Home செய்திகள் வருவாய் ஈட்டும் முதல் பத்து ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது!!

வருவாய் ஈட்டும் முதல் பத்து ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது!!

by Askar

உலகில் மிகப்பெரிய ரயில் வழித்தடங்களை கொண்டுள்ள இந்தியாவில், அதிக வருவாய் ஈட்டும் முதல் பத்து ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. பயணிகள் ரயில்கள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணங்களும், சரக்கு ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான சரக்குகளும் அனுப்பப்பட்டு வருமானங்கள் ஈட்டப்பட்டு வருகின்றன. நாட்டில் இருக்கும் துறைகளில் அதிக வருமானம் அளிக்கும் துறையாக ரயில்வே இருந்து வருவதால் ரயில்வேக்கு என ஒவ்வொரு ஆண்டும் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரயில்வே துறையில் 2023-24 நிதியாண்டின் வருவாய் குறித்த தகவலை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரயில்வே மண்டலும் தங்களது ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் பட்டியல்களை வெளியிட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் தெற்கு ரயில்வே வருவாய் ஈட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் பல நிலையங்களைக் கொண்டுள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வே ரூ.12 ஆயிரத்து 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில், ஐந்து ரயில் நிலையங்களுடன் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது, அதற்கு அடுத்தபடியாக நான்கு ரயில் நிலையங்களுடன் கேரளம் உள்ளது, அதே நேரத்தில் கர்நாடகத்தில் உள்ள ஒரு ரயில் நிலையம் வருவாய் ஈட்டும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

பயணிகளிடம் இருந்து ரயில் பயண கட்டனமாக ரூ.7 ஆயிரத்து 151 கோடியும், சரக்கு ரயில் கட்டணம் மூலம் ரூ.3 ஆயிரத்து 674 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரூ.564 கோடி வருவாயுடன் இரண்டாவது இடம் பிடித்த சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ரூ.1,216 கோடி வருவாயுடன் முதலிடத்திலும், ரூ.564 கோடியுடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

கோயம்புத்தூர் ரயில் நிலையம் மூன்றாவது அதிக வருவாய் ஈட்டும் நிலையமாக உள்ளது. கடந்த 12 மாதங்களில் ரூ.324.99 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வேயின் தரவுகள் தெரிவிக்கின்றன.

திருவனந்தபுரம் ரூ.262.67 கோடி வருவாய் ஈட்டி நான்காவது இடத்திலும், தாம்பரம் ரூ.233.67 கோடி, எர்ணாகுளம் ரூ.227.59 கோடி

வருவாய் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது.

மதுரை ரூ.208.74 கோடி, கோழிக்கோடு ரூ.178.95 கோடி, மங்களூரு ரூ.166.89 கோடி மற்றும் திருச்சூர் ரூ. 155.70 கோடி. இந்த பட்டியலில் திருச்சி பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் முதல் 100 வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில், தமிழ்நாட்டில் 60 ரயில் நிலையங்களும், கேரளத்தில் 35 ரயில் நிலையங்களும், ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் தலா 2 ரயில் நிலையங்களும், அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் 2 ரயில் நிலையங்களும் இடம் பெற்றுள்ளன.

2023-24 நிதியாண்டில், கேரளத்தில் உள்ள ரயில் நிலையங்களில் முதல் 25 வருவாய் ஈட்டும் நிலையங்களில் 11 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளது.

“தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள மற்ற முக்கிய ரயில்வே கோட்டங்களைப் போல், கேரளத்தில் முழுமையான அளவிலான ஒருங்கிணைந்த பயிற்சி முனையம் மற்றும் விரைவுப் பாதைகள் போன்ற போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான ரயில் சேவைகள் இல்லாத நிலையிலும், ரயில்வேக்கு ஒரு முக்கிய வருவாய் ஈட்டுபவராக கேரளம் தொடர்கிறது”.

தெற்கு ரயில்வே 2023-24 நிதியாண்டில், தெற்கு ரயில்வேயின் ஆண்டு மொத்த வருவாய் ரூ.12,020 கோடி. பயணிகளிடம் இருந்து ரயில் பயண கட்டணமாக ரூ.7 ஆயிரத்து 151 கோடியும், சரக்கு ரயில் கட்டணம் மூலம் ரூ.3 ஆயிரத்து 674 கோடி மற்றும் மற்றும் ரூ. 570 கோடி மற்றும் ரூ. 624 கோடி மற்ற பயிற்சி வருவாய் மற்றும் பல்வேறு வருவாய்கள் ரூ.570 கோடி மற்றும் ரூ. 624 கோடி பல்வேறு வருவாய்கள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், இது இதுவரை இல்லாத அளவுக்கு முந்தைய நிதியாண்டை விட 10 சதவிகிதம் அதிகம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!