Home செய்திகள் ரெம்டி வைசர் மருத்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க மருத்துவ கல்லூரி வாசல் முன்பு காத்திரஉள்ளது.

ரெம்டி வைசர் மருத்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க மருத்துவ கல்லூரி வாசல் முன்பு காத்திரஉள்ளது.

by mohan

மதுரை மருத்துவக் கல்லூரியில் ரெம்டி வைசர் மருந்து விற்பனை செய்வதாக அறிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது மருந்து இல்லை எனக் கூறியதால் மருந்து வாங்க வந்த நோயாளிகள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை*கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவிவருகிறது இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் மதுரை மாவட்டத்தை பெருத்தவரை 10000க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் தினமும் இறப்பு சதவிதமும் இரட்டை இழக்கை அடைவது வருகிறது மதுரை அரசு மருத்துமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ரெம்டிசிவர் மருந்து மிக முக்கியமாக தேவைப்படுகிறது இந்த மருந்தானது மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் வழங்கப்பட்டு வந்தன இந்த நிலையில் இன்று மதுரை மருத்துவக்கல்லூரியில் ரெம் டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படும் என அறிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் இன்று மருந்து வினையையும் இல்லை எனக் கூறியதால் மருந்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க மருத்துவ கல்லூரி வாசல் முன்பு காத்திருந்தனர் பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது நோயாளிகளின் உறவினர்கள் கூறியதாவது ஒருவாரமாக காத்திருந்து டோக்கன் வாங்கினாலும் முறையாக மருந்து கிடைக்கவில்லை அரசு மருத்துவமனை நிர்வாகமிடம் கேட்டாள் மாவட்ட மாவட்ட நிர்வாத்திடம் கேளுங்கள் என்று அங்குமிங்கும் அழைய விடுவதாக குற்றச்சாட்டினர் ஆகையால் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முறையாக ரெம்டெசிவர் மருந்து கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கையாக உள்ளது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!