வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த சத்துவாச்சாரியை சேர்ந்த கோவிந்தராஜுன் மகன் பாலமுருகன் (21) இவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.கடந்த மாதம் 28-ம் தேதி முதல் பாலமுருகன் காணவில்லை என தந்தை கோவிந்தராஜ் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.காவல் ஆய்வாளர் கருணாகரன் வழக்குபதிவு செய்து விசாரணை செய்த நிலையில்சந்தேகத்திற்கு இடமான தோட்டப்பாளையத்தை சேர்ந்த பாலமுருகனின் நண்பர்களான மதிவாணன், குணா, ஜெகதீஸ்வரன் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தபோது இந்த 3 பேரும் கொலை செய்தது தெரியவந்தது.காவல்துறை விசாரணை செய்ததில் கடந்த 2019-ல் தோட்டப்பாளையம் பகுதியில் சுகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.இதில் முதல் குற்றவாளி ரெட், 2-வது குற்றவாளி பாலமுருகன்.பாலமுருகன் தற்போது ஜாமினில் வெளியே வந்து உள்ளார்.இந்த நிலையில் பாலமுருகன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து கஞ்சா பிடித்து உள்ளனர். அப்போது 3 பேரும் சேர்ந்து எங்களது நண்பன் சுகுமாரை கொலை செய்து உள்ளீர்கள் என்று கூறி தாக்கி உள்ளனர். பிறகு மயங்கியபின்பு எழுந்த பாலமுருகன் என் நண்பன் ரெட் ஜெயிலிருந்து வரட்டும் உங்களை கொலை செய்துவிடுகிறேன் என்று கூற இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் கஞ்சா போதையில் பாலமுருகனை அடித்து கொலை செய்து தோட்டப்பாளையம் கானாற்றில் புதைத்து உள்ளனர்.நேற்று தாசில்தார் ரமேஷ் நேரடி பார்வையில் பாலமுருகன் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர்.கைது செய்யப்பட்ட மதிவாணன், குணா, ஜெகதீஸ்வரன் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல்நிலையத்தில் உள்ளன.
12
previous post
You must be logged in to post a comment.