உலக நீர் தினத்தை முன்னிட்டு ,மதுரை விளாச்சேரி பகுதியிலுள்ள சௌராஷ்டிரா கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில், துறைத் தலைவர் துரைசாமி தலைமையில் பேராசிரியர்கள் மேகலா,விஷ்ணு பிரியா,சுகந்தி, ,புவனேஸ்வரி மற்றும் மாணவர்கள் நிலையூர் பொதுமக்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Category:
செய்திகள்
சோழவந்தான் எம்.வி.எம்.கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நல சிறப்பு முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.வாடிப்பட்டி வட்டாரத்தில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எடை உயரம் அளவீடு செய்யும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்,போஷான் அபியான் திட்டத்தின் கீழ் நாட்டில் ஆரோக்கியமான குழந்தைகளை கொண்டாடுவதற்காக ‘ஸ்வஸ்த பாலக் பலிகா ஸ்பர்தா’ என்ற சிறப்பு முகாம் மூலம் செயல்படுத்தபடுகிறது, இத்திட்டத்தில் வாடிப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட 119 குழந்தைகள் மையம் மூலம் எடை உயரம் அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த வாரம் முழுவதும் மழலையர் பள்ளிகள்,மருத்துவமணைகளிலும் எடை உயரம் எடுக்கப்படும்.இதன்படி எம்.வி.எம்.பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு தாளாளர் எம்.வி.எம்.மருதுபாண்டியன் தலைமை தாங்கினார்.முதல்வர் தீபாராகிணி முன்னிலை வகித்தார்.அங்கன்வாடி பணியாளர் உமா வரவேற்றார்.வாடிப்பட்டி வட்டார குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் திருமகள் முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.இதையடுத்து 6 வயது வரையிலான மாணவ,மாணவியர்க்கு உயரம்,எடை அளவீடு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுதா, திட்ட உதவியாளர் சங்கர், மேற்பார்வையாளர்கள் பாண்டியம்மாள், செல்வி,அங்கன்வாடிப் பணியாளர் பிரியா,உதவியாளர் சரவண வள்ளி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.இதே போல் இப்பகுதியில் உள்ள பல பள்ளிகளில் இந்த முகாம்கள் நடைபெற்றது.தொடர்ந்து இப்பள்ளியில்கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதற்குதாளாளர் எம்.வி.எம்.மருதுபாண்டியன் தலைமை வகித்தார்.டாக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.முதல்வர் தீபாராகிணி வரவேற்றார்.இதையடுத்து கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில்,6 முதல் 8 ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலம் அருகே 340 கிலோ கஞ்சாவை கடத்திய 4 பேர் கைது., கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து., விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து., டாட்டா சுமோ வாகனத்தில் 4 பேர் கொண்ட கும்பல் 340 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தனர்., தனிப்படை போலீசார் காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த 4 பேரையும் கைது செய்தனர்.இந்த கடத்தல் தொடர்பாக கூடல்நகர் பகுதியைச் தெய்வம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார், ரமேஷ் மற்றும் மதுரை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் போலீசார் ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி நல்லமணி யாதவா கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்..
by mohan
written by mohan
தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தென்காசி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை அறிவியல் கல்லூரியில் சனிக் கிழமை நடைபெற உள்ளது.இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 3000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள், இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றே பணிநியமன ஆணைகள், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கான பதிவு வழிகாட்டுதல்கள் (OMCL), இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் (வயது வரம்பு 18 முதல் 40 வரை ஆண் பெண் இரு பாலருக்கும்) ஆகியன இந்த முகாமின் சிறப்பம்சங்களாக உள்ளன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் “மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தென்காசி: 04633213179” என்ற முகவரியிலோ அல்லது www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென்காசி மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொடிக்குறிச்சியில் 26.03.2022 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி, பி.இ.,டிப்ளமோ,ஐடிஐ படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் இத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இம்முகாமில் கலந்து கொள்ள இருப்பதால் வெளி நாடுகளில் வேலை வாய்ப்பு பெற விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் இந்நிறுவத்தின் மூலம் பதிவு செய்து வெளி நாடுகளில் வேலை வாய்ப்பு பெறலாம். இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்பட உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன் பெறாதவர்கள் அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக் கணக்கு ஆரம்பித்து வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலோ அல்லதுவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற்று வந்தாலோ அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தென்காசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட பகுதிகளில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது..
by mohan
written by mohan
அடிதடி,கொலை, கொலை முயற்சி போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுள்ளனர். தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட KP அருணாசலபுரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த வேனை நிறுத்தி அரிவாளை காட்டி பிரச்சனையில் ஈடுபட்டது, கஞ்சா விற்பனை, மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி, கொலை, கொலை முயற்சி போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பள்ளி கோட்டை கணேசன் என்பவரின் மகன் மாடசாமி (27) மற்றும் சுரண்டை கோட்டை தெருவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் மனோஜ் குமார் @ மனோஜ்(20) ஆகிய நபர்களை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடையநல்லூர் வட்ட காவல் ஆய்வாளர் விஜயகுமார் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், மேற்படி பள்ளி கோட்டை கணேசன் என்பவரின் மகன் மாடசாமி (27) மற்றும் சுரண்டை கோட்டை தெருவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் மனோஜ் குமார் @ மனோஜ்(20) ஆகிய நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 22.03.2022 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் விஜயகுமார் சமர்ப்பித்தார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்த கலையரசன்(31) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார், இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி காட்பாடி அடுத்த கசம் உள்ளிபுதூர் பகுதியில் 2 சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டது. அதன்பிறகு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இரவு கலையரசனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. உறவினர்களின் வேண்டுகோளையெடுத்து மருத்துவமனைக்கு இதய வால்பு, கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண் ஆகியவற்றை தானமாக கொடுக்கப்பட்டது. கலையரசனுக்கு திருமணம் ஆகாமல் இருந்தது.
கே.எம். வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம் இன்று (மார்ச் 24,1884).
by mohan
written by mohan
பீட்டர் யோசப் வில்லியம் டெபி (Peter Joseph William Debye) மார்ச் 24, 1884ல் நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச்சில் பிறந்தார். 1901ல் ஆச்சென் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1905 ஆம் ஆண்டில், மின் பொறியியலில் தனது முதல் பட்டத்தை முடித்தார். 1907 ஆம் ஆண்டில் எடி நீரோட்டங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையின் கணித ரீதியாக நேர்த்தியான தீர்வான தனது முதல் கட்டுரையை வெளியிட்டார். ஆச்சனில், அவர் தத்துவார்த்த இயற்பியலாளர் அர்னால்ட் சோமர்ஃபீல்டின் கீழ் படித்தார். பின்னர் அவர் தனது மிக முக்கியமான கண்டுபிடிப்பு பீட்டர் டெபி என்று கூறினார். 1906 ஆம் ஆண்டில், பமேரியாவின் முனிச்சில் சோமர்ஃபெல்ட் ஒரு சந்திப்பைப் பெற்றார். மேலும் டெபியை அவருடன் அவரது உதவியாளராக அழைத்துச் சென்றார். கதிர்வீச்சு அழுத்தம் குறித்த ஒரு ஆய்வுக் கட்டுரையுடன் டெபி தனது பி.எச்.டி. 1908 ஆம் ஆண்டில் முடித்தார். 1910 ஆம் ஆண்டில், மேக்ஸ் பிளாங்க் ஒப்புக்கொண்ட ஒரு முறையைப் பயன்படுத்தி பிளாங்க் கதிர்வீச்சு சூத்திரத்தைப் பெற்றார்.
விஞ்ஞானக் கோட்பாடுகளுக்கு வரும்போது டெபி ஒரு மார்டினெட் என்று வர்ணிக்கப்பட்டார். 1912 ஆம் ஆண்டில் சமச்சீரற்ற மூலக்கூறுகளில் கட்டண விநியோகத்திற்கு இருமுனை கணத்தின் கருத்தை பயன்படுத்துவதும், வெப்பநிலை மற்றும் மின்கடத்தா மாறிலிக்கு இருமுனை தருணங்கள் தொடர்பான சமன்பாடுகளை உருவாக்குவதும் அவரது முதல் பெரிய அறிவியல் பங்களிப்பாகும். இதன் விளைவாக, மூலக்கூறு இருமுனை தருணங்களின் அலகுகள் அவரது நினைவாக டெபிஸ் என்று அழைக்கப்படுகின்றன. 1912 ஆம் ஆண்டில், குறைந்த அதிர்வெண் ஃபோனான்களின் பங்களிப்புகளைச் சேர்ப்பதன் மூலம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் குறிப்பிட்ட வெப்பக் கோட்பாட்டை குறைந்த வெப்பநிலைக்கு நீட்டித்தார்.
1913 ஆம் ஆண்டில், நீல்ஸ் போரின் அணுக்கரு கோட்பாட்டை விரிவுபடுத்தினார். நீள்வட்ட சுற்றுப்பாதைகளை அறிமுகப்படுத்தினார். இந்த கருத்தை அர்னால்ட் சோமர்ஃபெல்ட் அறிமுகப்படுத்தினார். 1914-1915 ஆம் ஆண்டில், பால் ஷெரருடன் (“டெபி-வாலர் காரணி”) படிக திடப்பொருட்களின் எக்ஸ்-ரே வேறுபாடு வடிவங்களில் வெப்பநிலையின் விளைவை டெபி கணக்கிட்டார். 1923 ஆம் ஆண்டில், அவரது உதவியாளர் எரிச் ஹூக்கலுடன் சேர்ந்து, எலக்ட்ரோலைட் கரைசல்களில் மின் கடத்துத்திறன் பற்றிய ஸ்வாண்டே அர்ஹீனியஸின் கோட்பாட்டின் முன்னேற்றத்தை உருவாக்கினார். 1926 ஆம் ஆண்டில் லார்ஸ் ஒன்சேஜரால் டெபி-ஹக்கெல் சமன்பாட்டில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இந்த கோட்பாடு மின்னாற்பகுப்பு தீர்வுகளைப் பற்றிய நமது புரிதலில் ஒரு முக்கிய முன்னோக்கிய படியாகக் கருதப்படுகிறது. 1923 ஆம் ஆண்டில், டெபி காம்ப்டன் விளைவை விளக்க ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். எக்ஸ்-கதிர்கள் எலக்ட்ரான்களுடன் தொடர்பு கொள்ளும்போது அவை அதிர்வெண்ணை மாற்றும்.
மே 1914ல் அவர் ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் அகாடமியின் உறுப்பினரானார். அதே ஆண்டு டிசம்பரில் அவர் வெளிநாட்டு உறுப்பினரானார். 1911 ஆம் ஆண்டில், போஹேமியாவின் ப்ராக் நகரில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பேராசிரியராக நியமனம் பெற்றபோது, டெபி சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழகத்தில் தனது பழைய பேராசிரியராகப் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து 1912ல் உட்ரெக்ட், 1913ல் கோட்டிங்கன், 1920ல் ஈ.டி.எச் சூரிச், 1927ல் லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1934ல் பேர்லினுக்கு சென்றார். அங்கு ஐன்ஸ்டீனுக்குப் பிறகு அவர் கைசர் வில்ஹெல்ம் நிறுவனத்தின் இயக்குநரானார். இயற்பியலுக்காக இப்போது மேக்ஸ்-பிளாங்க்-இன்ஸ்டிட்யூட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவருக்கு 1935ல் லோரென்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டது. 1937 முதல் 1939 வரை அவர் டாய்ச் பிசிகலிசே கெசெல்செஃப்ட்டின் தலைவராக இருந்தார். மூலக்கூற்றமைப்பில் இவரது பங்களிப்புக்காகவும், குறிப்பாக இருமுனையத் திருப்புத்திறன், மற்றும் எக்சு-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காகவும் இவருக்கு 1936 ஆம் ஆண்டுகான வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி நவம்பர் 2, 1966ல் தனது 82வது அகவையில் இத்தாக்கா, நியூயார்க்கில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள் இன்று (மார்ச் 24, 1494).
by mohan
written by mohan
சார்சியஸ் அகிரிகோலா (Georgius Agricola) மார்ச் 24, 1494 ஜெர்மனியில் பிறந்தார். சார்சியஸ் அகிரிகோலா என்ற பெயர் “சார்ச் பாயர்” என்ற இவரது இயற்பெயரின் இலத்தீன் வடிவமாகும். 1514ல் இருந்து 1518 வரை இவர் பழஞ்செம்மொழி இலக்கியம், தத்துவம் மொழியியல், ஆகிய பாடங்களை இலெப்சிக் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது அந்த காலத்து வழக்கப்படி அவர் தமது பெயரை இலத்தீன் வடிவில் அமைத்துக் கொண்டார். 1518ல் இருந்து 1522 வரை சுவிக்கா என்னும் பள்ளியில் இலத்தீனையும், கிரேக்கப் பாடங்களையும் கற்றார். பின்னர் அவர் இலெப்சிக்குக்குத் திரும்பி மருத்துவம் படிக்க தொடங்கினார். ஆனால் அங்கு நடந்த இறையியல் சண்டைகளால் பல்கலைக் கழகம் சரிவர நடக்காததால் அவரால் தொடர்ந்து அப்படிப்பை மேற்கொள்ள முடியவில்லை. காலம் முழுவதும் கத்தோலிக்கக் கிறித்துவராக இருந்த இவர் நல்லதொரு சூழ்நிலை நிலவிய இத்தாலி நாட்டுக்கு 1523ல் சென்றடைந்தார். அங்கு இவர் மருத்துவம், இயற்கை அறிவியல், தத்துவம் ஆகிய பாடங்களை பலோக்னா, பாடுவா ஆகிய இடங்களில் கற்றார். வெனிஸ் நகரத்தில் தமது மருத்துவ ஆய்வகப் படிப்புகளை முடித்தார்.
வெனிஸ் நகரத்தில் அல்டைன் அச்சகத்தில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்து “காலென்” என்பவரின் மருத்துவ நூல் தொகுப்பைத் தயாரித்தார். இது 1525ல் வெளியிடப்பட்டது. இந்த பணியில் இவர் தாமஸ் மூர் மற்றும் அவருடைய செயலாளர் ஆக இருந்த சான் கிளமண்ட் என்பவருடன் இணைந்து செயல்பட்டார். மூரினுடைய “கற்பனை வாதம்” (உட்டோப்பியா) என்ற நுால் இவரை பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும். இது இவர் சாக்சன் சுரங்க மாவட்டத்தில் இருந்த போது சட்டத்தையும் சமூக வழக்கங்களையும் படிக்க உதவியது. உடலியலில் மாபெரும் அறிஞரான எராஸ்மஸைச் சந்தித்து அவரது நண்பர் ஆனார். ஏராஸ்மாஸ் அக்ரிகோலாவைப் பல நுால்கள் எழுதும்படி தூண்டிவிட்டார். இவர் ஏராஸ்மஸின் நுால்கள் பலவற்றை வெளியிட்டார். அக்ரிகோலாவின் கனிம இயல் நூலான பெர்மான்னஸ் என்ற நுாலுக்கு ஏராஸ்மஸ் முன்னுரை எழுதினார். அக்ரிகோலா, மூரும் பிற மூன்று அறிஞர்களுடன் மட்டுமே இம்மதிப்பைப் பெற்றார்.
1526ல் இவர் சாக்சனுக்குத் திரும்பி அங்கு 1527 முதல் 1533 வரை ஜோக்கிம்ஸ்தால் என்ற நகரில் நகர உடலியல் மருத்துவராகப் பணி புரிந்தார். இந்த நகரம் ஐரோப்பாவில் உள்ள உலோகக் கனிமங்கள் செரிந்த சுரங்கங்கள் நிறைந்த ஒரு மாவட்டத்தில் உள்ளது. கனிமங்களில் இருந்து புதிய மருந்தினங்களைக் கண்டறிய அந்த மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சுரங்கங்களுக்கும் உருக்காலைகளுக்கும் சென்று நன்கு கல்வி கற்ற சுரங்க இயலாளர்களுடனும் பழகினார். சுரங்க இயலின் பழைய நுாலாசிரியர் எழுதிய நுால்களை எல்லாம் கற்றறிந்தார். இந்தப் பழக்கம் இவருடைய பிற்கால வாழ்க்கையையும், நுால்களையும் உருவாக்க உதவியது. பெர்மான்னஸ், சிவேடிரி மெட்டாலியா என்ற இவருடைய நுால்களில் இந்த அறிவு சுடர்விட்டுத் தெறிப்பதைக் காணலாம்.
இவருடைய நுாலில் சுரங்கத் தொழில் நோய்கள் பற்றிய பல குறிப்புகளைக் காணலாம். இவர் மிகத் தலைசிறந்த உடலியல் மருத்துவராகச் செயல்பட்டதால் 1532ல் செம்நிட்ஸ் நகரின் நகர உடலியல் மருத்துவர் ஆகி வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்தார். டிரிமெட்டாலியா 12 பகுதிகள் (சுரங்க இயல், உலோக இயல், புவி பொதி இயல் பற்றியவை), டிநேச்சுரா ஃபாசிலியம் பத்து தொகுதிகள் (கனிமவியல் பற்றியன), டிஆர்டுயட் காளிஸ் சப்டிடரான்யி ஓரம் 5 தொகுதிகள் (புவிபொதியியல் பற்றியன) போன்ற புகழ் பெற்ற நுால்களை எழுதினார்.
இவர்தம் 52வது வயதில் பொது வாழ்க்கையில் பர்காவாக (நகரமன்ற உறுப்பினர்) ஈடுபடத் தொடங்கினார். பின்னர் செம்நிட்ஸ் பர்கோமாஸ்டராக (நகரத் தலைவர்) உயர்ந்தார். அமெரிக்கச் சுரங்கப் பொறியாளர் ஹெர்பர்ட் ஹீவர் (பின்னர் அமெரிக்க ஒன்றிய நாட்டுக் குடியரசுத் தலைவர் ஆனவர்) இவருடைய டிரிமெட்டாலியா என்ற நுாலை 1912ல் மொழி பெயர்த்தார். அறிவியலின் செய்முறை அணுகுமுறையைக் கண்டுபிடித்த முன்னோடி அக்ரிகோலாதான் என இவர் தமது நுாலில் பாராட்டி எழுதி உள்ளார். இயற்கை அறிவியலார்களில் முன்னோடியாகத் திகழ்ந்த அகிரிகோலா நவம்பர் 21, 1555ல் ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்ரம்பள்ளி அருகே சுண்ணாம்புகுட்டை தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்திவரப்பட்ட ரூ 2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது; லாட்டரி சீட்டுகள் பறிமுதல்..
by mohan
written by mohan
அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,தென்காசி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் நவமணி ரோந்து பணியில் இருந்த போது அங்கு பழனிசாமி (68) என்ற நபர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக கொடுத்த தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் அமிர்தராஜ் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சிவகிரி தெற்கு தெருவைச் சேர்ந்த பொய்யா பிள்ளை என்பவரின் மகன் பழனிசாமி(68) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் பத்தாயிரத்து ஐநூறு மதிப்புள்ள லாட்டரிச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல் கொள்முதல் நிலையங்களில் திமுகவினரின் தலையீடு இருப்பதாக பாஜக மாநில நிர்வாகி குற்றச்சாட்டு .
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பாஜக மாநில நிர்வாகி நாகராஜன் கள ஆய்வு செய்தார் உடன் விவசாய பிரிவு மாநில துணைத்தலைவர் தொழிலதிபர் சோழவந்தான் மணி.முத்தையா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவசாய பிரிவு மாநில தலைவர் ஜிகே நாகராஜன் கூறும்போதுதமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவு நெல் மூட்டை தேங்கியுள்ளது.வாடிப்பட்டி தாலுகாவில் அமைக்கப்பட்ட வடுகபட்டி தனிச்சியம் நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு நெல் தேங்கியுள்ளது.முதல்வரின் பேச்சுக்கும் கள நிலவரத்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் திமுகவினர் தலையீடு அதிகம் உள்ளது. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இது சம்பந்தமாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநில தலைவரின் ஆலோசனையை ஏற்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக மாநில ஆளுநரை சந்தித்து விரைவில் மனு அளிக்க இருப்பதாக குறிப்பிட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம், மேலூரில் நள்ளிரவில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டு,3 பேர் கைது செய்யப்பட்டனர்.மதுரை மாவட்டம், மேலூர்-சிவகங்கை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ,அங்கு சந்தேகத்திற்கிடமாக திமிங்கலத்தின் எச்சத்தை கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் ரூபாய் பத்தாயிரம் ரொக்கம் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலூர்-சிவகங்கை சாலையில், நள்ளிரவில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் நாகநாதன் தலைமையிலான போலீசார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சிவகங்கையிலிருந்து நத்தத்திற்கு காரில் வந்த அழகு, பழனிசாமி, குமார் உள்ளிட்ட மூன்று நபர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், உடனடியாக மேலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, திமிங்கலத்தின் எச்சத்தினை கள்ளத்தனமாக விற்பனை செய்ய வந்ததாக தகவல் தெரிவித்ததையடுத்து அவர்களிடமிருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கிலத்தின் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் ரூபாய் ரொக்கப்பணம் பத்தாயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் உத்தரவின்பேரில், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேற்படி குற்றமானது வனச் சட்டத்தின்கீழ் வருவதால், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் எதிரிகளையும் வனத்துறையிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இருசக்கர வாகனம் மோதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சிசிடிவி காட்சி.
by mohan
written by mohan
மதுரைதிருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே பெட்ரோல் போட்டுவிட்டு சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குராயூரைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரது மகன் கார்த்திக் விக்னேஷ் 22 இவர் மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தனது மாலை 5 மணி அளவில் சகோதரரின் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றவர் மாலை கல்லூரி முடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இருசக்கர வாகனம் திருப்பரங்குன்றம் அருகே மூலக்கரையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது பெட்ரோல் பங்கில் இருந்து விளாச்சேரியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கல்லூரி மாணவன் கார்த்திக் விக்னேஷ் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் விக்னேஸ்வரன் ஹெல்மெட் அணியாததால் மோதிய வேகத்தில் சாலை மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் பலத்த காயம் அடைந்தார். இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் காயமடைந்த சீனிவாசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் சம்பவத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியில் சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகத்தில் வந்த கல்லூரி மாணவனின் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான காட்சி அப்பகுதியில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்ற மாணவன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் மீது மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பள்ளிக் கல்வித் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வருவதை தடை செய்ய வேண்டும் எனவும் இதை பள்ளி நிர்வாகம் கவனிக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தது இதேபோன்று உயர்கல்வித்துறை அதிகாரிகள் இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் அப்படியில்லையென்றால் இருசக்கர வாகனத்தில் அனுமதிக்கக் கூடாது எனவும் குறிப்பிடுகின்றன குறிப்பிட்ட அளவு வேகத்திலேயே வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கையும் பெற்றோர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக உள்ளது மேலும் முட்டா காலனி இருந்து திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை வரை தடுப்புகள் அமைத்து வாகனத்தில் வரும் வேதத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து விபத்துகளை குறைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாடார் மகாஜன சங்கம் அதன் சார்பு நிறுவனங்களில், நிர்வாக சீர்கேடு மற்றும் நிதி மோசடி செய்வதாக கூறி ,தனி அதிகாரி நியமிக்கக் கோரி, மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய நாடார் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், வரவேற்றார்.முன்னாள் தலைவர் நாடார் மகாஜன சங்கம் முத்துசாமி தலைமை வகித்தார்.தமிழ்நாடு நாடார் பேரவை என் ஆர் தனபாலன், தலைவர் நாடார் பேரவை எர்ணாவூர் நாராயணன், நாடார் முன்னேற்ற சங்கம் பொதுச்செயலர் பெரீஸ் பி. மகேந்திரவேல், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், மாநில துணைத்தலைவர் ரஞ்சன் தயாள தாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், மாவட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் எல்.மணி, மாவட்டதலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் உமா, செல்வக்குமார், இளங்கோ, எலிசா, சுரேஷ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரியில் 112 -வது செவிலியர் பட்டமளிப்பு விழா 306 பேர் பட்டம் பெற்றனர்.
by mohan
written by mohan
வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி பாகாயம் ஸ்கடர் ஆடிடோரீயத்தில் நர்சுகல்லூரியில் 112 -வது பட்டமளிப்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக இந்திய நர்சிங் கவுன்சில், புதுடெல்லியின் தலைவரும் ஆன டாக்டர் திலீப்குமார் மொத்தம் 306 பேருக்கு நர்ஸ் பட்டங்களை வழங்கினார்.மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜே.வி.பீட்டர் வரவேற்றார். முதல்வர் டாக்டர் சாலமன், செவிலியர் கல்லூரியின் டீன் டாக்டர் வத்சலாசதன், கல்லூரி இணைகண்காணிப்பாளர் ஜெயலிண்டா கிறிஸ்டோபர் உள்ளிட்ட பலர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக வானிலை நாள் ( World Meteorological Day ) இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும். ஒவ்வொரு நாட்டின் வானிலை துறையின் அடிப்படை என்னவென்றால், துல்லியமான வானிலை அறிவிப்புகளை தகுந்த நேரத்தில் கொடுப்பதாகும். இதன் மூலம், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது முக்கியமானதாகும். அந்த விருப்பத்தை நோக்கி செயல்பட எல்லா நாட்டின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.
எல்லா நாடுகளுக்கும் இடையே வானிலை தொடர்பான அறிவு, அது சம்பந்தமாக தொழில்நுட்பம், ஆதாரத்தை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு, அதன்மூலமாக வானிலை விவரங்களை வளர்த்து கொள்ள உலக நாடுகள் இடையே ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஏனெனில், ஒருபகுதியில் உள்ள வானிலை நிகழ்வு மற்றொரு பகுதிகளை பாதிக்கக்கூடிய நிலை உள்ளது.
வானிலை, பருவமழை அளவு, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன. இவற்றில், பொதுவாக நமக்குத் தெரிவது, இன்று மழை வருமா வராதா, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா போன்ற சில விஷயங்களே. வானிலை பற்றிய மாற்றங்களையும், இயற்கையைப் பாதுகாப்பதின் அவசியத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே உலக வானிலை தினத்தின் நோக்கம்.
பென்னன்ட்(Pennant) – காற்றின் வேகம் 55-60 mphக்கும்(mph – mile per hour) இடையில் 1950ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ‘உலக வானிலைக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. இதில் 189 உறுப்பு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் ஒரு கருத்தை மையமாக வைத்து வானிலை நாள் கொண்டாடப்படுகிறது.
கி.மு. 687 – சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அபூர்வமான வானியல் நிகழ்வு. செவ்வாய் கிரகம் பூமியுடன் மோதுவது போல மிக அருகில் நெருங்கி வந்ததாம். இரண்டு கோள்களின் ஈர்ப்பு விசை காரணமாக இரண்டின் சுழற்சியும் சுற்று வேகமும் நிலை தடுமாறியது. இந்த இயற்கை நிகழ்வால் வானில் பெரிய இடி முழுக்கமும் வெடிச்சத்தமும் கேட்டது. ஆஸ்திரியப் படை வீரர்கள் 1,85,000 பேர் அந்த இடத்திலேயே கருகி மாண்டதாக Book of Kings & Chronicles என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே இரவில் “புவியே அதிர்ந்தது” விண்மீன்கள் மழை போலப் பொழிந்தன என்று Bamboo Books என்ற சீனப் புத்தகத்திலும் வருணிக்கப்பட்டுள்ளது.
வானிலை மாறுபடுவதால் தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது. தொழிற்சாலைகளால் காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதில் வளரும் நாடுகளை விட,வளர்ந்த நாடுகளுக்கு தான், அதிக பங்கு இருக்கிறது.
வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால், வரும் காலத்தில் வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். வெப்பம் அதிகரிப்பதால் உலகில் உள்ள பனிப்பாறைகள் உருகி எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். மற்ற நாடுகளைப் போல, இந்தியாவும் நாட்டில் உள்ள நதிகளை இணைப்பது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க முடியும்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட தமிழகத்தின் அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு பிறந்த தினம் இன்று (மார்ச் 23, 1893).
by mohan
written by mohan
ஜி.டி. நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் மார்ச் 23, 1893ல் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.
வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார். ஒருமுறை காலி மருந்துப் புட்டி ஒன்றைப் பார்த்தார். அது அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணி என்பதை தெரிந்துகொண்டார். அதை அமெரிக்காவில் இருந்து வரவழைத்து, இங்கு அமோகமாக விற்றார். அந்த ஆண்டில் மட்டும் ரூ.800 லாபம் சம்பாதித்தார். அப்போது அவருக்கு பதினெட்டு வயது. ஹோட்டலில் சர்வராக வேலைபார்த்து, பணம் சேமித்தார். அதில், ஒரு ஆங்கிலேய அதிகாரியின் பைக்கை வாங்கி, அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தார். அதை மீண்டும் பொருத்தி பக்கவாட்டில் இன்னொருவர் அமர சைட்பாக்ஸ் ஒன்றையும் வடிவமைத்து இணைத்தார். இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.
சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார். அப்போது முதலாம் உலகப் போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார். தொழிலை விரிவுபடுத்த பம்பாய் சென்றவருக்கு எதிர்பாராதவிதமாக நஷ்டம் ஏற்பட்டது.
போக்குவரத்து தொழில் செய்த ஸ்டேன்ஸ் என்பவரிடம் ஒரு பேருந்தை கடனாகப் பெற்று பொள்ளாச்சி பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார். யுனைடெட் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தை தொடங்கினார். முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார். இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக்கழகப் படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல. மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை. எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க அதிர்வு சோதிப்பான (Vibrator Tester) என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு. அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.
புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன.
1936ம் ஆண்டு ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார். அதற்கு அவர் கூரிய காரணம் ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல் என்றார்.
மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துகொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார். நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது. எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.
அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார். விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார். சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன. அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது. அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.
1938ம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார். தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார். அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். அக்கல்லூரி தற்போது அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் (GCT) என அறியப்படுகிறது. இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார். நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன. இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.
நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றைப் பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர். இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும் என்றார் பெரியார். நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரிய மதிப்புடைய கருவூலங்கள் என்றார் அறிஞர் அண்ணா. கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர். சி. வி. ராமன். அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பொருட்காட்சி அவருடைய அறிவுத்திறனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.
சாதாரண கிராமத்தில் பிறந்து தனது திறமையால் பல அரிய சாதனைகளைப் படைத்த ஜி.டி.நாயுடு ஜனவரி 4, 1974ல் தனது 81வது வயதில் கோயம்புத்தூரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய ஜெர்மானிய கணிதவியலாளர் அமாலி எம்மி நோய்தர் பிறந்த தினம் இன்று (மார்ச் 23, 1882).
by mohan
written by mohan
அமாலி எம்மி நோய்தர் (Amaliee Emmy Noether) மார்ச் 23, 1882ல் ஜெர்மனியில் பிறந்தார். தந்தை மேக்ஸ் நோய்தர் ஜெர்மனியில் மொத்த வியாபாரிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். நோய்தர் 14 வயதில், அவர் போலியோவால் முடங்கிவிட்டார். பெரும்பாலும் சுய கற்பித்த அவருக்கு 1868ம் ஆண்டில் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அங்கு ஏழு ஆண்டுகள் கற்பித்தபின், பவேரிய நகரமான எர்லாங்கனில் ஒரு இடத்தைப் பிடித்தார். ஒரு பெண்ணாக, நோய்தர் மிகவும் விரும்பப்பட்டார். அவர் புத்திசாலி மற்றும் நட்பாக அறியப்பட்டாலும் அவர் கல்வி ரீதியாக தனித்து நிற்கவில்லை. அவள் குழந்தைப் பருவத்தில் அருகில் இருந்தாள் மற்றும் ஒரு சிறிய உதட்டோடு பேசினாள். ஒரு குடும்ப நண்பர் ஒரு கதையை ஒரு சிறுவர் விருந்தில் ஒரு மூளை டீஸரை விரைவாக தீர்ப்பது பற்றி விவரித்தார். அந்த சிறு வயதிலேயே தர்க்கரீதியான புத்திசாலித்தனத்தைக் காட்டினார். அக்கால பெரும்பாலான பெண்களைப் போலவே சமைக்கவும் சுத்தம் செய்யவும் அவள் கற்றுக் கொண்டாள். அவள் பியானோ பாடங்களையும் எடுத்தாள். எல்லாங்கென் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கல்வி பெற்ற நோய்தர் கோட்டிங்கென் பல்கலைக்கழகத்தில் கல்வியாளராகப் பணியாற்றினார்.
பிரபலமான சுருக்க இயற்கணிதம் என்ற நூலை எழுதியவர். அவரது சுருக்க இயற்கணித பகுதிக்காக பெரும்பான்மையான நேரத்தை செலவிட்ட மிக முக்கியமான கணிதவியலாளர்களில் ஒருவர். அவர் இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தினார். நோட்ஹெரின் தாளில், தியரி ஆஃப் ஐடில்ஸ் இன் ரிங்க் களங்கள், அவர் தனது கருத்துக்களை வழங்கினார்.அவரின் “பரிமாற்ற விதி” இயற்கணிதத்தின் ஒரு சுருக்கமான துணை பகுதியாகும். 1908 முதல் 1919 வரை அவர் இயற்கணித மாற்றமிலிகள் குறித்தும் எண் புலங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். அவரது நோய்தரின் தேற்றம் “தற்கால இயற்பியல் மேம்பாடிற்கு மிகவும் துணைபுரிந்த மிக முதன்மையான கணிதத் தேற்றங்களில் ஒன்றாக” கருதப்படுகின்றது. 1920 முதல் 1926 வரை அவர் பரிமாற்று வளையங்களில் சீர்மங்கள் குறித்த கருதுகோளை உருவாக்கினார்.
1927–35 காலகட்டத்தில் பரிமாற்ற மற்ற வளையங்களைக் குறித்தும் அதிபர சிக்கலெண்கள் குறித்தும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். தவிரவும் பிற கணிதவியலாளர்களுக்கும் அவர்களது ஆய்விற்கு பல கருத்துருக்களை வழங்கி பல ஆய்வு கட்டுரைகளுக்கு வழிகாட்டியுள்ளார். ஏப்ரல் 1935ல் மருத்துவர்கள் நோய்தரின் இடுப்பில் ஒரு கட்டியைக் கண்டுபிடித்தனர். அறுவை சிகிச்சையிலிருந்து ஏற்படும் சிக்கல்களைப் பற்றி கவலைப்பட்ட அவர்கள் முதலில் இரண்டு நாட்கள் படுக்கை ஓய்வெடுக்க உத்தரவிட்டனர். மூன்று நாட்களுக்கு அவள் சாதாரணமாக குணமடைவதாகத் தோன்றினாள். ஏப்ரல் 14 அன்று அவர் மயக்கமடைந்தார், அவரது வெப்பநிலை 109 ° F (42.8 ° C) ஆக உயர்ந்தது. வெப்ப மையங்கள் அமைந்திருக்க வேண்டிய மூளையின் அடிப்பகுதியைத் தாக்கியது. எம்மி நோய்தர் ஏப்ரல் 14, 1935ல் தனது 53வது அகவையில் அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 14 – நான்கு சக்கர வாகனங்கள்.
by mohan
written by mohan
மதுரை மாவட்ட காவல் பணியில் பயன்படுத்திய வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வருகின்ற 29.03.2022 ம் தேதி காலை 10.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது.ஏலம் எடுக்க விரும்புவோர், 27.03. 2022 மற்றும் 28.03.2022-ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 29.03.2022 காலை 08.00மணி முதல் 10.00 மணிக்குள் தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய் ஐந்தாயிரம் முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி நான்கு சக்கர வாகனத்திற்கு 18% முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்,ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இந்த தகவலை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் தெரிவித்துள்ளார்,
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.