Home செய்திகள் தூய்மை பணியாளர்களுக்கு தன்னெழுச்சையாக உதவி செய்த தம்பதியர்

தூய்மை பணியாளர்களுக்கு தன்னெழுச்சையாக உதவி செய்த தம்பதியர்

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒய்யண்டாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அம்மாவாசி – லெட்சுமி தம்பதி. விவசாய கூலி தொழிலாளர்களான இந்த தம்பதி அவர்களது கிராமத்திற்கு தூய்மை பணி செய்ய வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு தங்களால் முடிந்த அளவாக சுமார் 8 ஆயிரம் மதிப்பீட்டில் 10 பேருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

தற்போதைய ஊரடங்கு காலத்தில் கஷ்டத்திலும் கிராமத்தின் தூய்மைக்காக அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு உதவி செய்வது மனநிறைவை தருவதாக இந்த தம்பதியினர் தெரிவித்தனர். விவசாய கூலித் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த இந்த தம்பதியின் செயலுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!