14
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடுகளுக்கு பி.பி.ஆர் என்ற ஆட்டுக்கொல்லி நோய் பரவாமல் தடுக்கும் விதமாக ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி முயற்சியால், உதவி இயக்குநர் கால்நடை பராமரிப்பு இராமநாதபுரம், டாக்டர். இராதாகிருஷ்ணன் அறிவுரை படி, கீழக்கரை கால்நடை உதவி மருத்துவர் டாக்டர். ஜெயபிரகாஷ், ஏற்பாட்டின் பேரில், கால்நடை ஆய்வாளர் பூங்கோதை, கால்நடை பராமரிப்பு உதவியாளர் துரோபதை ஆகியோர் அடங்கிய குழுவினால் ஆட்டுக்கொல்லிக் நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டது இதில் மாவட்ட கவுன்சிலா் ஆதித்தன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவா் பாிக்கா,வார்டு உறுப்பினர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.