ஆர்எஸ் மங்கலம் பகுதிகளில் பெய்த மழை காரணமாக பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் தடைபட்டது…மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு தொடர் முயற்சியினால் மின்தடையை சரி செய்து கொடுத்த ஆர்எஸ் மங்கலம் உதவி மின் பொறியாளர் , போர்மேன்கள், வயர்மேன்கள் மற்றும்மின்வாரிய ஊழியர்கள்அனைவருக்கும் ஆர்எஸ் மங்கலம் பொதுமக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்தனா்.
Category:
செய்திகள்
காவல் துறையினருக்கு முக கவசம் மற்றும் கை கழுவும் திரவம் கீழக்கரை மருந்து வணிகர் சங்கம் சார்பாக வழங்கல் …
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மருந்து வணிகர் சங்கம் சார்பாக கீழக்கரை காவல் துறைக்கு தேவையான முககவசங்கள் மற்றும் கை கழுவும் திரவம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் நகர் மருத்துவ சங்க தலைவர் சுந்தரம் , கௌரவ தலைவர் அகமது மைதீன், செயலாளர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் பங்கேற்று இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலையில் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி பேருந்து நிலைய பகுதியில் கொரோனா முழு ஊரடங்கால் உணவின்றி தவித்த ஆதரவற்ற, முதியோர்களுக்கு சமூக ஆர்வலரான 5வயது சிறுமி ஷஸ்டிகாஸ்ரீ (5) உணவு பொட்டலங்கள் வழங்கி பசியை போக்கினார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதரவற்ற, முதியோர்களுக்கு அரசுடன் இணைந்து தன்னார்வலர்கள் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத்கண்ணன் – சிவகாமி தம்பதியின் செல்ல குழந்தையான 5வயது சிறுமி ஷஸ்டிகாஸ்ரீ சிறு வயது முதலே சமூக அக்கறையுடன் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். இவர் முழு ஊரடங்கால் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உணவின்றி தவித்த ஆதரவற்ற, முதியோர்களுக்கு ஒருவேளைக்கு தேவையான உணவு பொட்டலங்களை வழங்கி அவர்களது பசியை போக்கினார்.
இவர் ஏற்கனவே கடந்த வருடம் கொரோனா கால கட்டத்தில் உணவின்றி தவித்த நாய்,குரங்குகள உள்ளிட்டவைகளுக்கு உணவுகள் வழங்கினார். இதே போல் இந்த வருடமும் இவரது சமூக பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் அனைவரும் இந்த குழந்தையை பாராட்டி செல்கின்றனர்
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் கொரோனோ சம்பந்தமான நடவடிக்கைகளை சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தற்சமயம் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள எம்.பி நவாஸ்கனி, எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் ஆகியோர் வருகை புரிந்து பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வின் போது திமுக நகர் செயலாளர் பசீர் அகமது,துணைச்செயலாளர் கென்னடி, இளைஞரணி அமைப்பாளரும் வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் ஆகியோர் கீழக்கரை நகராட்சியில் பொறுப்பு ஆணையாளர் பூபதி, வட்டாட்சியர் முருகேசன், துணைவட்டாட்சியர் பழனிகுமார், கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோரிடம் கொரோனா தடுப்புகள் மற்றும் அரசு மருத்துவமனை சென்று அரசு மருத்துவர்களிடம் போதுமான வசதிகள் உள்ளதா, கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாக இல்லை குறைவாக உள்ளதா என மருத்துவர் ராஜேஸ்வரனிடம் கேட்டறிந்தனர்.அங்கு பணியாற்றி கொண்டிருந்த முன்களப்பணியாளர்கள் (செவிலியர்களிடம் ) பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொண்டனர். மேலும் இதில் மாணவரணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன், மீரான், சுஐபு, பயாஸ், நைம் ஆகியோர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் ஊரடங்கு சமயத்தில் அவசியமின்றி நடமாடும் நபர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு….
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தற்சமயம் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஊரடங்கை முன்னிட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்களை கண்காணிக்க கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் கீழக்கரை நகராட்சியில் பொறுப்பு ஆணையாளர் பூபதி, கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் செயலாளர் ஷேக் உசேன், மூர் அசனுதீன்,நவாஸ் ஆகியோர் தலைமையில் ட்ரோன் கேமரா இயக்கப்பட்டு வெளியில் நடமாடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் மீது அபராதமும், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் இந்த கண்காணிப்பு தொடர்ந்து செயல்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். அதே சமயம் கீழக்கரை போன்ற ஊர்களில் பெண்கள் மொட்டை மாடிகளில் பல் வேறு வேலைகளை செய்து வரும் நிலையில் இந்த ட்ரோன் கண்காணிப்பு எதிர்மறை விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இளைஞர்கள் திருக்குறளையும் பாரதியின் கவிதை நூலையும் கைகளில் ஏந்த வேண்டும்; பொதிகை தொலைக் காட்சியின் இயக்குநர் பேச்சு..
by mohan
written by mohan
மகாகவி பாரதியின் படைப்புகளை இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் நெல்லை அரசு அருங்காட்சியகமும் பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து உரையரங்கம் நிகழ்வை நடத்தியது. இணைய வழியில் நடந்த இந்நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா வரவேற்புரை வழங்கினார். நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமையுரை ஆற்றினார். தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் தொடக்கவுரை வழங்கினார். சென்னை பொதிகைத் தொலைக்காட்சியின் மேனாள் இயக்குநர் கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதுமையாக “பாரதியுரை” வழங்கினார். அவர் பேசுகையில்”சொல்லாக அன்றி வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிச் சென்றவர் நம் பாரதி. தாய் நாட்டையும்,தாய் மொழியையும் சுவாசித்தார். தனக்காக அன்றி தேசத்திற்காகவும், தாய் மொழிக்காகவும் சுவாசிக்கச் சொன்னார். பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியவர். நிமிர்ந்து உட்காரவும்,நடக்கவும் முதுகுத் தண்டாய் விளங்கியவர் பாரதி. நமது வாழ்க்கை நீளமாகவும் , ஆழமாகவும் இருக்கணும். நாள் காட்டியாக அன்றி கருத்தியலாக இருக்கணும். அச்சமில்லாத வாழ்க்கையை வாழச் சொன்னவர் அவர். அதற்காக இன்றைய இளைஞர்கள் பாரதியின் கவிதை நூலை ஒரு கையிலும்,திருக்குறளை மறு கையிலும் ஏந்த வேண்டும். ” இவ்வாறு கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கல்வி உளவியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் த.சிவசக்தி ராஜம்மாள் மற்றும் துபாய் சமூக ஆர்வலர் முனைவர் முகமது முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் பேரா நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி, திருவள்ளுவர் கல்லூரி பாபநாசம், திருச்சிலுவைக் கல்லூரி நாகர்கோவில், வே.வ.வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரி விருதுநகர், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிகள் திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி,மூகாம்பிகை கல்வியியல் கல்லூரி தர்மபுரி, இசுலாமியக் கல்லூரி வாணியம்பாடி, அரசு மகளிர் கல்லூரி இராமநாதபுரம்,டோக் பெருமாட்டி கல்லூரி மதுரை, எம்.வி.முத்தையா அரசு மகளிர் கல்லூரி திண்டுக்கல், சென்னைப் பல்கலைக் கழகம்,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உட்பட தமிழகமெங்கிலுமிருந்தும் பல கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலர் இணையத்தில் இணைந்திருந்தனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் பகுதிகளில் வெளியில் செல்லும் பொது மக்களுக்கு காவல் உதவி ஆணையர் அறிவுரை. உறுதிமொழி
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில்m ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வாகனங்களில் வெளியே செல்கின்றனர் இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சண்முகம் திருப்பரங்குன்றம் பகுதியில் ஆறு சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர் இந்நிலையில் இன்று காலை முதல் அத்தியாவசமின்றி பின் செல்லும் பொதுமக்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு இ பாஸ் மற்றும் அலுவலக அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் மற்றவர்களை தடுத்து நிறுத்தி காவல் உதவி ஆணையர் சண்முகம் கரோனா காலங்களில் வெளியில் ஊர்சுற்ற மாட்டேன் மற்றும் சமுக இடைவெளியுடன் பாதுகாப்பாக இருப்பேன் என உறுதி மொழி எடுத்து அதன் பின் அவர்களை திருப்பி அனுப்பினார்.தேவையில்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அபதார தொகை விதிக்காமல் அவர்களுக்கு அரிவுரை கூறி உறுதி மொழியுடன் திருப்பி அனுப்பும் மனிதாபிமான செயலை அனைவரும் பாராட்டுகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் மாா்க்கெட் மூடப்படும். டிஎஸ்பி ராஜன் அதிரடி..
by mohan
written by mohan
தமிழகம் மழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு கொரோனா முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது. மேலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்யாவசிய கடைகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள காய்கறி சந்தை, பூ சந்தைக்கு கிராமங்களிலிருந்து ஏராளமானோர் பூ விற்பனைக்காக வருகின்றனர்.
இதனால் பூ சந்தையில் தினமும் ஆயிரக்காணோர் குவிகின்றனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த கோட்டாட்சியர் ராஜ்குமார் உத்தரவுப்படி பூ சந்தையில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தி கயிறு கட்டப்பட்டு தற்போது பூ விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் பூ சந்தையில் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் தனிநபர் இடைவெளி, முக கவசம் அணிந்துள்ளார்களா என்பது குறித்து உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன் ஆய்வு மேற்கொண்டார். முககவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பல இடங்களில் குண்டுவெச்சி இருக்கேன். போலீசில் செல்போனில் பேசியஆம்பூர் போதை ஆசாமி கைது
by mohan
written by mohan
சென்னையில் உள்ள போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு செல்போனில் பேசியபோதை ஆசாமி. ஆபாசமாகவும், மிரட்டியும் பேசியுள்ளார். இதை கேட்ட பெண் காவலர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீஸ், அது ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியிலிருந்து வந்தது தெரியவந்தது.தகவல் பெற்ற உமராபாத் போலீசார் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினர்.அப்போதும் அந்த போதை ஆசாமி ஆபாசமாக பேசியுள்ளார்.மேலும் நான் பல இடங்களில் குண்டுவைத்துள்ளதாகவும் அது விரைவில் வெடிக்கும் எனவும்,தனக்கு பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் பேசியுள்ளான்.தொடர்ந்து அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விசாரித்தனர்.அதில் அந்த போதை ஆசாமி ஆம்பூர் அடுத்ததுத்திப்பட்டு பாங்கி ஷாப் பகுதியில் வசிக்கும் முகமது யாஷிம் (48) என்பதும்அவன் மனைவி பிரிந்து சென்றதால் அதிக போதையில் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து மிரட்டியதும் தெரியவந்தது.இதனையெடுத்து போலீசார் அவனை கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறித்தோபர் கொலம்பசு நினைவு நாள் இன்று (மே 20, 1506).
by mohan
written by mohan
கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) அக்டோபர் 1451ல் இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் பிறந்தார். அவருடைய தந்தை டொ மினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. 1471ல் கொலம்பசு எசுபெனோலா ஃபினான்சியர்சு நடத்திய ஒரு கப்பலில் சேர்ந்தார். அவர் கியோஸ் கியோசு (ஏஜியன் கடல்-இல் உள்ள ஒரு தீவு) பகுதியைச் சுற்றி வந்த அக்கப்பலில் ஒரு வருடம் வேலை செய்தார். சில நாட்கள் நாடு திரும்பிய பின் மறுபடியும் கியோசுப் பகுதியில் மற்றோர் ஆண்டு வேலை செய்தார். 1476ல் கொலம்பசு ஒரு வணிகப் பயணத்தை அட்லாண்டிக் கடலின் மீது மேற்கொண்டார். இந்தக் கப்பல் கேப் ஆஃப் செயின்ட் வின்சென்ட் இன் பிரெஞ்சு பிரைவெட்டீயெர்ஸ்-ஆல் தாக்கப்பட்டது. கொலம்பஸ் கப்பல் எரிந்து போய் அவர் ஆறு மைல்கள் நீந்திக் கரை சேர்ந்தார்.
1477ல் கொலம்பசு லிஸ்பன் நகரில் வாழ்ந்தார். போர்த்துக்கல் கடல் தொடர்பான நடத்தைகளுக்கு ஒரு மையமாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஐசுலாந்து, மடீயெரா, த அசோர்சு, ஆப்பிரிக்காக்குச் செல்லும் கப்பல்களுடன் விளங்கியது. கொலம்பசின் உடன்பிறந்தார் பார்த்தலோமியோ லிசுபனில் ஒரு வரைபடங்களை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவ்வமயம் இவ்விரு உடன்பிறந்தவர்களும் வரைபடங்கள் வரைபவர்களாகவும், புத்தகங்களைச் சேமிப்பவர்களாகவும் விளங்கினர். கொலம்பசு வணிகக் கடற்பயணியாக போர்ச்சுகீசிய கப்பல்களில் மாறினார். 1477ல் ஐசுலாந்துக்கும், 1478ல் மடியெராவிற்கும் சர்க்கரை வாங்கவும், மேற்கு ஆப்பிரிக்க கடலோரங்களுக்கு 1482லும் 1485லும், போர்ச்சுகீசிய வணிக எல்லையான ஸாவோ ஜார்ஜ் டா மைனா என்ற கினியாக் கரைக்கும் சென்றார்.
எசுப்பானியப் பேரரசின் கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியில் கொலம்பசு நான்கு கடற்பயணங்களை அத்திலாந்திக்கு பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டுள்ளார். இந்தக் கடற்பயணங்களும் லா எசுப்பானியோலா தீவில் இவர் நிரந்தரக் குடியேற்றம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் புதிய உலகம் என அழைக்கப்பட்ட அமெரிக்காக்களில் எசுப்பானிய குடியேற்றத்தைத் துவக்கின.
புதிய வணிக வழிகளைக் கண்டறிந்து குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய பேரரசுவாத போக்கு மற்றும் ஐரோப்பிய இராச்சியங்களிடையேயான பொருளியல்நிலை போட்டியில் கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பசு மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பசு 1492ல் மேற்கில் பயணித்து புதிய உலகத்தை கண்டறிந்தார். பகாமாசு தீவுக்கூட்டங்களில் தாம் பின்னர் சான் சால்வதோர் எனப் பெயரிட்ட தீவில் வந்திறங்கினார். மேலும் மேற்கொண்ட மூன்று கடற்பயணங்களில் கொலம்பசு பெரிய மற்றும் சிறிய அண்டிலிசு தீவுகளையும் வெனிசுவேலா, நடு அமெரிக்காவின் கரிபியக் கடலோரப் பகுதிகளையும் கண்டறிந்து அவற்றை எசுப்பானியப் பேரரசுக்கு உரியதாக உரிமை கோரினார். கொலம்பசு 1492ல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார்.
இவரது கடற்பயணங்களே அமெரிக்காக்களுடனான ஐரோப்பாவின் முதல் நிரந்தர தொடர்பை ஏற்படுத்தியது. இவற்றை அடுத்தே பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பியர்களின் நாடுகாணுதல், கைப்பற்றுதல், குடியேற்றவாதம் தொடர்ந்தன. எனவே இவரது கண்டறிதல் தற்கால மேற்கத்திய உலகின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது. இதுவரை ஐரோப்பியர்கள் கண்டறியாத புதிய கண்டத்தை வந்தடைந்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ளாத கொலம்பசு இங்கு வாழ்ந்திருந்த மக்களை இன்டியோசு (“இந்தியர்களுக்கான” எசுப்பானியச் சொல்) என்றே அழைத்தார். அமெரிக்காவில் குடியேற்றப்பகுதிகளுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமித்தது தொடர்பான எசுப்பானிய பேரரசருடனான பிணக்கு காரணமாக 1500ல் லா எசுப்பானியோலாவின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னால் நீண்ட வழக்காடலுக்குப் பின்னர் கொலம்பசும் அவரது வாரிசுகளும் கோரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார். கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும். உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் இல்லை . ஏனென்றால் அங்கே ஏற்கனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்.
தமது கடைசி கடற்பயணத்தின் திரும்பும்வழியில் கடுமையானப் புயலை எதிர்கொண்டார். தொடர்ந்த ஆண்டுகளில் இன்ஃபுளுவென்சா மற்றும் பிற நோய்களால் அவதிப்பட்டார். கீல்வாதத்தின் கடுமையும் கூடியது. இதனால் பல மாதங்களுக்கு படுத்த படுக்கையில் இருந்தாக வேண்டியதாயிற்று. இந்த நோய்களே பதினான்கு ஆண்டுகளில் அவரது மறைவிற்கு காரணமாயின. இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறித்தோபர் கொலம்பசு மே 20, 1506ல் தனது 54வது அகவையில் எசுப்பானியாவிலுள்ள வல்லாடோலிடில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். கொலம்பசின் உடல் முதலில் வல்லாடோலிடில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் லா எசுப்பானியோலாவின் ஆளுநராக இருந்த அவரது மகன் டியாகோவின் உயில்படி செவீயாவின் லா கார்துஜாவிலுள்ள ஓர் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக நியமித்தது. நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்டன் ஜானியா பிறந்த நாள் என்பதால் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது. ஸ்லோவேனியாவில் தேனீ வளர்ப்பவர்களின் குடும்பத்தில் இருந்து ஜனியா வந்தார். அங்கு தேனீ வளர்ப்பு ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு முக்கியமான விவசாய நடவடிக்கையாகும். ஸ்லோவேனியா இப்போது ஒரு தேனீ சுற்றுலாத் துறையை உருவாக்கி வருகிறது. நமது உணவில் குறைந்தது 30% மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் (அல்லது பிற மகரந்தச் சேர்க்கை பூச்சிகள்) தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தேனீக்கள் இல்லாமல் பாதாம், ஆப்பிள், பேரிக்காய் மற்றும் குயின்ஸ் உருவாகாது. அவகோடா பழம் மற்றும் அனைத்து சிட்ரஸைப் போலவே ஸ்ட்ராபெர்ரி மற்றும் அவுரிநெல்லிகள் போன்ற பல பெர்ரிகளுக்கு மகரந்தச் சேர்க்கைகள் தேவை. பல காய்கறிகள் தேனீக்களைச் சார்ந்தவை. குறிப்பாக வெள்ளரி, பூசணி மற்றும் சீமை சுரைக்காய் போன்ற ஆண் மற்றும் பெண் பூக்கள் கொண்டவை, உணவு பாதுகாப்பு தேனீக்களைப் பொறுத்தது.
சுறுச்சுறுப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் தேனீக்கள் இயற்கையை சமநிலையாக வைத்துக்கொள்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அவை உற்பத்தி செய்யும் தேனானது பல விதங்களில் சித்த மருத்துவத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனீக்கள் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறனைக் கொண்டதாகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும். ஏதேனும் புதிய மலர் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை துல்லியமாக ஒரு வித்தியாசமான நடன அசைவின் மூலம் மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன. இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதே ஆண் தேனீக்களின் செயலாகும்.
மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, குடம்பிகள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப்படுகின்றது. இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் மலரின் குளுகோஸ் வேதியியல் மாற்றத்துக்கு உட்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது. தேனீக்கள் ஒரு முறை எதிரியை கொட்டியவுடன் இறந்து விடுகின்றன. தங்கள் கூட்டைக் காக்கும் போராட்டத்தில் இவை உயிரைத் தியாகம் செய்கின்றன. தேனீயின் கூடு வேலைக்காரத் தேனீக்களின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும்.
இவற்றின் கூடு பொதுவாக மரங்கள், மலைக் குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும். இவற்றின் கூட்டு அறை மிக சரியாக அறுகோண வடிவத்தில் அமைந்துள்ளது. ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள். முட்டை இடுவது ஒன்றே அரசித்தேனீயின் முக்கியமான பண்பாகும். அரசித் தேனீ இல்லையென்றால் மற்ற பணிசெய் தேனீகள் மிகவும் குழம்பிப்போய், தமது கட்டுக்கோப்பான சேர்ந்து வாழும் பண்பை இழக்கின்றன. அரசித் தேனீயானது, பணி செய்யாவிட்டாலும், எல்லாத் தேனீக்களையும் ஈர்த்து ஓர் ஒழுங்கில் இருக்க உதவுகின்றது. தாவர இனப்பெருக்கத்தில் தமது பங்கை வழங்குவதுடன், தேனீக்களால் சேகரிக்கப்படும் மேலதிக தேன் மக்களின் பயன்பாட்டுக்கு வருகின்றது. தேனீக்கள் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தச்சேர்க்கையில் முக்கியமான பங்களிப்பை வழங்குவதால், மனிதர்களின் உணவுச் சங்கிலியில் தேனீக்கள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. அண்மைய காலங்களில் தேனீக்கள் அழிந்துவருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இயற்கைக்கு துரோகம்அளிக்கும் எந்த செயலையும் செய்யாமல் இருப்பதே நல்லது.
உலக தேனீ தினமான இன்று, தேனீக்களின் அவசியம் பற்றியும், மனித குலத்திற்கு அது செய்யும் சேவை பற்றியும் தெரிந்துகொள்ளலாம். ஆண்டுக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணித்து தன்னுடைய உணவுத் தேவைக்காக தேனீ பூக்களில் இருந்து தேனை எடுக்கிறது என்றாலும், அதன் மூலம் அதிகம் பயனடைவது என்னவோ மனிதகுலம்தான். தேன் மூலம், ஒவ்வொரு நாடும், பல கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்ட உதவுவதோடு, அது மருத்துவ பொருளாகவும் திகழ்கிறது. பூக்களிலிருந்து தேனை எடுக்கும் நேரத்தில் அவற்றின் காலில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தம், வெவ்வேறு பூக்களில் மாறி மாறி அமரும்போது, பரவுவதால் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இதனால் பூக்கள் மலர, பூகோளமும் மகிழ்கிறது. அந்த வகையில் தேனீ பசுமையின் பாதுகாவலனாகவும் திகழ்கிறது. இப்படி மனித குலத்தின் நண்பனான தேனீ, தற்போது அழிந்து வரும் உயிரினமாக மாறிவருவதற்கு நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை உரங்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் காரணமாகிக்கொண்டிருக்கின்றன.
இப்போது அதிக தொழில்மயமாக்கப்பட்ட விவசாயத்துடன், தேனீக்கள் பன்முகத்தன்மை இல்லாமை மற்றும் அதிக நச்சு இரசாயனங்கள் ஆகியவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. பல்லுயிர் பற்றாக்குறை என்றால் தேனீக்கள் ஒன்று அல்லது இரண்டு தாவர இனங்களை மட்டுமே நம்பியுள்ளன. மேலும் அந்த பயிர் தோல்வியுற்றால் இது முழு காலனிகளையும் அழிக்கக்கூடும். காலநிலை மாற்றம் என்பது தேனீக்களுக்கு எப்போதும் இருக்கும் அச்சுறுத்தலாகும். வெப்பநிலை அதிகரிக்கும் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் மிகவும் பொதுவானதாக மாறும் போது, தேனீக்கள் பெருகிய முறையில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன. நோயால் பாதிக்கப்படுகின்றன, உண்மையில் அவை உயிர்வாழ போராடுகின்றன.
தேனீக்களின் சுறுசுறுப்புக்கு மனிதனாலும் ஈடு கொடுக்க முடியாது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக விவசயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பரியது. தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் உங்களுக்கான அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். பூச்சிக்கொல்லிகளால் நீங்கள் அழிக்க நினைக்கும் பூச்சிகள் இறப்பது மட்டுமன்றி மகரந்தத்தை நுகர வரும் தேனீக்களையும் இறக்க வைக்கிறது. எனவே தோட்டம், விவசாயம் எதுவாயினும் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாக இயற்கை முறையை உரங்களை கடைபிடிக்கலாம். உதாரணமாக பூண்டு, வெங்காயம், உப்பு, மிளகாய், மிளகு, சோப், சிட்ரஸ் பழங்கள் என இவற்றின் சாறுகளை ஸ்ப்ரே போல் தெளிக்கலாம்.
தேனீக்கள் நுகர்வதற்கு ஏற்ற பூச்செடிகளை வளர்க்க முற்படுங்கள். இதனால் அவை பெருக ஆரம்பிக்கும். தேனீக்களின் வேலையும் இடைவிடாது நடக்கும். வீட்டில் உள்ள அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு தேனீக்களின் நன்மைகள் குறித்து கற்றுக்கொடுங்கள். அதன் வளர்ப்பு, அதன் தேவையின் முக்கியதுவத்தை உணர்த்துங்கள். இதனால் அவர்களுக்கு அடுத்த தலைமுறையும் இதைக் கற்றுக்கொண்டு வளர்க்க, பாதுகாக்க முன்வருவார்கள். பல இடங்களில் தேனீக்கள் கூடு கட்ட அதற்கு ஏற்ற சூழலை அமைத்துத் தருகின்றார்கள். அப்படி நீங்களும் தேனீக்கள் சூழ உதவுங்கள். இதற்காக உலகம் முழுவதும் பல அமைப்புகள், குழுக்கள் இருக்கின்றன. நீங்களும் குழு அமைத்து தேனீக்களை பாதுகாக்கலாம். அதனால் நன்மையும் அடையலாம்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை முதற்கட்டமாக தீவிரபடுத்துவோம்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டத்தின் 216 வது மதுரை மாவட்ட ஆட்சியர் ஆக டாக்டர்.அனிஷ்சேகர் இன்று பொறுப்பேற்றுகொண்டார். கடந்த 2011ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர் மருத்துவர் என்பதும் , மதுரை மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்ததும் குறிப்பிடத்தக்கது.புதிதாக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் அனிஷ்சேகர் பேசுகையில் :ஏற்கனவே மதுரை மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்துள்ளதால் மதுரை மக்களின் தேவை அறிந்து அதனை நிறைவேற்றுவேன் எனவும், மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரபடுத்துவேன், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை ஆராய்ந்து மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை, எடுக்கப்படும், ரெம்டெசிவிர் மருந்தை தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதை பின்பற்றுகிறோம், ஆக்சிஜன் தான் தற்போதையை கொரோனா பாதிப்பின் மருந்து என்பதால் அதனை உரிய முறையில் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம், ஆக்சிஜன் உடனுக்குடன் கொண்டுவர நடவடிக்கை, ஒரிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது, பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்த்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும், பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது தொடர்பாக பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படும் என்றார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காணாமல் போன மகன் கொரோனா பாதித்ததால் கிடைக்க பெற்றார்.மாவட்ட ஆட்சியர்உத்தரவின் பேரில் தாய்க்கு உதவிய ரெட் கிராஸ் அமைப்பினர். மதுரை சுப்ரமணிய புரத்தை சேர்ந்தவர் வீரம்மாள் இவரதுகணவர்சண்முகம்.கேன்சர் நோயாளி. இன்னும் இரண்டு நாட்களில் இவருக்கு கேன்சர் கட்டி ஆபரேஷன் மதுரை ராஜாஜி மருத்துவ மனையில் நடை பெற உள்ளது.இவருக்கு ஐந்து குழந்தைகள். கடைசி மகன் அரவிந்த் (பெயர் மாற்ற பட்டுள்ளது) பதினான்கு வயதான அவன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டான். எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இதற்கிடையில் கோயம்புத்தூர் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியினர் அவனை பஸ் ஸ்டாண்டிலிருந்து மீட்ட்டனர்.பரிசோதனை செய்ததில், அவனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.தற்போது, கோயம்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டான். தொடர்ந்து அவனை கவனித்து கொள்ள ஆள் இல்லையாதலால் அவனுடைய தாயாருக்கு கோயம்பத்தூர் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியினர் மதுரை ஆட்சியர் அனீஸ்சேகருக்கு தகவல் தெரிவித்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர்,அந்த பெண் மகனை பார்ப்பதற்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்ய மதுரை ரெட் கிராஸ் அமைப்பிற்கு உத்திரவிட்டார்.அதன் படி, ரெட் கிராஸ் அமைப்பின் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ராஜ்குமார், முத்துக்குமார், ராஜு, தினேஷ் ஆகியோர்அவர்களின், குடும்பத்தினரை நேரில் போய் சந்தித்து, விபரம் கேட்டறிந்தனர். அப்போது அந்த சிறுவனின் தாயார் மகனை காணாமல் நாங்கள் தவித்து கொண்டிருக்கிறோம். தங்கள் குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாலும், இப்போது எவ்வித பண வசதியும் இல்லையாதலால் தங்களால் கோயம்பத்தூர் சென்று பார்த்து வர இயலாது என்றும் தெரிவித்தார். தங்களுக்கு உதவும் படி கேட்டு கொண்டார். உடனே ரெட் கிராஸ் அமைப்பினர் இ. பாஸ் பெற்று இலவசமாக கார் வசதி ஏற்பாடு செய்து, நிவாரண பொருள்களும் கொடுத்து அந்த பெண்ணையும் அவரது மூத்த மகனையும் கோயம்பத்தூர் அழைத்து சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் உள்ள மின் மயானத்தில் கூடுதலாக மூன்று யூனிட் மின் தகன மேடை அமைக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.மதுரை தத்தனேரி, மூலக்கரை (கீரைத்துரை) பகுதியில் உள்ள மின் மயானங்களில் எரியூட்டப்படுகிறது. உடலை எரியூட்ட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து கூடுதலாக மின் தகன மேடையில் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வலுத்தது. இதையடுத்து மதுரை மாநகராட்சி ஆணையர் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் புதியதாக தகன மேடைக்கு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை தத்தநேரி பகுதியில் ஏற்கனவே இரண்டு தகன மேடையில் உள்ள நிலையில் கூடுதலாக இரண்டு மின் தகன மேடையில் அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது, அதேபோன்று மூலக்கரை பகுதியிலும் மின் தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, மதுரையில் கூடுதலாக 3 மின் தகன மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பணி முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை தத்தனேரி மற்றும் கீரைத்துரையில் தலா 2 மின் மயானங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா காலகட்டத்தில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால் தத்தனேரியில் கூடுதலாக 3 மின்மயானம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அனேகமாக இந்த வாரத்தில் பணி முடிந்துவிடும். இறந்த உடல்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படாது” என்றார். இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் நம்மிடம்,” கொரோனா காலகட்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். தற்போதைய அசாதாரண சூழலில் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளோம்” என்றார்.மேலும், மாநகராட்சி அனுமதித்தால், ரோட்டரி சங்கம் சார்பில் கூடுதலாக தகன மேடை அமைக்க தயாராக உள்ளதாக ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரெம்டி வைசர் மருத்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க மருத்துவ கல்லூரி வாசல் முன்பு காத்திரஉள்ளது.
by mohan
written by mohan
மதுரை மருத்துவக் கல்லூரியில் ரெம்டி வைசர் மருந்து விற்பனை செய்வதாக அறிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது மருந்து இல்லை எனக் கூறியதால் மருந்து வாங்க வந்த நோயாளிகள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை*கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவிவருகிறது இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் மதுரை மாவட்டத்தை பெருத்தவரை 10000க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் தினமும் இறப்பு சதவிதமும் இரட்டை இழக்கை அடைவது வருகிறது மதுரை அரசு மருத்துமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ரெம்டிசிவர் மருந்து மிக முக்கியமாக தேவைப்படுகிறது இந்த மருந்தானது மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் வழங்கப்பட்டு வந்தன இந்த நிலையில் இன்று மதுரை மருத்துவக்கல்லூரியில் ரெம் டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படும் என அறிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் இன்று மருந்து வினையையும் இல்லை எனக் கூறியதால் மருந்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க மருத்துவ கல்லூரி வாசல் முன்பு காத்திருந்தனர் பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது நோயாளிகளின் உறவினர்கள் கூறியதாவது ஒருவாரமாக காத்திருந்து டோக்கன் வாங்கினாலும் முறையாக மருந்து கிடைக்கவில்லை அரசு மருத்துவமனை நிர்வாகமிடம் கேட்டாள் மாவட்ட மாவட்ட நிர்வாத்திடம் கேளுங்கள் என்று அங்குமிங்கும் அழைய விடுவதாக குற்றச்சாட்டினர் ஆகையால் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முறையாக ரெம்டெசிவர் மருந்து கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கையாக உள்ளது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையத்தில் தமிழக அரசு உத்தரவை மீறி 10 மணிக்கு மேல் திறந்த பலசரக்கு கடைக்கு சீல் வைப்பு.
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை மீறி பல கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் பலசரக்கு மொத்த விற்பனை கடை உத்தரவை மீறி செயல்பட்டதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எச்சரித்து rs.5000 அவதார விதிக்கப்பட்டது. இன்று அதையும் மீறி 10 மணிக்கு மேலாக விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் 20க்கும் மேற்பட்ட கடை ஊழியர்களை உள்ளே வைத்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக விற்பனையில் ஈடுபட்டதை அடுத்து ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் சுந்தரம்பாள் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர் .இதேபோல் மேலும் பல கடைகளுக்கு அபராதம் விதித்து விதி மீறினால் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதத்தின் பெயரால் இஸ்லாமியர் படு கொலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் .
by mohan
written by mohan
மதத்தின் பெயரால் இஸ்லாமிய இளைஞர் படு கொலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.ஹரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தை சேர்ந்த ஆசீப் கான் கடந்த ஞாயிறு இரவு அன்று காரில் சென்று கொண்டிருந்த போது சமூக விரோதி கும்பல் காரை வழி மறுத்து ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி கட்டாய படுத்தியுள்ளனர் . ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்த ஆசிப்பை மிக கொடூரமான முறையில் படு கொலை செய்ய பட்டார் என்கிற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆசிப் கானை படுகொலை செய்த சமூக விரோதி கும்பலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.வட மாநிலங்களில் மதத்தின் பெயரிலும், பசு பாதுகாப்பு என்ற பெயரிலும், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் மற்றும் படு கொளைகள் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளன. இது போன்ற கொடூர சம்பங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் மத்திய , மாநில அரசுகள் இது போன்ற சம்வங்களில் ஈடு படுகின்ற சமூக விரோதி கும்பலை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .ஆசிப் கானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும், அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம். மேலும் உயிரிழந்துள்ள ஆசிப் கான் குடும்பத்தினருக்கு இழப்பிடு ரூ 50 லட்சம் வழங்க வேண்டும் . குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலை ஹரியானா அரசு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.எனவே : ஆசிப் கானை படு கொலை செய்து தப்பி சென்ற சமூக விரோதி கும்பலை உடனடியாக அம்மாநில காவல் துறை கைது செய்ய வேண்டும். படு கொலை செய்த சமூக விரோதிகளுக்கு சட்ட ரீதியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஹரியானா மாநில அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு இக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் தமிழ்நாடு சைகை அணி -5 (என்.சி.சி) அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் வழங்கப்பட்டது.
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவ மனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு 130 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலருக்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் அதை கருத்தில் கொண்டு NCC அதிகாரிகள் சார்பில்நோயாளிகளுக்கு உயிர் காக்கும் வகையில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் தலைமை மருத்துவர் பாபுஜி அவர்களிடம் என்.சி.சி. அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் மேஜர் அனந்தநாராயணன், முத்துப் பெருமாள் மற்றும் ராஜூக்கள் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெகந்நாத் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு வழங்கினர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மட்டவெட்டு மட்டவெட்டு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின்பேரில் கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தேன்மொழி தலைமையில் கடலாடி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மட்டவெட்டு கிராமத்தை சேர்ந்த 40 நபர்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார் இம்முகாமில்ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணலதா ராம், கிராம நிர்வாக அலுவலர் சத்யா, மருத்துவ குழு சார்பில் செவிலியர் கீர்ஜா, மருந்தாளர் சரவணன், ஊராட்சி செயலர் முருகன் இன்று முக்கிய பிரமுகர் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த அனைவருக்கும் ரூ. 10,000/- நிவாரணத் தொகை வழங்க கோரிய வழக்கு விரைவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வர உள்ளது
by mohan
written by mohan
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், “தற்போது உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுபாடுகளை விதித்தும், காய்கறி மற்றும் மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்கிற கடைகளை தவிர்த்து மற்ற கடைகளை திறக்க தடை விதித்து உள்ளது.இந்த கட்டுப்பாடுகளினால் பல்வேறு தரப்பினர் வாழ்வாதாரங்களை இழந்து வருகிறார்கள். மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் கொரோனா நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் முககவசம், தடுப்பு ஆடைகள் மற்றும் இதர மருத்துவ கழிவுகளை கையாள வழி முறைகளை அறிவித்து உள்ளனர். மருத்துவ மனைகளில் இருந்து பெறப்படும் இந்த கழிவுகளை கையாள தனி நிறுவனங்கள் உள்ளன. ஆனால் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா நோயாளிகள் பெருகி விட்ட சூழலில் பல வீடுகளில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் மருத்துவ கழிவுகளை கையாள்வது நகர்ப்புற மற்றும் கிராமப்புற தூய்மை பணியாளர்கள் தான். அவர்களுக்கும் எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்படுவதில்லை.
கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு, மருத்துவ வசதிகள், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மருத்துவ செய்திகளை பல இடங்களில் சேகரித்து உரிய நேரத்தில் மக்களுக்கு அளித்து வரும் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் பலர் செய்தி சேகரிக்க சென்ற இடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்து உள்ளனர் என்பது குறித்த செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் வருகிறது. புள்ளி விவரங்கள் படி இந்தியா முழுவதும் சுமார் 250 பத்திரிக்கை துறையினர் கொரோனா தொற்றால் உயிரிந்துள்ளார்கள்.சமீபத்தில் மத்திய அரசின் உத்தரவை அடுத்து தமிழக அரசு ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களுக்கு கொரோனா வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு, இதர பணியாளர்களுக்கு மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டது.
கொரோனா பணிகளில் ஈடுபடும் அனைத்து காவல்துறையினருக்கும், உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அவர்கள் பணியில் உள்ள ஆபத்தை கருத்தில் கொண்டும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் ஒரு மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்கவும், தினசரி நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கும், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தடை செய்யப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்துள்ள சினிமா தியேட்டர் பணிபுரிவோர், உடற்பயிற்சி கூடம், சலூன், பியூட்டி பார்லர் பணியாளர்கள், ஆம்னி பேருந்து, தனியார் பேருந்து, மினி பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர்கள், ஆட்டோ, வாடகைக் கார், லோடு ஆட்டோ டிரைவர்கள், அமைப்பு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் அரசின் கொரோனா தடுப்பு மற்றும் பரவல் நடவடிக்கைகளால் வாழ்வாதாரம் இழந்த அனைவருக்கும் ரூ. 10,000/- நிவாரணத் தொகை வழங்க உத்திரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
You must be logged in to post a comment.