ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 44-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஏ.சேக்தாவூது தலைமையில் முகமது சதக் அறக்கட்டளையின் தலைவர் முகமது யூசுப், செயலாளர் ஹாஜியாணி ஷர்மிளா, செயல் இயக்குனர் ஹமீது இப்ராஹிம், ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மின்னியல் துறையின் தலைவர் எஸ்.பி.நாகராஜன் வரவேர்ப்புரை வழங்கினார். இவ்விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், ராமநாதபுரம் ஸ்ரீ ரமணா கட்டட கட்டுமான தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் காந்தி , ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரான ராமையா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து கடந்த வருடம் அனைத்து துறைகளிலும் பாலிடெக்னிக் கல்லூரியின் செயல்பாடு, வளர்ச்சி மற்றும் வெற்றிகள் பற்றி எடுத்துரைத்து ஆண்டு அறிக்கையினை கல்லூரி பி.மருதாச்சலமூர்த்தி சமர்ப்பித்தார். இவ்விழாவில் கடந்த ஏப்ரல் 2023 மற்றும் அக்டோபர் 2023 வாரிய தேர்வுகளில் ஒவ்வொரு பருவத்திலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் , பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கும் , கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் விஷ்ணு மாநில அளவில் தரம் பெற்று 700 க்கு 696 மதிப்பெண்கள் மற்றும் நான்கு பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்தமைக்கும் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் மின்னணுவியல் துறை தலைவர் பி.பாலசுப்ரமணியன் நன்றிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர் சிறப்பாக செய்திருந்தனர்.
Daily Archives
March 9, 2024
முடிவுக்கு வந்தது இழுபறி; திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு..
by Askar
written by Askar
தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு முடிந்துவிட்டன. இன்று மாலையில் காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து உள்ளனர். அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.கே.சி.வேணுகோபால், அஜோய்குமார், முகுல் வாஸ்னிக், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வந்தனர்.தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அறிவாலயம் வந்துள்ளனர்.இதற்கிடையில் காங்கிரஸ் கேட்கும் மொத்த தொகுதிகள் குறித்தும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது, மக்கள் நீதி மய்யத்திற்கு எந்த தொகுதி ஒதுக்குவது, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதித்தார்.இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாட்டில் எங்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் வாக்கு வங்கி அதிகம்!- ஜி.கே.வாசன் நம்பிக்கை..
by Askar
written by Askar
தமிழ்நாட்டில் எங்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் வாக்கு வங்கி அதிகம் இருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குழு தொடர்பான தேர்தல் குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தமாகா தலைவர் ஜிகே வாசன் பங்கேற்றார் ஆலோசனை கூட்டம் நிறைவுற்ற பின்னர், ஜிகே வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொகுதி பங்கீடு குழுவின் கூட்டமானது இங்கே நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கடந்த நாட்களில விநியோகிக்கப்பட்ட வேட்பாளர் விண்ணப்பங்கள் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதைத் தொகுதிவாரியாக பிடித்து வேட்பாளரின் சாதகம் பாதகம் தொகுதியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு, தொகுதியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியுடன் கலந்து ஆலோசித்து தொகுதிகள் குறித்து முடிவெடுக்கப்படும்.
கடந்த நான்கு நாட்களில் 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. 35 நாடாளுமன்ற தொகுதிக்கு விண்ணப்பங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் எந்த தொகுதியில் நாம் போட்டியிடுகிறோம் என்பது குறித்து கூட்டணியின் தலைமையான பாஜகவிடம் பேசி முடிவு செய்யப்படும்.
சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைத்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது இதற்கு காரணம் போதைப்பொருள் இதைப்பற்றி தமிழ்நாடு அரசு கண்டு கொள்ளவே இல்லை எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு கேட்பதாகவே இல்லை.
தமிழ்நாட்டில் எங்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது எந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பது குறித்து கூட்டணி தலைமையே முடிவு செய்யும் எல்லா மண்டலத்திலும் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகளில் என் பெயரில் கூட ஐந்து விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.
சாதி, மொழி, இனம், மதம் இவை அப்பாற்பட்டு வேட்பாளரின் வெற்றி, தொகுதியின் பலம் இவை பொறுத்து வேட்பாளர் தேர்வு இருக்கும். சரத்குமாரின் இயக்கம் மரியாதைக்குரிய இயக்கம் அவரின் வரவு நல்வரவு வெற்றி கூட்டணி. கூட்டணி தொடர்பாக பாஜகவிடம் நாங்கள் எந்த விதமான நிபந்தனையும் விதிக்கவில்லை தமிழ்நாட்டின் பெரிய கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கருதுகிறது. டாக்டர் ராமதாஸ் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி மட்டுமல்லாமல், இந்தியாவின் மூத்த தலைவராகவும் அவர் இருக்கிறார் அவருக்கான முக்கியத்துவம் இருக்கும்.
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது நாளுக்கு நாள் எங்களுக்கு ஆதரவு பெருகி கொண்டிருக்கிறது மூன்றாவது முறையாக பிரதமர் மோடியின் வெற்றியை நாம் கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
128 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..
by Askar
written by Askar
128 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..
திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் மான்புறு மங்கை விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆசிரியர் பயிற்சி முதல்வர் முனைவர் ஜெயமேரி தலைமை தாங்கினார். முனைவர்.ஃபிரியா வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட இளைஞர் நீதிக் குழுமம் உறுப்பினர் வழ. ஆரோக்கிய மேரி.எம்.எல். கலந்து கொண்டு சமூகத்தில் பெண்களின் பங்கு பற்றி சிறப்புரையாற்றினார்.
விழாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக சமூகத்தில் பணியாற்றிய நெல்லை இளைஞர் நீதிக் குழுமம் உறுப்பினர் வழ.ஆரோக்கியமேரி, நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, செல்வி. ரர்ஜர் பீவி ஆகியோர்க்கு மான்புறு மங்கை விருதை முனைவர் ஜெயமேரி. நறுமுகை நற்றமிழ்ச் சங்கம் கௌரவத் தலைவர் லயன் தம்பான் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தனர்.
தொடர்ந்து பெண்களின் முன்னேன்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது தன்னம்பிக்கையே. சுற்றமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் மாணவிகள், பேராசிரியர்கள்,அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் முனைவர் அனுசுயா நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உடல்களை தேடும் ஆரோக்கியம்; ரமலான் ஒரு ஆன்மீக பயிற்சி களம்! அழகான ஆலோசனைகள் வழங்கும், கவிஞர் கப்ளிசேட்..
by syed abdulla
written by syed abdulla
ரமலான் ஆன்மாவை வலுப்படுத்துகிறது.
கட்டுப்பாட்டுடன் வாழ்க்கையை போதிக்கிறது.
ரமலான் ஒரு ஆன்மீக பயிற்சிகளம்.
ரமலான் வழங்கும் ஆரோக்கியங்கள்
நம்மை ஆச்சரியப்
படுத்துகிறது.
நாம்தான் கண்டு கொள்வதே இல்லை.
சஹர் உணவை முடிந்தவரை பிற்படுத்தியும்,
நோன்பு திறப்பதை முடிந்தவரை முற்படுத்தியும்,
இஸ்லாமிய வழிகாட்டல் நமக்கு சொல்லித் தருகிறது.
இன்றைய மருத்துவ உலகம் அதையே வழிமொழிகிறது.
சூரிய உதயத்திற்கு நெருக்கமாக உண்பதையும்,
சூரியன் மறைந்தவுடன்
உண்பதையும்
(இஃப்தார் நேரம்) ஆரோக்கியம் என்கிறது மருத்துவ உலகம்.
நமது சஹர் உணவாக
Protein அதிகம் இருக்கிற உணவுகள்
(முட்டை, பால்)
நார்ச்சத்து அதிகமுள்ள vegetables
மற்றும் நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள்
நீர் இவற்றை சஹர் உணவாக உண்ணுங்கள்.
இனிப்புகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
ஏறக்குறைய 13-14 மணி நீண்ட நேரம் நமது உணவுப் பாதை
முழு ஓய்வு கொள்கிறது.
இதனால் உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது.
நமது உடலில் தேவையான புதிய செல்கள் உருவாகி
நமது உடலை புதிதாக கட்டமைக்கிறது.
நோன்பு திறக்கும்போது எண்ணெய் பலகாரங்களை அறவே ஒதுக்கி விடுங்கள்.
நல்ல பழங்களை கொண்டு நோன்பு திறங்கள்.
எண்ணெயில் பொறிக்காத Non veg சாப்பிடுங்கள்.
Grilled (சுட்ட) Non veg சாப்பிடுங்கள்.
Don’t eat fried items.
பொறிக்கப்பட்ட
எண்ணையில் மூழ்கடிக்கப்பட்ட பொருள்களை ( Fried)
தவிர்த்து விடுங்கள்.
சிறிதளவு சோறு,
ரொட்டி என எடுத்துக்
கொள்ளுங்கள்.
அதுவே இரவு உணவாக முடியட்டும்.
இரவில் படுக்கும் போது பால் குடித்து அமைதியாக இருக்கும் இன்சுலினை தூண்டாதீர்கள்.
Low Carb High protein
உணவுகள் வயிற்றில் கொழுப்புகள் சேராமல் உடல் பருமனாகாமல்
தொப்பையில்லாமல்
காப்பாற்றுகிறது.
ரமலானில் இதுபோன்ற உணவுகளை நல்ல இடைவெளிகளில்
சாப்பிடும்போது
உடல் ஆரோக்கியமாகிறது.
செல்கள் தன்னை புதுப்பித்துக் கொள்வதால் Cancer
மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளால் ஏற்படும் நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
Ramadan is for fasting
Ramadan is not for feasting.
ரமலானை ஆன்மீக விழா நாட்களாக நினைக்காமல்
வகைவகையான உணவுத் திருவிழா
நாட்களாக நமக்குள்
விதைத்து கொண்டோம்.
ரமலான் என்றாலே
வகைவகையான
உணவுகள்,
வகைவகையான இனிப்புகள்
என்று ஏற்படுத்தி கொண்ட புரிதல்களால்,
அய்சாம்மா…இந்த ரமலானில பச்சி, போண்டா வேண்டாம்..
உடம்புக்கு கெடுதல்னு சொல்றாங்க…
அதனால வேணாம் என ரஹீம்மாமு சொல்ல…
ஏங்க… ஏதாவது ஒன்னை ஏதாவது ஒரு டாக்டர் சொல்லிக்கிட்டே இருப்பாரு…
டப்பா full லா பச்சி மாவை என்ன செய்ய என மொம்மானி புலம்ப,
பக்கத்தூட்டு அலமேலு அம்மாவுக்கு கொடுத்துரு..
அப்புறம் சாப்பட்டுபோட்டு
நெஞ்சு எறியுது..
வயிறு எறியுன்னு
சொல்லக்
கூடாதுன்னு மாமு சொல்ல..
பச்சி மாவு பக்கத்து வீட்டுக்கு பயணமானது.
இந்த வருச நம்ம உணவு முறைய கடை பிடிச்ச அய்சாதாய் மொம்மானிகிட்ட
Review கேட்டுக்கலாம்.
ரமலான் பசித்திருத்தலை அதன் ஆன்மீக ஆரோக்கிய நன்மைகளை
நமக்கு புரியவைப்பதும்,
மனதை கட்டுப்பாடுகளால் வலுவாக்குவதும்
நமக்கான வரம்.
நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்
அவர்களின் உணவு
பேரீத்தபழமும்
ஜம்ஜம் தண்ணீருமாக
இருந்தது.
அந்த எளிய உணவே
மனித சமூகத்திற்கான பாடம்.
உண்ணுங்கள்
பருகுங்கள்
வீண்விரயம் செய்யாதீர்கள்
என்ற திருமறையின்
வரிகள் நமக்குள்
ஏதாவது மாற்றம் நிகழ்த்த வேண்டும்.
சாப்பாட்டு மேசையில்
பரவிக்கிடக்கும்
சிதறிக்கிடக்கும்
உணவுகளை விட
எளிய உணவுகள்
ஆன்மாவையும்
உடலையும் வலுவாக்கும்.
உணவுமுறைகள்
சரியாக இருந்தால்
Hormone கலாட்டாக்கள்
செய்யாமல் Insulin போன்ற Hormone கள்
ஓய்வுகொள்ளும்
போது உடல் மட்டுமல்ல
மனமும் ஆரோக்கிய
மடைகிறது.
இந்த ரமலானில்
இதுபோன்ற உணவுகளை
முயற்சியுங்கள்.
உடலாலும்
உள்ளத்தாலும்
நீங்கள் ஆசீர்வதிக்கப்
படுவீர்கள்…!
கவிஞர், கப்ளிசேட்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் உலக மகளிர் தின விழா; முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பங்கேற்று சிறப்புரை..
written by Abubakker Sithik
ஆண்கள் நேரத்துக்கு தகுந்த மாதிரி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறி கொள்வார்கள். பெண்கள் அப்படி மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என மதுரையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் ஆர்பி. உதயகுமார் பேச்சு
மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள யூனியன் கிளப் கூட்டரங்கில் வைத்து உலக மகளிர் தின விழா பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், சரவணா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை சேர்மன் மருத்துவர். சரவணன், ஆடிட்டர் சேதுமாதவா, தொழிலதிபர் சூரஜ் சுந்தர சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மருத்துவத்துறை, கலைத்துறை, எழுத்துத் துறை, இப்படி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிருக்கு ஸ்த்ரி ரத்னா விருது வழங்கி கெளரவ படுத்தினர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயயகுமார் பெண்களை வாழ்த்தி பேசும் போது ஆண்கள் விருது வாங்கும் போது வீட்டில் உள்ள பெண்கள் கீழே அமர்ந்து பார்த்தோம். இன்று அவர்களுக்கு விருது வழங்கி கெளரவ படுத்துவதை கீழே அமர்ந்து பார்க்கிறோம் என்றார். சர்வதேச மகளிர் தினம் இன்று ஜனாதிபதியாக பெண் ஒருவர் இருக்கிறார். மதுரையில் மீனாட்சி ஆட்சி புரிகிறார். முன்பெல்லாம் கணவருடைய பெயரை சொல்வதென்றால் அருகில் உள்ளவர்களை அழைத்து பெயரை சொல்லும் படி கூறிய காலம் மாறி இன்று
பெண்கள் ராக்கெட் ஏறி செல்கிறார்கள். இந்த மாற்றத்துக்கு காரணம் இது போன்ற விழாவை நடத்தி அமுக்கி வைக்கப்பட்ட, புதைத்து வைக்கப்பட்ட பெண்களின் திறமையை உலகத்திற்கு அடையாளம் காணும் விதமாக அன்பின் வடிவமாக இருக்கும் பெண்களின் பெருமையை உலகளாவிய சர்வதேச அளவில் போற்றி பாராட்டப்படுவதால் தான். இந்த காலம் மாற்றத்திற்கு காரணம் பெண்களால் தான் இந்த உலகம் இயங்கும் என இந்த நாடு சொல்கிறது. இந்த பாராட்டு ஆசீர்வாதம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. மன்னிக்கும் குணம் பெண்களுக்கு தான் அதிகம் உள்ளது. அதனால் தான் பெண்களை கருணையின் வடிவம் என்கிறார்கள்.
தலைமுறையை உருவாக்க கூடிய பொறுப்பு 10 மாதம் குழந்தையை சுமக்கும் அந்த தெய்வீக சுமையை பெண்களுக்கு கடவுள் ஏன் கொடுத்திருக்கிறார். ஆண்களுக்கு பொறுமை இல்லை. அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி பொறுமை நிதானம் கடமையும் பெண்களுக்கு இருக்கிற காரணத்தினால் தான் பெண்களுக்கு கடவுள் அந்த தெய்வீக சுமையை கொடுத்திருக்கிறார். பெண் குழந்தை பிறந்தால் சுமை என்ற காலம் மாறியதற்கு காரணம் யார் என்றால் ஜெயலலிதா தான். பெண்களுக்காகவே சிந்தித்து சிந்தித்து எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். ஆண்கள் நேரத்துக்கு தகுந்த மாதிரி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறி கொள்வார்கள். பெண்கள் அப்படி மாற்றிக்கொள்ள மாட்டார்கள். எத்தனை கொடுமைகள், சோதனைகள், துன்பங்கள் , சுமைகள் சவால்கள் துயரங்கள் கண்ணீர் வந்தாலும் தன்னுடைய கருணை உள்ளம் மாறாதவர்கள் மகளிர் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 49 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை,
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 அதிகரிப்பு.
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 49,200 ரூபாய்க்கு விற்பனை.
கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,150க்கு தங்கம் விற்பனை.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களிடம் கடந்த 2000-ஆம் ஆண்டில் “ஸ்த்ரிசக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அவர்கள். அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.
இந்த செய்தியினை கேள்விப்பட்ட மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார்.
இதன்படி பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்குப் புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல்.!? முடிவுக்கு வருகிறதா கூட்டணி இழுபறி..!?
by Askar
written by Askar
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் நீண்ட இழுபறிக்கு பிறகு இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளும் புதுவை ஒரு தொகுதியும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.அதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதி சேர்த்து 12 தொகுதிகள் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய்குமார், முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வ பெருந்தகை ஆகியோர் கடந்த மாதம் அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று பேசினார்கள். அத்துடன் காங்கிரஸ் விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்தார்கள்.ஆனால் தி.மு.க. தரப்பில் 5 பிளஸ் 1 என்று கூறப்பட்டது. இது தொடர்பாக டெல்லி தலைவர்களுடன் தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்.பேச்சுவார்த்தை முழுவதும் டெல்லி தலைவர்களுடனேயே தொடர்ந்தது. தி.மு.க. தரப்பில் ஒரு கட்டத்தில் 6 பிளஸ் 1 என்று முடிவாக சொல்லியதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.வடமாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்குவதில் இழுத்து பிடித்தது போல் தமிழகத்திலும் சிக்கல் ஏற்பட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தரமுடியாது என்று தி.மு.க. பிடிவாதம் காட்டியது. அதே போல் 12-ல் இருந்து குறைவாக சம்மதிக்கப் போவதில்லை என்று காங்கிரசும் பிடிவாதம் காட்டியது.இதனால் உடன்பாடு காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. வரட்டும் பார்க்கலாம் என்று இரு தரப்பும் கொஞ்ச நாட்கள் விட்டு பிடித்தன.இதற்கிடையில் 3 தொகுதிகளுக்காக முரண்டு பிடித்து வந்த விடுதலை சிறுத்தைகளுக்கு கடைசியில் 2 தொகுதிகள் வழங்கப்பட்டது.இரண்டு தொகுதிகளுக்காக மல்லு கட்டிய வைகோவும் ஒரு தொகுதியை பெற்றுக் கொண்டு அமைதியாகி விட்டார்.கூட்டணியில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சிகளுக்கும் கடந்த தேர்தலில் ஒதுக்கிய எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கியதால் கூட்டணி பங்கீடு சுமூகமாக முடிந்தது.அடுத்து காங்கிரஸ்தான் என்ற நிலையில் தி.மு.க. தலைவர்கள் நேற்று டெல்லி காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது எல்லா கட்சிகளுக்கும் பழைய எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்து விட்டோம். எனவே நீங்களும் கூடுதல் தொகுதி வேண்டும் என்ற எண்ணத்தை கை விடுங்கள். பழைய எண்ணிக்கையில் அதாவது 9 பிளஸ் 1 தர சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.தொகுதி உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இன்று மாலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதற்காக இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், அஜய்குமார் ஆகியோர் சென்னை வருகிறார்கள்.விமான நிலையத்தில் இருந்து நேராக அறிவாலயம் செல்கிறார்கள். அவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடுகிறார்கள்.இந்த உடன்பாட்டின் போது எந்தெந்த தொகுதிகள் என்பதும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற திருச்சி தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்குவதாக கூறப்படுகிறது.அதே போல திமு.க. தமிழகம் முழுவதும் கள ஆய்வு நடத்தியதில் சில தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமாக இல்லை என்றும் அதனால் அந்த தொகுதியை மாற்றி கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி கிருஷ்ணகிரி, ஆரணி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. தேனிக்கு பதிலாக மயிலாடுதுறை வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.தலைநகர் சென்னையிலும் ஒரு தொகுதி வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. அதற்காக தென்சென்னை தொகுதியை கேட்கிறது. இது தி.மு.க. கைவசம் இருக்கும் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய கொள்கையின் கீழ் மின்னஞ்சலுக்கு (Gmail) புதிய கட்டுப்பாடுகள்; கூகுள் நிறுவனம் அதிரடி..
by Askar
written by Askar
கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய கொள்கையின் கீழ் மின்னஞ்சலுக்கு (Gmail) புதிய கட்டுப்பாடுகள் வர இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வர இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் மூலம் மொத்தமாக 5,000 மின்னஞ்சல்களுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.
யூடியூப் (YouTube), கூகுள் குரோம் (Google Chrome), கூகுள் மேப் (Google Maps) போன்ற கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஆப்கள் மட்டுமல்லாமல், அடையாள அட்டை ,வங்கி கணக்கு போன்றவற்றுக்கும் மின்னஞ்சல் முக்கியமாக தேவைப்படுகிறது.
இதனால், ஜிமெயில் மின்னஞ்சல் பயனர்களின் (Gmail Users) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், அதுதொடர்பான கட்டுப்பாடுகளும் கூகுள் நிறுவனத்தால் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஸ்பேம் மின்னஞ்சல்களுக்கே (Spam Email) இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்து மின்னஞ்சல் பயனர்களுக்கும் பொருந்தாது. ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 5,000 மின்னஞ்சல்களை அனுப்பும் நபர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும்.
இந்த மொத்த அனுப்புநர்கள் (Bulk Senders)அவர்களிடமிருந்து மின்னஞ்சல்களை பெற விரும்பும் பயனர்களுக்கு மட்டுமே அவற்றை அனுப்ப வேண்டும். அப்படி இல்லை என்றால், அந்த மின்னஞ்சல்கள் தானகவே நிராகரிக்கப்பட்டுவிடும்.
இதனால், தனிப்பட்ட பயனர்களுக்கு அவசியமில்லாமல், வரும் ஸ்பேம் மின்னஞ்சல்கள் படிப்படியாக குறைந்து விடும். முன்னதாக, ஸ்பேம் மின்னஞ்சல்கள் மீதான புகார்களின் அடிப்படையில் மட்டுமே, கூகுள் நிறுவனம் அவற்றின் மீது நடவடிக்கையை எடுத்து வந்தது.
புதிய கட்டுப்பாடுகள்
ஆனால், இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் பயனர்கள் புகார் அளிக்கவில்லை என்றாலும், ஸ்பேம் மின்னஞ்சல்கள் தானாகவே நிராகரிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், வணிக மற்றும் விளம்பரங்களுக்காக மின்னஞ்சல்களை அனுப்புவோர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டுப்பாடுகள் வரும் ஜூன் மாதத்தில் இருந்து அவர்களுக்கு நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் அனுப்பும், மின்னஞ்சல்களில் ஒன் – கிளிக் அன்சப்ஸ்கிரைப் பட்டன் (One-click Unsubscribe Button) இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த பட்டன் மின்னஞ்சலின் உடல் (Body)பக்கத்தில் பயனர்களுக்கு நன்றாக தெரியும்படி இடம்பெற வேண்டும்.
இந்த பட்டனை பயனர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த அனுப்பநரிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களை விரும்பவில்லை என்றால், அன்சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம். அதன்பிறகு அவர்களிடம் இருந்து எந்த ஸ்பேம் மின்னஞ்சல்களும் பயனர்களுக்கு வராது.
இப்படி பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் 2024ஆம் ஆண்டில் வர இருக்கின்றன. கூகுளின் இந்த ஜிமெயில் சேவையை 180 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதால், அதுதொடர்பான கட்டுப்பாடுகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் நடந்த மகளிர் தின விழா; பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்திட விழிப்புணர்வு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் நடந்த மகளிர் தின விழா; பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்திட விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டம், கொடிகுறிச்சி, USP தனியார் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மகளிர் தின விழா (08.03.2024) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் கை அச்சு விழிப்புணர்வு மற்றும் மகளிர் லோகோவை தத்ரூபமாக நிறுவப்பட்டு, மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தென்காசி மாவட்ட முதல் நிலை பெண் அலுவலர்களுக்கு தென்காசி தாரகை பெண்கள் விருதும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு விருதுகளையும் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மார்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற்ற உணவுத் திருவிழா, பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், தூய்மை பணியாளர்களுக்கான போட்டிகள் உள்ளிட்டவைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் விருதுகள் வழங்கி கெளரவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின பெண்கள் முன்னேற்றத்திற்காக புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் சுய தவிக் குழுக்கள், இலவச பேருந்து பயணம், உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கல்லூரி மாணவிகள் ஜனநாயக கடமையாற்றி தங்களது வாக்குரிமையை செலுத்த வேண்டும். மேலும் தமிழக அரசால் பெண்கள் முன்னேற்றத்திற்கு செயல்படுத்தப்படும் அனைத்து பெண்களும் தங்களது இலக்கை நிர்ணயித்து விடாமுயற்சியுடன் முயன்று பல்வேறு நிலைகளை அடைந்திட வாழ்த்துகிறேன் என அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்களை கூறினார்.
தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கவும், பெண்கள் முன்னேற்றத்திற்காக உறுதுணையாக இருக்கும் வகையில் கை அச்சு இயக்க விழிப்புணர்வை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சமூக நல அலுவலர் செல்வி மதிவதனா ஆகியோர் அச்சுக்களை வைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பெண்களுக்கான அடையாள லோகோவை தத்ரூபமாக நிறுவப்பட்ட லோகோவுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கல்லூரி மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார். மேலும் பெண்கள் தினத்தினை முன்னிட்டு கேக்குகள் வெட்டப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுடன் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்துறை) கனகம்மாள், திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்) ஜோஸ்பின் சகாய பிரமிளா, மாரியம்மாள் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், ஜெயபாரதி மாலதி துணை இயக்குநர்.(தோட்டக் கலைத்துறை), பத்மாவதி மற்றும் மாவட்ட அதிகார மாயா பணியாளர்கள், சகி ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள் மற்றும் USP கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -9
( கி.பி.1299-1922)
அன்றைய வாடிகன்நகரில் இருந்த கிறிஸ்தவர்களின் மதத்தலைவரான
போப் ஐந்தாவது அர்பன் அவர்களிடம்
உதவி கேட்க ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்தன.
போப்பிடம் ஆலோசனையையும்,
உதவிகளையும், பால்கன் நாடுகளின் அரசர்கள் கேட்டனர்.
போப் ஐரோப்பிய நாடுகளின் எல்லா மன்னர்களும்
ஒன்றிணைந்து உஸ்மானிய படைகளை எதிர்க்க கடிதம் எழுதினார்.
சிலுவைப்போரை துவக்க கடிதம் எழுதினார்.
இருப்பினும் உஸ்மானிய படைகளின் அதிவேக பரவல்களை,
முன்னேற்றங்களை,
பால்கன் படைகளால் தடுக்க முடியவில்லை.
பல நாடுகளை வெற்றிகொண்ட
உஸ்மானிய படைகள்
பால்கன் நாடுகளை
உஸ்மானிய அரசிற்கு கப்பம் கட்ட பணித்தன.
உஸ்மானிய அரசின் நிலப்பரப்பு உர்கான் ஆட்சியில் இருந்ததைவிட
முராத்தின் ஆட்சியில் ஐந்து மடங்கு அதிகமாகி இருந்தது.
முராத் இவ்வளவு விரிந்த நிலப்பரப்பின் பேரரசராக இருந்தாலும்,
அரண்மனைகள்
போன்ற பெரிய அரசமாளிகைகள் இருந்தாலும்,
முராத் அவர்களின் வாழ்க்கை முறை மிக எளிமையாக இருந்தது.
போரில் தனக்கு கிடைத்த செல்வங்களை ஏழைகளுக்கு பிரித்து வழங்கினார்.
முராத் அவர்களின் மகன் சாருஜி பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார்.
தோல்வியடைந்த பால்கன் அரசர்கள்
சாருஜியை தந்தை முராத்திற்கு எதிராக தூண்டினார்கள்.
உங்கள் தந்தையைவிட
நாட்டை ஆள உங்களுக்கு தகுதி இருக்கிறது.ஆகவே தனியாக படை திரட்டி உங்கள் தந்தையை கொன்று அரசை கைப்பற்றுங்கள்.
பின்புலமாக நாங்கள்
உதவி செய்கிறோம் என்று சாருஜிக்கு ஆசையை தூண்டிவிட,
சாருஜி தனி படைப்பிரிவு ஒன்றை உருவாக்கினார்.
இதனையறிந்த மன்னர் முராத் நேரடியாக சிறுபடையுடன் வந்தபோது சாருஜியுடன் இருந்த வீரர்கள் மன்னரை
நேரடியாக பார்த்ததும்
மன்னிப்பு கேட்டு
மன்னரோடு இணைந்து கொண்டார்கள்.
சாருஜி தனிமைப்
படுத்தப்பட்டார்.
உஸ்மானிய சாம்ராஜ்யத்தில்
குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக
தனது மகன் என்றும் பாராமல் சாருஜிக்கு
கடுமையான தண்டனை அளிக்கப்பட்டது.
பழுக்கக் காய்ச்சிய
இரும்புக்கம்பிகளை
இரண்டு கண்களிலும்
சொருகி இரண்டு கண்களும் குருடாக்கப்பட்டது.
துருக்கியின் காண்ஸ்டாண்டி நோபிள் மன்னர்தான் இந்த சதியை தூண்டினார் என்பதை அறிந்த மன்னர் முராத் அதன் மீது படையெடுக்க ஆயத்தமானார்.
அதனை அறிந்து கொண்ட காண்ஸ்டாண்டி
நோபுள் மன்னர் தனது மகன் தான் சதியை தூண்டினார் என்று குற்றம் சாட்டி தனது மகனின் இரண்டு கண்களையும் குருடாக்கினார்.
இதனால் சமாதானமடைந்த மன்னர் முராத் காண்ஸ்டாண்டி
நோபுள் படையெடுப்பை
நிறுத்தி வைத்தார்.
முராத் பல ஐரோப்பிய இளவரசிகளை திருமணம் செய்து கொண்டார்.
முராத்தின் ஆட்சி நிம்மதியாகவும்
அமைதியாகவும் இருந்தது.
ஆகவே மக்கள் முராத்தின் ஆட்சியை மிகவும் நேசித்தார்கள்.
பிற நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களும்,
யூதர்களும், முராத்தின் ஆட்சியை நேசித்தார்கள்.
ஏராளமான யூதர்கள்
உஸ்மானிய அரசின்
கட்டுப்பாட்டில் உள்ள
பகுதிகளில் கொத்து கொத்தாக குடியேறினர்.
அதற்கான காரணம் என்ன?
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களை எட்டி உதைத்த காவல் அதிகாரி!-உடனடியாக நடவடிக்கை எடுத்த டெல்லி காவல்துறை..
by Askar
written by Askar
வடக்கு டெல்லியில் சாலையோரம் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் ஆண்கள் இருவரை உதைத்து, தாக்கிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை டெல்லி காவல்துறை பணியிடைநீக்கம் செய்துள்ளது.
தொழுகையில் ஈடுபட்டிருந்த இருவரை அந்த அதிகாரி தாக்குவதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது. இரண்டாவது நபரைஅந்த அதிகாரி தலையில் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் தலையிட்டு அவரைத் தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இண்டர்லோக் மெட்ரோ நிலையத்துக்கு அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தொழுகையாளிகளால் அங்குள்ள பள்ளிவாசல் நிரம்பிவிட்டதால் சில ஆண்கள் வெளியே தொழுததாக சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த அதிகாரியின் மூர்க்கத்தனமான செயலால் கோபமடைந்த மக்கள், சாலையை வழிமறித்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அப்பகுதியில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வடக்கு டெல்லி காவல்துறைத் துணை ஆணையர் எம்.கே.மீனா வெளியிட்ட அறிக்கையில், “காணொளியில் காணப்பட்ட காவல்துறை அதிகாரி உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று கூறினார்.
இச்சம்பவம் அவமானமிக்கது என டெல்லி காங்கிரஸ் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.