Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கல்லூரி மாணவியின் உடல் முழுவதும் எரிந்த நிலையில் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு, பரமக்குடி அருகே பரபரப்பு ……

கல்லூரி மாணவியின் உடல் முழுவதும் எரிந்த நிலையில் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு, பரமக்குடி அருகே பரபரப்பு ……

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் , உத்தரகோசமங்கை போலீஸ் சரகம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி . இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி . இவர்களது 2 – வது மகள் மாலதி ( 20 ) ஆவார் .இவர் சென்னை தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் விரிவுரையாளர் படிப்பு படித்து முடித்துவிட்டு , எம் .ஏ . தமிழ் விரிவுரையாளருக்கு விண்ணப்பம் செய்து விட்டு , தற்போது தாயார் கலைச்செல்வியுடன் கிராமத்தில் உள்ள தங்களது வீட்டில் இருந்துள்ளார் .

இந்நிலையில் , கடந்த 29 . 06 . 18 – ந் தேதி வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த மாலதி திடீரென காணாது தாயார் கலைச்செல்வி பதறியடித்து தனது மகளை வீடுகளிலும் , மாணவி மாலதியின் தோழியர்கள் வீடுகளில் தேடி அலைந்து பார்த்து விட்டு உத்தரகோசமங்கை போலீஸ் நிலையத்தில் அவரது தாயார் கலைச்செல்வி  , எனது மகளை எல்.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருடைய மகன் சிவக்குமார் கடத்தி சென்றுள்ளார் என புகார் அளித்துள்ளார் .

புகார் அளிக்கச் சென்ற தாயார் மற்றும் குடும்பத்தினரை பணியில் இருந்த போலீஸார்கள் பெண் பிள்ளையை பெற்றால் மட்டும் போதுமா ? பொறுப்பாக வளர்க்கத் தெரியாதா ?என அதட்டலாக கேட்டதுடன் புகார் குறித்து எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதனிடையே , காணாமல் போன மகளை கண்டுபிடிக்க பெற்றோர்கள் , உறவினர்கள் அனைவரும் அனைத்துப் பகுதிகளிலும் தேடி அலைந்தும் எந்தவொரு முன்னேற்றமும் கிட்டவில்லை .

சம்பவ நாளான 13 .07. 18 . ந் தேதி வெள்ளிக்கிழமை காலை இரு வாரங்களுக்குப் பிறகு உத்தரகோசமங்கை பகுதியில் உள்ள மிளகாய் குடோன் பின்புறம் கிழக்கு பகுதியில் உள்ள கண்மாய்க்குள் உடல் முழுவதும் எரிந்த நிலையில் எலும்புக்கூடுகள் கிடப்பதாக அவ்வழியாகச் சென்றவர்கள் பேசியதால் போலீஸார்களுக்கு தகவல் கிட்டியுள்ளது .

போலீஸார்கள்  கடத்தி சென்றுள்ளதாக புகார் அளித்த கலைச்செல்வி யின் குடும்பத்தினர் பதறியடித்து ஓடிச் சென்று பார்த்த போது , தங்கள் மகள் அணிந்திருந்த துப்பட்டா மற்றும் வளையல்கள் அருகில் கிடந்தது கண்டு எரிந்து எலும்புக்கூடாக இருப்பது தங்களது மகள் தான் என உறுதி செய்தனர்

இச்சம்பவம் தகவலறிந்து , ராமநாதபுரம் மாவட்ட எஸ் . பி . ஓம் பிரகாஷ்மீனா , கீழக்கரை டி . எஸ் . பி . சுமன் , கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யபிரபா தலைமையில்  சப் – இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எலும்புக்கூடுகளை கைப்பற்றியதுடன் , அவரது இறப்பு குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டனர் .

இதனிடையே , இச்சம்பவம் நடைபெற்ற இடம் சத்திரக்குடி போலீஸ் நிலையத்திற்குள் உட்பட்டுள்ளதால் , இவ்வழக்கு சத்திரக்குடி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப் பட்டு வழக்கு சம்மந்தமாக தீவிரமான விசாரணையும் நடைபெற்று வருகிறது .இச்சம்பவம் அப்பகுதி மட்டுமல்லாது காட்டு தீ போல மாவட்டம் முழுவதும் பரவி அனைவரும் பரபரப்புடன் பேசி வருகின்றனர் .

              

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!