12
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பல்லபச்சேரியில் ஊராட்சி மன்றத்தில் கிராமங்களில் அடிப்படை தேவைகளை சிறப்பாக பணிகளை செய்ததர்க்கு ஒன்பது விருதுகளை தாதனேந்தல் ஊராட்சிக்கு பெற்றுத் தந்த ஊராட்சி தலைவர் கோகிலா ராஜேந்திரனை பாராட்டி கௌரவிக்கும் விதமாக அனைத்து கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து சுமார் 2.50 லட்சம் மதிப்புள்ள குதிரை ஒன்றை வாங்கி ஊராட்சித் தலைவருக்கு வழங்கினர். சுற்றியுள்ள கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இவ்விழாவை தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளான கபடி போட்டிகள் மாரத்தான் போட்டிகள் நடந்தன, முதல் பரிசாக 5000 இரண்டாம் பரிசாக 3000 யும் வழங்கி பாராட்டை தெரிவித்தனர் மேலும் இவ்விழாவில் டாக்டர் செய்யது சுல்தான் முகம்மது சார்பில் இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
You must be logged in to post a comment.