Home செய்திகள் மதுரை – வங்கி சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதி

மதுரை – வங்கி சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதி

by mohan

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இன்று காலை முதல் பராமரிப்பு என்ற பெயரில் வாடிக்கையாளர்களை தக்க வைத்து உள்ளார்கள் வேண்டும் என்றால் மற்ற கிளைகளுக்குச் சென்று சென்று பணம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார்கள் இதுகுறித்து முன்னறிவிப்பு எதுவும் செய்யாமல் திடீரென்று இதுபோன்று செய்வதால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள் என அங்குள்ள வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கிறார்கள் மேலும் ஆங்கிலத்தில் சிறிய அளவிலான அட்டையில் இதுபோன்ற பராமரிப்பு என எழுதி வைத்துள்ளார்கள் மக்களுக்கு புரியும் வகையில் தமிழில் எழுதி வைத்திருந்தால் அல்லது இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அறிவித்து இருந்தால் இதுபோன்ற சிரமங்களை தவிர்த்து இருக்கலாம் என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கிறார்கள் ஒரு மணிக்கு மேல் தான் பணிகள் நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறார்கள் ஆனால் அது இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியாது இதுபோன்ற சிரமங்களை தருவிக்க பொதுமக்களுக்கு முறையாக குறுந்தகவல் அல்லது மிகப்பெரிய அறிவிப்பு பலகையை தமிழில் எழுதி வைத்து இருந்தால் நன்றாக இருக்கும் என தகவல் தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!