இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டியின்) பொதுக்குழு கூட்டம் ஜகாத் கமிட்டியின் அலுவகத்தில் இன்று நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு மூத்த உறுப்பினரும் கௌரவ ஆலோசகருமான க.கு அப்துல் ஜப்பார் மற்றும் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் தலைமை தாங்கினார். ஜகாத் கமிட்டி செயலாளர் ஷாஹுல் ஹமீது முன்னிலை வகித்தார். ஜகாத் கமிட்டி தலைவர் ஜாஹிர் ஹுசைன் வரவேற்புரை வழங்கினார்.பொருளாளர் சீனி முஹம்மது ஆண்டறிக்கை வாசித்தார். துணைத்தலைவர் நஜீம் மரிக்கா தொகுத்து வழங்கினார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நாளும் ஒரு நபிமொழி புகழ் கீழக்கரை புதுப்பள்ளி கத்தீப் மன்சூர் நூரி ஆலிம் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து 3850 முறை நாளும் ஒரு நபிமொழி பதிவு செய்த மௌலானா மன்சூர் நூரி ஆலிமின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் ஊடக துறையில் சிறப்பாக செல்பட்டு வரும் சகோதரர் நிருபர் முஹம்மது பாக்கருக்கும் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் தற்போது இருக்கும் நிர்வாகிகளே 2026 வரை தொடர்ந்து செயல்படுவார்கள் என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதியதாக செயற்குழு உறுப்பினர் சேர்க்கப்பட்டது. நிறைவாக ஷுஹாதாகள் பள்ளியின் இமாம் அப்துல் ரவூப் ஆலிம் இறைவசனம் ஓத கமிட்டியின் முதன்மை நிர்வாகி அஹமது குதுபுத்தீன் ராஜா நன்றியுரையாற்றினார் . கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Category:
கீழக்கரை செய்திகள்
நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்ட மாணவி; முக்கிய பிரமுகர்கள் பாராட்டு..
written by Abubakker Sithik
நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்ட மாணவி; கல்வியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பாராட்டு..
தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்ட மாணவியை கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த மாணவி இன்பா. தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் மாணவி இன்பாவை நேரில் சந்தித்து முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள் பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.எம். ரஹீம், நூலகர் ராமசாமி, விழுதுகள் சேகர், முத்தரசு, ஆரிஷ் ஆகியோர் மாணவி இன்பாவின் இல்லம் சென்று பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி இன்பா பேசுகையில், செங்கோட்டை அரசு நூலகத்தில் படித்து வந்ததாகவும், தொடர் விடாமுயற்சியின் பயனாக தேர்வுக்கு தயாராகி தாம் வெற்றி பெற்றுள்ளதாகவும், தேர்வுக்கு படிப்பதற்கு நான் முதல்வன் திட்டம் முக்கிய உதவியாக இருந்ததாகவும் கூறினார். மேலும் தேர்வுக்கு படிப்பதற்கான ஏற்ற சூழல்கள், வசதிகள் அனைத்தும் செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் அமைந்து இருப்பதாகவும், நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், செங்கோட்டை அரசு பொது நூலகத்திற்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் மற்றும் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் (பொது) பண்டாரி யாதவ் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி இன்று (20.04.2024) நடைபெற்றது. இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம்- 338, பரமக்குடி (தனி) -303, முதுகுளத்தூர்- 386, திருவாடானை -347, திருச்சுழி- 276, அறந்தாங்கி-284 என மொத்தம் 1934 வாக்குப்பதிவு மையங்களிலிருந்து கொண்டு வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், VVPAT, கட்டுப்பாட்டு கருவி மற்றும் விண்ணப்பபடிவங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 04.06.2024 அன்று வாக்கு என்னும் வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் மத்திய காவல் படை, தமிழ்நாடு காவல் துறை, சிறப்பு காவல் பிரிவு ஆகிய துறைகள் மூலம் 261 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதில் மத்திய காவல் படை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பகுதியிலும், அதற்கு அடுத்து சிறப்பு பிரிவு காவல் படையினரும், அதற்கு அடுத்து தமிழ்நாடு காவல்துறையினர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். இவர்களுடன் தீயணைப்புத்துறை அதிநவீன வாகனங்கள் உதவியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். மேலும் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகம் முழுவதும் 260 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வரப்பெற்றுள்ளது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்தலில் வாக்களியுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் – பொது மக்களுக்கு வேண்டுகோள்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இந்திய நாட்டை மதசாற்பட்ட,ஊழலுக்கு துணை போகாமல், மக்கள் நலனுக்காக, எதிர்கால இந்தியாவின் நலனுக்காக பாடுபடக்கூடிய பாரளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய ஜனநாயக வழி தேர்தல் நடைபெற ணஉள்ளது.
இந்த நிலையில் தற்போது தோல்வி பயத்தில்,முதுகெலும்பு இல்லாத சில கட்சியினர் ஜனநாயக உரிமையான உங்கள் வாக்குரிமையை விலை பேசும் முகமாக மேன்மை நிறைந்த உங்கள் வாக்கை விலை பேசி அற்ப பணத்தை பல்வேறு புரோக்கர்கள் மூலமாகவும்,தன் கட்சிக்காரர்கள் மூலமாகவும் கொடுப்பதாக அறிய முடிகிறது.
அன்பிற்குரிய வாக்காளப்பெருமக்களே! இந்த தேர்தல் என்பது நமது நாட்டின் ஐந்து வருட தலைவிதியை நிர்ணயம் செய்யக்குடியதாக, மக்களுக்காக அரசால் ஒதுக்கபடும் நிதிகளை முறையாக மக்கள் நலனுக்காக செலவு செய்ய கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஆகும்.
அற்ப பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க துடிக்கும் அரசியல் வாதிகள் தான் வெற்றி பெற்ற பின் தொகுதி நலனுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை கூற்றாக கொள்ளை அடிப்பார்கள் என்பதை கடந்த கால வரலாறுகள் நமக்கு உணர்த்தி இருப்பதை நாம் அறிவோம்.
அன்பிற்குரிய வாக்காளப்பெருமக்களே! உங்கள் ஜனநாயக உரிமையான ஓட்டுக்கு அற்ப பணம் வழங்கிய வேட்பாளர்களை இனம் கண்டு புறம் தள்ளுங்கள். உங்கள் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யார் சிறந்தவர் என்பதை தேர்வு செய்து வாக்களியுங்கள். நீங்கள் அளிக்கும் வாக்கு ஊழலுக்கு துணை போகாமல் தொகுதி நலனுக்காக பாடுபடும் ஒரு நல்ல பாரளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்யக்கூடிய வாக்காக அமையட்டும்.
ஆக்கம்:- M.U.V. முகைதீன் இப்ராகீம், செயலாளர்,
மக்கள் நல பாதுகாப்பு கழகம்,
கீழக்கரை-623517
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போராட்டத்தை கைவிட்ட ஆணைகுடி கிராம மக்கள் ! தேர்தலில் வாக்களிப்பதாக உத்தரவாதம் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு தொடர்ந்து இன்று கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் நேரடியாக கிராமங்களுக்கு சென்று கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இருதரப்பின் பேச்சு வார்த்தையில் சுமுகமான தீர்வு ஏற்பட்டதால் போராட்டங்களை கைவிட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் முழுமையாக வாக்களிப்போம் என்று தெரிவித்தனர் . இதில் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உச்சிப்புள்ளியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி ஆதரித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தீவிர வாக்கு சேகரிப்பு !
by Baker BAker
written by Baker BAker
இன்னும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசமாக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் அதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உச்சிப்புளி பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி நானூறு ரூபாய் சம்பள உயர்வோடு வேலை வழங்கப்படும் பெண்களுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் மஹாலட்சுமி திட்டத்தில் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சுட்டிக்காட்டி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடற்கரை பீச் பார்க் லைட்ஹவுஸ் அருகில் கீழக்கரை இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம் கே இ உமர் கலந்து கொண்டு பேசுகையில் . இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் கீழக்கரையில் இதன் மூலம் குற்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதாக தெரிகிறது. கீழக்கரை ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர் இந்த ஊரில் இதுபோன்ற இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.இந்த வேலையில் இது போன்ற இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியது வரவேற்கத்தக்கது மேலும் இச்சங்கத்தின் மூலம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாக குழுவின் மூலம் இணைந்து போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாதம் ஒருமுறை விழிப்புணர் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் முறையாக இதை வழிநடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கீழக்கரை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் வீதி வீதியாக சென்று ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக கே.நவாஸ்கனிக்கு ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் திமுக கட்சியினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து ஏணி சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தனர். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் பின்புறம் வண்டிக்கார் தெரு , வெத்தல கார தெரு , சவேரியார் தெரு கொண்ட இடங்களில் வாக்கு சேகரித்தனர். அப்பகுதி பொதுமக்கள் ஆதரவை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆணைகுடி கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடக்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தியதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது . கிராம பொதுமக்கள் தெரிவிக்கையில் உப்பளம் அமைப்பதற்கு பலமுறை போராடியும்அனைத்து பணிகளையும் தொடங்கி வரும் நிலையில் பலமுறை போராட்டம் நடத்தி வருகின்றோம் ஆனால் மாவட்ட ஆட்சியர் எங்கள் கோரிக்கையை ஏற்க வில்லையென்றும் எங்கள் ஊருக்கு வந்து பார்வை இடவும் இல்லை என்றும் தெரிவித்தனர். . மேலும் இந்த உப்பளம் அமைவதால் ஆணைகுடி, களரி, சாம்பகுளம் சுமைதாங்கி உட்பட் சுற்றியுள்ள கிராமத்தில் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டு குடிநீர் ஆதாரங்கள் பாலாகிவிடும் என்று கிராம மக்கள் ஆதங்கத்துடன் கருப்பு கொடியுடன் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் , காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாரதரத்னா பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட பொருளாளர் பாபு, செய்தி தொடர்பாளர் தங்கவேல்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர். பிரசாத் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகருமான டாக்டர்.மாடசாமி மற்றும் இதர அமைப்பு பொறுப்பாளர்களும், அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு டாக்டர். அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கை ! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் வெளியீடு !!
by Baker BAker
written by Baker BAker
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே நவாஸ்கனி தேர்தல் அறிக்கை 2024 வெளியிட்டார். வேட்பாளர் கே நவாஸ்கனி செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கடந்த ஐந்தாண்டு காலம் உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் நம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சமரசம் இல்லாமல் குரல் கொடுத்திருக்கிறேன். தேசிய சராசரியை விடவும், மாநில சராசரியை விடவும் பன்மடங்கு அதிகமான பங்களிப்பை நாடாளுமன்றத்தில் சிறப்பாக வழங்கி இருக்கிறேன். பாஜக அரசின் வஞ்சகப் பார்வையால் தமிழ்நாடு மட்டுமல்ல இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்து தொடர்ந்து உழைத்த நான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் போது ஆளுங்கட்சியாக அமர்ந்து நம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன். இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் பொழுது நம் தொகுதியில் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்த தேர்தல் அறிக்கையை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். மேலும் தேர்தல் அறிக்கை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போதை பொருளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ! கீழக்கரையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரட்டி டிஜிபி அலுவலகம் முற்றுகையிட படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலை நகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பாக மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமையில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை கண்டித்தும் , கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை நிர்வாகிகள் 3 நபர் மீது கத்தியால் குத்தி கொலை வெறித்தாக்குதல் நடத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் , கீழக்கரையில் முற்றிலுமாக போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் கலந்து கொண்டு பேசுகையில் :- தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே மத்தியிலே பாசிசத்திற்கு எதிராக பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்று அயராது உழைத்து இரவு பகல் பாராமல் ஒரு கட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள் அதை முன்வைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதாகவும் இளைஞர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருக்கின்றார்கள் என்று பலமுறை எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் மேடை மேடையாக விமர்சனம் செய்து வருகிறார். இதே நேரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முன்வந்து போதைக்கு எதிராகவும் உங்கள் ஆட்சிக்கு எதிராகவும் பிரச்சாரத்தை முன்னெடுத்தால் நாங்கள் களம் கண்டால் நீங்கள் கண்ட கனவு அடியோடு ஒளிந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாமல் ஆகிவிடும் என்பதை நீங்கள் உணர வேண்டும் . இனியாவது போதைப் பொருள்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் போதைப் பொருளுக்கு ஆதரவாக இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் மேலும் ஒரு சில காவலர்கள் போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு உடந்தையாக இருப்பதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது முழுமையாக தெரிந்து கொண்டு அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க விட்டால் கடுமையான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தனர் அதனை தொடர்ந்து போதைப்பொருள் கீழக்கரையில் விற்பனையை கட்டுப்படுத்தவில்லை என்றால் கீழக்கரையில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களில் அணிவகுப்போடு சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். கீழக்கரையில் போதை பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதாகவும் இளைஞர்கள் அழிவை நோக்கி செல்கின்றனர் இதை கீழக்கரை திமுக நகர் நிர்வாகிகள் கண்டும் காணாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கிறேன் என்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் போதைப்பொருள் விற்பனையாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் தெற்கு மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்டத்துணைச் செயலாளர்கள் உஸ்மான், மீரான் மற்றும் அனைத்துக்கிளை நிர்வாகிகள் உட்பட ஐயாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்ட செயலாளர் தினாஜ்கான் நன்றி உரை வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்; புதிய நிர்வாகிகள் தேர்வு..
written by Abubakker Sithik
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்; புதிய நிர்வாகிகள் தேர்வு..
தென்காசி மாவட்டம் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சு.குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வே.கிருபா சம்பத், மாவட்ட பொருளாளர் வே.நல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழுவில் பட்டதாரி ஆசிரியர்கள் நலன் குறித்து விவாதிக்கப்பட்டு. அது தொடர்பாக ஆசிரியர்கள் நலன் குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரை சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
அதில் மாவட்ட தலைவராக குத்துக்கல்வலசை செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கருப்பசாமி, மாவட்ட செயலாளராக குலையநேரி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கிருபா சம்பத், மாவட்ட பொருளாளராக மடத்துப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி வீர செல்வன் மற்றும் கௌரவ தலைவராக வே.நல்லையா, கௌரவ ஆலோசகராக சு.குமார் மாவட்ட துணைத் தலைவர்களாக ச.திருமலைக் குமார், மாரித்துரை மாவட்ட இணை செயலாளர்களாக செ.கிருபாகரன், சு.ரத்தினக்குமார் மாவட்ட அமைப்பு செயலாளராக சு.சங்கர நாாயணன், மாவட்ட மகளிர் அணி செயலாளராக ஷீலா, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளராக கு.முருகேஸ்வரி மாவட்ட செய்தி தொடர்பாளராக இலியாஸ், மாவட்ட சட்ட செயலாளராக க.பொன் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக சிவராஜ், ஜெயபாலன், வை.துரைசாமி, சி.பசுபதி தனராஜ், க.சுந்தரேசன், ச. ராஜா. பழனிச்சாமி, அருண் ஆகியோர் ஏகமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை உறுப்பினர்கள் வாழ்த்தினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ தின உறுதி மொழி ஏற்பு..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சமத்துவ தின உறுதிமோழியை ஏற்றுக்கொண்டனர். இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 12 ஆம் நாள் ஆண்டு தோறும் சமத்துவ நாள் ஆக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏப்.12 வெள்ளிக்கிழமை இன்று சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
“சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஊட்டிய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும் சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி கூறுகிறேன் என்ற உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். உறைவிட மருத்துவர் செல்வபாலா தலைமை தாங்கினார். மேலும் மூத்த மருத்துவர்கள் கீதா, ராஜேஷ், சுவர்ணலதா, விஜயகுமார், நிர்மல், அன்னபேபி, செவிலியர் கண்காணிப்பாளர்கள் வள்ளி (நிலை.1) திருப்பதி, ராஜாதி ஜெகதா, வசந்தி மற்றும் செவிலியர்கள், செவிலிய பயிற்சி மாணவ மாணவியர்கள், பாதுகாவலர்கள், துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றனர். மேலும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் தீண்டாமை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்திய அரசியலமைப்பின் 17வது பிரிவு தீண்டாமையை ஒழிப்பதற்கும், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியமான விதியாகும். இருப்பினும், இதனை திறம்பட செயல்படுத்த பல சவால்கள் உள்ளன. அமலாக்கமின்மை, ஆழமான வேரூன்றிய சமூக தப்பெண்ணங்கள், சாதி அடிப்படையிலான அரசியல், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் போதிய சட்ட ஆதரவின்மை ஆகியவை கடக்க வேண்டிய குறிப்பிடத்தக்க சவால்களில் சில. இந்த சவால்களை எதிர்கொள்வது மற்றும் ஒவ்வொரு தனிமனிதனும் அவர்களின் சாதி அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவது அவசியம். அப்போது தான் நீதியான சமத்துவ சமுதாயம் என்ற இலக்கை நாம் உண்மையாக அடைய முடியும். இவ்வாறு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் சமத்துவ நாள் பற்றிய விழிப்புணர்வை மருத்துவ கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் செவிலியர் கண்காணிப்பாளர் திருப்பதி நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், தென்காசி பாறையடி தெரு, காயிதே மில்லத் நகரில் வைத்து, நோன்பு பெருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிஸான் அணி மாநிலச் செயலாளர் தென்காசி முகம்மது அலி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்பதாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாகூர் மீரான், மின்சார வாரிய செயற்பொறியாளர் ரபீக் பின் உசைன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் வரவேற்றார். மீரான் மருத்துவமனை மருத்துவர் அப்துல் அஜீஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அசாருதீன் நன்றி கூறினார். துபாய் ஷேக், கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நூறு நபர்களுக்கு அரிசி, கைலி, சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதலியார் பட்டி பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..
கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டியில் காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். திமுக கிளைச் செயலாளர் நவாஸ்கான் தலைமையில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு, திமுக கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும், கடையம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவருமான மகேஷ் மாயவன், ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர் கட்டி அப்துல் காதர், திமுக மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மற்றும் முஸ்லிம் லீக் தொண்டர்கள் முதலியார்பட்டி, காந்திநகர் இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று நெல்லை தொகுதி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதில் திமுக சிறுபான்மை அணி ஒன்றிய செயலாளர் செய்யது அலி, வார்டு பொறுப்பாளர் மாரியப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தொழிலாளர் அணி துணைத் தலைவர் காதர் மைதீன், முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயலாளர் ரிபாய், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி..
written by Abubakker Sithik
தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி..
தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் கடையநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க திமுக முன்னணி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் நெல்லை ராணி அண்ணா கல்லூரியை போன்ற மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன் என தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி அளித்தார். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில், தொகுதி பொறுப்பாளர் ஆவின் ஆறுமுகம், நகரச் செயலாளர் அப்பாஸ், ஒன்றிய செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் கடையநல்லூர் ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதியில் பிரசாரம் செய்தார்.
புன்னையாபுரம் பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், சிங்கிலி பட்டி, சொக்கம்பட்டி, திரிகூடபுரம், முத்துச்சாமிபுரம், குமந்தபுரம், கடையநல்லூர் நகராட்சி பகுதி ,கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், மெயின் பஜார், பேட்டை, ரஹ்மானியாபுரம், மேலக் கடையநல்லூர், அதனைத் தொடர்ந்து ஒன்றிய பகுதிகளான காசி தர்மம், இடைகால், கண்மணியாபுரம், வலசை, புதுக்குடி, மங்களாபுரம், வேலாயுதபுரம், ஊர்மேல் அழகியான், கள்ளம்புளி அச்சம்பட்டி, இடைகால், நயினாரகரம், சின்னத்தம்பி நாடாரூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். அப்போது வழி நெடுகிலும் தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் மற்றும் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகிய இருவருக்கும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் நகர்மன்ற உறுப்பினருமான ஆர் முருகன் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். மாவடிக்கால் பகுதியில் பெண்கள் வீட்டின் மேல் மாடிகளில் இருந்து வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
கடையநல்லூர் நகர் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பேசியதாவது, தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராக இருந்த காலஞ்சென்ற மரியாதைக்குரிய அருணாசலம் அவர்களுக்கு பிறகு இதுவரை இந்த தொகுதியில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த யாரும் நாடாளுமன்ற உறுப்பினராக வந்ததில்லை. முதல் முறையாக இந்த தொகுதியில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன். எனவே புதிதாக தொடங்கப்பட்ட இந்த மாவட்டத்திற்கு தேவையான பொறியியல் கல்லூரி, அரசு பெண்கள் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை தொடங்குவதற்கு பாடுபடுவேன். மேலும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருக்கின்ற அவர்களுக்கு உயிரிழப்பு மற்றும் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் அவர்களை விரைவாக தொடர்பு கொள்ள கடையநல்லூரில் வெளியுறவுத்துறை சார்பில் தகவல் தொடர்பு மையத்தை ஏற்படுத்துவேன். திருநெல்வேலியில் செயல்படுவது போல் பாஸ்போர்ட் சேவா கேந்திரா, பாஸ்போர்ட் சேவை மையத்தை தென்காசியில் அமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இப்பகுதியில் ஏராளமான தென்னை மற்றும் எலுமிச்சை சார்ந்த விவசாய நிலங்கள் உள்ளது. தென்னை மற்றும் எலுமிச்சம் பழம் ஆகியவற்றிற்கு மதிப்பு கூட்டும் தொழிற்சாலை உருவாக்கப்படும் அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கப்படும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் வராமல் இருப்பதற்கு நவீன முறையில் ஸ்ப்ரிங் டைப் சோலார் மின் வேலி அமைத்துக் கொடுக்கப்படும் மற்றும் யானைபுகா அகழி தோண்டப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை பாதுகாப்பாக வைத்திருக்க குளிர் பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். செங்கோட்டை விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு பணிகளுக்கு மாணவ மாணவிகளை தயார்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் கோச்சிங் சென்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்த போது கடையநல்லூர் முன்னாள் நகர்மன்ற தலைவரும் மக்கள் மருத்துவருமான டாக்டர் சஞ்சீவி, நகர திமுக அவைத் தலைவர் முருகையா, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான், துணைத் தலைவர் ராஜையா, மாவட்ட பிரதிநிதிகள் தம்புராஜ், சிட்டி திவான் மைதீன், ராமச்சந்திரன், நகர பொருளாளர் நெடுமாறன், மாவட்ட பிரதிநிதி தம்பு, புளியங்குடி பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொ.மு.ச. செயலாளர் ஷார்ப் கணேசன், துணைச் செயலாளர் காசி நல்லையா, இளைஞரணி இத்தாலியின் பீர்முகம்மது (எ) பீரப்பா, ஒன்றிய குழு துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், கடையநல்லூர் வார்டு செயலாளர்கள் நகர கழகம் மற்றும் வார்டு கழக பிரதிநிதிகள் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மா.கம்யூ இ.கம்யூ, ம.தி.மு.க, மனித நேய மக்கள் கட்சி, ஆதி தமிழர் பேரவை மாவட்ட மற்றும் நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி..
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் நேர்மையாக வாக்களித்தல், ஆகியவற்றை வலியுறுத்தி ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து 09.04.2024 அன்று கீழப்பாவூர் பேருந்து நிலையத்திலும், கீழப்பாவூரில் உள்ள தனியார் பேருந்துகள், கார் மற்றும் தனியார் ஆட்டோக்களில் தேர்தல் திருவிழா-தேசத்தில் பெருவிழா. என் வாக்கு என் உரிமை. என் வாக்கு விற்பனைக்கு அல்ல. 100 சதவீதம் வாக்களியுங்கள்.
நேர்மையாக வாக்களியுங்கள். வாக்களிப்பதில் பெருமை கொள்வோம். இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் சிவக்குமார், மாரீஸ்வரன், கீழப்பாவூர் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் ஜேசுமரியாள், வட்டார இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மணிமேகலை, பிரியா, குமுதவள்ளி, சாந்திமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செய்திகள்கவுன்சிலர்கீழக்கரை செய்திகள்கீழக்கரை மக்கள் களம்நகராட்சிநிர்வாகம்பிரச்சனைமாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
கீழக்கரை மூணாவது வார்டு பகுதியில் மின் விளக்கு எரியாமல் பொதுமக்கள் அவதி ! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மூணாவது வார்டுக்கு உட்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் எதிர்ப்புற சந்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பாதை உள்ளது . இப்பாதை இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுவதால் பெண்களும் குழந்தைகளும் அவ்வழியில் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் அவ்வழியில் பலமுறை விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது . நகர்மன்ற உறுப்பினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அப்பகுதியில் நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிதியிலிருந்து சூரிய ஒளி மின்விளக்கு பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது . கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி மக்கள் பயன்படும் வகையில் அப்பகுதியில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் வேண்டுகோள் விடப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிகாலையில் கோர விபத்து; பேருந்து லாரி மீது மோதியதில் நடத்துனர் உயிரிழந்த சோகம்..
written by Abubakker Sithik
கடையநல்லூர் அருகே அதிகாலையில் கோர விபத்து; அரசு பேருந்து லாரி மீது மோதி நடத்துனர் உயிரிழந்த சோகம்..
கடையநல்லூர் அருகே அரசு பேருந்து நினாறு கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் நடத்துனர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் இடைகால் இடையே சையது காட்டன் மில்ஸ் அருகில் அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. திருப்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை சுந்தர பாண்டியபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்தில் செங்கோட்டை மேலூரைச் சார்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்துனராக உள்ளார். அதிகாலை நேரம் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சையது காட்டன் மில்ஸ் முன்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது செங்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் பேருந்தின் நடத்துனர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிக அளவு காயம்பட்டிருந்த பொட்டல்புதுரைச் சார்ந்த பிர்தவுஸ் மற்றும் தென்காசி மேலகரத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சிறு சிறு காயங்களுடன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.