இன்று 09.09.18 தமிழகம் முழுவதும் எல்லா வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல் (31.12.2000 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்), பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், போன்ற வாக்காளர் பட்டியலை செப்பனிடும் விதமாக மனுக்களை பெறுகின்றனர்.
இதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, N பஞ்சம் பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில், 259,260,261,262,263, எண்களை கொண்ட வாக்குச் சாவடியை சேர்ந்த மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து, படிவங்களை விண்ணப்பித்துள்ளனர்.
இந்த சிறப்பு முகாமில், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அ.செல்வராயர்,கிராம நிர்வாக அலுவலர், திருமதி சாகிராபானு,கிராம உதவியாளர் சுமதி, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டு, மனுக்களை பெற்று வருகின்றனர்.
மேலும்,N. பஞ்சம் பட்டியில் மீதமுள்ள, வாக்குச்சாவடி மையங்கள்,264,265, மற்றும் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள வாக்கு சாவடி, 256,257,258, எண்களை கொண்ட வாக்குச்சாவடிகளிலும்,வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
You must be logged in to post a comment.