14
சர்வதேச கடல்வாழ் உயிரின தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வனச்சரக பணியாளர்கள் 25 பேர் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பிரசார பேரணி சென்றனர்.
தனுஷ்கோடி வரை 45 கி.மீ., தூர விழிப்புணர்வு பேரணியின் போது, மன்னார் வளைகுடாவில் வாழும் கடல் ஆமை, கடற்பசு, கடற்குதிரை, கடல் அட்டை, திமிங்கலம், டால்பின், பவளப்பாறைகள், கடற்புல் உள்பட ஏராளமான அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.