Home செய்திகள் செங்கத்தில் சிகரம் பள்ளியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தினம்

செங்கத்தில் சிகரம் பள்ளியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தினம்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சிகரம் பள்ளியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இயங்கிவரும் சிகரம் (சி பி எஸ் சி) சர்வதேச பள்ளியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தினம்  நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் வணங்காமுடி தலைமை தாங்கினார், சிறப்பு அழைப்பாளராக சாந்த முத்துவேல் பாரா ஒலிம்பிக் இல் தங்கப்பதக்கம் வென்றவர் கலந்து கொண்டார், இப்பள்ளியின் நிர்வாக இயக்குனர் இலக்கியா முன்னிலை வகித்தார். பள்ளியின் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர் அனைவருக்கும் ஓட்டப்பந்தயம், சிலம்பம், கபடி, யோகா, கராத்தே போன்ற பலவிதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது இதில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு அவரவர் திறமைகளை வெளிப்படுத்தினர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது, சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த சாந்த முத்துவேல் மாணவர்களுக்கு விளையாட்டின் அவசியம் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர், பள்ளியின் தாளாளர் மாணவர்களின் பெற்றோர்களை ஊக்குவிக்கும் வகையில் எதிர் பார்க்காத விதமாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு விளையாட்டு போட்டியாக இசை பந்து என்ற விளையாட்டை ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளாக நடத்தினார், இதில் வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு பரிசு வழங்கியது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக அமைந்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!