விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளுக்கு மொத்த வியாபாரிகள் மூலம் மதுரையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு.இராஜபாளையம் அண்ணப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து நகர் பகுதி மற்றும் கிராம பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன .கடந்த மூன்று தினங்களாக இதுபோன்ற தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன இருந்தபோதும் பொதுமக்களுக்கு சரியாக காய்கறி சென்றடையவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியதை. அடுத்து சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திடீரென அப்பகுதியில் ஆய்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி கிராமப்பகுதிகளில் தனியாக ஒரு இடம் அமைத்து கிராமப் பகுதியில் தனியாக மொத்த வாகனங்களில் காய்கறிகளை கொண்டு சென்று அங்கிருந்து பிரித்து கிராமத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டு தடையின்றி காய்கறி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.