12
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்டப் பொருளாளர் விடுதலைச் சேகரண் தலைமையிலும் மாவட்டச் செய்தி தொடர்பாளர் சத்தியராசு வளவன் , இராமநாதபுரம் தொகுதிச் செயலாளர் அற்புதக்குமார் முன்னிலையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கீழக்கரை அடுத்துள்ள சின்னமாயாகுளம் கிராமத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அனுவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வின் போது முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ்குமார் கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பஞ்சநாதன், திருப்புல்லாணி ஒன்றியச் செயலாளர் ஷாஜகான் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஈசாக், பாஸ்கரன், ஜான் டெனிரோ, செல்வக்குமார், பார்த்திபன், ஜான் , விஜய் மற்றும் ஆனஸ்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸ் SKV முகம்மாது சுஐபு
You must be logged in to post a comment.