14
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள புல்லந்தை மற்றும் சின்னமாயாகுளம் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர்கனி, இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன், இராமநாதபுரம் தொகுதி தலைவர் மணிவண்ணன், இராமநாதபுரம் தொகுதி செயலாளர் குமார், திருவாடானை தொகுதி தலைவர் முகம்மது, திருவாடானை தொகுதி செயலாளர் லெனின் பிரபு,தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் வெங்குளம் ராஜு, தொகுதி இணை செயலாளர் மகேந்திரன் மேலும் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள், தொகுதி, நகர், ஒன்றிய, ஊராட்சி, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.