வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை..

சோழவந்தான்,நவ.19- சோழவந்தானில் உள்ள சுதந்திரப்போராட்டவீரர் கப்பலோட்டியதமிழன் வ.உ.சிதம்பரனார் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இந்நிகழ்ச்சி முன்னிட்டு திமுக சார்பாக நகர செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ் தலைமையில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து வ உ சி அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்த அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார். முள்ளிப்பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் கீர்த்திகா ஞானசேகரன், வடக்குரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன், முன்னாள் தலைவர் சந்திரசேகரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜ்குமார், வ உ சி அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜசேகரன், சிங்கராஜ், விஜி உள்படப் பலர் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்தனர். பல்வேறுகட்சி நிர்வாகிகள்,தெற்குரதவீதி மேலரதவீதி உறவின்முறை சங்கநிர்வாகிகள் மற்றும் வெள்ளாள முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்