கீழக்கரை செய்திகள்
நிலக்கோட்டை பூ மார்க்கெட் கடைகளில் பேரூராட்சி அலுவலர் அதிரடி.. தடை செய்யப்பட்ட 100-கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்….
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேருராட்சியில் 17-வார்டுகள் உள்ளன இப்பகுதியில் மிகவும் பிரபலமான பூ மார்க்கெட், காய்கனி வணிக வளாகம் மற்றும் வாரச்சந்தை உள்ளன.
இப்பகுதியில் இன்று மாலை நிலக்கோட்டை பேருராட்சி அலுவலர் தலைமையில் பூ மார்கெட் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது பூ மார்க்கெட்டில் 56-வது கடையில் பூக்களை பார்சல் செய்வதற்காகவும் ஏற்றுமதி பேக்கிங் செய்வதற்காகவும் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் சுமார் 100- கிலோ அளவில் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
மேலும் செயல் அலுவலர் கூறுகையில், இது போன்ற மண்ணுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாலித்தீன் பைகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதே போல வணிகர்களும், வணிக நிறுவனங்களில் கடைகளில் பாலித்தின் பைகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்பவர்களுக்கு பேருராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டு செய்யபடுவார்கள்’ என்றார்.
மேலும் கைபற்றப்பட்ட கடைக்காரர்க்கு உரிய அபதாரம் விதிக்கப்படும் என்றும் இது போன்ற திடீர் சோதனைகள் தொடரும் என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் அண்ணா திமுக சார்பாக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூட்டம்…
உசிலம்பட்டி பிப்ரவரி 23 மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டியில் பேரையூர் ரோட்டில் உள்ள குரு மகாலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜ் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
உசிலம்பட்டியில் நடைபெற்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 71வது வது பிறந்த நாள் மற்றும் தேனிநாடாளுமன்றத் தேர்தல் பூத் கமிட்டி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா தலைமை வைத்தார் உ சிலம்பட்டி பா.நீதிபதி எம். எல். ஏ .நகர செயலாளர் பூமா ராஜா ஒன்றிய செயலாளர்கள் சேடபட்டி பிச்சை ராஜன் செல்லம்பட்டி பி .ராஜா எழுமலை பேரூர் வாசிமலை அவைத்தலைவர்கள் சீனி த்தேவர் ராமகிருஷ்ணன் பண்பாளன் சிவ சின்ராம், நல்லூ ஆகியோர் முன்னிலை வைத்தனர் கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தேனி மாவட்ட செயலாளர் சையது கான் தேனி மாவட்ட பேரவை செயலாளர் ரவீந்தர்நாத் குமார் முன்னாள் எம்.எல்..ஏ.க்கள் முத்துராமலிங்கம் தவசி பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர் .கூட்டத்தில் தேனி மாவட்ட துணை செயலாளர் முருக்கே டை ராமர் மதுரை மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ் நிலையூர் முருகன் முத்துகுமார், முனியாண்டி பிரேம் ஆனந்த் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை ராஜா வேலுச்சாமி பஞ்சம் மாள் போத்தி ராஜன் தேனி மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணகுமார் தீபன் சக்ரவர்த்தி ஜெகதீசன் அன்ன பிரகாஷ் லோகி ராஜன் சிவக்குமார், இளையராஜா தங்கமுத்து எல்லப்பட்டி முருகன் கற்க்குணம் கொத்தாலம் உசிலம்பட்டி நிர்வாகிகள் லட்சுமணன் கே.எஸ் லட்சம் உக்கிரபாண்டி டிக்கா சேதுராமன் ஏ.ராஜா மற்றும் உசிலம்பட்டி நகரம் உசிலம்பட்டி ஒன்றியம் சேடப்பட்டி செல்லம்பட்டி ஒன்றியம் ஏழுமலை பேரூர் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் அம்மா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக சார்பில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என அதற்கு அல்லும் பகலும் பாடுபடுவோம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முடிவில் கோ. இராமநாதன் நன்றி கூறினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கைக்கு பீடி இலைகள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக ராமேஸ்வரம் சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்குமால் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரைபயில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த தூத்துக்குடி கார்த்திக், வேல்முருகன் ஆகியோரை சோதனை செய்த போது அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு டன் பீடி இலைகள் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்.
இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் முக்கிய குற்றவாளி தூத்துக்குடியில் இருப்பது தெரிய வந்ததையடுத்து அவரை பிடிக்க சுங்கத்துறை அதிகாரிகள் தூத்துக்குடி விரைந்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாநில அளவிளான யோகா போட்டியில் முதல் பரிசு வென்ற 2 வயதுடைய கீழக்கரை மாணவன் ..
மதுரையில் தென்னிந்திய யோகா வளர்ச்சி கழகம் நடத்திய மாநில அளவிலான யோகா போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 2 வயது சிறுவன் பிரணவ் பத்திற்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து காண்பித்து முதல் பரிசு பெற்றார் .இச்சிறுவன் ஒரு வயது முதலே தன் பெற்றோரால் யோகா சிறு சிறு பயிற்சிகளின் மூலம் வளர்க்கப்பட்டவன். பெரியவர்கள் செய்து காண்பிக்க யோசிக்கும் ஆசனங்களை இச்சிறுவன் சிறுவயதிலேயே விளையாட்டுத்தனமாக செய்து காண்பிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
மேலும் இச்சிறுவன் கடந்த வருடம் தன்னுடைய இத்தகு வியக்கத்தக்க திறமைக்காக முகவை ரெக்கார்ட்ஸ் மற்றும் வில் மெடல்ஸ் கிட்ஸ் ரெக்கார்ட்ஸ் இவற்றில் இடம்பிடித்த சாதனையாளன் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சிறுவனின் இத்தகைய யோகா திறமைக்காக கடந்த வாரம் கோவையில் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் சிறுவனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது கூடுதல் செய்தி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இரயில் பயணத்தில் தவறவிட்ட பணப்பையை துரிதமாக ஒப்படைத்த மதுரை ரயில்வே போலீசார்…
22.02.19 ந்தேதி வண்டி எண் – 12635 வைகை எக்ஸ்பிரஸில் D6 கோச் 101ல் சென்னையிலிருந்து மதுரை சோழவந்தானுக்கு பயணம் செய்து வந்த சரவணன்-43/19, த/பெ சுந்தரம், No 2/94 வடக்கு தெரு, தேனூர், மதுரை மாவட்டம் என்பவர் சோழவந்தானில் இறங்கி செல்லும் போது தான் கொண்டு வந்த மஞ்சள் நிற பையை மறந்து வைத்துவிட்டு இறங்கி விட்டார். அதனை வண்டியில் வந்த வண்டி பீட் தலைமைக் காவலர் 252 கிருஷ்ணன் என்பவர் எடுத்து பார்த்த போது அதில் சிவப்பு கலரில் பர்சும் அதில் பணம் 5200 ரூபாய் மற்றும் ஆதார் கார்டும் இருந்தது. பணம் மற்றும் ஆதார் அட்டையை விட்டு சென்ற மேற்படி நபருக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுக்க அவர் 22.02.19 ந்தேதி 23.30 மணிக்கு மதுரை இருப்புப்பாதை காவல் நிலையம் வந்து தக்க சான்று காட்டி அவரின் பையை பெற்று கொண்டார். இதனால் மதுரை ரயில்வே போலீசாரை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் தாராளமாகப் புழங்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள். மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் பொன்மேனி உள்ளிட்ட பகுதிகளில் டீக்கடைகளில் பிளாஸ்டிக் பொருள் டீ கொடுப்பதும், அதை பொதுமக்கள் வாங்குவதுமாக உள்ளது. இதற்கென அமைக்கப்பட்ட தனிப்படையினர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை காவல்துறையின் கெடுபிடியால் 19 பேர் கைது..
சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து கருப்பூர் பகுதியில் லாட்டரி சீட்டு விநியோகம் செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கருப்பூர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், விற்பனையில் ஈடுபட்ட அஸ்தம்பட்டி கண்ணன், சேட்டு, சலீம் , ரவி, சண்முகம், சீனிவாசன், ராஜேந்திரன், சிவக்குமார் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே அழுதுக்கொண்டிருந்த குழந்தையை மீட்டு பொதுமக்கள் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் திரு.குமார் உத்தரவின் பேரில் முதல் நிலை பெண் காவலர் திருமதி. கலைவாணி அந்த குழந்தையை தனது இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்துக்கொண்டு குழந்தை விரல் நீட்டிய இடத்திற்கெல்லாம் அழைத்து சென்றனர் அங்கு குழந்தையை காணாமல் தேடி தவித்து கொண்டியிருந்த பெற்றோரை அடையாளம் கண்டு காவல் நிலையம் அழைத்து வந்து காவல் ஆய்வாளர் முன்னிலையில் குழந்தையை ஒப்படைத்தனர். தங்களைத் தேடி வந்து ஒரு மணி நேரத்தில் குழந்தையை ஒப்படைத்த அன்னதானப்பட்டி போலீசாருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் பீடி சுற்றும் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சரோஜா டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதிய நிலையில் தற்போது டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார். 12 ஆம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளியில் படித்த இவர், அதன்பிறகு மழலையர் கல்வி கற்பித்தல் குறித்த பயிற்சி எடுத்தார். பின்னர் தற்காலிக ஆசிரியராக பள்ளியில் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி அதில் வெற்றி பெற்றுள்ளார். ஏழ்மையான சூழலில் இருந்ததால் தன் பணியில் நேர்மையாக இருப்பேன் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 23/02/2019 மற்றும் 24/02/2019 சிறப்பு முகாம்கள்..
தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் அட்டை சரிபார்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் நடத்துமாறு மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உத்தரவிட்டார்,அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கென்டையகவுண்டனூர் அருகே சவடமுத்து(எ) மொராஜ் (வயது 45) இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பூங்கொடி என்பவருக்கு சசிகலா, சர்மிளா என்ற இரு பெண்களும் இரண்டாவது மனைவி லட்சுமிக்கு வடிவேல் என்ற பையனும் உள்ளனர்.
இவர் நான்கு சக்கர வாகனங்களை வைத்து வாடகை தொழில் செய்து வருகிறார். மேலும் காமதேனு ரைஸ்மில் உள்ள இடத்தில் இவரது வாகனத்தை இரவு நேரங்களில் நிறுத்திவிட்டு உறங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அவருடைய நண்பர் ராமசாமி என்பவர் சென்று பார்த்தபோது மர்மமான முறையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயின் மட்டும் காணவில்லை என்ற தகவல் பின்னர் தகவறிந்து வேடசந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இறந்த சவடமுத்துவின் பிள்ளைகள் அவரது உடலை பார்த்து அழுதது அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரியாசனம் ஏற்றி சரியாசனம் செய்வது கல்வி: காவல் ஓய்வு அதிகாரி பேச்சு..
இராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி 14 ஆம் ஆண்டு விழா மற்றும் மழலையருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. திருச்சி ப்ரோவின்சியல் சுப்பீரியர் ஏஞ்சலோ ப்ரோவின்ஸ் டி. அந்தோணி ராஜ் தலைமை வகித்தார்.
மழலையர் 130 பேருக்கு பட்டம், கல்வியில் சிறந்த, விளையாட்டு, கலை போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு), தன்னம்பிக்கை பேச்சாளர் அ.கலியமூர்த்தி வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்களுக்கு ஒழுக்கமான கல்வியை கற்றுக் கொடுப்பவரே ஆசிரியர்கள் . கல்விப் பணி என்பது ஊதியத்திற்கான பணியல்ல. சமூக மாற்றத்திற்கான பணி. பலர் தூங்கிய நேரத்தில் விழித்து படித்த சிலர் தான் சாதனை மாணவர்களாக சமூகத்தில் வலம் வர முடிகிறது. நீட் தேர்வு, பொறியியல் நுழைவு தேர்வுகளில் தேசிய அளவில் முதல் மதிப்பெண் அள்ளிய கல்பனா குமாரி, அபினவ் கோயல் ஆகியோர் 9 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடியும் செல்போன் பயன்பாடு, டிவி., நிகழ்ச்சிகளை தவிர்த்ததால் சாதனை மகுடம் சூட்ட முடிந்தது என்றனர். செல்வந்தர்கள் ‘லட்சுமி’யால் ஏழைகள்’ சரஸ்வதி’ யால் ஆளுமை செய்கின்றனர். எக்குடியில் பிறந்தவரானாலும், அக்குடியில் பயின்றவரை சமூகம் உயர்ந்த இடத்தில் அரியாசனம் தந்து சரியாசனம் செய்ய வைக்கிறது. நற்பண்புகளே நம் செதுக்கும் உளி. முகநூல் நட்பால் அப்பெண்கள் ஏராளமானோர் ஏமாற்றப்படுகின்றனர், என்றார்.
பள்ளி தாளாளர் பி.சதானந்தம், முதல்வர் ஜெ.ரேமண்ட், பங்கு தந்தை அருள் ஆனந்த், சட்ட ஆலோசகர் அதிசய பாபு, பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதி வி.அழகர்சாமி மற்றும் மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தில்லையேந்தல் பஞ்சாயத்தின் மெத்தபோக்கு… பொதுமக்களை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோய்கள்..
கீழக்கரையை ஒட்டியருப்பது தில்லையேந்தல் பஞ்சாயத்து, இப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ப்ளாஸ்டிக் பொருட்கள் கலந்த கழிவுகளை பள்ளி மற்றும் கல்லூரி அருகிலேயே திறந்த வெளியில் எரித்து வருகிறார்கள்.
இது சம்பந்தமாக கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக சில வருடங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்த பொழுது, ஆட்கள் பற்றாகுறை என்ற காரணம் கூறப்பட்டது. தற்போது தேவையான பணியாட்கள் வந்த பின்பும் இதே நிலைதான் தொடர்கிறது. இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்களும், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாக நேரிடும். ஆகவே தில்லையேந்தல் பஞ்சாயத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய தனியார் அறக்கட்டளைகள்…
உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு பிகேஎம் அறக்கட்டளை, குருஜி அறக்கட்டளை மற்றும் குயின் மீரா சர்வதேச பள்ளி இணைந்து ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை வழங்கி திறந்து வைத்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பாப்பாபட்டி அரசு கள்ளர் தொடக்க பள்ளி. இந்த தொடக்க பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த தொடக்க பள்ளியில் பெரும்பாலும் கிராம புற மாணவர்கள் தான் படிக்கின்றனர். மாணவர்களின் நலன் கருதி உசிலம்பட்டி பிகேஎம் அறக்கட்டளை, குருஜி அறக்கட்டளை மற்றும் மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளி நிர்வாகத்தினர் இனைந்து ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்களை வாங்கி தந்தனர். பின்பு அந்த வகுப்பறையை திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்நிகழ்ச்சியில் கள்ளர் சீரமைப்புதுறை இனைஇயக்குநர் குமார் மற்றும் அறக்கட்டளையின் தலைவர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். மதுரையில் இன்று (22/02/2019) நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார்.
இராமநாதபுரத்தில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இன்று பிற்பகல் 1 மணியளவில் வந்தார். உசிலம்பட்டியில் இன்று மாலை நடைபெறும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்திருந்தார். அமித்ஷா வருவதை அறிந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் காத்திருந்து சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கும் தொகுதிகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
கீழை நியூஸுக்காக..
மதுரை நிருபர் கனகராஜ்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (22.02.19) மாலை 6 மணியளவில் மதுரை மாநகர் E1 புதூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வழங்கப்பட்ட 22 கேமிராக்களின் பதிவுகளை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., திறந்து வைத்தார்.
புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்காகவும், குற்றவாளிகள் மற்றும் அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காகவும், குற்றச்சம்பவத்தில் ஈடுபடுபவர்களை விரைவில் அடையாளம் காண்பதற்காகவும் கண்காணிப்பு கேமிராக்கள் புதூர் மூன்றுமாவடி சந்திப்பு முதல் புதூர் பேருந்து நிலையம் வரை 22 கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், அவற்றின் பதிவுகளை தொடர்ந்து கண்காணிக்க காவல் ஆளினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பும் மற்றும் முக்கிய தகவல்களை உடனுக்குடன் தருவதாகவும் தொடர்ந்து காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி குற்றமில்லா மாநகராக மதுரையை மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
செய்திகள்.வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பூக்களுடன் பாலித்தீன் பைகளை அபகரிக்கும் அதிகாரிகளுடன் விவசாயிகள் தள்ளுமுள்ளு..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தினந்தோறும் விவசாயிகள் குறிப்பாக அரளிப் பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சுமார் ஒரு கிலோ பிடிக்கக்கூடிய பூக்களை பாலிதீன் பைகளில் அடைத்து கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த பாலித்தீன் பைகளில் அடைப்பதன் மூலம் பூக்களை கண்ணில் பார்த்து வியாபாரிகள் விலை பேசி வாங்குவது வழக்கமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் முற்றிலுமாக பாலித்தின் பைகளையும் கூறி ஒரு உத்தரவை பிறப்பித்தது.
இதனை உடனடியாக அமுலுக்கு கொண்டு வந்த தமிழக அரசு அனைத்து அனைத்து ஊர்களிலும் பேரூராட்சிகளிலும் கிராமப்புறங்களிலும் கடுமையாக நடைமுறைப்படுத்த முற்றிலுமாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து பயன்பாட்டில் இருந்து பொதுமக்களை விலக்கி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக பனியன் நிறுவனங்கள் மற்றும் சிறு வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாலிதீன் பைகள் இருந்தால் உடனடியாக கண்டுபிடித்து அதற்குரிய அபராதம் விதித்து உழைத்து வருகிறார்கள். இதேபோன்று நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் நிலக்கோட்டை பேரூராட்சி அதிகாரிகள் பாலிதீன் பைகளை பூக்களை பாலிதீன் பைகளை பூக்களை நிரப்பி கொண்டு வந்திருப்பதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக சென்று பூ மார்க்கெட்டில் பூக்களை பூக்களுடன் பறிப்பதால் பூக்களை மீண்டும் அதிகாரிகளிடம் இருந்து பிடுங்குவதற்கு விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும், தள்ளுமுள்ளும், தகராறும், வாய்த்தகராறு, தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம்..
கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் சென்னையில் உள்ள TVS SUNDARAM AUTO COMPONENTS, CHENNAI மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் இறுதியாண்டு பயிலும் மின்னியல், மற்றும் இயந்திரவியல் மாணவ, மாணவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் அலாவுதீன் தலையுரையாற்றினார். கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ஜெ.கணேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்வில் கல்லூரியின் பல்வேறு துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரியின் துணை முதல்வர்கள் சேக்தாவூது மற்றும் இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை இ.மணி மற்றும் எம்.பிரகாஷ் ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் அமைப்பு மற்றும் உற்பத்தி செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறினர். மேலும் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு ஊதியம் மற்றம் சலுகைகளை விரிவாக கூறி நேர்முக தேர்வினை நடத்தினர். பின்னர் மின்னணுவியல் முதுநிலை விரிவுரையாளர் எஸ்.மரியதாஸ் நன்றி கூறினார்.
மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட 60கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஊதியம் ரூ.14,380/- மற்றும் உணவு, சீருடை வசதியுடன் வேலைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது. வளாக தேர்வுக்கான எல்லா ஏற்பாடுகளையும் கல்லூரியின் துணை முதல்வர் சேக்தாவூது மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
செய்தி:- கார்த்தி, கீழக்கரை
You must be logged in to post a comment.