8
கீழக்கரை நகராட்சி சார்பாக கிழக்கு தெரு தீனியா மெட்ரிகுலேசன் பள்ளியில் இன்று 14.02.2017 சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கீழக்கரை நகரை சுகாதாரமான நகராக மாற்றவும், திறந்த வெளி கழிப்பிடங்களற்ற நகராக உருவாக்கவும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி துவங்கி வைத்தார். நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர். ஹாஜா, தொழிநுட்ப உதவியாளர் உதயகுமார் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.