Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட கொந்தகையில் நடைபெறும் அகழாய்வில் மேலும் எலும்பு கூடுகள்..

திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட கொந்தகையில் நடைபெறும் அகழாய்வில் மேலும் எலும்பு கூடுகள்..

by ஆசிரியர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட கொந்தகையில் நடைபெற்று வரக்கூடிய அகழாய்வுப் பணிகளில் ஏற்கனவே இரண்டு குழந்தைகளின் எலும்பு கண்டறியப்பட்டன, இந்த நிலையில் தற்போது கூடுதலாக மூன்று குழந்தைகளுடைய எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழக தொல்லியல் துறை சார்பாக  கீழடி ,கொந்தகை, மணலூர் , அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகை யில் நடைபெற்ற வரக்கூடிய அகழாய்வுப் பணிகளில் ஏற்கனவே முதுமக்கள் தாழிகள் எலும்புக்கூடுகள் கிடைக்கப் பெற்ற நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இரண்டு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த நிலையில் அதே குழியில் தொடர்ந்து அகழாய்வுபணிகளை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியாளர்கள் தற்போது கூடுதலாக மூன்று குழந்தைகளுடைய எலும்புகளை கண்டறிந்துள்ளனர்.

முழுமையான ஆய்வுக்கு பிறகு எத்தனை ஆண்டுகள் பழமையான மனிதருடைய எலும்பு என்று தெரியவரும் அதேபோன்று ஆணா ?பெண்ணா? என்பது குறித்தும் மரபணு சோதனைக்கு பிறகே தெரியவரும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தகவல் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!