தேசிய செய்திகள்
கோவில்பட்டி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அடிப்படை வசதி கோரிக்கை.. வீடியோ…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேவுள்ள கோவில் பட்டி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு சுடுகாடு மற்றும் அடிப்படை வசதி அமைத்து தர கோரிக்கை.
கோவில் பட்டி கிராமத்தில் ஐம்பத்திற்கு மேற்பட்ட குடுபங்கள் வசித்து வருகிறனார்.தற்போது அப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு சுடுகாடு மற்றும் எந்தவொரு வசதியும் இல்லை. அவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் உடல்களை புதைத்து வருகின்றனார். ஆனால் அந்த நிலத்தில் முள் புதர் வளர்ந்துள்ளது.பிணங்களை எரிக்க ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து சென்று எரிக்க வேண்டிய நிலை உள்ளது. தாழ்த்தப்பட்ட இருசமூகத்தினர் வசித்து வருகின்றனார் .மாற்று சமூகத்தினருக்கு அனைத்து வசதி கொடுத்துள்ளனார்.ஆனால் அருந்தியர் வசிக்கும் பதிகளுக்கு பாராபட்சம் காட்டுவதாக கோவில்பட்டி ஊராட்சி மன்றத்தின் மீது புகார் தெரிவித்து வருகின்றனார். அருந்தியர் பகுதிகளுக்கு எந்தவொரு திட்டத்தை செய்து தருவதில்லை. அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் சுடுகாடு, எரியூட்டு கொட்டகை அமைத்து தர வேண்டும் என ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வைகை காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேனி செய்தியாளர் பால் பாண்டி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனியில் தேவேந்திர குல வேளாளர் அரசாணையை வெளியிட வலியுறுத்தி சங்கு ஊதி போராட்டம்…
தேனி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேவேந்திர குல வேளாளர் அரசானையை உடனடியாக வெளியிட மத்திய அரசிற்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய கோரி சங்கு ஊதி போராட்டம்.S. P. தில் பிரசாத் B. Com., முன்னிலையிலும், மாவட்ட செயலாளர் கௌர்மோகன்தாஸ் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக பெ.நல்லுச்சாமி கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட இணைச்செயலாளர்கள் பாலா, வீரமணி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பால்பாண்டி, தேனி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
7 வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் ! கண்டுகொள்ளாத அரசைக் கண்டித்து திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்!
கிராம நிர்வாக அலுவலர் பணியை தொழில்நுட்ப பணியாக வரையறை செய்ய வேண்டும் என்பமை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 7 வது நாளாக மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளனர். பிறப்பிலிருந்து மனிதன் இறக்கும் வரை இடைப்பட்ட வாழ்வில் அவர்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வழங்குவது அவர்களின் முக்கியப் பணி, இவற்றில் 50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே கணினி மூலம் ஆன்லைன் பணிகளாக மாற்றிவிட்டது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பணியை மட்டும் தொழில்நுட்ப பணியாக வரையறை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
அதேபோல் பதவி உயர்வில் 30% மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதால் 6 ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் சூழல் உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களில் 90% பேர் பட்டதாரிகளாக இருப்பதாலும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தாமதமாவதாலும், கிரேட்-1, கிரேட்-2 என பணியை பணிபுரியும் காலத்தைப் பொறுத்து வரையறை செய்து அதற்கான ஊதியம் வழங்க வேண்டும், மேலும் சொந்த மாவட்டங்களைவிட்டு மற்ற மாவட்டங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறுவிதமான போராட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே அரசு இதுவரை அழைத்துப் பேசாத காரணத்தால் 7 வது நாளாக மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் கோட்டத்தில் உள்ள திண்டுக்கல் மேற்கு வட்டம், திண்டுக்கல் கிழக்கு, ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம்,உள்ளிட்ட வட்டங்களைச் சேர்ந்த அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டப் பொருளாளர் திரு.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்ட பிரச்சார செயலாளர் திரு.முருகன், மாவட்ட துணைத்தலைவர் திரு.முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேர்தல் ஆணையர் திரு.முருகேசன், மாவட்ட தகவல் தொடர்பு செயலாளர் திரு.பாரதி உள்பட 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் வருவாய்த்துறை தொடர்பான அனைத்து பணிகளும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், திண்டுக்கல் ..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விழிப்புணர்வு பதிவு – ஒரு முக்கிய அறிவிப்பு 2018 பிறப்பு சான்றிதழ் வழிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது…
01.01.2018 முதல் பிறக்கும் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற புதிய நடைமுறை அமலுக்கு வந்தது நாம் அறிந்த விசயம், ஆனால் இந்த வருடம் அதன் சட்ட திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய வழிமுறையின் படி 01.01.2018 முதல் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பெற PIC ME ID மற்றும் RCH NO ஐ நாம் ஆரம்ப சுகாதார நிலயத்தில் அல்லது அரசு மருத்துவ மணையிலோ அல்லது 102 என்ற இலவச எண்ணிற்க்கு போன் செய்தோ அந்த நம்பரை பெற்று பிரசவம் பார்க்கும் மருத்துவமணையில் கொடுத்தால் மட்டுமே பிறந்த பதிவு Birth Certificate கிடைக்கும்.
இதன் முழு விளக்கமும் ஆஸ்பத்திரியிலோ ஆரம்ப சுகாதார நிலையத்திலோ மக்களுக்கு தெரிவிக்காமல் பிறந்த பதிவுக்கு PIC ME ID, RCH NO அவசியம் என்று சுருக்கமாக எழுதி இருக்கிறார்கள்.
இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் 2018ம் வருடத்திலிருந்து தான் இந்த நடைமுறை இருக்கிறது என்பதால் 2018ம் ஆண்டு முதல் பிறக்கும் குழந்தைக்கு பிறந்த பதிவு எடுக்க ஆஸ்பத்திரியில் PIC ME ID, RCH NO கேட்கிறார்கள். இப்பொழுது நாம் ஆரம்ப சுகாதார நிலையமான (பால்வாடி) யில் PIC ME ID, RCH NO கேட்டால். அதற்கவர்கள் ஆறுமாதத்திற்கு முன் நாங்கள் இதைப் பற்றி அறிவித்தோம் என கூற வாய்ப்புள்ளது. அப்பொழுது பதிவு செய்யாமல் விட்டவர்களுக்கு PIC ME ID, RCH NO வழங்க எங்களால் வழங்க இயலாது என கூற வாய்ப்புள்ளது. PIC ME ID, RCH NO இருந்தால் மட்டுமே ஆஸ்பத்திரியில் பிறப்பு பதிவதாக சொல்கிறார்கள்.
எனவே நடைமுறை சிக்கலுக்கு தீர்வு காண்பதோடு இனி வரும் காலங்களில் தாய்மார்கள் கருவுற்ற 45 வது நாளிலோ அல்லது ஆறாவது மாதத்திலோ அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலயத்தில் (பால்வாடி) யில் பதிவு செய்து அட்டையை பெற்று மாதம் மாதம் செக்கப் செய்தால் (நாம் தனியார் ஆஸ்பத்திரியில் செக்கப் செய்தாலும்) அரசாங்க சலுகைகள் நம் பேங்கு அக்கவுன்டுக்கு வருவதோடு PIC ME ID, RCH NO யும் நாம் இலகுவாக பெற முடியும்.
தேவையான ஆவணங்கள்
பேங்கு பாஸ் புக் நகல் 1
போட்டோ 2
ஆதார் நகல் 1
அ.சா.அலாவுதீன் – மூத்த நிருபர், கீழை நியூஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது…ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்!!
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஐந்து நாட்கள், அதாவது டிசம்பர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 26ஆம் தேதி இது தொடருமா என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
வேலை நிறுத்தம் காரணமாக, ஏடிஎம் சேவை முடங்கும் அபாயமும் உள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தகவல்:- Friends Social Media
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேவேந்திர குல வேளாளர் இனத்தை இதர பிற்பட்டோர் பட்டியல் இணைக்க டாக்டர் கிருஷ்ணசாமி மனு… சிறப்பு வீடியோ பேட்டி…
தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் . கிருஷ்ணசாமி இன்று மாலை (13.12.2018) கோரிக்கை மனு கட்சி நிர்வாகிகளுடன் மனு அளித்தார்.
இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியிடம் மனு கொடுத்த பின்னர், கிருஷ்ணசாமி கூறுகையில், “ஆங்கிலேயர் காலத்தில் தவறுதலாக எஸ் சி என அழைக்கக் கூடிய பட்டியல் இன பிரிவில் சேர்த்து விட்டனர். அதன் விளைவாக கடந்த 90 ஆண்டுகளாக, நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் அதனுடைய பாதிப்பு தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு சமூக, அரசியல் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. எனவே தான் ஒட்டு மொத்த தேவேந்திர குல வேளாளர்களும் தங்களை பட்டியல் பிரிவில் இருந்து விலக்கி இதர பிற்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 320 கிராமங்களில் தேவேந்திர குல மக்கள் சார்பில் நிறைவேற்றிய தீர்மான நகலை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியிடம் கொடுத்தேன்.
கடந்த 4 நாட்களாக தஞ்சையில் துவங்கி 10 மாவட்ட ஆட்சியர்களிடம் இந்த தீர்மான நகல் கொடுத்து வருகிறேன். இந்த கோரிக்கையை நிறைவேற்றக்கோரி புதிய தமிழகம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக ஏராளமான மாநாடு, பேரணி மூலமாக வலியுறுத்தி உள்ளோம். இக்கோரிக்கையை தமிழக அரசு உடனே நிறைவேற்றி தர வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வசதியாக தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க சென்னை பல்கலை., மானுடவியல் துறை தடையில்லை என அறிக்கை சமர்பித்துள்ளது. தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கவும், பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் பரிந்துரைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்ட வலியுறுத்தி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்…
டிசம்பர்-6, இன்று பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் sdpi சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முஸ்லிம்களின் இறையில்லமான பாபர் மஸ்ஜித் 1992 டிச.6ல் தான் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலத்தை அகற்ற வேண்டும், பாபர் மஜ்ஜித்தை அதே இடத்தில் மீண்டும் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முகமது சுலைமான், சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ரபீக் சாஹிப், விமன்ஸ் இந்தியா மாநில பொருளாளர் உம்முல் தவுலத்யா, மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது இபுராகிம், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பசீர் அலி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி தவ முனியசாமி, விடுதலை சிறுத்தை கட்சி மண்டல அமைப்புச் செயலாளர் முகமது யாசின், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் முருகன், தமிழக மக்கள் எழுச்சி கழக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக மாவட்ட செயலாளர் பைரோஸ்கான் வரவேற்க, இராமநாதபுரம் நகர் தலைவர் அஜ்மல் சரீப் நன்றி கூறினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் ரபீக் சாஹிப் கூறுகையில், உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை பெற்றுத்தந்த பாபர் மஸ்ஜித் இடிப்பு நடைபெற்று இன்றுடன் 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை. பாபர் மஸ்ஜித் இடிப்பில் குற்றவாளிகளாக நீதிபதி லிபர்ஹான் கமிஷனரல் அடையாளம் காட்டப்பட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. அதே இடத்தில் பாபர் மஜ்ஜித் மீண்டும் கட்டித் தர வேண்டும் என வாக்குறுதி அளித்த மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்திய இறையாண்மை மிக்க சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு ஆக கட்டி எழுப்ப உறுதிபூண்டுள்ளோம் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் அதிகாரமிக்க பதவிகளில் அமர்ந்திருப்பது மாபெரும் அநீதி. இத்தனை ஆண்டுகளாக முஸ்லிம் சமூகமும் தேச நலன் விரும்பிகளும் ஒருமித்த குரலில் நீதிக்காக குரல் கொடுத்துள்ளனர்.
நீதித்துறையின் இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் சூழலில் எந்த முயற்சிகளையும் முஸ்லிம்கள் ஏற்கமாட்டர். நீதிக்காக முஸ்லிம்களுடன் எஸ்டிபிஐ தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும், என்றார். போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிழக்கு மாவட்ட ஊடக தொடர்பாளர் அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (04/12/2018) இராமேஸ்வரம் – சென்னை விரைவு ரயில் அனைத்தும் ரத்து…அஜமீர் ரயில் நேரம் மாற்றம்…
மதுரை கோட்டத்தில் அவசர பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் ரயில் இயக்கங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 05.30 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (04.12.2018) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 08.15 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (04.12.2018) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
ரயில் நேரம் மாற்றியமைப்பு:-
19604 ராமேஸ்வரம் – அஜ்மீர் ஹம்ஸபார் விரைவு ரயில், இன்று(டிச 4) இரவு 10:15க்கு பதிலாக, நாளை(டிச 5) காலை 7மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் பாம்பன் கடல் பகுதியை கடந்த செல்லும் போது ரயில்வே தூக்கு பாலம் திறக்கப்படுகிறது. இன் து நண்பகல் சென்னை படகுகள் கடந்து செல்ல தூக்கு பாலத்தை திறந்த போது சக்கரம் அருகே திடீரென விரிசல் ஏற்பட்டது. ரயில்வே பணியாளர்கள் விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் விரிசலை சரி செய்ய இயலாமல் போனது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மதுரை கோட்டத்தில் அவசர பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் ரயில் இயக்கங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
56721 மதுரை – ( 12: 40) ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே 04.12.2018 அன்று பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.
56726 ராமேஸ்வரம் – ( 18:00 மணி) மதுரை பயணிகள் ரயில் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே 04.12.2018 அன்று பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.
56829 திருச்சிராப்பள்ளி – (06:40) ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே 04.12.2018 அன்று பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.
56830 ராமேஸ்வரம் – ( 13:55 மணி) திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே 04.12.2018 அன்று பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.
56725 மதுரை ( 18:10 மணி) ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே 04.12.2018 அன்று பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. மண்டபம் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு இன்று மாலை 5.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் இரவு 9:00 மணிக்கு மண்டபம் நிலையத்தில் இருந்து கிளம்பும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து காலி பெட்டிகளாக மண்டபம் கொண்டு வரப்பட உள்ளது.
இரவு 8:15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பும் சேது எக்ஸ்பிரஸ், இரவு 11 மணிக்கு கிளம்பும் அஜ்மிர் அதிவிரைவு ரயில் குறித்து அறிவிப்பு வரவில்லை.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சமீபத்தில் ஆம்பூர் அருகே கார் செல்லும் போது சென்னை பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை மின்னூர் என்ற இடத்தில் உள்ள சாலையோரம் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் 60 அடி ஆழக் கிணற்றுக்குள் இறங்கி மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆம்பூர் கிராமிய காவலர் சரவணனை நேரில் அழைத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP .பிர்வேஷ்குமார் பாராட்டினர்.
கே.எம்.வாரியார், செய்தியாளர்-வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் பன்றி காய்ச்சலுக்கு பலர் பலியாகி வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் குணமாகாதவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த போத்தனூரை சேர்ந்த வேலாயுதம் (65), நிலம்பூரை சேர்ந்த பழனிசாமி (61) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும், 21 பேர், டெங்குவிற்கு 4 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 60 பேர் என 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதார சீர்கெட்டால் பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்வப்போது, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன்.
மூத்த நிருபர், கீழை நியூஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குவியும் பாராட்டுகள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மூன்று உயிர்களை காப்பாற்றிய காவலர்கள் மற்றும் கிராம மக்கள்..
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி அவரது குடும்பத்துடன் பெங்களூர் சென்று கொண்டிருந்தபோது மின்னூர் என்ற இடத்தில் கார் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி கிணற்றில் கவிழ்ந்து விழுந்தது.
பின்னர் கிணற்றில் சிக்கிக்கொண்ட சுந்தரமூர்த்தி தனது திறமையின் மூலம் 108 தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் இடம் தெரியாமல் தேடி வந்துள்ளனர் உடனே சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் விடியற்காலை அதிவேகமாக வந்த ரோந்து போலீசார் மற்றும் கிராமிய போலீசார் கிராம மக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்து அவர்களை கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் மற்றும் காவலர் சரவணன் ரோந்து போலீஸ் உதவி ஆய்வாளர் ரகுபதி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் என மின் விளக்கு இல்லாத இடத்தில் இருந்த அக்கிணற்றை கண்டுபிடித்து சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.
விபத்தில் சிக்கியவர் 2.O படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்த சுந்தரமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எம்.வாரியார், செய்தியாளர்-வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதில் இருந்தும் திரண்ட விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி (நவம்பர் 30) பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை தர வேண்டும், சுவாமிநாதன் குழு அறிக்கையை அமலாக்கம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், தொழிலாளர் சங்கங்கள் என 207 சங்கங்களைக் கொண்ட கூட்டமைப்பின் சார்பில், டெல்லியில் இரு பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்டபடி இரண்டாவது நாள் விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், பிகார், ஒடிசா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடைபெற்ற பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர்.
விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி ஸ்தம்பித்துக் காணப்பட்டது.
தமிழக விவசாயிகள்டெல்லியில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 25 பெண்கள் உட்பட 1,300 பேர் தமிழகத்தில் இருந்து பங்கேற்றுள்ளனர். டெல்லியில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வந்தனர்.
பேரணியில் அய்யாக்கண்ணு, “தமிழக விவசாயிகள் ஏற்கனவே டெல்லியில் 141 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அன்று ஜந்தர் மந்தரில் நாங்கள் தொடங்கிய போராட்டம் இன்று இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகளைத் திரள வைத்துள்ளது. விவசாயிகளைத் தடுக்க மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் டெல்லியில் குவிக்கப்பட்டிருகிறார்கள்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை 3 கிமீ நிர்வாணமாகச் செல்ல உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். பேரணியின் முக்கிய கோரிக்கை விவசாயிகளின் பிரச்சினையை விவாதிப்பதற்காக உடனடியாக 3 வார நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதாகும்.
பேரணியில் முன்னாள் பிரதமர்:- நள்ளிரவு வரை நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகௌடா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி விவசாயிகள் பிரச்சினையை கருத்தில் கொள்ள வேண்டும்.. விவசாயிகளுக்கு தற்போது எல்லாம் தெரியும். எந்த ஒரு அரசும் விவசாயிகள் இல்லாமல் இருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
இந்தப் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இதே போன்று டெல்லியில் தடையை மீறி பேரணி நடத்திய போது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவல்துறையினர் விவசாயிகளை விரட்டி அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர்
கீழை நியூஸ்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை சாலைகளில் தொடரும் பிரச்சினையாக உள்ள விசயம் சாலைகளில் கொட்டப்படும் மணல்கள். புதிய வீடு கட்டுவதற்காக மணல் கொட்டுவது தவிர்க்க முடியாத விசயமாக இருந்தாலும், அதை முறையாக கட்டிட பகுதிகளில் கொட்டாமல் வாகனங்கள் செல்லும் சாலைகளை மறைத்து மணல் மற்றும் ஜல்லிகளை கொட்டி வைப்பது பொது மக்களுக்கு இடையூறு மட்டுமல்லாமல், வாகனங்கள் விபத்துக்கும் காரணமாக அமைகிறது.
இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் பல கடுமையான எச்சரிக்கைகள் விடுத்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் இவ்விணயத்தை கருத்தில் கொள்வதாகவே இல்லை. நகராட்சி நிர்வாகம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுமா??
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆபத்தான நிலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…
அரியலூர் மாவட்டம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பங்குழி கிராமத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகளவில் செல்கின்றன.
இதனால் வேப்பங்குழி ரயில்வே கேட்டில் இருந்து பூண்டி பிரிவு ரோடு வரை சுமார் 200 மீட்டர் தார் சாலையின் இரு ஓரங்களிலும் அதிக அளவில் சேதம் அடைந்து இரண்டிலிருந்து மூன்று அடி வரை பள்ளம் பல இடங்களில் காணப்படுகிறது.
அந்த பள்ளங்களால் அந்த சாலையில் விபத்து அடிக்கடி நடந்து கொண்டே இருக்கிறது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி சுமார் ஒரு வருடகாலமாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் இடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர்.
இந்த நிலை நீடித்தால் இன்னும் பல விபத்துக்கள் இந்த சாலையில் நடைபெற வாய்ப்பாக அமையும். ஆகவே கூடிய விரைவில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இனியும் சீரமைக்க வில்லையெனில் வேப்பங்குழி ரயில்வே கேட் அருகே மிகப்பெரிய சாலை மறியலில் ஈடுபடுவோம் என ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
பல உயிர்களை கருத்தில் கொண்டு சாலையை சீரமைக்குமா தேசிய நெடுஞ்சாலைத்துறை?
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் சாலை ஓரமுள்ள டாஸ்மாக் கடையில் ரூ.96,270 மதிப்பிலான 437 மது பாட்டில்கள் நவ.25 இல் இரவு திருடு போனது. இது தொடர்பாக சூபர்வைசர் முத்துமாரி புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸ் குகனேஸ்வரன் வழக்கு பதிந்து விசாரித்து வந்தார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் தனிப்படை அமைத்து தேட அறிவுறுத்தினார்.
இதையடுத்து ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் ஆலோசனை பேரில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் சார்பு ஆய்வாளர் குகனேஸ்வரன், தனிப்பிரிவு தலைமை காவலர் முரளி கிருஷ்ணன், ஏட்டு கருப்பசாமி, போலீஸ்காரர் வேல்முருகன் தலைமையில் தனிப்படையினர் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் புல்லாணி அம்மன் கோயில் சத்திரம் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மோகன் 23 என்பவர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் மது பாட்டில்களை மோகன் திருடியது தெரிந்தது. திருடு போன மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் மோகனை கைது செய்தனர். ஐந்தே நாளில் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி., ஓம் பிரகாஷ் மீனா பாராட்டினார்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று தேரா துபாய் எக்ஸ்சல்சியர் ஹோட்டலில் டாக்டர் தொல்.திருமாவளவன் எழுதிய “அமைப்பாய் திரள்வோம்” என்ற புத்தகத்தின் திறனாய்வு கூட்டம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது..
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் “அமைப்பாய் திரள்வோம்” புத்தகத்திற்கு அரசியல் விமர்சகர் குறிஞ்சிநாதன் மதிப்புரை வழங்கினார்.
மேலும் இந்த புத்தகம் அடக்குமுறைக்கும் ,அநீதிக்கும்
எதிராக அமைப்பாய் திரள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சமகால அரசியல் நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதப்பட்ட புத்தகம் என்பதால் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழ் மாநில தலைவர் வசீகரன் மற்றும் எழில் கரோலின், இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர். பிறகு பொன்னாடை போத்தி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியை வளரும் பெண் எழுத்தாளர் ஜெஸிலா பானு தொகுத்து வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாவட்ட ஆளுமை மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. குழுவின் தலைவர், வக்பு வாரிய தலைவருமான அன்வர்ராஜா எம்.பி., தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பாண்டி, கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கே.சி.ஆனிமுத்து, ராஜ்சபா முன்னாள் எம்பி., எம் எஸ். நிறைகுளத்தான் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 2017_2018, 2018-2019 நிதியாண்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் இது வரை செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டம், பிரதமர் குடியிருப்பு திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், பிரதமர் கிராம சாலைகள் திட்டம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளுக்கு மேற்கொண்ட செலவினங்கள், நிறைவேற்றிய திட்டப்பணிகள், நிலுவை திட்டப்பணிகள் குறித்து குழுவின் தலைவர் அன்வர்ராஜா ஆய்வு செய்தார்.
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.73.71 கோடி மதிப்பில் 16,884 வளர்ச்சித திட்டப்பணிகள் துவங்கப்பட்டு 9,923 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 6,961 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. 2018-19ஆம் நிதியாண்டில் இதுவரை ரூ.52.21 கோடி மதிப்பில் 10,695 பணிகள் துவங்கப்பட்டு 2,308 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.119.62 கோடி மதிப்பில் 229.826 கி.மீ., 63 சாலைப்பணிகள் துவங்கப்பட்டு முன்னேற்றத்தில் உள்ளன. தூய்மைப் பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் 2017-18ஆம் நிதியாண்டில் மாவட்டத்தில்11 ஊராட்சி ஒன்றியங்களிலும் 48,441 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து பணிகளும் நூறு சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் நிதியாண்டில் 507 பயனாளிகள் /2018-19 ம் நிதியாண்டில் 497 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2017-18ஆம் ஆண்டில் ரூ.18.53 கோடி மதிப்பில் 24 சாலை பணிகளுக்கு, 2018-19ஆம் நிதியாண்டில் ரூ.16 கோடி மதிப்பில் 51 சாலைப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழுவின தலைவர் அன்வர்ராஜா பேசுகையில், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகிக்கும் குழாய்களை சேதப்படுத்துதல், குடிநீரை முறையாக பயன்படுத்துதல், செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து சட்ட விதிகள் படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னேற்றத்தில் உள்ள வளர்ச்சி திட்டப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி, மகளிர் திட்ட இயக்குநர் குருநாதன், இணை இயக்குநர்கள் சுசீலா (வேளாண்மை) முல்லைக் கொடி (மருத்துவ பணிகள்), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மாரி (காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்) உட்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்றம் சார்பில் தேசிய செய்தியாளர் தின விழா நடந்தது. இராமேஸ்வரத்தில் இன்று நடந்த விழாவிற்கு இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்ற தலைவர் அய்யா.அசோகன் தலைமை வகித்தார். செயலாளர் இரா.மோகன் வரவேற்றார். மேலும் புகைப்பட போட்டியில் மீனவர் உழைப்பை தத்ரூபமாக படம் பிடித்த ஜூ வி போட்டோகிராபர் உ.பாண்டி முதலிடம் பிடித்தார். தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைந்து ஆழக்குழியில் தண்ணீர் தேடும் பெண்களின் நிலையை படம் பிடித்த இராமேஸ்வரம் தினகரன் போட்டோ கிராபர் பொன்.சத்யா இரண்டாம் இடம் பிடித்தார். தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டில் போக்கு காட்டி திமிறிய காளையை திமில் பிடிக்க பாய்ந்த காளையரை படம் பிடித்த ராமநாதபுரம் தினசெய்தி போட்டோகிராபர் பா.பாலமுருகன் மூன்றாம் இடம் பிடித்தார். இராமநாதபுரம் தினகரன் போட்டோகிராபர் ஜி.பரமேஸ்வரன், எம்.சீனிவாசன் ஆகியோரது புகைப்படங்கள் ஆறுதல் பரிசு பெற்றன.
இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கேடயம் மற்றும் ரொக்க பரிசு வழங்கி கவுரவித்தார். ஊடகத்துறையில் 20 ஆண்டு பணி நிறைவு செய்த எல்.பாலச்சந்தர் (தி இந்து, போட்டோகிராபர், இராமநாதபுரம்), ஜி.குணாளன் (செய்தியாளர், தினமலர் /திருச்சி பதிப்பு, பரமக்குடி), மா.மு.முத்துச்சாமி (செய்தியாளர், தினசூரியன், பரமக்குடி), வி.ஜோதி ராமலிங்கம் (செய்தியாளர், தினமலர் ராமேஸ்வரம்) உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர். ராமேஸ்வரம் செய்தியாளர்கள் தங்கள் ஊதியத்தில் திரட்டிய ரூ.40 ஆயிரத்தை (வங்கி வரைவோலை) மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். ராமேஸ்வரத்தில் அரசு கல்லூரி, இராமநாதசுவாமி கோயில் வளாக பகுதியில் பழைய மின் கம்பிகளை மாற்றி தரை வழி மின் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனு அளித்தனர். இந்திய கடலோர காவல்படை (மண்டபம் நிலையம்) கமாண்டிங் அதிகாரி எம்.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய காப்பக வனச்சரக அலுவலர் சு.சதீஷ், காவல் துணை கண்காணிப்பாளர் எம்.மகேஷ் ராமேஸ்வரம் தாசில்தார் எம்.சந்திரன், இராமநாதபுரம் செய்தியாளர் சங்க கவுரவத் தலைவர் டி.ஜே.வால்டர் ஸ்காட், தலைவர் கி.தனபாலன், முதுகுளத்தூர் கடலாடி செய்தியாளர் தலைவர் எம்.முருக பூபதி ஆகியோர் பேசினர். இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்ற பொருளாளர் வி.ஜோதி ராமலிங்கம் நன்றி கூறினார்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலை செல்வம், நூலக ஆர்வலர் விருதாளர் ஆசிரியர் ஜெயகாந்தன், ராமநாதபுரம் செய்தியாளர் சங்க பொருளாளர் பி.மகேஸ்வரன், துணைத் தலைவர் கே.கே.குமார், இணை செயலாளர் ஜி. இளங்கோவன், மூத்த பத்திரிகையாளர் ஒளரங்கசீப், தினமலர் போட்டோகிராபர் (ஓய்வு) மயில்வாகணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.