இந்திய ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக வடசென்னை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..
இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பாலபாஸ்கர் அறிவுறுத்தலின் பேரில் மாநிலத் தலைவர் மோகன் தாரா தலைமையில் மாநில செயலாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் இணைந்து எழ்மை நிலையில் உள்ள பத்திரிகையாளர்களை கண்டு அறியப்பட்டு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
முகவசம், கிருமி நாசனி மருந்து, மளிகை பொருட்கள், காய்கறிகள், கபசுர குடிநீர் சூரணம், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையானArsenicum album மாத்திரைகள் என பத்திரிகையாளர்களுக்கு எவ்வித பாகுபாடு இல்லாமலும் வழங்கப்பட்டது. இந்த நிவாரணம் பொருட்கள் வாங்க எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கத்தை சேர்த்த சகோதரர்களும் இன்முகத்தோடு பெற்று சென்றனர்.
கபசுர குடிநீர சூரணம் 3 கட்டங்களாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரிகைகள் மூன்று கட்டங்களாகவும் கொடுக்கப்பட்டது.
நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் இன்று 10வது கட்டமாக வடசென்னை பகுதியில் களப்பணி ஆற்றும் ஏழ்மை நிலையில் உள்ள பத்திரிகையாளர்கள் கண்டு அறிந்து தற்போது 20 பேருக்கு மாநில இணைச் செயலாளர் ஸ்பைடர் சீனிவாசன் முன்னிலையில் தேசிய குழு உறுப்பினர் சபீர் பாஷா மளிகை பொருட்கள் வழங்கினார். அடுத்த கட்டமாக ஆவடி, அம்பத்தூர் பகுதியில் களப்பணியில் ஈடுப்பட்டு இருக்கும் 20 பத்திரிகையாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
விளம்பரத்துக்காக அல்லாமல் இந்த சேவை ஒளிவு மறைவு இல்லாமல் திறந்த மனதோடு சுயநலம் இல்லாமல் ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு நிவாரணப் பொருட்கள் கிடைக்காத பத்திரிகையாளர்களை கண்டு அறிந்து வழங்குவதை பெருமையாக நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்துக் கொள்கிறோம்.
இவன்,
இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம்.( IMJU )
You must be logged in to post a comment.