தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை பிடிக்கச் சென்ற பொழுது ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவல்துறை சேர்ந்த ஒருவர் பலியானார் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார் இந்த சம்பவம் குறித்து
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கை கார்த்திக் என்ற இளைஞர் சமூகவலைதளத்தில் துரை முத்து என்ற ரவுடியை பிடிப்பதற்கு போலீசார் அவர்களுக்கு கொடுத்த சீருடை அணியாமல் சென்றதால் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் போலீசாருக்கு சீருடை எதற்காக கொடுக்கப்பட்டுள்ளது அதை அவர்கள் ஏன் அணியவில்லை என தெரியவில்லை இனிமேல் போலீசார் எங்கள் (தேவர்)சமுதாயத்தை சேர்ந்த ரவுடிகளை பிடிப்பதற்கு அச்சப்பட வேண்டும் துரை முத்து சாகவில்லை எங்களை போன்ற இளைஞர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளார் என வீடியோ பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் .வைர லாக பாரவி சர்சையாக பேசப்பட்டதை அடுத்து கீழராஜகுலராமன் போலீசார் அவரை பிடித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மதுரை சிறையில் அடைக்க கொண்டு சென்றனர். இந்த வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் இப்படி பேசுவது ரவுடிகளை ஊக்குவிப்பது போலீசாருக்கு எச்சரிக்கை விடுப்பதாக இருப்பதால் மற்ற சமுதாயத்தினரிடையே ஒரு பிரிவினையை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.