Home செய்திகள் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சி அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி – வீடியோ பதிவு ..

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சி அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி – வீடியோ பதிவு ..

by ஆசிரியர்

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு ரத்தம் பரிசோதனை செய்வதற்கு ஊழியர் இருந்தார்.  இப்பொழுது அவர்  பணிமாறுதல் பெற்று பட்டிவீரன் பட்டிக்கு சென்று விட்டநிலையில்,  அந்த பனிக்கு சித்தரேவு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணியாற்றுபவரையே நியமிக்கப் பட்டுள்ளதால் வாரத்தில் 7 நாட்களை இரண்டு பக்கமும் பிரித்துப் பார்ப்பதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.

அதேபோல் பேரூராட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த உமா சுந்தரி என்பவர் ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டு சுமார் 3 மாத காலம் ஆகிறது, ஆனால் இது வரை நிரந்தரமாக அதிகாரி நியமிக்கப்படவில்லை.  இப்பணிக்கு அய்யம்பாளையத்தில் பணியாற்றும் நிர்வாக அதிகாரியை பொறுப் பாக்கப்பட்டுள்ளார்.

இந்த இரு அலுவலகத்தை ஒரே அதிகாரி கவணிப்பதால் அதிகாரியை  பேரூராட்சி சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு பொதுமக்கள் சந்திப்பது மிகவும் கடினமான சூழ்நிலை ஆகிவிட்டது. அதே போல்  சித்தையன்கோட்டை தமிழ்நாடு மின்சார வாரிய கிளை அலுவலகத்தில் பணிபுரிந்த உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி என்பவர் மாற்றம் செய்யப்பட்டு சுமார் ஒரு வருடகாலமாகிறது. இந்த பணிக்கும் வத்தலக்குண்டில் பணி புரிபவரே சித்தையன்கோட்டை அலுவலகத்தையும் சேர்த்து பார்பதால் இதே அவல நிலை தொடர்கிறது.

இதனால் அரசு பணி  நடக்கிறதோ இல்லையா என குழப்பத்திலேயே  பொதுமக்கள் அவதியுறும் நிலை தொடர்கிறது என்பதே உண்மை நிலை.  கண்டுகொள்ளுமா? தமிழக அரசு பொதுமக்கள் குறை தீர்க்கப்படுமா? என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பெருமூச்சாக உள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!