11
கொரோனோ வைரஸால் கிட்டதட்ட 45நாட்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்டம் மக்களின் நலன் கருதி கடுமையான விதிமுறைகளுடன் தளர்த்தப்பட்டது. இந்த விதிமுறைகள் மீறப்பட்டால் மீண்டும் விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்பதை மறந்து வங்கிகளில் கடுமையான நெரிசல் நிலைமை உருவாகியுள்ளது.
வங்கிகளில் முறையான முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை, பொதுமக்களும் நோயின் வீரியத்தை அறிந்து சுயகட்டுபாடுடன் செயல்படவில்லை என்பது அங்கு முண்டியடித்து நிற்கும் கூட்டமும், வங்கியின் உள்ளே காணும் நெரிசலுமே சாட்சி.
இந்நிலை நீடித்தால் மீண்டும் ஒரு கடுமையான ஊரடங்கை பொதுமக்கள் எதிர் கொள்ள வேண்டும். அதிகாரிகளும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்குமா??
You must be logged in to post a comment.