Home செய்திகள் ஆம்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மெத்தனம்.. 3 பேர் ரயிலில் அடிபட்டு மரணம்

ஆம்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மெத்தனம்.. 3 பேர் ரயிலில் அடிபட்டு மரணம்

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் இன்று 5-ம் தேதி காலை ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியை ஷூகம்பனி தொழிலாளி சங்கர் (45) அவரது அக்காதுத்திப்பட்டு பானுமதி (50) பேரன் சதீஷ் (11) ஆகிய 3 பேர் காலை சென்னை செல்வதற்காக முதல் பிளாட்பாரத்திலிருந்து அடுத்த பிளாட்பாரத்திற்கு ரயில் பாதையில் கிராஸ் செய்த போது சென்னையை நோக்கி சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்தில் 3 பேரும் பலியானார்கள்.

இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விபத்து நடந்த எதிரில் தான் ஆம்பூர் ரயில்வே பாதுகாப்பு படை (R P F) கிளை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஆர் பி எப்போலீசார் பயணிகளை ரயில் தண்டவாளத்தை கடக்க தடை செய்து இருந்தால் இந்த 3 உயிர் பலி ஆகி இருக்காது. பணியை ஒழுங்காக செய்யாத அந்த நேரத்தில் பணியில் இருந்த R PF மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஆம்பூர் ரயில் பயணிகளின் கோரிக்கை எழுப்புகிறார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!