18
உசிலம்பட்டியில் தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் தேவர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு 2017-18ம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர், அதனை தொடர்ந்து உசிலம்பட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர், இதனால் போக்குவரத்து அரை மணிநேரம் பாதிக்கப்பட்டது.
உசிலம்பட்டி செய்தியாளர் சங்கர்.
You must be logged in to post a comment.