11
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 5 டேங்கர் லாரிகளில் 66.12 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் இன்று மதியம் மதுரை கூடல் நகர் வந்து சேர்ந்தது.இதற்காக டேங்கர் லாரிகள் ரயில்வே பிளாட் வேகன்களில் இருந்து இறங்கும் வகையில் சாய்வுதளப் பாதை புதிதாக கூடல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு வந்த 24 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும்.இதையும் சேர்த்து இதுவரை தமிழகத்திற்கு ரயில் மூலம் 1393.71 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.