15
மதுரையில் யானையை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் யானைப் பாகன்கள் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா சமூக ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் ஆதங்கம். .இந்த யானையின் பெயர் சுமதி என கூறப்படுகிறது. இந்த யானை கடந்த நான்கு நாட்களாக திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, தனக்கன்குளம், தோப்பூர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக பிச்சையெடுக்கின்றது. யானைகளை வைத்து பிச்சை எடுக்க கூடாது என சட்டம் உள்ளது. ஆனாலும் வனத்துறையினர் கண்டு கொள்வதில்லை. இந்த யானை குறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் குற்ற்ம் சாட்டுகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.