உசிலம்பட்டிப் பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் கடந்த 10 தினங்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிரது, காலை முதல் இரவு வரை எப்பொழுது வேண்டுமானலும் மின்தடை எற்படுகிறது. அவ்வாறு மின்தடை ஏற்பட்டால் அந்த மின்தடை ஒரு மணி நேரம் வரை நீடிக்கிறது, இந்த அறிவிக்கப்படாத மின் தடையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், மின்தடையால் குறித்த நேரத்தில் பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை என வேதனை தெரிவித்தனர், இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர், இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது தற்போது வெயில் காலமென்பதால் மின்தேவை அதிகரித்துள்ளது, இதனால் லோடு தாங்காமல் டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதாகின்றன. இதனை சரிசெய்ய காலதாமதம் ஆவதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது எனக் கூறினர்.
You must be logged in to post a comment.