கீழக்கரை செய்திகள்
கொரோனோவால் தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகங்களும் கர்ப்பிணிகள் மற்றும் தொடர் மருத்துவம் பார்க்கும் நோயாளிகளின் மீது உள்ள கவனத்தை குறைத்து விட கூடாது..
கொரோனோவால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் கர்ப்பிணிகள் மற்றும் தொடர் மருத்துவம் பார்க்கும் நோயாளிகளின் மீது உள்ள கவனத்தை குறைத்து விட கூடாது என சமூக ஆர்வலர்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா கிருமி தாக்கம் அதிகரித்து உள்ளது.பல் வேறு நாடுகளைப்போல் இந்தியாவிலும்,தமிழகத்திலும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த அசாதாரண சூழ்நிலையில் மக்கள் பல நாட்களாக வீடுகளில் முடங்கி இருக்கின்றார்கள்.
தற்போது நிலவும் இந்த சூழ்நிலையில் கர்ப்பிணி பெண்கள்,தொடந்து மாத மருத்துவம் செய்யும் நோயாளிகள் பாதிப்படைந்து வருகின்றார்கள்.குறிப்பாக தடுப்பு ஊசி போடும் கர்ப்பிணி பெண்கள்,ஸ்கேன் எடுக்கும் நிலையில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள்,சர்க்கரை நோய் மற்றும் தொடர் மருத்துவம் பார்க்கும் நோயாளிகள் நலன் கருதி அரசும்,மாவட்ட நிர்வாகங்களும் இப்படிப்பட்ட நோயாளிகள் மருத்துவம் பார்க்க சென்று வர வாகன ஏற்பாடுகள் மற்றும் சலுகைகள் வழங்கி தொடர் சிகிச்சை பெற வழி வகை செய்ய வேண்டும்.இது போல் பல இடங்களில் பணம் இருந்தும் மக்கள் உணவு பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றார்கள்.எனவே அரசு சார்பாக உதவி எண்களையும்,சமூக ஆர்வலர்கள் உதவி எண்களையும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்து பொதுமக்களுக்கு தடையில்லாமல் உணவுகள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி கீழக்கரை மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், “ கீழக்கரையில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அதனை கருத்தில் கொண்டு கீழக்கரையில் கடந்த 07/04/2020 மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பெயரில் சுகாதார துறையினர் வீடு வீடாக கணக்கு எடுக்கும் பணியினை செய்து வருகிறார்கள் உங்கள் வீட்டில் சிறு குழந்தைகள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எத்தனை சளி, இருமல், மூச்சு்திணறல் , சக்கரைவியாதி, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இருக்கிறார்களா என்று கணக்கு எடுத்து வருகிறார்கள் அதனுடன் குடும்ப தலைவர் பெயரையும் தொலைபேசி எண்ணையும் கேட்டு வருகிறார்கள்
இந்த சூழலில் மக்களுக்கு ஒரு அய்யம் ஏற்படுகிறது இது NPR, NRC, CAA க்கு இருக்குமோ என்று, இது சுகாதார துறையின் ஆய்வு மட்டுமே. இது குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. இதை கருத்தில் கொண்டு ஆய்வு நடத்தி வரும் சுகாதார துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி நம் ஊரை கொரோனோ தொற்றில் இருந்து பாதுகாப்போம்.
மேலும் மேற்கூரிய அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் சுகாராத துறை ஆய்வாளர்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இது தவிர்த்து உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் படியான கேள்விகளோ அல்லது செயல்களோ நடைபெற்றால் எங்கள் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம். என் வெளியிட்டுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை…..கடை சீல் வைப்பு..
கீழக்கரையில் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் வள்ளல் சீதக்காதி சாலையில் தபால் நிலையம் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள A.S உசேன் ஸ்டால் என்னும் கடையில் தமிழக அரசு விதித்துள்ள சட்டத்திற்கு புறமான பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்ததுள்ளது.
இதை தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் சிவராம பாண்டியன் உத்தரவின் படி கீழக்கரை நகராட்சி மற்றும் திருப்புல்லானி ஒன்றிய உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் A.S உசைன் ஸ்டால் கடைக்கு சீல் வைத்தார். மேலும் கீழக்கரையில் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கீழை நியூஸ்
SKV சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனியார் நிறுவனம் சார்பாக காவல்துறையினருக்கு பாதுகாப்பு பொருட்கள் ஆணையரிடம் வழங்கப்பட்டது..
காவல்துறையினருக்கு முக கவசம் மற்றும் கையுறை தனியார் நிறுவனம் சார்பாக காவல்துறை ஆணையாளரிடம் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு மதுரை மாநகரில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு உதவும் வகையில் 8000முக கவசம், 4000 ஜோடி கையுறை, மற்றும் 210 சானிடைசர்கள் சென்னையில் இயங்கும் BNY Mellon நிறுவனம், நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் மற்றும் சென்னை சிட்டி கனெக்ட் நிறுவனங்கள் சார்பாக மதுரை மாவட்ட காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வதம் வசம் ஒப்படைக்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பரமக்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் ஆட்சியர், எம்எல்ஏ ஆய்வு..
இராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தைப்பகுதியில் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து மேற்கொண்ட கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி கிருமி நாசினி தெளிப்பு நடைபாதை மற்றும் கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், பரமக்குடி தொகுதி எம்எல்ஏ ஆய்வு செய்தனர்.
ஆட்சியர் தெரிவித்ததாவது: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரது உடல்நிலை சீராக உள்ளது . மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மீறல் தொடர்பாக இதுவரை 1,088 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 1,352 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
பார்த்திபனூர் சோதனைச்சாவடியில் பிற மாவட்டங்களிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் வாகனங்களை தணிக்கை செய்தல் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை ஆய்வு செய்தல், கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மூலம் கிருமி நாசினி தெளிப்பி பணியை பார்வையிட்டார்.
கமுதி அருகே நாராயணபுரம் நரிக்குறவ மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி, பரமக்குடி சுகாதாரத் துறை துணை இயக்குநர் மரு.பி.இந்திரா, காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.சங்கர், பரமக்குடி நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..
மதுரை நகர் திருப்பரங்குன்றம் சரகம் கிரிவலப்பாதை புதிய மலைக்குப் போகும் பாதை மேல் (200 M)எதிர்பாராத விதமாக காய்ந்த செடிகள் மூலம் தீப்பற்றியது, அதே போல் புதிய மலைக்குப் போகும் பாதை எதிரில் வயக்காட்டில் நூறு மீட்டர் உயரத்தில் இன்று (08/04/2020) மாலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அதைக்கண்ட அப்பகுதி மக்கள் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விசாரனையில் வெயில் காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தெரியவருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் கொரானா தடுப்பு தொடர் சேவையாக இராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை யில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 1,500 முக கவசங்கள் வழங்கப்பட்டது.
தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். செயலர் மார்னிங் ஸ்டார் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். முகக் கவசங்களை, இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் எம். அல்லியிடம் வழங்கப்பட்டது. அரசு செவிலியர் பள்ளி முதல்வர் பார்த்திபன், ரோட்டரி உறுப்பினர்கள் ஷசன் ஷா, மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடலாடி அருகே ஒருவானேந்தல் ஊராட்சி மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்..
கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம், ஒருவனேந்தல் ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, சித்த மருத்துவர் பார்வதி, பொது மருத்துவர் ஷ்யாம் ஆகியோர் வழங்கினார். கிருமி நாசினி மருந்து, தீயணைப்பு துறையினர் மூலம் வீடுகள் தோறும் அடிக்கப்பட்டது. தூய்மை காவலர்கள். துப்புரவு பணியாளர்கள் மூலம் தினமும் வீதிகளை சுத்தம் செய்வதும், கிருமி நாசினி மருந்து அடிப்பதும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் நடைபாதையை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.
இராமநாதபுரம் மாவட்டம், ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து மேற்கொண்ட கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் நடைபாதையை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழக முதல்வரின் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த பாதையின் வழியாக பயணிக்கும் பொழுது கிருமிநாசினி தானாக தெளிக்கப்படுகிறது
இதனால் எந்தவொரு நோய் தொற்றும் பரவாமல் தடுக்க முடிகிறது. இது போன்று இராமநாதபுரம் மாவட்டத்தில்
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் நடைபாதையை மேலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற அமைப்பு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய அரசு மருத்துவமனை போன்ற பொது இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4,777 நபர்கள் திரும்பியுள்ளனர். அவர்களில் தற்போது 1,789 நபர்கள் அவரவர் குடும்பத்தாருடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மற்ற அனைவருக்கும் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்து கொரோனா அறிகுறி ஏதும் இல்லாமல் நலமுடன் உள்ளனர். அதேபோன்று, கீழக்கரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்த நிகழ்வில் கலந்து கொண்ட 151 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுசுகாதாரத்துறை மூலமாக 215 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்தப்பகுதியில் உள்ள 11,000-க்கு மேற்பட்ட வீடுகள் முழுவதும் சுகாதாரத் துறையின் முழு கட்டுப்பாட்டுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று பரமக்குடி பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 நபர்களின் இருப்பிடங்களைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவிற்கு உட்பட்ட பகுதிகள் சுகாதாரத் துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு 417 பொது சுகாதாரத் துறை பணியாளர்கள் மூலம் 35 ஆயிரம் வீடுகளில் 14 நாட்கள் தொடர்ந்து மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை பின்பற்றி இந்த நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
கீழக்கரையில் சுகாதாரத் துறை முழு கட்டுப்பாட்டுடன் முறையில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிட்டார். இராமேஸ்வரத்தில் நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா உதவித்தொகை ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை பார்வையிட்டார். செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் வெளியிடப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இராமேஸ்வரம் நகராட்சி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள் 130 பேருக்கு அம்மா உணவகம் மூலம் தயாரித்த உணவை வழங்கினார். இராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, நகராட்சி ஆணையாளர்கள் என்.விஸ்வநாதன் (இராமநாதபுரம்), ராமர் (இராமேஸ்வரம்), அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.அல்லி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பி.வெங்கடாசலம், சுகாதாரப் பணிகள் துணை
இயக்குநர் அஜித் பிரபு குமார், இராமேஸ்வரம் வட்டாட்சியர் அப்துல் ஜபார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் கோடி ஸ்வாமிகள் தவ பூமி மற்றும் மாவட்ட பாஜக சார்பில் இராமநாதபுரத்தி நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை மாவட்ட தலைவர் கே.முரளிதரன் வழங்கினார்.
இதில் மாவட்ட பொது செயலர் ஜி.குமார், மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் பாபு, மாவட்ட செயலர் தகாயத்ரி, நகர் தலைவர் வீரபாகு, முன்னாள் நகர் தலைவர் குமரன், நகர் செயலர் பூபதி ராஜா, மாவட்ட அலுவலக செயலர் ராகேஷ்குமார் கிளை தலைவர்கள் ஜனார்த்தனன், யோகேஷ்குமார், பாண்டிச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் எளியோருக்கு முஸ்லிம் லீக் சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்..
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தினக்கூலி தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட ஏழை எளியோருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி
வழங்கினார்.
இது குறித்து நவாஸ்கனி எம்பி கூறுகையில், கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கூலித் தொழிலாளர்கள் என ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக ஒரு மாதத்திற்கு தேவையாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வழங்கப்பட்டது.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம் எஸ் ஏ ஷாஜகான், ராமநாதபுரம் வர்த்தக சங்கத் தலைவர் பி. ஜெகதீசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் வருசை முகம்மது, இன்ஜினியர் காதர் மீரான், தொழிலதிபர் எச். காஃபத்துல்லா, அப்துல் ஜப்பார், மாவட்ட துணைத்தலைவர் சாதுல்லகான், மாவட்ட துணை செயலர் ஆர்.முகமது யாக்கூப், நகர் தலைவர் எஸ் ஏ சீனி முஹமது, நகர் செயலர் எஸ்.கதியத்துல்லா, மாவட்ட மருத்துவ அணி செயலர் பாக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் அரசு அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
பேரிடர் காலத்தில் அரசு மட்டுமின்றி தொகுதியில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து நம் அருகே உள்ள ஏழை, எளிய குடும்பத்தினருக்கு உதவ முன்வரவேண்டும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நேற்று 07.04.202.-ம் தேதி காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப உத்தரவுப்படி ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மளிகை கடை உரிமையாளர் அனைவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து பொதுமக்களுக்கு மளிகை பொருட்களை கொடுப்பதற்கு முன்னர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வைப்பது பற்றிய விளக்கங்களை விவரித்தார்.
மேலும் கடைக்கு வரும் அனைத்து நபர்களையும் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவிய பின்னர் பொருட்கள் வாங்க அனுமதியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டாம் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு சில மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்ட அரசாணை..
12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அழைத்த சில மணி நேரத்திலேயே அனுமதியை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பெறப்பட்டுள்ளது
இரும்பு, சிமெண்ட், உரம், மருந்து, டயர், சுத்திகரிப்பு, ரசாயனம், ஜவுளி, சர்க்கரை, காகிதம், கரும்பு, பேப்பர், கண்ணாடி, சாயம், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி. குறைவான தொழிலாளர்களை கொண்டு இயக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு விதித்த நிலையில் தற்போது இந்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடதக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை மக்களுக்கு உதவ நாங்கள் தயார்.. தொடர்பு எண் அறிவிப்பு… MASA மக்தூமியா சமூக நல அமைப்பு
கீழக்கரையில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு MASA மக்தூமியா சமூக நல அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புக்குரியவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் நமது ஊரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தால் நம் ஊரில் அசாதாரண சூழலை உருவாக்கி உள்ளது அதை கருத்தில் கொண்டு அந்த சம்பவத்தில் கலந்து கொண்டவர்களை அரசாங்கம் தனிமைப்படுத்த சொல்லி உள்ளது ,
இதன் ஒரு பகுதியாக கீழக்கரையில் இன்று (07/04/2020) மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பெயரில் சுகாதார துறையினர் வீடு வீடாக கணக்கு எடுக்கும் பணியினை செய்து வருகிறார்கள் உங்கள் வீட்டில் சிறு குழந்தைகள் எத்தனை, 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எத்தனை, சளி, இருமல், மூச்சு்திணறல், சக்கரைவியாதி, உயர் இரத்த அழுத்தம் போன்றவைகள் உள்ளதா என்று கணக்கு எடுத்து வருகிறார்கள் அதனுடன் குடும்ப தலைவர் பெயரையும் தொலைபேசி எண்ணையும் கேட்டு வருகிறார்கள்,
இந்த சூழலில் மக்களுக்கு ஒரு அய்யம் ஏற்படுகிறது இது NPR, NRC, CAA க்கு இருக்குமோ என்று, இது கொரோனோ கணக்கெடுப்பு மட்டுமே யாரும் இதில் அச்சம் தேவையில்லை இதை கருத்தில் கொண்டு கணக்கெடுப்பு நடத்தி வரும் சுகாதார துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி நம் ஊரை கொரோனோ தொற்றில் இருந்து பாதுகாப்போம்.
மேலும் மேற்கூரிய அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் சுகாராத துறை அல்லது எங்களிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் கூடுதல் விபரங்களுக்கு அகமது முகைதீன் 00 91 91508 02604
தலைவர், MASA, சீராஜிதீன் 00 91 96779 90555, செயலாளர் MASA மற்றும் மற்றும் MASA வின் உறுப்பினர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை மக்களுக்கு திமுக நகர் செயலாளர் அரசு பணிக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்…..
கீழக்கரை மக்களுக்கு திமுக நகர் செயலாளர் S.A.H பஷீர் அகமது விடுத்துள்ள அறிக்கையில்: கீழக்கரை சின்னக்கடை தொருவை சேர்ந்த சகோதரர் பீலி ஜமால் கடந்த 2.4.2020 அன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இறந்தார். பின்பு அவர் உடல் சொந்த ஊரான கீழக்கரை கொண்டுவரப்பட்டு. நடுத் தெரு ஜும்மா பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆனால் கடந்த 5.4.2020 அன்று அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவர் இல்லமான சின்னக்கடை தெரு மற்றும் அவரை அடக்கம் செய்யப்பட்ட நடுத் தெரு ஜும்மா பள்ளி பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படது. இன்று 7.4.2020 கீழக்கரை நகர் பகுதி முழுவதும் சுகாதாரத் துறையினர் வீடு வீடாக சென்று வீட்டில் உள்ளவர்களுக்கு சளி காய்ச்சல் இருமல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்று வீட்டில் முதியவர்கள் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் யாரேனும் உள்ளார்களா என்றும் கணக்கு எடுத்து வருகின்றனர். இந்தக் கணக்கு சுகாதாரத்திற்கு மட்டும்தான் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் கூறியுள்ளார்.
ஆகவே நாம் அனைவரும் இந்த கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கீழக்கரை நகர் பகுதியில் இருக்கும் திமுகவினர் தொலைபேசி மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்குமாறும். உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை மக்களின் குடிநீர் தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுமாறு மாவட்ட ஆட்சியருக்கும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்துக்கும் கீழை ஜஹாங்கீர் அரூஸி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது அறிக்கையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் முயற்சியில் அதிதீவிரம் காட்டும் மாவட்ட நிர்வாகத்தை மனதார பாராட்டுகிறேன்.
கீழக்கரை மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளுக்குள் தனிமைப்படுத்திக்கொள்ளும் இந்த சூழலில் அன்றாட அத்தியாவசிய அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சினை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கீழக்கரையை சுற்றியுள்ள தோட்டங்களில் இருந்து மாட்டு வண்டி மற்றும் டிராக்டர்,லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்து வந்த நிலை முடக்கப்பட்டு பல்வேறு தெரு மக்கள் போதிய குடிநீரின்றி அல்லல்படுவதாக செய்திகள் வருகின்றன.
வீடடங்கி இருக்கும் மக்களுக்கு தேவையான குடிநீரை தங்கு தடையின்றி வினியோகம் செய்திட மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்று போர்க்கால அடிப்படையில் உதவிடுமாறு பணிவோடு வேண்டுகிறேன். இவ்வாறு கீழை ஜஹாங்கீர் அரூஸி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரனா தொற்று கணக்கெடுப்பு பெயரில் மக்களிடம் ஏற்படும் அச்சத்தை நீக்க முன்வருமா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்?..
SDPI மாநில பொது செலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரனா வைரஸ் தொற்றால் ஊரடங்கில் தனிமைப்பட்டிருக்கும் கீழக்கரை மக்களுக்கு சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த ஒரு மரணத்தின் எதிர் நடவடிக்கைகள் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கொரனா தொற்று கணக்கெடுப்பு பணிகள் பரவலாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் கீழக்கரையின் சில பகுதிகளில் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் நகராட்சி அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே கணக்கெடுப்பு என்று யார் வந்தாலும் ஒத்துழைக்க முடியாது என்று கடந்த மாதங்களில் NRC NPR போராட்டங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த மக்கள் வருகை தந்த அலுவலர்களிடம் முறையிட்டு கேள்வி எழுப்பி கொண்டிருந்தனர்.பாவம் வேலைக்கு வந்த கீழக்கரை நகராட்சி ஊழியர்களால் பதில் கூற முடியவில்லை.உடனே நான் தலையிட்டு இந்த சர்வே கொரனா சம்பந்தமாக மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.நாம் ஒத்துழைக்க வேண்டும் எனக்கூறி பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து SDPI கட்சி நகர் தலைவர் பைசலை தொடர்பு கொண்டு நடந்த நிகழ்வுகளை சொல்லி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் என சில ஆலோசனை கூறினேன். ஏற்கனவே பீதியில் இருக்கும் மக்களிடம் அரசு சார்ந்த நடவடிக்கைகளுக்கு அனுக சுற்றறிக்கை,சமூக ஊடகங்கள்,ஜமாத்,கூட்டமைப்பு மூலமாகவோ அறியப்பட்ட அரசியல் நிர்வாகிகள் என யாரையாவது தொடர்பு கொள்ளுங்கள் உங்களோடு நாங்கள் வருகை தருகிறோம் என குறிப்பிட்ட சுகாதார நிர்வாகியிடம் sdpi நகர் தலைவர் பேசி உள்ளார். கூடுதலாக அவர் பெயரில் கீழக்கரை மக்களுக்கு அறிக்கை ஒன்றும் முகநூலில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று வேறு ஊழியர்கள் எனது பகுதியில் மீண்டும் அதே கணக்கெடுப்புக்காக வருகை தந்தார்கள். நேற்று போல் தொடர நானும் வந்தவர்களிடம் தெளிவுபடுத்தி சூழ்நிலையை உங்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள் எனக்கூறி அனுப்பிவிட்டேன்.(RSமங்கலத்திலிருந்து வருகை தந்ததாக சொன்னார்கள்.வருத்தமாக இருந்தது)
பொதுவான மக்கள் மனநிலையை வைத்து அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க நாமே முன்வருகிறோம் என இவ்வளவு முன் நடவடிக்கை மேற்கொண்டாலும் துறை நிர்வாகிகள் ஏன் மெத்தனப்போக்கோடு செயல்படுகிறார்கள் எனத் தெரியவில்லை.
2தினங்களுக்கு முன்னர் கீழக்கரை மக்களின் அச்சத்திற்க்கு காரணம் அரசு நிர்வாகம் மற்றும் சுகாதார துறை கவனக்குறைவே என நாங்களே குற்றம் சாட்டிய நிலையில் இதுபோன்று தொடரும் தேவையில்லாத மக்கள் பதட்டத்தை முறைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு நகராட்சி நிர்வாகத்திற்க்கு உண்டு.அதை உணரந்து அதிகாரிகள் கவனத்தோடு செயல்பட வேண்டும் என வேண்டுகிறேன் என SDPI மாநில பொது செலாளர் அப்துல் ஹமீது அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ATM மூலமாகவும் பரவ வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. ஒரு ஏடிஎம் மிஷினை பல நபர்கள் உபயோகப்படுத்தும் சூழலே உள்ளது. ஆனால் அடிப்படை விசயமான கிருமிநாசினி கூட வைப்பதில்லை என்பது மிகவும் வேதனையான விசயம்.
மேலும் ஒவ்வொருவரும் ஏடிஎம் பயன்படுத்தி விட்டு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மற்ற நபர் கையாள்வது தொற்று நோய் பரவ வாயப்பாக உள்ளது. அதே போல் ஏடிஎம்களை கண்காணிக்க பயிற்சி பெற்ற காவலர்கள் கூட கிடையாது. இது சம்பாபந்துதமாக அரசாங்காகம் வங்கிகளுக்கு முறையான சுற்றறிக்கைகளை அனுப்பி பொதுமக்கள் நலனை காக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் ஆட்சியர் சமூக தொலைவு (Social Distancing) சம்பந்தமான செய்முறை விளக்கம்..
இராமநாதபுர ஆட்சியர் இன்று (07/04/2020) கீழக்கரையில் சுகாதார பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் பற்றி ஆய்வு செய்ததோடு, கீழக்கரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பிற அமைப்பு நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
DF3931B3-AD9B-4D6F-9515-4A40F609E8B8
இதன் தொடர்ச்சியாக ஆட்சியர் SOCIAL DISTANCING எனப்படும் சமூக தொலைவு என்பதை எவ்வாறு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என செயல் முறைகளை விளக்கினார்.
You must be logged in to post a comment.