மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனையொட்டிடி.கல்லுப்பட்டி ‘ நண்பர்கள் வட்டாரம் அமைப்பு ‘ சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கடந்த மாதம் 5-ந் தேதி முதல் தொடர்ந்து வீடு வீடாக சென்று மூன்று வேளைக்கும் உணவு மற்றும் பழங்கள் வழங்கி வருகின்றனர்.மதுரையில் கொரானோஇரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது .இந்த வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவால் , விவசாயத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் ,ஜவுளிக் கடைகள் , மளிகை கடைகள்டீ மற்றும் பேக்கரி கடைகள் , சாலையோர வியாபாரிகள் , ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள லட்சகணக்கான ஏழை , எளிய குடும்பங்களை சார்ந்ததொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.இந் நிலையில் , மதுரை மாவட்டம்டி.கல்லுபட்டி ‘ நண்பர்கள் வட்டாரம் அமைப்பு ‘ சார்பில் உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கைலாசம் , ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் விஜய பார்த்திபன் , பாஸ்கரன் , மாற்று திறனாளி முத்துச்சாமி ஆகியோரது உறுதுணையாலும் , பங்காளிப்பாலும்’ நண்பர்கள் வட்டாரம் அமைப்பு’ அனைத்து நிர்வாகிகள் மற்றும்உறுப்பினர்கள் , நண்பர்களின்கூட்டு முயற்சியின் மூலம்இணைந்து தங்களால் இயன்றநன்கொடை அளித்தும் , சக நண்பர்களிடமிருந்து பெற்ற நன்கொடைகள் மூலமாககடந்த மே மாதம் 9-ந்தேதி முதல் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு மற்றும் ஆதரவற்றோருக்கு வீடு வீடாக சென்று மூன்றுவேளைக்கும் உணவு மற்றும் பழங்கள் வழங்கி வருகின்றனர்.மதுரை மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும்சூழலில் ‘ நண்பர் வட்டாரம் அமைப்பு ‘ இது போன்ற மனித நேய பணி அனைத்து தரப்பு மக்களுக்கு பெரும் ஆறுதலாகவும் , நம்பிக்கை ஊட்டுவதாகவும் இதே போன்றுநம்மால் இயன்ற உதவியை மற்றவருக்கு செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை அளிப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்
மனதார பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.