக்காரத் தெருவில் வசிக்கும் 118 வயது முகமது அபுசலி என்ற மிட்டாய் தாத்தா கொடியசைத்து துவக்கி வைத்த பின்னர் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில் இருந்து தஞ்சை நகர பகுதிகளில் வலம் வந்தன . முன்னதாக அங்கிருந்த பொதுமக்களிடமும் ஆட்டோ ஒட்டுனர்களிடமும் மதிப்புமிக்க வாக்கை பணத்துக்காக விற்காமல் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் , வாக்களிக்க தகுதிபெற்ற அனைவரும் குறிப்பாக 18 வயது நிறைவடைந்து முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்ற இளம் வாக்களார்கள் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் , ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தில் நமது உரிமையை நிலைநாட்டும் என்று இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கையில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே நிறைவேற்ற வேண்டி இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது . ஜனநாயகத்துக்காக ஆள்காட்டி விரலை கூட உயர்த்தாதவர்கள் அரசை கேள்வி கேட்க உரிமையில்லாதவர்கள் என்பது எங்கள் நிலைப்பாடு . ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் கைகளில் தேர்தல் நாளன்று தங்களது ஆட்காட்டி விரலில் வாக்களிக்க மை வைத்து உண்மையாகவும் நேர்மையாகவும் உரிமையாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றி 100 சதவிகிதம் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தனர் . எதிர்வரும் தேர்தல் , 18வது மக்களவை தேர்தலாகும் . 18 வயது நிறைவடைந்த வாக்களிக்க தகுதி பெற்ற அனைவரையும் 118 வயது மிட்டாய் தாத்தா 100 சதவிகிதம் வாக்களிக்க அழைப்பு விடுத்த நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது . இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர் .
Category:
மாநில செய்திகள்
நேற்றும் வருமான வரித்துறை 1745 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ்! இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக ரூ.3,567 கோடி அபராதம் விதிப்பு!
by Askar
written by Askar
காங்கிரஸ் கட்சி கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி, அந்த கட்சியின் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.
மேலும் அபராதமாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை எடுத்துக்கொண்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. அதனை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே கடந்த 2017-2018, 2018-2019, 2019-2020, 2020-2021 ஆண்டுகள் வரையிலான 4 நிதியாண்டுகளுக்கான காங்கிரசின் வருமானவரி கணக்குகளை வருமானவரித்துறை மறுமதிப்பீடு செய்யதது.
அதை தொடர்ந்து, மேற்கண்ட 4 ஆண்டுகளுக்கான வருமானவரி கணக்கில் நிலவும் முரண்பாடுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை ரூ.1,823 கோடியே 8 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதில், ரூ.1,076 கோடியே 35 லட்சம் அபராதம் ஆகும். மீதி தொகை வட்டி ஆகும்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை கடந்த 29-ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் 2014-15 முதல் 2016-17 வரையிலான 3 நிதியாண்டுகளுக்கான வருமானவரி கணக்கில் நிலவும் முரண்பாடுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை மேலும் ரூ.1,745 கோடி அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக ரூ.3,567 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கி கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை வருமானவரித்துறை எடுத்தது தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்துள்ள வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் (இன்று) விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முத்துவயல் கிராம அல் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளியின் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராம அல் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளியின் வளாகத்தில் ஜமாஅத் தலைவர் S.அஜ்மல் கான் தலைமையில் சுலைமான் , ஆமீர் கான் , பிலால் பீர் முகம்மது , ஹபீப் ரகுமான் , சீதக்காதி , முகம்மது அமின் , அப்துல் மாலிக் , அப்துல்லா ஆகையால் முன்னிலையில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்ஸலுல் உலமா, மௌலானா மௌலவி முஹம்மது அனீஸ் முனீரி, பாஜில் ஸஹாரன்பூரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் S.முருகேசன் , நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபாலன் , போகலூர் ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் கதிரவன் , விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் பெருப்பாளர் முகம்மது யாசின் , இந்திய தேசிய காங்கிஸ் கட்சி போகலூர் வட்டாரத்தலைவர் முனிஸ்வரன் , முத்துவயல் ஊராட்சி மன்றத் தலைவர் ரவி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சபரிவேனி சரவணன் , நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலளர் காமராஜ் செல்லத்துரை , தமிழ் புலிகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா , CBI (M) மாவட்ட செயல் குழு உறுப்பினர் ராஜ்குமார் , தேருவேலி ஓய்வு ஆசிரியர் முஸ்தபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முத்துவயல் மற்றும் பொட்டகவயல் முஸ்ஸீம் ஜமாத்தார்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் திமுகவினர் வீதி வீதியாக சென்று ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக கே.நவாஸ்கனிக்கு திமுகவினர் வாக்கு சேகரிதனர். கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் தெற்கு நகர் கழக திமுக சார்பில் செயலாளர் பிரவீன்தங்கம் தலைமையில் 200 க்கும் மேற்பட்டவர்கள் மாரியம்மன் கோயில்தெரு, சத்யா நகர், தங்கப்பா நகர், நகைக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா. அகமது தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அலங்காநல்லூர் தேர்தல் பிரச்சாரத்தில் செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என பேசிய டிடிவி தினகரன்..
written by Abubakker Sithik
மதுரை அலங்காநல்லூரில் டிடிவி தேர்தல் பிரச்சாரம்; செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என டிடிவி தினகரன் பேச்சு..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனிச்சியம் பகுதியில் தேனி நாடாளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டிடிவி தினகரன் இரண்டாவது நாளாக தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ஆர் பி உதயகுமாரை பபூன் என்றும், செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என்றும் டிடிவி தினகரன் கூறினார். அதிமுக பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆன பின்பு நாங்கள் விரல் சூப்பிக்கொண்டு இருக்க முடியாது. இன்று டிடிவி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியதன் காரணம் உண்மையான தொண்டர்களுக்கு ஜனநாயக கட்சியான அதிமுகவை மீட்டெடுப்பதற்கும் அம்மாவின் கட்சியை மீட்டெடுப்பதற்கும் தான் என்றும், அதற்கு அமமுக ஒரு ஆயுதமாக உள்ளது. ஆர் கே நகர் தேர்தலில் மட்டும் தானே வெற்றி பெற்றீர்கள். அதன் பிறகு நடைபெற்ற மக்களை தேர்தலில் ஜெயிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்கவில்லையே என்று கூறுகிறார்கள் என்று கேட்டபோது, அமமுகவை மக்கள் மூன்றாவது அணியாக தான் பார்த்தார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் நாய் என்றும் சிங்கமாகாது நாய் ஓநாயாக வேண்டுமானால் மாறலாம் என்றும், நாங்கள் அவர்கள் வீட்டில் காவலாளியாகவும் அடிமைகளாகவும் இருந்தோம் என்று அதிமுகவினர் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு காவலாளியாக இருந்தவங்க இன்னும் காவலாளியாக தான் இருக்கிறார்கள். அவர்கள் நன்றியுடன் உள்ளார்கள். இவர்கள் நன்றி இல்லாதவர்கள். துரோக சிந்தனை உள்ளவர்கள் அதனால் தான் இரட்டை இலை பலவீனமாகி வருகிறது.
நானும் பன்னீரும் இணைந்து இருப்பது இரட்டை இலையை மீட்டெடுக்கத்தான். மீட்டெடுத்து அதை திரும்ப தொண்டரிடம் ஒப்படைப்பதற்காக தான் இணைந்து இருக்கிறோம். ஒரு பழமொழி சொல்வார்கள் திருடிட்டு ஓடுறான் என்று திருடனே சொல்வதைப் போல உங்களிடம் இருந்து இரட்டை இலையை பெற்று தொண்டர்களிடம் கொடுப்போம். இந்தி எதிர்ப்பு குறித்து அண்ணாமலை கூறிய கருத்திற்கு அண்ணாமலை கூட்டணியில் இருக்கிறார் என்பதற்காக சொல்லவில்லை. பேரறிஞர் அண்ணா 1967இல் அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியை திணிக்க முயன்ற போது அதை கடுமையாக எதிர்த்தார். அப்போது காங்கிரஸில் இருந்த காமராஜருக்கு எதிராக மக்கள் திரண்டார்கள். ஆனால் அந்த நிலை இப்போது இல்லை.
சமீபத்தில் சர்வே ஒன்று படித்தேன் தாய்மொழி கல்வி படிப்பவர்கள் தமிழகத்தில் 9 சதவீதம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் 70 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டில் தாய்மொழி கல்வியான தமிழ் படிப்பவர்கள் 9 சதவிதமாக குறைந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் நாட்டில் போட்டி அதிமுக திமுகவிற்கு தான் என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு அதற்கு பதில் ஜூன் 4-ம் தேதி தெரியும் என்றும் சசிகலா பிரச்சாரத்திற்கு வருவாரா என்ற கேள்விக்கு அதிமுகவை மீட்டெடுப்பதில் இருப்பவர் எப்படி பிரச்சாரத்திற்கு வருவார் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் முன் அறிவிப்பின்றி ரயில்வே கேட் மூடியதால் பொது மக்கள் அவதி..
written by Abubakker Sithik
சோழவந்தானில் முன் அறிவிப்பின்றி ரயில்வே கேட் மூடியதால் பொதுமக்கள் அவதி..
சோழவந்தான் ரயில்வே கேட் முன் அறிவிப்பு இன்றி மூடியதால் அன்றாட வேலைக்குச் செல்லும் தொழிலாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இது மட்டும் அல்லாது ரயில்வே கேட்டுக்கு வடபகுதியில் குடியிருப்பு பகுதிகள் அதிகமாக இருப்பதால் இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வாழ்கின்றனர். இவர்களுடைய அன்றாட தேவைக்கும் அடிப்படை தேவைக்கும் தென்பகுதிக்கு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது இவர்கள் பெரும்பாலும் நடந்து செல்லக் கூடியவர்கள். சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், தற்போது திடீரென்று முன் அறிவிப்பு இன்றி ரயில்வே கேட்டை மூடியதால் பல்வேறு மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். ரயில்வே கேட் மூடியது தெரியாமல் இருபுறமும் மக்கள் ரயில்வே கேட்டுக்குள் புகுந்து தண்டவாளத்தை ஆபத்து அறியாமல் கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி உயிர் சேதம் நடக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம் இவர்களுக்கு நடந்து செல்வதற்கான மாற்று ஏற்பாட்டை செய்து தரும்படி இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மம்தா பானர்ஜி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால்: 200 தாண்டுங்கு பார்க்கலாம்..
by Askar
written by Askar
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால் விட்டுள்ளார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என கூறி வரும் நிலையில், அவர்களால் 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது என்று மீண்டும் உறுதியளித்துள்ளார். மேலும், சி.ஏ.ஏ.-வுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பொது மக்களை மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு விண்ணப்பிக்கும் போது, நீங்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவராகி விடுவீர்கள், இதனால் அதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாட்டு வெடி குண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..
written by Abubakker Sithik
சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது; மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்களை மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் சாலையில் சார்பு ஆய்வாளர் கௌசல்யா தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது காவல் துறையினரை கண்டதும் தப்பித்து ஓட முயன்ற சுரேஷ் என்பவரை பிடித்து அவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது.
இது தொடர்பாக மேற்படி நபரிடம் விசாரணை செய்ததில், சுரண்டையில் நாகராஜ் என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி நாட்டு 8 வெடிகுண்டுகளாக தயார் செய்து, அதில் இரண்டு குண்டுகளை மனோ சங்கர் என்பவரிடமும், ஒரு குண்டு கார்த்திக் என்பவருக்கும் கொடுத்து வைத்திருப்பதாகவும், மூன்று குண்டுகளை 30.03.24 அன்று வீராணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திற்குள் சுரேஷ் மற்றும் கார்த்திக் சேர்ந்து வெடித்து பள்ளி சுவற்றை சேதம் ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நாகராஜா என்பவரின் மகன் சுரேஷ் (34), கிருஷ்ணசாமி என்பவரின் மகன் கார்த்திக் (25) சுரண்டை பாண்டியன் என்பவரின் மகன் மனோ சங்கர் (19) மற்றும் சுரண்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவர் மகன் நாகராஜா(35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துபாயில் இன்று (31/03/2024) லேன்ட் மார்க் ஹோட்டலில் கீழக்கரை வடக்குத் தெரு சகோதரர்களின் இஃப்தார் ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 40கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் அக்பர்கான் வருங்காலத்தில் படித்து விட்டு அமீரகம் வரும் சகோதரர்கள் எவ்வாறான தொழிற் படிப்புகள் அவசியம் என்பதையும், தெருவின் நலன் மற்றும் வளர்ச்சியுயும் மனதல் கொண்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அதை தொடர்ந்து அமீரகத்தில் தொழில் புரியும் மற்ற சகோதரர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அது போல் வரும் காலங்களில் தெரு மக்களின் ஒன்று கூடலை தொடர்ச்சியாக நடத்துவது, வேலை தேடி வரும் நபர்களுக்கு வழிகாட்டும் மையம் அமைத்தல், தற்போதைய அமீரகத்தின் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் போன்ற கருத்துக்களும் முன் வைக்கப்பட்டது.
பின்னர் அனைவரின் நலம் விசாரிப்புடன் நிகழ்ச்சி் இனிதே நிறைவுற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும், இதனைத் தொடர்ந்து தேர்தல் பத்திர ஊழல் அம்பலமாகும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு..
by Askar
written by Askar
ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும், இதனைத் தொடர்ந்து தேர்தல் பத்திர ஊழல் அம்பலமாகும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு..
ஈரோடு நாடாளுமன்ற மக்களவை தொகுதி வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சின்னியம்பாளையத்தில் ஈரோடு நாமக்கல்,கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சக்ரபாணி, மதிவேந்தன், முத்தூர் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன் ,ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது;
இந்த மண்ணுக்கு எத்தனை பெருமை உண்டு. வெள்ளையன் எதிர்த்து போராடிய சின்னமலை மண் இது. ஈரோடு தொகுதி வெற்றி வேட்பாளர் பிரகாஷ் மக்களுக்காக சிறு வயது முதலே பணியாற்றியவர். கரூர் தொகுதி வேட்பாளர் கடந்த முறை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இந்த முறை அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இங்கே வந்திருக்கும் மக்களின் எழுச்சியை பார்க்கும்போது 3 வேட்பாளர்களும் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பீர்கள் என நம்புகிறேன். இங்கு வரவில்லை என்றாலும் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழில் வளர்ச்சி பின்னுக்கு தள்ளியை ஆட்சியை உதறித் தள்ளிவிட்டு என் மேல் நம்பிக்கை வைத்து இந்த ஆட்சியைக் கொடுத்தீர்கள். தமிழகம் தற்போது முன்னேறி உள்ளன. நான் ஆய்வுகளுக்காக துமிழகம் முழுவதும் செல்பவன். அப்படி சேலத்தில் செல்லும் போது ஒரு பெண்மணி சொல்லும் போது கேட்டேன் ‘எனது கணவர் பெயிண்டர். அவரது வருமானம் போதவில்லை. தற்போது காலை உணவு திட்டத்தால் பிள்ளைகள் சுவையாக சாப்பிடுகிறார்கள். நீங்கள் கொடுக்கும் உதவி தொகையை கொண்டு சேமிப்பு கணக்கு துவங்கி உள்ளேன். நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என அந்த தாய் கூறினார்.
15 லட்சம் மகளிர் உரிமையோடு மகிழ்ச்சியோடு உள்ளார்கள். நாள் தோறும் பல திட்டம் உருவாக்கி மக்களுக்கான ஆட்சியாக நாம் செயல்பட்டு வருகிறோம். புதிய தொழிற்சாலை அமைக்க 621 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதை பொறுத்துக் கொள்ளாத அதிமுக பாஜக நம்மை நோக்கி குறை கூறுகிறார்கள்.
பாஜக மகளிர் உரிமை தொகை பிச்சை என கூறி நிதி தர மறுக்கிறார்கள். சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்வோம்
இடஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு. அருந்ததியனருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது கலைஞர்தான். இந்தியாவில் மிகபெரிய ஊழல் தேர்தல் பத்திர ஊழல்தான்
இது அனைத்தும் ஜீன் மாதம் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அம்பலமாகும்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை, பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு!உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் மீதும் வழக்கு..
by Askar
written by Askar
பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், எம்.எஸ்.ஷா மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தனது மகளின் செல்போனுக்கு, பா.ஜ.க. பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்துள்ளதாகவும், இதையடுத்து தனது மகளிடம் கேட்டபோது, தனது மனைவி, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அடிக்கடி தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பா.ஜ.க. பிரமுகருடன் தனியாக இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வாட்ஸ் அப் மூலமாக, நான் அழைக்கும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தையைக் கூறி அழைத்துச் சென்று 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பா.ஜ.க. நிர்வாகி எம்.எஸ்.ஷா மீதும், மாணவியின் தாய் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்..
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 30.03.2024 அன்று தென்காசி தனி நாடாளுமன்ற தொகுதிக்கு 19.04.2024 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவல்துறை பார்வையாளர் பங்கஜ் நைன், பாராளுமன்ற தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையின்றி நடக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அனைத்து வேட்பாளர்களும் தொகுதி வாரியான செலவின கணக்குகளை பராமரித்து வரவேண்டும் எனவும், உரிய காலத்தில் செலவின கணக்குளை உரிய அலுவலர்களிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினர்.
கூட்டத்தில் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா தெரிவித்ததாவது, தேர்தல் நடத்தை தொடர்பான புகார் மற்றும் கருத்துக்களை தென்காசி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425 8375 வாயிலாகவும், வாக்காளர் உதவி மைய எண் 1950 என்ற எண்ணிலும் தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள cVIGIL என்ற செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் எவரேனும் நேரடியாகத் தேர்தல் பார்வையாளரிடம் புகார் தெரிவிக்க விரும்பினால் குற்றாலம், அரசு விருந்தினர் மாளிகையில் அறை எண்.102- ல் தினமும் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்றும், கைபேசி எண் 9363752362 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
கூட்டத்தில் தேர்தல் செலவின கணக்குகள் தொடர்பாக அனைத்து கட்சியினரும் மற்றும் வேட்பாளர்களும் எழுப்பின சந்தேகங்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் உரிய பதிலளித்தனர். இக்கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் சதீஷ்குருமூர்த்தி, சித்திக் முகமது அமீர் முகமது இக்பால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஈவிஎம் இல்லாமல் பா.ஜ.கவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது!- ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..
by Askar
written by Askar
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற பேரணியும், பொதுக்கூட்டமும் இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:
காங்கிரசின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான வேலைகள் உள்ள நிலையில், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுகிறார். எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை வைத்து நாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள்.
வரும் தேர்தலில் போட்டியிட விடாமல் என்னை தடுக்க பா.ஜ.க. சதி செய்கிறது. வங்கி கணக்கு முடக்கம், மாநில முதலமைச்சர்கள் கைது என ஜனநாயக விரோத போக்கை பா.ஜ.க. மேற்கொள்கிறது. பா.ஜ.க.வால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது. இந்திய அரசியல் சட்டம் ஏழைகளுக்கு உரிமைகள் வழங்கியிருக்கிறது. ஈவிஎம் இல்லாமல் பா.ஜ.கவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது. தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று அரசியல் சட்டத்தை மாற்றினால் நாடு தீப்பற்றி எரியும். இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்காவிட்டால் அரசியல் சாசனம் சிதைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், என் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுவேன் இயக்குனர் அமீர் ஆடியோ வெளியீடு..
by Askar
written by Askar
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், என் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுவேன் இயக்குனர் அமீர் ஆடியோ வெளியீடு..
போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபூர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தி.மு.க.,வில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
பின்னர் கடந்த 9ஆம் தேதி ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபிறகு, இயக்குனர் அமீர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரிய திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். இதனிடையே, ஜாபர் சாதிக் உடன் இயக்குனர் அமீருக்கு உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தலாம் என தகவல் வெளியானது.
இந்தநிலையில், திரைப்பட இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக்கின் தொழில் ரீதியான நண்பர்கள் அப்துல் பாசித் புஹாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேரில் ஆஜராக சம்மன் அளித்துள்ளனர். வருகின்ற 2 ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே ஆடியோ ஒன்றினை வெளியிட்டுள்ள இயக்குநர் அமீர், விசாராணையை எதிர்கொள்ள எப்போதுமே தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். ”ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் எனது தரப்பில் உள்ள நியாயத்தையும் உண்மையை எடுத்துக் கூறுவேன், 100 சதவீதம் வெற்றியோடு இறைவன் அருளால் வருவேன்” என அமீர் அந்த ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கமுதி வட்டாட்சியரின் சீரிய முயற்சியால் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் – கமுதி மேற்கு உள்வட்டம் மண்டலமாணிக்கம் குரூப் கோடாங்கிபட்டி கிராமத்தில் சாலை மறு சீரமைப்பு செய்யவும் விருதுநகர் மாவட்டம் பூமாலைப்பட்டி வருவாய் கிராமம் 2019-ம் ஆண்டு மராமத்து பணி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்ட பொழுது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது அரசுக்கு பாதமாக தீர்ப்பு வரப்பெற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் கோடாங்கிபட்டி கிராம பொதுமக்கள் எதிர்வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். கிடைத்த தகவல் அடிப்படையில் மண்டலமாணிக்கம் குரூப், கோடங்கிபட்டி கிராம மக்களிடையே வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் வட்டாட்சியர் சேதுராமன் தலைமையில் இன்று (31.03.2024 ) நடைபெற்றது. இக்கூட்டத்தில் லிவாதங்கள் நடைபெற்று கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை1. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெறும் கோடங்கிபட்டி கிராம மக்கள் தொடர்பான சாலை மறுசீரமைப்பு வழக்குகள் அனைத்திலும் பிரதியாதிகளாக கோடங்கிபட்டி கிராம மக்களை சேர்க்க தீர்மானிக்கப்பட்டது.2. கோடங்கிபட்டி கிராமத்திற்கு ஆணி, பெனர் பொது கழிப்பறை வசதி செய்து தர கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.3. குடிநீர் தொட்டி (RO) சரிசெய்து தர கமுதி வட்டார வளர்ச்சி அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 4. வலையப்பட்டி சாலை சரிசெய்து தர கமுதி வட்டார வளர்ச்சி அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.5. மண்டல மாணிக்கம் பொதுப்பணித்துறை கண்மாய் பலப்படுத்த செயற்பொறியாளர் குண்டாறு வடிநீர் கோட்டம் அவர்களுக்கு கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.6. மண்டல மாணிக்கம் பொதுப்பணித்துறை கண்மாய் மற்றும் தடுப்புச்சுவர் கட்ட தடையின்மைச் சான்று வழங்க பொதுப்பணித்துறை, உதவி செயற்பொறியாளர், குண்டாறு வடிநிலம்- கமுதி உபகோட்டம் அவர்களுக்கு கடிதம் அனுப்ப திமானிக்கப்பட்டது .7. இராமநாதபுரம் மாவட்டம் 2024 நாடளுமன்ற பொதுத்தேர்தல் புறக்கணிப்பதாக கூறிய நிலையில் கமுதி வட்டாட்சியர் மற்றும் கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர், கமுதி காவல் ஆய்வாளர் முன்னிலையில் நாடளுமன்ற பொதுத் தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்றனர். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதாக முழு மனதோடு சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கேடாங்கிபட்டி பொதுமக்கள்கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர் . கமுதி வட்டாட்சியர் சேதுராமனின் உறுதி மொழியை ஏற்று வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.எனவே தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி 5 தடவை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்தார். கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பொதுக்கூட்டங்களிலும் பேசினார்.கோவையில் சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோவும் நடத்தினார்.மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வருகிறார். தமிழகத்தில் சென்னை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.இதற்கான பயண திட்டம் தயாராகி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் முடிவாகி விடும்.9-ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார். தென் சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை, மத்திய சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது.இந்த 2 தொகுதிகளுக்கும் பொதுவான இடத்தில் ரோடுஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.தென்சென்னைக்கு மேற்கு மாம்பலம், மத்திய சென்னைக்கு பாண்டி பஜார் ஆகிய இடங்களை இணைக்கும் வகையிலும், இதே போல் மேலும் 2 இடங்களையும் தேர்வு செய்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்களின் முடிவை பொறுத்து இடம் உறுதி செய்யப்படும்.சென்னை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமானத்தில் திருச்சி செல்கிறார்.அன்றைய தினமே வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் கேரளா செல்கிறார்.அதன் பிறகு மீண்டும் சில தொகுதிகளில் பிரசாரம் செய்ய வருவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ராகுல்காந்தி 11-ந்தேதியில் இருந்து 13-ந்தேதிக்குள் ஒருநாள் தமிழகம் வருவதற்கு ஒத்துக் கொண்டு உள்ளார். ஒரே நாளில் 3 அல்லது 4 இடங்களில் பிரசாரம் செய்யும் வகையில் பயண திட்டம் தயாராகிறது.கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தொகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் நெல்லையில் ஒரு இடத்தில் பிரசாரம் செய்கிறார்.கடலூர், மயிலாடுதுறையை இணைத்து ஒரு இடத்தில் பேசுகிறார்.மேலும் திருவள்ளூர், கரூர் ஆகிய இடங்களிலும் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.பிரியங்காவும் தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வருகிறார். அவர் வரும் தேதி இன்னும் உறுதியாகவில்லை.கர்நாடகா மாநிலத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு பெங்களூரில் இருந்து ஓசூர் வருகிறார். அங்கிருந்து சேலம் வரை ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
*உஸ்மானிய பேரரசு -31
(கி.பி1299-1922)
சுல்தான் இரண்டாவது பயாசித் காலத்தில் கி.பி 1498 ஆம்ஆண்டு வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான
கடல் வழிகளை கண்டுபிடிக்க தனது குழுவினரோடு கிளம்பினார்.
இதற்கு முன்பே கொலம்பஸ் இந்தியாவிற்கான கடல் வழிகளை கண்டுபிடிக்க கிளம்பி அமெரிக்க என்ற நாட்டை கண்டுபிடித்தார்.
அங்கிருந்த பழங்குடிகளுக்கு
செவ்விந்தியர் என பெயர் சூட்டினார்.
இப்போது வாஸ்கோடகாமா கிளம்பினார்.
இதற்கெல்லாம் காரணமாக உஸ்மானியர்களின் கடற்படை வலிமையாக விளங்கியது.
எல்லா கடல் வழிகளிலும் முஸ்லீம்களின் ஆதிக்கமே நிறைந்து இருந்ததால் அதற்கான வரிகளை செலுத்துவதை தவிர்க்க ஐரோப்பியர்கள் புதிய வழிகளை கண்டுபிடிக்க முயற்சித்தனர்.
எகிப்து உலகின் மிக முக்கியமான பருத்தி
உற்பத்தியாளராக இருந்தது.ஆனால் எகிப்து உஸ்மானிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆகவே ஐரோப்பிய நாடுகளுக்கு பருத்தி கிடைக்கவில்லை. இந்தியநாடு
பருத்தி,பட்டு,கம்பளி,
வாசனைப் பொருட்கள் என
ஏராளமான பொருட்களின் சந்தையாக இருப்பதை அறிந்த போர்த்துகீசியர்கள்
அதனை தங்கள் நாடுகளுக்கு வாங்கிச் செல்ல நினைத்தனர்.
ஆகவே உஸ்மானிய கடல் எல்லைக்குள் வராமல் இந்தியா வர கடல் வழியை தேடினர்.
இந்தியாவை தேடி கப்பலில் கிளம்பிய கொலம்பஸ் குழுவினர் இந்திய பெருங்கடலில் தடுமாறி நின்றபோது,
அப்துல் மாஜித் என்ற முஸ்லீம் கடலோடி கொலம்பஸ் குழுவினரை கொச்சி துறைமுகத்திற்கு வழிகாட்டி கொண்டு வந்து சேர்த்தார்.
அந்த அளவிற்கு முஸ்லீம்கள் கடல்களின் போக்குவரத்து வழிகளை அறிந்தவர்களாக
சிறந்த கடலோடிகளாக இருந்தார்கள்.
கொலம்பஸ் பொருட்களை இந்தியாவில் வாங்கிக்கொண்டு
வந்த வழியிலேயே
தனது நாட்டிற்கு திரும்பினார்.
இந்தியப் பொருட்களின் மதிப்பை அறிந்து
பிரான்ஸ், இங்கிலாந்து,
டச்சுக்காரர்கள் என வரிசையாக இந்தியாவை நோக்கி வரத்துவங்கினர்.
இந்த சூழலில் சுலைமான் அல் கானூனி அவர்கள் தங்கள் கடல்படையை நவீனமாக கட்டமைத்தார்.
ஹனபி சட்டம் உஸ்மானிய பேரரசின் சட்ட வழிமுறையாக பின்பற்றப்பட்டது.
இவர் அமைத்த சுலைமானியா பல்கலைக்கழகத்தில்
அறிஞர்கள் வாழ்வியல்,
ஆட்சித்துறை,
நிர்வாகத்துறைகளில்
காலச்சூழுலுக்கு தகுந்தவாறு குர்ஆன்,
ஹதீஸ் அடிப்படையில் ஆய்வுகள் செய்து சட்டங்களை வழங்கினார்கள்.
வரி,வரிவசூல், நில சீர்திருத்தங்கள்,
என்று நிறைய சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.
வெளிநாட்டு மாணவர்கள் இஸ்தான்ஃபுல் நகருக்கு அதிக அளவில் வருகை தந்தனர்.
மற்ற நாடுகளுடன் அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டார்.
பேரரசர் சுலைமான் அவர்கள் அதிகம் விட்டுக்
கொடுப்பவராகவும்,
மன்னிப்பவராகவும்
இருந்தார்.
இவரை ஐரோப்பியர்கள்
“மாட்சிமை தங்கிய சுலைமான்” என்று மிகுந்த மரியாதையுடன் அழைத்தார்கள்.
சுலைமான் அல்கானூனி அவர்கள்
பல ஐரோப்பிய நாடுகளை வெற்றி கொண்டார். ஹங்கேரிக்கு படையெடுத்து சென்றார்.
அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தி எதிர்ப்பை ‘பிஞ்சு போன செருப்பு’ என்பதா?… அண்ணாமலை பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடும் கண்டனம்..
by Askar
written by Askar
இந்தி எதிர்ப்பை பிஞ்சு போன செருப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. அண்ணாமலை தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பங்கேற்றது. மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்புடன் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 70 பேர் வரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் உயிர்த் தியாகம் செய்த போராட்டத்தை அண்ணாமலை கொச்சைப்படுத்தி பேசியதற்கு கண்டனம் வலுக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர், வேணுகோபாலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அண்ணாமலை, “1980ல் பேசிய அதே விஷயத்தை சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கும் பேசுகிறார்கள். இந்தி, சமஸ்கிருதம், வடக்கு தெற்கு என பேசிக் கொண்டிருக்கிறது திமுக. இன்னும் அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் தூக்கி எறியவில்லை.” எனக் கூறினார். அண்ணாமலையின் இந்த பேச்சு சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றிணைந்து நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, “பாஜகவுக்கு தமிழ்நாடு மீதோ, தமிழ் மொழி மீதோ மரியாதை கூட இல்லை. தாய் மொழியாக தமிழ் தனக்கு கிடைக்கவில்லை என்று பிரதமர் மோடி ஒருபுறம் பேசுகிறார். மறுபுறம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். பிஞ்ச செருப்பு என்று நாங்கள் எதையெல்லாம் தூக்கி எறிந்தோமோ, அதனால் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு வரி செலுத்துவதால்தான் இந்தியை தூக்கிப் பிடிக்கும் உத்தரப் பிரதேசத்தில் சாலைகள் போடப்படுகின்றன. உ.பி.யில் சாலை போட வேண்டுமென்றால் இந்தி, சமஸ்கிருதம் போன்ற பிஞ்ச செருப்புகளை தூக்கி எறிந்துதான் ஆக வேண்டும்,”இவ்வாறு தெரிவித்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாசிசத்தை எரிக்கும் சின்னம் தீப்பெட்டி. எல்லா இடங்களிலும் எங்கள் சின்னம் சென்றடையும்!-துரை வைகோ நம்பிக்கை..
by Askar
written by Askar
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டியிடுகிறார். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில், ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரைவைகோ கூறியதாவது;
திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் சின்னம் தீப்பெட்டி. பாசிசத்தை எரிக்கும் சின்னம் தீப்பெட்டி. எல்லா இடங்களிலும் எங்கள் சின்னம் சென்றடையும். நாங்கள் எங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுவோம். கூட்டணி கட்சி தலைவர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் அனைவருமே தி.மு.க. வேட்பாளர் தேர்தலில் நிற்பதாக தான் எண்ணி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அமலாக்கத்துறை போன்ற எல்லா இடங்களிலும் பா.ஜ.க.வின் அழுத்தம் இருக்கிறது. அதேபோல் தேர்தல் ஆணையத்திலும் பா.ஜ.க.வின் அழுத்தம் இருந்து வருகிறது. தேர்தலில் நிற்க பணம் இல்லை நிற்க முடியவில்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, மத்திய இணைமந்திரி எல்.முருகன் போன்றவர்களிடம் மட்டும் அதிகம் காசு உள்ளதா?. என கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் ஒட்டுமொத்த நாடே தூக்கத்தை தொலைத்துவிட்டு தவிக்கிறது. தற்போது வெளிவந்துள்ள தேர்தல் பத்திரம் ஊழலால் பிரதமர் மோடி தூக்கத்தை தொலைச்சிட்டார்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு..
by Askar
written by Askar
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சேலம், கள்ளக்குறிச்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இருவரையும் ஆதரித்து பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:- திராவிட மாடலின் குரல் தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது. வடக்கிற்கும் சேர்த்தே ஒலிக்கிறது. ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான்தான் எடுத்துக்காட்டு. ஒரு மத்திய அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு பா.ஜனதா அரசுதான் எடுத்துக்காட்டு. சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி, பா.ஜனதாவுக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுக-வின் தூக்கம் தொலைந்துவிட்டதாக பேசிவிட்டு சென்றார். உண்மையிலேயே தூக்கத்தை தொலைத்தவர்கள், இவர்கள்தான் (10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள். சிலிண்டர் விலை உயர்வு மூலம் தாய்மார்கள், ஏழைகள். வேலையில்லா திண்டாட்டம் மூலம் இளைஞர்கள். ஜிஎஸ்டி மூலம் சிறுகுறு தொழில் நடத்துபவர்கள். 3 சட்டங்கள் மூலம் உழவர்கள். சிஏஏ மூலம் சிறுபான்மையினர் மக்கள். இப்படி 10 ஆண்டு கால ஆட்சியில் ஒட்டுமொத்த நாடே தூக்கத்தை தொலைத்துவிட்டு தவிக்கிறது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் வெளிவந்துள்ள தேர்தல் பத்திரம் ஊழலால் பிரதமர் மோடி தூக்கத்தை தொலைச்சிட்டார். இன்னொரு முக்கிய காரணம் மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை தென்மாநிலங்களில் பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாத நிலை இருந்தது. தேர்தல் பத்திரம் ஊழல் வந்த பிறகு வட மாநிலங்களிலும் வெற்றி பெற முடியாது என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனால்தான் தூக்கத்தை தொலைத்துவிட்டு பதட்டப்படுகிறார்.பதட்டத்தில் ஹேமந்த் சோரன், டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையால் கைது செய்கிறார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு வருமான வரித்துறையை ஏவிவிட்டு நோட்டீஸ் விடுகிறார்.எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்த்து பேசினால் சிபிஐ ரெய்டு விடுகிறார். கூட்டணி கட்சிகளை போன்று அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறையை பயன்படுத்துகிறார் என்றால் உச்சக்கட்ட தோல்வி பயத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். ஆட்சி வரவேண்டும் என்ற வெறியில் இந்திய ஜனநாயகத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறார்.இவ்வாறு முக ஸ்டாலின் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment.