திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், தேசிய வாசிப்பு இயக்கம் இணைந்து நடத்திய புத்தகங்களோடு புத்தாண்டு 2ஆம் நாள் சிறப்பு நிகழ்ச்சி அரசு அருங்காட்சியக வளாகத்தில் அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்றது. வந்திருந்தவர்களை தேசிய வாசிப்பு இயக்க தலைவர் லயன்.சு. தம்பான் வரவேற்றார். நல்நூலகர் முனைவர். முத்துகிருஷ்ணன், வீரவநல்லூர் வாசகர் வட்டத் தலைவர் திருவருள் லத்திப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கு. அருட்செல்வி கலந்து கொண்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்திய ஸ்ரீராம நாட்டியாலயா மாணவிகளுக்கு பரிசு வழங்கி கருத்துரை வழங்கினார். மைய நூலக வாசகர் வட்ட தலைவர் அ. மரியசூசை சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து மைய நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியன் தலைமையில் மனதில் மாற்றத்தை தந்த நூல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கவிஞர் புன்னைச் செழியன், கவிஞர் சுப்பையா, கவிஞர் முத்துசாமி தியாகராஜன், நூலகர் அகிலன் முத்துக்குமார், சிவ. செல்வ மாரிமுத்து, மாணிக்க வாசகம், மேகலிங்கம், கோபால கிருஷ்ணன், பேரா. ஆறுமுகசெல்வி, பேரா. பாத்திமா, வழக்கறிஞர் மணிமாலா, ஆசிரியை திரிபுரசுந்தரி, கவிஞர். ராஜேந்திரன் ஆகியோர் கருத்தரங்கில் கருத்துரை வழங்கினார்கள். தொடர்ந்து ஸ்ரீராம நாட்டியாலயா குரு கயல்விழி தலைமையில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. கவிஞர் பிரபு, உலகநாதன் வயல்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.