உதவிமின் பொறியாளா் துாக்கிட்டுத் தற்கொலை போலிசாா் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பெரியகாளைத் தேவர் மகன் சின்னச்சாமி(48).இவருக்கு திருமணம் முடிந்து இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.இவர் சேடபட்டி அருகே சின்னக்கட்டளையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவிமின் பொறியாளாராக பணிபுரிகின்றார்.நேற்று வழக்கம் போல் அலுவகத்தில் இரவுப்பணிக்குச் சென்றுள்ளார்.இன்று காலை ஊழியர்கள் காலையில் பணிக்குச் சென்ற போது அலுவலகத்தில் தனது அறையில் சின்னசசாமி மின்விசிறியில் தூக்கில் தொங்கியதைக் கண்டு சேடபட்டி போலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.போலிசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் சின்னச்சமி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இது குறித்து சேடபட்டி போலிசார் வழக்குப்பதிவு தற்கொலைக்காண காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா