மதுரையை அடுத்த நரசிங்கம், பாரதியார் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி முத்துப்பாண்டியம்மாள். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.தனது கணவர் தினமும் குடித்து விட்டு வருவதால் கணவரிடம் சண்டை போட்டுள்ளார் சில நேரங்களில் கணவர் அடித்த அடியால் அவள் வீட்டு வேலை பார்க்காமல் அப்படியே படுத்து தூங்கியுள்ளார்.
இதனால் தனது மனைவிக்கு பேய் தான் பிடித்திருக்கிறது என்று கூறி விஜயக்குமாரும் அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து அப்பன்திருப்பதி அருகேயுள்ள ஒரு சாமியாரிடம் அழைத்து சென்றனர். அப்பன் திருப்பதியை சேர்ந்த சீமை ராஜா மகன் செல்வம் இவர் இப்பகுதியில் ஒரு வாடகை வீட்டில் பல்வேறு சாமி படங்களை மாட்டி வைத்து கொண்டு தான் பேய் ஒட்டு வதாகவும் குறி சொல்வதாகவும் கூறியுள்ளார். தன் மீது சுருப்பசாமி வருவதாகவும் கூறியுள்ளார்.
அதனால் செவ்வாய், வெள்ளி ஆனால் இவரது வீட்டிற்கு குறி கேட்க கூட்டம் வருவது வழக்கமாம். அதே போல் தான் வெள்ளிக்கிழமை அன்று சாமியாரிடம் பேய் ஓட்ட முருகப் பாண்டியம்மாளை கூட்டிச் சென்றனர். அப்போது சாமியார் இவளுக்கு பேய் பிடித்திருக்கிறது இந்தப் பேயை ஓட்டி விட்டால் இவள் சரியாகி விடுவாள் என கூறி இரவு 7 மணியிலிருந்து 11 மணி வரை பூஜைகள் நடத்தி கோடாங்கி அடித்து அந்த பேயை விரட்டுவதாக கூறி சாட்டையால் அடித்துள்ளார்.
சாமியார் மட்டுமல்லாது சாமியாருக்கு துணைக்கு இருந்த பெண்ணும் சேர்ந்து கர்ப்பிணி என்று பாராமல் அடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவரது உச்சந்தலையிலிருந்து சில முடிகளை புடிங்கியுள்ளனர். வலியால் துடித்த முத்துப்பாண்டியம்மாளை ஆடைகளைக் கழற்ற சொல்லி சேலை பிடித்து இழுத்துள்ளார் சாமியார். உடனே அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி உள்ளார் முருகப் பாண்டியம்மாள்.
உடனே காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சாமியாரையும், முருகப் பாண்டியம்மாளின் கணவர் விஜயகுமாரையும், அவரின் நண்பர் சேவுகப் பாண்டி, சுப்பிரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
You must be logged in to post a comment.