வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் வசித்து வருபவர் கவிதா (32).கவிதா பொன்னை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிவருகிறார்.இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன்தான் வாங்கியுள்ள நிலத்திற்கு பட்டா கேட்டு விண்ணப்பம் செய்து இருந்தார்.கவிதா, வெங்கடேசனிடம் ரூ 40 ஆயிரம் கொடுத்தால் பட்டா மாறுதல் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.இதுகுறித்து வெங்கடேசன் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் கூறியுள்ளார்.காவல்துறையின் ஆலோசனைப்படி நேற்று பொன்னை அலுவலகத்தில் ரூ10 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்த போதுஅங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் விஜய், விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் இளவரசன் ஆகியோர் கொண்ட குழு சுற்றிவளைத்து லஞ்ச பணத்துடன் கவிதாவை கைது செய்தனர்.தீவிர விசாரணைக்கு பின்பு அவரை வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு அனுப்பிவைத்தனர்.கவிதாவின் கணவர் வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Category:
மாவட்ட செய்திகள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த தென்காசி எம்எல்ஏ;முக்கிய உபகரணங்களை வழங்கினார்..
by mohan
written by mohan
தென்காசி மாவட்டம் வீராணம், ஊத்துமலை, நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் ஆய்வு மேற்கொண்டு வீராணத்தில் தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய உபகரணங்கள் வழங்கினார். தென்காசி மாவட்டம் ஊத்துமலை, வீராணம், நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் தென்காசி தொகுதிக்குட்பட்ட வடக்கு காவலாகுறிச்சி, சீவலபுரம், கரையடி உடைப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு தனது சொந்த நிதியில் மின் அச்சுப்பொறி, சுடுநீர் கலன், ஆகியவைகளை வழங்கினார். ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் மற்றும் காம்பவுண்ட் சுவர்கள் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதனை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். பின்னர் ஊத்துமலை ஊராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ அங்கிருந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஊத்துமலை ஊராட்சி செயலாளர் கணேசன், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் முரளி ராஜா,எஸ்ஆர் பால்துரை, திமுக நிர்வாகிகள் சூடாமணி, தங்கத்துரை, காங்கிரஸ் பிரமுகர்கள் கணபதி, சக்திவேல், முஸ்தபா, சோனியா பேரவை பிரபாகர், தெய்வேந்திரன், இளைஞர் காங்கிரஸ் சுப்பையா, மகளிர் காங்கிரஸ் சேர்மக்கனி, தேவி, சங்கீதா, மதிமுக ஆலங்குளம வடக்கு ஒன்றிய செயலாளர் மருதச்சாமிபாண்டியன், ராமசாமி, கண்ணையா, செல்வேந்திரன், ஊத்துமலை டாக்டர் தமிழ்செல்வன், வீராணம் டாக்டர் பிரபாவதி, சுகாதார ஆய்வாளர் ராம்குமார், ஊத்துமலை கணேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டி.கல்லுப்பட்டி நண்பர்கள் வட்டாரம் அமைப்பு ‘ சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் பழங்கள் வழங்கல்:
by mohan
written by mohan
மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனையொட்டிடி.கல்லுப்பட்டி ‘ நண்பர்கள் வட்டாரம் அமைப்பு ‘ சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கடந்த மாதம் 5-ந் தேதி முதல் தொடர்ந்து வீடு வீடாக சென்று மூன்று வேளைக்கும் உணவு மற்றும் பழங்கள் வழங்கி வருகின்றனர்.மதுரையில் கொரானோஇரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது .இந்த வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவால் , விவசாயத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் ,ஜவுளிக் கடைகள் , மளிகை கடைகள்டீ மற்றும் பேக்கரி கடைகள் , சாலையோர வியாபாரிகள் , ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள லட்சகணக்கான ஏழை , எளிய குடும்பங்களை சார்ந்ததொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.இந் நிலையில் , மதுரை மாவட்டம்டி.கல்லுபட்டி ‘ நண்பர்கள் வட்டாரம் அமைப்பு ‘ சார்பில் உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கைலாசம் , ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் விஜய பார்த்திபன் , பாஸ்கரன் , மாற்று திறனாளி முத்துச்சாமி ஆகியோரது உறுதுணையாலும் , பங்காளிப்பாலும்’ நண்பர்கள் வட்டாரம் அமைப்பு’ அனைத்து நிர்வாகிகள் மற்றும்உறுப்பினர்கள் , நண்பர்களின்கூட்டு முயற்சியின் மூலம்இணைந்து தங்களால் இயன்றநன்கொடை அளித்தும் , சக நண்பர்களிடமிருந்து பெற்ற நன்கொடைகள் மூலமாககடந்த மே மாதம் 9-ந்தேதி முதல் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு மற்றும் ஆதரவற்றோருக்கு வீடு வீடாக சென்று மூன்றுவேளைக்கும் உணவு மற்றும் பழங்கள் வழங்கி வருகின்றனர்.மதுரை மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும்சூழலில் ‘ நண்பர் வட்டாரம் அமைப்பு ‘ இது போன்ற மனித நேய பணி அனைத்து தரப்பு மக்களுக்கு பெரும் ஆறுதலாகவும் , நம்பிக்கை ஊட்டுவதாகவும் இதே போன்றுநம்மால் இயன்ற உதவியை மற்றவருக்கு செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை அளிப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்
மனதார பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று (ஜூன் 4, 1941).
by mohan
written by mohan
தர்சன் அரங்கநாதன் (Darshan Ranganathan) ஜூன் 4, 1941ல் வித்யாவதி மார்கனுக்கும் சாந்தி சுவரூப்புக்கும் பிறந்தார். இவர் தில்லியில் அடிப்படைக் கல்வி கற்றார். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் 1967ல் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். தில்லி மிராண்டா கல்லுரியில் விரிவுரையாளராகச் பணியில் சேர்ந்தவர், பின்னாட்களில் அக்கல்லூரியின் வேதியியல் துறையின் தலைமையை ஏற்றுள்ளார். பிறகு லண்டனிலுள்ள ராயல் கழகத்தின் ‘கண்காட்சி 1851’ ஆய்வுதவி பெற்று, முதுமுனைவர் பட்ட ஆய்விற்காக இலண்டன் இம்பீரியல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு இவர் டிரெக் பார்ட்டனிடம் ஆய்வு செய்துள்ளார். தர்சன் அரங்கநாதன் 1970ல் கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் ஆய்வைத் தொடங்கியுள்ளார். இதே கான்பூர் தொழில்நுட்பக்கழகத்தில் பேராசிரியராக இருந்த எஸ். அரங்கநாதனை மணந்தார்.
தன் கணவரோடு இணைந்து இவர் கரிம வினை இயங்கமைப்பில் உள்ள அறைகூவலான சிக்கல்கள் (1972), உயிர்த்தொகுப்புக் கலை: தொகுப்பு வேதியியலாளர்களுக்கான அறைகூவல் (1976), கரிம வினை இயங்கமைப்பில் உள்ள மேலுஞ்சில அறைகூவலான சிக்கல்கள் (1980) ஆகிய நூல்களை எழுதினார். மேலும் “நடப்புக் கரிம வேதியியல் சுருக்கக் குறிப்புகள்” இதழின் பதிப்பிலும் ஈடுபட்டார். இவர் உதவித் தொகைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் கான்பூரில் தனது ஆய்வைத் தொடர்ந்தார். அவரது கணவர் அங்கே பணியில் இருந்ததால் எழுதப்படாத நடைமுறை விதியால் புலப்பணியாளராக இவரால் சேர இயலவில்லை. இவர் 1993ல் திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல் தொழில்நுட்பத் துறையிடை ஆய்வுக்கான தேசிய நிறுவனத்தின் மண்டல ஆய்வகத்திலும் 1998ல் ஐதராபாதில் உள்ள இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்திலும் தன் ஆய்வைத் தொடர்ந்தார். அங்கே இவர் இணை இயக்குநர் ஆனார்.
தர்சன் அரங்கநாதன் உயிர்க்கரிம வேதியியலில் பெரும்பணி ஆற்றியுள்ளார். இதில் “புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக” மிகவும் பெயர்பெற்றார். இவர் “மீமூலக்கூறு தொகுப்பு, மூலக்கூறு வடிவமைப்பு, அரிய உயிரியல் நிகழ்வுகளின் வேதியியல் ஒப்புருவாக்கம், செயல்முனைவுக் கலப்பு பெப்டைடுகளின் தொகுப்பு, மீநுண்குழல்களின் தொகுப்பு ஆகிய ஆய்வுகளுக்காகப் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவர் இசபெல்ல கார்பேவுடன் இணைந்து அமெரிக்கக் கப்பல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் கூட்டாகப் பணிபுரிந்தார். இவரது சிறப்பார்வம் இயற்கை உயிர்வேதி நிகழ்வுகளை ஆய்வகத்தில் மீட்டுருவாக்குவதி குவிந்திருந்தது. ஃஇஸ்ட்டாமைன், ஃஇஸ்ட்டாடைன் ஆகியவற்றில் இருந்து, அவற்றின் ஓர் உட்கூறான இமிடசோலைத் தன்னியக்கமுறையில் பிரித்தெடுப்பதற்கான நெறிமுறையை உருவாக்கினார். இது மருந்தாக்கத்துக்குப் பெரும்பங்காற்றியது. இவர் யூரியா சுழற்சியை ஆய்வகத்தில் ஒப்புருவாக்கம் செய்யும் வழிமுறையை உருவக்கினார். இவர் பின்னாட்களில் பல்வேறு புரதங்களைச் செய்வதிலும் தானே ஒருங்கிணையும் பெப்டைடுகளைக் கொண்டு மீநுண்குழல்களை உருவாக்குவதிலும் வல்லவரானார்.
புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் ஜூன் 4, 2001ல் மார்பகப் புற்றால் தனது 60வது அகவையில் தன் பிறந்த நாளன்று இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது கணவர், இவரின் நினைவாக, 2001ல் ஆண்டுக்கு இருமுறை அமைந்த விரிவுரைகளைப் பேராசிரியர் தர்சன் அரங்கநாதன் நினைவு விரிவுரை எனும் பெயரில் உருவாக்கினர். இதில் அறிவியல் தொழில்நுட்பத்தில் பெயர்பெற்ற பெண் அறிவியலாளர்கள் விரிவுரையாற்ற அழைக்கப்படுவர்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாலையோரம் ஆதரவற்று இருக்கும் உறவுகளுக்கு உணவளித்துவரும் செந்தளிர் மனிதவள மேம்பாட்டுஅமைப்பு
by mohan
written by mohan
கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சுற்றுலா தளங்கள் கோவில்கள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்கள் அடைக்கப்பட்டுள்ளன.இதனால் ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஏராளமானோர் வாழ்வாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் சாலைகளில்சுற்றித்திரியும் ஆதரவற்றவர்கள் ஒரு வேளை உணவு கிடைக்காமல் மிகவும் பரிதவித்து வருகின்றனர்.அவர்களுக்கு உணவு அளிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளும் தன்னார்வலர்களும் சேவையாற்றி வருகின்றனர்.அந்த வகையில் செந்தளிர் மனிதவள மேம்பாட்டு அமைப்பு சாலையோரம் ஆதரவற்ற இருக்கும் உறவுகளுக்கு உணவளித்து அவர்களின் பசியை தீர்த்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக சென்னையில் தொடர்ந்து மதுரையில் தெப்பக்குளம் மீனாட்சி அம்மன் கோவில் கீழவாசல் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினந்தோறும் உணவளித்து பசியாற்றி வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு அரசு மற்றும் டாஃபே நிறுவனம் இணைந்து சிறு குறு விவசாயிகளுக்கு இலவச கோடை உழவு:
by mohan
written by mohan
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் டா பே நிறுவனம் இணைந்து விவசாயிகளுக்கு இலவசமாக கோடை உழவு செய்து கொடுக்கும் திட்டத்தினை 2-வது முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு மற்றும் டா பே நிறுவனம் இணைந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள மேலத்துலுக்கங்குளம் கிராமத்தில் இத்திட்டத்தினை துவக்கியுள்ளது.இதில், 2 ஏக்கருக்கு கீழ் உள்ள சிறு குறு விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டாவை இணைத்து பதிந்துவைக்க வேண்டும்.முன்னுரிமை அடிப்படையில், பதிந்துவைத்தவர்களுக்கு உழவு செய்து கொடுக்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக தமிழகம் முழுவதும் 1லட்சம் ஹெக்டேர் மற்றும் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் 8000 ஹெக்டேர் நிலம் இலவசமாக உழவு செய்யப்பட்டது.2-வது முறையாக 1,50,000 ஹெக்டேர் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் 15,000 ஹெக்டேர் நிலமும் உழவு செய்ய திட்டமிட்டு மேலத்துலுக்கங்குளம் கிராமத்தில்தொடங்கப்பட்டது .இந்நிகழ்வில், தமிழ்நாடு வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், வேளாண்மை பொறியியற் துறை செயல் பொறியாளர் சங்கர் ராஜ், பொறியாளர் உதயன், அருப்புக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் சகாயஜோஸ் ஆகியோர் கலந்து கொண்டு இலவச கோடை உழவு நிகழ்ச்சியினை தொடங்கிவைத்தனர்..இதுகுறித்து மேலத்துலுக்கங்குளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் கூறும்போது:- தமிழக அரசும்,டாஃபே நிறுவனமும் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள இலவச கோடை உழவு செய்யும் இத்திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பதிந்து பயன்பெற வேண்டும். கோடை உழவு என்பதால் இத்திட்டம் இரண்டு மாதமே நடைபெறும்.தமிழ் நாடு உழவன் செயலி அல்லது ஜே.பார்ம் செயலியை பதவிறக்கம் செய்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். உதவி எண்18004200100 ஆகும் எனக் கூறினார்.இந்நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் ரெங்கசாமி, நந்தி குண்டு ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி சீனிவாசன், மல்லாங்கிணறு காவலர் மணிகண்டன் ஆகியேர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை , சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் சிறப்பாக செய்திருந்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரானா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் கிராமங்களுக்கு சுகாதாரத்துறை சார்பாக கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகங்கள் வழங்கபட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக மதுரைமாவட்டம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளந்திரி கிராமத்தில்பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கழக கொடி ஏற்றப்பட்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம் ஏற்பாட்டில் 2 ஆயிரம் பேருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்து கொடியேற்றி பிரியாணி பொட்டலங்களை வழங்கினார். நகர செயலாளர் சேகனா வரவேற்றார். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சுந்தரமகாலிங்கம் முன்னிலை வகித்தார். முன்னாள் நகர செயலாளர் முகம்மது அலி, நகர நிர்வாகிகள் சங்கர், முகைதீன்பிச்சை, மாவடிக்கால் நெடுமாறன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வவேந்திரன் தினேஷ், முருகையா, கணேசன், காசி, உவைஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடையநல்லூர் ஒன்றிய பகுதிகளான இடைகால், வேலாயுதபுரம், நயினாரகரம், பொய்கை, கள்ளம்புளி, கோவிலாண்டனூர், கம்பனேரி, வலசை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் கொடியேற்றி இனிப்பு மற்றும் கபசுரக் குடிநீர் முகக் கவசங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் சி.எம்.குமார், வேலாயுதபுரம் குமார், மகேஷ், சுதாகர், சுரேஷ், குட்டி என்ற சீதாராமன், தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது;பொதிகைத் தமிழ்ச் சங்கம் வரவேற்பு..
by mohan
written by mohan
செம்மொழியாம் எம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழ் எழுத்தாளர்களுக்குச் சிறப்புச் சேர்க்கும் விதத்திலும் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து அதன் தலைவர் கவிஞர் பேரா. அறிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில்,புதியதாக ‘இலக்கியமாமணி’ என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் விருது வழங்கப்படும் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் ‘பெற்றவர்களை’ ஊக்குவிக்கும் வகையில் அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்றும் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்திருப்பதை பொதிகைத் தமிழ்ச் சங்கம் நன்றியோடு வரவேற்கிறது. இந்த அறிவிப்புகள் தமிழ்மொழிக்கும், தமிழறிஞர்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும். தமிழுக்கும், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களின் நலனுக்குமான இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர்.மு.க.ஸ்டாலின் அவர்களை, பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக பாராட்டி மகிழ்கிறேன். இவ்வாறு பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்று நட்டு அறுசுவை விருந்தளித்த யூனியன் சேர்மன்
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் திருவுருவ படத்திற்கு யூனியன் சேர்மன் சிங்கராஜ் மலர் தூவி மரியாதை செய்தார் இவருடன் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் கலந்து கொண்டு மரியாதை செய்தார்
அதன் பின்பு இருவரும் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய சேர்மன் .ஒன்றிய கவுன்சிலர்கள்மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தத்தனேரி மூலக்கரை மயானங்களில் ஒரு மாத காலத்திற்கு இறந்தவர்களின் உடலை எரியூட்ட கட்டணம் கிடையாது – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
by mohan
written by mohan
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் ஊழியர்கள் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்றது.இதில் நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கலந்து கொண்டுமுகாமை பார்வையிட்டனர்.இம்முகாமில் அர்ச்சகர்கள் ஊழியர்கள் பணியாளர்கள் ஆர்வமுடன் குடும்பத்துடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.தொடர்ந்து பேட்டியளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் குடும்பத்தினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொரானாவைரஸ் பெரும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மதுரை மாநகராட்சி மதுரை சிவகங்கை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து தத்தநேரி மூலக்கரை மயானங்களில் ஒரு மாத காலத்திற்கு இலவசமாக எரியூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.இந்த முகாமில் மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர் மாநகராட்சி ஆணையாளர் விஷாகன் மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் நகர சுகாதார அலுவலர் குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் திடீர் பணி நீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி : தமிழக வனிகவரித்துறை அமைச்சர் பேட்டி..!!!
by mohan
written by mohan
மதுரை மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் பணிகளில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கும் திட்டத்தை மதுரை அருகே கருப்பாயூரணியில் வைத்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி,நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்மொத்தம் 3894 பயனாளிகளுக்கு 2.31 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவியும்,நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து பெட்டகம் மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவையும் வழங்கப்பட்டது,பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வனிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி…
..முன் களப்பணியாளர்கள் பல்வேறு திட்டங்கள் திமுக காலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது,கொரோனாவை ஒழிக்க மேற்கொண்ட தீவிர முயற்சியால் மதுரை மாவட்டத்தில் 1500 ஆக இருந்த தொற்று பாதிப்பு தற்போது 500 ஆக குறைந்துள்ளது,கிராமப்புறங்களில் தொற்று பாதிப்பை கண்காணிக்க பெண்களைக் கொண்ட சிறப்பு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது,கொரோனோ முதல் அலையின் போது ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்கள் ஓராண்டு ஒப்பந்த காலம் நிறைவு பெறும் முன்பே பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பணி வழங்க கோரி ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து நிலையில் தற்போது 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களில் பணியமர்த்தப்படியுள்ளதாக தெரிவித்தார்,29 ஆயுஷ் மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை-“ஆஸ்பத்திரி அவசரத்திற்கு இலவசம்” பணம் வாங்காமல் இலவசமாக ஆட்டோ ஓட்டி சேவை செய்து கொண்டிருக்கிறார் ஆட்டோ டிரைவர்.
by mohan
written by mohan
ஊரடங்கு காலம் என்பதால் அடிப்படையிலேயே பொருளாதார நெருக்கடிகளை ஆட்டோ ஓட்டுனர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும், மூன்று குழந்தைகளையும், கூலி வேலைக்கு செல்லும் மனைவியையும் கொண்ட லெட்சுமணன் பெரும் நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறார்.அந்த நெருக்கடிகளை மீறியும்தன்னுடைய ஆட்டோவில் “ஆஸ்பத்திரி அவசரத்திற்கு இலவசம்” என்ற வாசகங்களை எழுதிக்கொண்டு மருத்துவமனை வாயில்களில் உதவிக்கரம் நீட்டி காத்திருக்கிறார்.யார் வந்து ஏறினாலும் பத்திரமாக வீட்டிற்கும், வீட்டிலிருந்து மருத்துவமனைக்கும் கொண்டு சேர்க்கிறார்.இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் லட்சுமணனுடன் பேசும்போது;
கடந்த 2 1/2 ஆண்டுகளாக ஆட்டோ தொழில் செய்து வருவதாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆட்டோவை வீட்டில் சும்மா நிறுத்தி வைத்திருக்காமல் நம்மால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்யலாம் என்ற நோக்கத்தில் கடந்த 25 நாட்களாக இலவசமாக ஓட்டிக் கொண்டிருப்பதாகவும்,.அவசர காலத்தில் போன் செய்து அழைத்தாலும் வீட்டிற்கே போய் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பதாகவும்,. ஆனால், வறுமையில் இருப்பவர்களிடம் ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டேன் எனவும் கூறுகிறார்.கொரோனா காலம் முழுவதும் இந்த உதவியை தொடர்ந்து செய்ய வேண்டும் என நினைக்கிறேன் எனவும், ஆனால், காவல்துறை கெடுபிடிகளை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் எனக்கு அனுமதி பாஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார் இந்த நிலையில் மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன்.. பாராட்டு தெரிவித்தார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனாவில் இறந்த பத்திரிகையாளருக்கு நம்பிராஜன் குடும்பத்தாருக்கு அரசு நிதியுதவி:
by mohan
written by mohan
கொரோனாவில் இறந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி ,மதுரை மாவட்டத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்நம்பிராஜன்,
மகள் சுகந்தி, மருமகன் ராமு ஆகியோருக்கு, இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரூ 10 லட்சத்தை முதல்வர் வழங்கினார். உடனடியாக நிதியுதவி வழங்கிய முதல்வருக்கு மதுரை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .இந்த நிதியை விரைந்து பெற்றுத்தர உதவியாக இருந்த அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் , மதுரை பி.ஆர்.ஓ. நவீன் பாண்டியன், உதவி பி.ஆர்.ஓ .வினோத் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.என செய்தியாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
MASA அமைப்பு சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி… சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் ஒப்படைப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை MASA அமைப்பு சார்பாக இன்று 03/06/2021) கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரம் இராமநாதபுரம் MLA காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் கீழக்கரை மக்கள் நலன் கருதி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மக்தூமியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், MASA தலைவர் அகமது முகைதின், துணை தலைவர் அர்சத், செயலாளர் ஹாரிஸ், பொருளாளர் ஹாதில் கலந்து கொண்டு வழங்கினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எந்திரம் அமைக்க மக்கள் டீம் கோரிக்கை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் கீழக்கரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் உடல்நிலை குறைவால் வருகிறார்கள், அதிலும் கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக வருகிறார்கள். அதில் சிலருக்கு சிடி ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் நிலையில் அந்நோயாளிகள் ஸ்கேன் எடுப்பதற்காக ராமநாதபுரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த குறையை போக்கும் வண்ணம் மக்கள் டிம் சார்பில் அதன் நிறுவனர் காதர் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு ஸ்கேன் எந்திரம் அமைத்து தரக்கோரி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்க இடம் கோரிக்கை மனு அளித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கின் காரணமாக பலர் வேலை இழந்து வறுமையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது..அதனால் உசிலம்பட்டி பகுதியில் உள்ள நலிவுற்றோருக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர் அந்த வரிசையில் உசிலை நகர அரிமா சங்கம் சார்பில்மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.. உசிலம்பட்டி தாசில்தார் விஜயலட்சுமி மண்டல துணை வட்டாட்சியர் மாலதி வருவாய் ஆய்வாளர் சுந்தர பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உசிலம்பட்டி நகர் அரிமா சங்க தலைவர் வினுபாலன் பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் நலிவுற்றோருக்கு மளிகை பொருட்களை வழங்கினர்..
உசிலைசிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி – கலைஞர் பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
by mohan
written by mohan
மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் விழா அனைத்து பகுதிகளிலும் திமுக சார்பில் கொண்டபடப்பட்டது. இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விஜய் ஏற்பாட்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவுபொட்டலங்கள் வழங்கப்பட்டது. இதில் திமுக ஒனறிய செயலாளர் சுதந்திரம், நகரசெயலாளர் தங்கமலைபாண்டி மற்றும் திமுக நிர்வாகிகள் சோலைரவி, தங்கபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
உசிலைசிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாதரை கிராமத்தில் திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
by mohan
written by mohan
மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் விழா அனைத்து பகுதிகளிலும் திமுக சார்பில் கொண்டபடப்பட்டது. இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உத்தரவுப்படி ஒன்றிய செயலாளர் சுதந்திரம் ஆலோசனையின் படி மாதரை கீழ கிளை செயலாளர் ஜெயராஜ் ஏற்பாட்டில் கிளை செயலாளர்கள் முருகன் புண்ணியமூர்த்தி, கண்ணன் ஆகியோர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர். இதில் அவைத் தலைவர் சுப்பிரமணி, திமுக நிர்வாகிகள் தனுஷ்கொடி, சின்னபாண்டி, பாண்டி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக திமுகவினர் கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
உசிலைசிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சீமானூத்து கிராமத்தில் மறைந்த கலைஞர் பிறந்த நாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
by mohan
written by mohan
உசிலம்பட்டி அருகே சீமானூத்து கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் விழா அனைத்து பகுதிகளிலும் திமுக சார்பில் கொண்டபடப்பட்டது.
இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து ஊராட்சிட்குட்பட்ட கொக்குடையான்பட்டி, கருப்புகோவில், அன்னபார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி தலைமையில் உத்தப்பநாயக்கணூர், வடக்கம்பட்டி திமுக அளைஞரணி நிர்வாகிகள் ஏற்பாட்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவுபொட்டலங்கள் வழங்கப்பட்டது. மேலும் உத்தப்பநாயக்கணூர் கிராமத்தில் தனியார் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கும் உணவுபொட்டலங்கள் வழங்கப்பட்டது.
உசிலைசிந்தனியா
You must be logged in to post a comment.