17 தூத்துக்குடியில் கரோனா
ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரிசி மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட நிவாரணத் தொகுப்பு சுரபி அறக்கட்டளையால் வழங்கப்பட்டது.. தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சார்ந்த தங்கமணிநகர், குமாரசாமி நகர், அம்பேத்கர் நகர் மற்றும் பாரதி நகர் பகுதியில் கரோனா ஊரடங்கினால் வேலைக்கு செல்ல முடியாமல் வருவாய் இழந்து மிகவும் ஏழ்மை நிலையில் வாடும் குடும்பங்களுக்கு அரிசி மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட நிவாரண தொகுப்பினை சுரபி அறக்கட்டளை,
கேப்டன் டிவி தலைமை செய்தியாளர், ப.ஆசைத்தம்பி, INDIAN CHAMBER OF COMMERCE FOR AFFIRMATIVE ACTION
( ICCAA ) மாநிலத் தலைவர் க.பிச்சைமுத்து,Maya Export Training Academy (META) நிறுவனர்.எஸ்ஆர். அஷோக், சென்னை.தொழிலதிபர்,திருமதி. சாரதா ரமணி, சென்னை. குமுதம் முன்னாள் துணை ஆசிரியர் ரா. கி. ரங்கராஜன் மகன் ஸ்ரீதர் ரங்கராஜன், சென்னை. ராமச்சந்திரன் பால்பாண்டி ராஜா, விரிவுரையாளர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. கலாம் நண்பர்கள், தூத்துக்குடி மாவட்டம், மற்றும் நல்லது செய்வோம் நண்பர்கள் அமைப்பினைச் சேர்ந்த . இராஜ்குமார், பிரகாஷ், ஆகியோரோடு இணைந்து வழங்கியது. கவிஞரும் எழுத்தாளருமாகிய செந்தாமரைக்கொடி நிர்வாக அறங்காவலர் சுரபி அறக்கட்டளை, தொகுப்புகள் வழங்கி,
சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது, சோப்பு கொண்டு அடிக்கடி கைகழுவுதல் மற்றும் கழுவ இயலாத நிலையின் போது சானிடைசர் உபயோகிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே எடுத்துக் கூறினார். சுரபி அறக்கட்டளையின் அறங்காவலரும் மாபெரும் சமூக செயற்பாட்டாளருமான பிளட் ஜெயபால் பயனாளர்களுக்கு தொகுப்புகளும் முகக்கவசங்களும் வழங்கினார். சுரபி அறக்கட்டளையின் அடுத்த கட்ட கரோனா நிவாரணப் பொருட்களின் தொகுப்புகள் எதிர் வரும் சனிக்கிழமை 25/04/2020 அன்று மதியம் மூன்று மணிக்கு, சுரபி அறக்கட்டளை அலுவலகத்தில் (தங்கமணி நகர் முதல் தெரு, முத்தையா புரம்) வழங்கப்படும்.
You must be logged in to post a comment.