15
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் (k GF) கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. கைவிடப்பட்ட மாரி குப்பம் எம்.எம். டெனட்ஸ் தங்க சுரங்கத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சூசைபாளையத்தை சேர்ந்த ஜோசப், சந்தா மற்றும் சந்தாவின் மகன் சந்தோஷ் லூர்து நகர் விக்டர், மஸ்கம் கார்த்திக் கொண்ட 5 பேர் கும்பல் திருட சென்று உள்ளது. 1000 அடிக்கு கீழ் சென்ற போது ஜோசப், சந்தா சந்தோஷ் ஆகியோர் விஷவாயு தாக்கி இறந்தனர்.2 பேர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாரிக்குப்பம் போலீசார் புலன் விசாரணை செய்துவருகின்றனர்.
கே.எம்.வாரியார் வேலூர்.
You must be logged in to post a comment.